Sunday, October 03, 2004

பொறுமையைச் சோதிக்கும் சில பொழுதுகள்


சில சமயங்களில் பொறுமையைச் சோதிக்கும் விதமாக ஏதும் நடந்து விடும்.கடந்த திங்களன்று வீதியில் நடக்கும் போது சாதாரணமாகக் கால் தடுக்கியது. நல்ல வேளை விழவில்லை என்று நினைத்துக் கொண்டே நடந்தாலும் மெலிதான ஒரு நோ நெருடிக் கொண்டே இருந்தது. அது பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாமல் வேலைக்குப் போவதிலிருந்து சகல வேலைகளையும் வழமை போலவே செய்து முடித்தேன். இரவு படுக்கும் போதுதான் மீண்டும் அந்த நோ மூளையை உறுத்த நோவுக்கான களிம்பு ஒன்றை எடுத்துப் பூசி.. கட்டிலில் களிம்பு பிரண்டு விடாமல் இருக்க, ஒரு காலுறையையும் போட்டுக் கொண்டு படுத்தேன்.

இப்படியே நோ பற்றி நினைவு வரும் வேளைகளில் நான் வீட்டில் நின்றால் களிம்பு பூசுவது வியாழன் வரை தொடர்ந்தது. வியாழன் வேலைக்குப் போகும் போது நோ சற்று அதிகமாகி விட்டது. கால் பாதத்தில் மொழியோடு சேர்ந்த இடத்தில் மெதுவாக வீக்கத் தொடங்கி இருந்தது. இப்போதுதான் மருத்துவரைப் பற்றிய நினைவு வர Orthopedyயிடம் விரைந்தேன்.

ம்.. இந்த வியாழக்கிழமை புரட்டாதி மாதத்தின் இறுதிநாள். அதாவது இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டின் இறுதிநாள். அதனால் எனது குடும்ப வைத்தியரின் பத்திரம் இல்லாமல் என்னைப் பார்க்க மாட்டார்களாம். அப்படிப் பார்ப்பதானால் உடனேயே நான் இவ்வாண்டு ஆரம்பத்தில் யேர்மனியில் நடைமுறைப் படுத்தப் பட்ட ஒவ்வொரு காலாண்டுக்குமான 10யூரோக்களை இன்னொரு முறை இங்கும் கொடுக்க வேண்டுமாம். (ஏற்கெனவே எனது குடும்ப வைத்தியரிடம் கொடுத்து விட்டேன். பற்றுச்சீட்டும் கைவசம் இருந்தது.) ஆனால் காலாண்டு இறுதி நாள் என்பதால் அவர்கள் அந்தக் கணக்கை முடிப்பதில் சிக்கல் இருக்கிறதாம்.

சும்மா தெண்டமாகப் 10யூரோவைக் கொடுக்க எனக்கு இஸ்டமில்லை. "நான் போய் எனது மருத்துவரிடம் பத்திரத்தை வாங்கிக் கொண்டு வருகிறேன்." என்று சொல்லி வெளியில் வந்தேன். ஆனால் கால் நோவை விட இப்போது மனதுக்குள் எரிச்சல் புகுந்து கொண்டது. நோவுடன் வருகிறேன். நொண்டி நொண்டி நடக்கிறேன். மருத்துவத்துக்கேயுரிய பண்போடு பார்த்து விட்டு, பின்னர் நான் அந்தத் பத்திரத்தைக் கொண்டு வந்து கொடுப்பதற்குச் சம்மதித்திருக்கலாம்தானே. ம்.. மருத்துவர் சில வேளை சம்மதித்திருப்பார். முன்னுக்கு றிசப்சனில் நந்தி மாதிரி இருந்த பெண்தான் சட்டத்தையும், நடைமுறையையும் மிகவும் மதிப்பவளாய் என்னை மருத்துவரிடம் அனுப்ப மறுத்து விட்டாள். என் மனதில் எழுந்த எரிச்சல் இன்னும் அதிகமாக டொக்டரும் மண்ணாங்கட்டியும் என நினைத்துக் கொண்டு வேலைக்குப் போய் விட்டேன்.

வேலையில் என் சகதோழியருக்கு, என் மனதின் அழகு முகத்தில் தெரிய.. விடயத்தைக் கேட்டு காலைப் பார்த்து விட்டு உடனே "மருத்துவரிடம் போ" என அனுப்பி விட்டார்கள். சரி.. எனது குடும்ப வைத்தியரிடம் மீண்டும் நொண்டினேன்.

குடும்ப வைத்தியர் - அவர் எனக்கு கிட்டத்தட்ட 18 வருடங்களாக மருத்துவராக இருக்கிறார். ஏறக்குறைய ஒரு குடும்ப நண்பன் போல. அவர் கூட Orthopedy நடந்து கொண்ட விதத்தில் கோபம் கொண்டு அங்கு தொலைபேசினார். அவர்கள் இன்று தாம் வேறு வேலை செய்ய இருப்பதால் இதற்கு மேல் யாரையும் பார்ப்பதில்லை என்று சொல்லி விட்டார்கள். ஒவ்வொரு Orthopedyயாக அழைத்துப் பார்த்த போதும் ஒருவரும் சரிவரவில்லை. எல்லோரும் விடுமுறை. கணக்கு முடிப்பு.. என்று இழுத்தார்கள். ஒரே வழி அரச மருத்துவமனைதான். நான் அங்கு அலைய விரும்பவில்லை.

சரியென எனது குடும்ப வைத்தியர் தானே பார்த்து Bandage போட்டு விட்டார். "கணுக்கால் சவ்வு ஈய்ந்திருக்கலாம். அல்லது எலும்பொன்று வெடித்திருக்கலாம். கண்டிப்பாக Orthopedyயிடம் போக வேண்டும்." என்றார்.

"சும்மா மெதுவாகத்தானே தடுக்கினேன். எப்படி இப்படியானது..? "
சந்தேகத்தைக் கேட்டே விட்டேன். "சில சமயங்களில் இதை விடக் கடுமையாகக் கூட நடக்கலாம்." என்றார்.

இனி என்ன செய்வது..!
"இன்று வேலைக்குப் போக வேண்டாம். நாளை Orthopedyயிடம் போ." என்றார். ஆனால் இன்று அவர் Orthopedyக்கான பத்திரத்தைத் தந்தாலும் அது நாளை செல்லுபடியாகாது. நாளை இறுதிக் காலாண்டின் முதல்நாள். நாளை மீண்டும் குடும்ப வைத்தியரிடம் சென்று அந்தத் பத்திரத்தை வாங்கிக் கொண்டு Orthopedyயிடம் போகவேண்டும். மீண்டும் வேலையிடம் வரை நொண்டி.. மெடிக்கல் பத்திரத்தைக் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன். இரவு படுக்கையில் காலை அசைக்க முடியாதிருந்த போது 10யூரோவைக் கொடுத்துக் காட்டியிருக்கலாமோ என்றிருந்தது.

அடுத்தநாள் அதிகாலையே எனது குடும்ப வைத்தியரிடம் சென்றேன். 10யூரோவையும் வைத்துக் கொண்டு காத்து நின்றேன். அதிசயமாக ஒரு நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. றிசப்சனில் என்ன செய்கிறார்கள் என்று கோபமாய் வந்தது. எப்படியோ ஒன்றரை மணித்தியாலங்கள் கழிய எனது முறை வந்தது. எனது மருத்துவக் காப்புறுதி கார்ட்டை கணினிக்குக் கொடுத்து என்னை அவர்கள் கணினியில் பதிந்து முடியவே அதீதமான நேரங்கள் சென்றன. எனக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை. இரு பெண்களாக கணினியோடும் எனது தரவுகளோடும் முட்டி மோதி ஒருவாறு பதிந்து முடித்து மருத்துவரின் கையெழுத்துடன் Orthopedyக்கான பத்திரத்தைத் தந்தார்கள்.

சரி, மீண்டும் Orthopedyயிடம் நொண்டல். அங்கும் நீண்ட வரிசை. ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நின்றேன். எனது முறை வந்தது. அதே பினைவு. எனது தரவுகளைக் கணினிக்குள் கொடுக்க றிசப்சனில் இருந்த இரு பெண்களும் போராடிக் கொண்டிருந்தார்கள்.

எனது பொறுமை ஒரு எல்லைக்கே வந்து விட்டது. "இன்னும் எவ்வளவு நேரம்தான் இப்படிக் கணினியுடன் விளையாடப் போகிறீர்கள்?" என்று கேட்க வாயெடுத்தேன். அந்த நேரம் பார்த்து Orthopedy வெளியில் வந்தார். அவர் ஒரு நொடிப் பொழுதில் என் உணர்வுக் கொந்தளிப்பை அளந்தெடுத்து விட்டார். என்னைப் ஒரு புன்முறவலுடன் நோக்கி.. கண்களாலேயே ஒருவித மன்னிப்புக் கேட்கும் பாவனையுடன் சைகை காட்டினார். அவர் காட்டிய பக்கம் திரும்பி மேசையைப் பார்த்தேன்.

மேசையில் எழுதி ஒட்டப் பட்டிருந்தது

இன்று எமது கணினிக்குப் புதிய புரோக்கிராம் கொடுத்துள்ளோம். அதனால் உங்களை நாங்கள் பதிந்து முடிக்க அதீத நேரம் எடுக்கலாம். அது உங்கள் பொறுமையைச் சோதித்துப் பார்ப்பது போன்றதொரு பிரமையை உங்களுக்குக் கண்டிப்பாக ஏற்படுத்தும். கொதித்து விடாதீர்கள். பொறுமை காருங்கள். இது இன்று உங்களை முதல் தரமாகப் பதியும் போது மட்டுந்தான். நாங்கள் இதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்போது எனது கோபம் சட்டென்று தணிந்து விட்டது. இதற்காகவா இவ்வளவு போராடுகிறார்கள் என்று அந்தப் பெண்கள் மீது சிறிய பரிதாபமும் ஏற்பட்டது.

ஆனாலும் நேற்று என்னைத் திருப்பி அனுப்பிய எரிச்சல் மனதுள் இருந்ததால் என்னைப் பரிசோதிக்கும் போது மருத்துவரிடம் "நீங்கள் நடந்து கொண்டது சரியா..?" எனக் கேட்டேன். "சில வேளைகளில் சில விடயங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நேற்று என்னிடம் வேலை பார்க்கும் பெண்கள் உன்னை விட வலியில் இருந்தார்கள். அவர்கள் மூளையை இந்தக் கணினி கசக்கி விட்டது." என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்த படி "மூன்று கிழமைக்குக் காலை அசைக்காதே." என்றார். ஒரு மருத்துவத்தாதி வந்து பத்துப் போடத் தொடங்கினாள்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite