Tuesday, February 08, 2005
இது சுயநலமா?
அண்ணி தொலைபேசியில் அழைத்து "பரதன் இயக்கத்துக்குப் போய் விட்டான்" என்ற போது சுயநலமாக மனசு அழுதது. அவன் எனது அண்ணனின் மூன்றாவது மகன்.
"பன்னிரண்டே வயசுதானே! ஏன் போனான்? நன்றாகப் படிப்பானே! அண்ணி அனுப்பி வைக்கும் படங்களிலிலெல்லாம் துருதுருவென்ற விழிகளுடன் என்னைப் பார்ப்பானே! எனக்கு அழுகையாக வந்தது. இப்ப என்ன அவசரம் வந்து போனான்..?" மனசு கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டது.
அண்ணியை நினைக்கத்தான் பாவமாக இருந்தது. என் வயதுதான். அதற்கிடையில் அண்ணனையையும் இழந்து பிள்ளைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் தனியாக நிற்கிறா. அவவின் தழுதழுத்த குரல் அடிக்கடி மனசில் மோதியது.
இரண்டு கிழமைகளாக இதே நினைவுகள் என்னுள் அலைமோதி மனசை அலைக்கழித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் அண்ணியின் தொலைபேசி "அவன் திரும்பி வந்திட்டான்." சந்தோசம் கலந்த அழுகை பீறிட்டது.
"எப்பிடி வந்தவன்? போய்க் கூட்டிக் கொண்டு வந்தனிங்களோ...? "
"இல்லை அவையள்தான் திருப்பி அனுப்பீட்டினம். 12வயசிலை சேரேலாது..." எண்டு சொல்லி.
எனக்கு போன நிம்மதி திரும்பி வந்தது.
இதையும் விட கடுமையாக...
அன்று 26ந் திகதி. சுனாமி அலைகளோடு வந்த செய்திகளில் வற்றாப்பளை தேவாலயத்துக்குச் சென்ற அத்தனை பேரையும் கடல் கொண்டு சென்று விட்டது என்ற செய்தி மனதை இடித்தது. அண்ணி ஒவ்வொரு ஞாயிறு காலையும் தனது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு அந்தத் தேவாலயத்துக்குப் போவது நாமறிந்த விடயம். அன்றும் அவ போயிருப்பா என்ற எண்ணம்தான் என்னையும் எனது குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரையும் நிலைகுலைய வைத்தது.
தொலைபேசியோடு போராடினோம். தொடர்புகள் கிடைக்கவேயில்லை. அம்மா செய்வதறியாது மலைத்துப் போய் இருந்தா.
இரண்டுநாள் கழித்துத்தான் தொடர்பு கிடைத்தது.
அன்று(26ந் திகதி) மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அண்ணி தேவாலயத்துக்குப் போகாமல் மருத்துவரிடம் சென்றிருந்தா.
அத்தனை அனர்த்தங்களின் மத்தியிலும் ஒரு அசாதாரண நிம்மதியில் மனது குதூகலித்தது.
சமையல்
சமையல் என்பது ஒரு கலை என்ற எண்ணத்திலிருந்து வழுவி அது பெண்களின் தலையில் திணிக்கப் பட்டு சமையலும் அட்டில்கூடமும் பெண்களுக்குச் சொந்தமான விடயங்கள் போன்ற பிரமை ஏற்படுத்தப் பட்டு பலபெண்கள் தமது திறமைகளை காலங்காலமாய் அட்டில்கூடத்துக்குள்ளேயே முடக்கி விட்டார்கள்.
இன்றைய காலகட்டத்தில் இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டு ஆண்களும் சமையலில் மனதோடு ஈடுபடுகிறார்கள். ஆனாலும் அது பெண்களின் வேலையாகவே கருதப் படுகிறது.
உண்மையில் சமையல் என்பது ஒரு கலை. முந்தைய காலங்களில் ஆண்கள்தான் இக்கலையில் சிறந்து விளங்கியதாகப் பலர் கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த வரையில் நளபாகம் என்பது ஆண்களின் சமையல் திறனுக்குச் சாட்சியாக இருக்கிறது.
சமையல் என்பது, "இது உனது வேலை" என்று சொல்லாமலே சொல்லி, ஒரு பெண்ணிடம் திணிக்கப் படும் போதுதான் அதன் சுவை குறைகிறது. கைக்குக் கை ருசி வேறுபட்டாலும் மனஈடுபாட்டுடன் செய்யும் போதுதான் சமையல் சமையலாகிறது.
எனக்கு சமைப்பதை விட ருசிப்பதில்தான் ஆர்வம் அதிகம். ஆனாலும் சில உணவுகளை வலைப்பதிவுகளிலிருந்து எடுத்து செய்து பார்த்துச் சுவைத்திருக்கிறேன். (குறிப்பாக இனிப்பு வகைகளை)
எத்தனை விதமான Chocolatesதான் இங்கு ஐரோப்யியாவில் இருந்தாலும் எங்கள் ஊர் சர்க்கரை போட்டுச் செய்யும் இனிப்பு வகைகளின் சுவைக்கு இந்தச் Chocolates ஈடாக மாட்டா.
அந்த வகையில் நான் வலைப்பதிவிலிருந்து கண்டெடுத்து சுவைத்தவற்றில்
இந்துராணி கருணாகரனின் வட்டிலப்பம் மிகவும் தித்திப்பானது.
இன்று காசி முட்டையில்லாத வாழைப்பழகேக் செய்யும் முறையைத் தந்துள்ளார். செலவு அதிகமில்லாத கைவசமுள்ள பொருட்களோடு செய்யக் கூடிய உணவு என்பதால் செய்து பார்க்கும் (பார்ப்பதல்ல சுவைப்பது.)எண்ணமும் உடனேயே வந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டு ஆண்களும் சமையலில் மனதோடு ஈடுபடுகிறார்கள். ஆனாலும் அது பெண்களின் வேலையாகவே கருதப் படுகிறது.
உண்மையில் சமையல் என்பது ஒரு கலை. முந்தைய காலங்களில் ஆண்கள்தான் இக்கலையில் சிறந்து விளங்கியதாகப் பலர் கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த வரையில் நளபாகம் என்பது ஆண்களின் சமையல் திறனுக்குச் சாட்சியாக இருக்கிறது.
சமையல் என்பது, "இது உனது வேலை" என்று சொல்லாமலே சொல்லி, ஒரு பெண்ணிடம் திணிக்கப் படும் போதுதான் அதன் சுவை குறைகிறது. கைக்குக் கை ருசி வேறுபட்டாலும் மனஈடுபாட்டுடன் செய்யும் போதுதான் சமையல் சமையலாகிறது.
எனக்கு சமைப்பதை விட ருசிப்பதில்தான் ஆர்வம் அதிகம். ஆனாலும் சில உணவுகளை வலைப்பதிவுகளிலிருந்து எடுத்து செய்து பார்த்துச் சுவைத்திருக்கிறேன். (குறிப்பாக இனிப்பு வகைகளை)
எத்தனை விதமான Chocolatesதான் இங்கு ஐரோப்யியாவில் இருந்தாலும் எங்கள் ஊர் சர்க்கரை போட்டுச் செய்யும் இனிப்பு வகைகளின் சுவைக்கு இந்தச் Chocolates ஈடாக மாட்டா.
அந்த வகையில் நான் வலைப்பதிவிலிருந்து கண்டெடுத்து சுவைத்தவற்றில்
இந்துராணி கருணாகரனின் வட்டிலப்பம் மிகவும் தித்திப்பானது.
இன்று காசி முட்டையில்லாத வாழைப்பழகேக் செய்யும் முறையைத் தந்துள்ளார். செலவு அதிகமில்லாத கைவசமுள்ள பொருட்களோடு செய்யக் கூடிய உணவு என்பதால் செய்து பார்க்கும் (பார்ப்பதல்ல சுவைப்பது.)எண்ணமும் உடனேயே வந்துள்ளது.
இளவரசி டயானா
(diana)தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறித்தான் சாதனைகளை அளவிட முடியுமா?
இளவரசி டயானா இளவரசியாக மட்டும் இராது ஒரு சமூகசேவகியாகவும் இருந்தார். அவரை சாதனைப்பெண்கள் பட்டியலில் ... நான் சேர்த்தேன். அது தவறு என எல்லாளன் தனது கருத்தைப் பதித்துள்ளார்.
சாதனை படைத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறிப் பார்த்துத்தான் அவர்களின் சாதனைகளை அளவிட முடியுமா?
(டயானாவின் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவைதானா அல்லது பொய்யானவையா என்பது ஒரு புறமிருக்க... அவை உண்மையாயினும் அவை குற்றந்தானா, இல்லையா என்பதும் அதற்கான தீர்வுகளும் எனக்கு அப்பாற் பட்டவை. குற்றமேயாயினும், அக்குற்றங்களுக்கான காரணிகளும் கவனத்தில் எடுக்கப் பட வேண்டியவை.)
எனது பதிலை நான் எல்லாளனுக்குக் கொடுப்பதற்கு முன் உங்கள் பதில்களை எதிர் பார்க்கிறேன்.
ஏற்கெனவே இருமுறை பதிந்து காணாமற் போனதை மீண்டும் பதிந்துள்ளேன்..
Comments:
சார்ள்ஸ் நல்லவரோ என்பது இங்கே தேவை இல்லாத பேச்சு. இது என்ன போங்கு? அப்போது டயானா நல்லவரா என்று மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? இது ஒரு கடைந்தெடுத்த ஆணாதிக்க மனபாவம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Sorry. I was unable to give this comment in your posting for Diana. I am told that the post-id cannot be found.
As for purdah, I agree with your views.
posted by Dondu : 1/31/2005 11:33:41 AM
சாள்ஸ் நல்லவரோ என்பது அங்கே தேவை இல்லாத பேச்சு! காரணம் நான் ஆணாதிக்க மனோபாவம் உடையவன் என்பதால் அல்ல. அந்தப் பதிவு டயானாவைப் பற்றியது மட்டும் என்பதால். இருவருடைய வாழ்க்கைப் பிரச்சனை பற்றி பேசுகிற இடத்தில் சாள்ஸ் பற்றியும் கவனம் தேவை. ஆனால் இங்கு அப்படி அல்லவே! ஐயா ராகவா! நான் பிழை விட்டால் மனிசி எனக்கு ஏசவேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவன் நான் என்னைப்போய் இப்படி நீங்கள், ஐயகோ!
சந்திரவதனா அவர்களுக்கு, டயானா அப்படி என்ன சாதனை செய்தார்? அதை எங்கே உங்கள் பதிவில் எழுதி இருக்கிறீர்கள்? அப்படி அவர் செய்தது சாதனை என்றால் முதலில் அனைத்து தமிழீழ வீராங்கனைகளினையும் பட்டியலில் சேருங்கள். பின்னர் டயானாவைப் பார்க்கலாம். மறுபடியும் சொல்லுகிறேன் டயானா மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை!
# posted by எல்லாளன் : 2/2/2005 01:05:19 AM
எல்லாளனின் கருத்துஎனது கேள்வி
டயனா குறித்து எனக்குத் தவறான அபிப்பிராயம் எதுவும் கிடையாது. ஆனால் அவர் நீங்கள் காண்பிக்கும் அளவிற்கு இரக்கப்படவேண்டியவர் அல்ல என்பது என் கருத்து! 'சார்ள்ஸ்" தாழ்வு மனப்பான்மை உடையவர் (இதுவும் என் கருத்து). அதனால்த்தான் டயனா மக்களுக்குள் அழகு தேவதையானதை அவரால் சகிக்க முடியவில்லை. இந்த நேரத்தினை கமிலா சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டார். இருப்பினும் டயானா விவாகரத்துப் ""பெற முன்னரே"" பலருடன் 'மன்னிக்கவும்" சிலருடன் 'நெருக்கமாக" இருந்தவர் (சார்ள்ஸ் நல்லவரோ என்பது இங்கே தேவை இல்லாத பேச்சு.) அதனால்த்தான் மகன் Harryயின் தலைமுடியினை இரண்டு வருடங்களுக்கு முன் D.N.A பரிசோதனைக்கு அனுப்பினது 'ராணிமாளிகை" (உள்ளுர்ப் பத்திரிகையில்ப் படித்தேன்). ஆக மறுபடியும் சொல்லுகிறேன். எனக்கு டயானா மீது தவறான அபிப்பிராயம் இல்லை, வெள்ளைப் பெண்மணி என்ற வரையறைக்குள் பார்க்கிறபோது மட்டும் (குறிப்பிட நினைப்பது 'நெருக்கமான உறவுகளை"). ஆனால் எங்களுக்கு (தமிழர்) அவரை சாதனை படைத்தவர் என்று உதாரணத் தாரகை ஆக்குவதில்த்தான் உடன்பாடு இல்லை.
சாதனை படைத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறிப் பார்த்துத்தான் அவர்களின் சாதனைகளை அளவிட முடியுமா?
(டயானாவின் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவைதானா அல்லது பொய்யானவையா என்பது ஒரு புறமிருக்க... அவை உண்மையாயினும் அவை குற்றந்தானா, இல்லையா என்பதும் அதற்கான தீர்வுகளும் எனக்கு அப்பாற் பட்டவை. குற்றமேயாயினும், அக்குற்றங்களுக்கான காரணிகளும் கவனத்தில் எடுக்கப் பட வேண்டியவை.)
எனது பதிலை நான் எல்லாளனுக்குக் கொடுப்பதற்கு முன் உங்கள் பதில்களை எதிர் பார்க்கிறேன்.
ஏற்கெனவே இருமுறை பதிந்து காணாமற் போனதை மீண்டும் பதிந்துள்ளேன்..
# posted by Chandravathanaa @ 2/1/2005 09:33:06 AM
இந்தப் பதிவு சவால் விடுவது போல மீண்டும் மீண்டுமாய் காணாமற் போகிறது.அதனால் நான்காவது முறையாக மீண்டும் பதிகிறேன்.
இரண்டாவதும் அப்படியே!
மூன்றாவது பதிவு நேற்று தனியேதான் பதிந்தேன். ஆனாலும் காணாமற் போய் விட்டது.
இன்று நான்காவது தரம்
Comments:
சார்ள்ஸ் நல்லவரோ என்பது இங்கே தேவை இல்லாத பேச்சு. இது என்ன போங்கு? அப்போது டயானா நல்லவரா என்று மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? இது ஒரு கடைந்தெடுத்த ஆணாதிக்க மனபாவம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Sorry. I was unable to give this comment in your posting for Diana. I am told that the post-id cannot be found.
As for purdah, I agree with your views.
posted by Dondu : 1/31/2005 11:33:41 AM
சாள்ஸ் நல்லவரோ என்பது அங்கே தேவை இல்லாத பேச்சு! காரணம் நான் ஆணாதிக்க மனோபாவம் உடையவன் என்பதால் அல்ல. அந்தப் பதிவு டயானாவைப் பற்றியது மட்டும் என்பதால். இருவருடைய வாழ்க்கைப் பிரச்சனை பற்றி பேசுகிற இடத்தில் சாள்ஸ் பற்றியும் கவனம் தேவை. ஆனால் இங்கு அப்படி அல்லவே! ஐயா ராகவா! நான் பிழை விட்டால் மனிசி எனக்கு ஏசவேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவன் நான் என்னைப்போய் இப்படி நீங்கள், ஐயகோ!
சந்திரவதனா அவர்களுக்கு, டயானா அப்படி என்ன சாதனை செய்தார்? அதை எங்கே உங்கள் பதிவில் எழுதி இருக்கிறீர்கள்? அப்படி அவர் செய்தது சாதனை என்றால் முதலில் அனைத்து தமிழீழ வீராங்கனைகளினையும் பட்டியலில் சேருங்கள். பின்னர் டயானாவைப் பார்க்கலாம். மறுபடியும் சொல்லுகிறேன் டயானா மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை!
# posted by எல்லாளன் : 2/2/2005 01:05:19 AM
நாடகப்போட்டி முடிவுகள்
ஐ.பி.சி தமிழின் - சமுத்திரா - நிகழ்ச்சியினூடாக நடாத்தப்பட்ட நாடகப்பிரதிகள் போட்டி-2004 பற்றிய முடிவுகள்
1ம் பரிசாக தங்கப்பதக்கம் பரிசு பெறும் நாடகப்பிரதி- "அம்மாவே எல்லாமாய்"
பிரதியை யார்த்தவர்:- திலகன், ஜேர்மனி.
2ம் பரிசாக லண்டன், வெம்பிளி -சரஸ்வதிபவன்- உணவகத்தினர் வழங்கும் 20 பவுண்கள் பெறுமதியான வவுச்சரையும் கலையக விருதினையும் பெற்றுக்கொள்ளும் நாடகப்பிரதி- "எங்கடை பிள்ளைகள்"
பிரதியை யார்த்தவர்:- என்.கிருஸ்ணசிங்கம், நோர்வே.
3ம் பரிசாக ஈழத்து இலக்கிய நூல் ஒன்றினையும் மற்றும் கலையக விருதினையும் பெற்றுக்கொள்ளும் நாடகப் பிரதி- "தமிழ்ச்செல்வி"
பிரதியை யார்த்தவர்:- எஸ்.பாலச்சந்திரன், ஜேர்மனி.
4ம் பரிசாக கலையக விருதினைப் பெற்றுக்கொள்ளும் நாடகப்பிரதி- "நினைவுகளின் ஊர்வலங்கள்"
பிரதியை யார்த்தவர்:- அரியாலையூர் மாலினி வசந்த், ஜேர்மனி.
5ம் பரிசாக கலையக விருதினைப் பெற்றுக்கொள்ளும் நாடகப்பிரதி- "வேர்கள்"
பிரதியை யார்த்தவர்:- கே.எஸ்.அதுல்யகுமாரன், சுவிஸ்
தகவல்:- ஐ.பி.சி யின் ~சமுத்திரா- நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.
பிரதியை யார்த்தவர்:- திலகன், ஜேர்மனி.
2ம் பரிசாக லண்டன், வெம்பிளி -சரஸ்வதிபவன்- உணவகத்தினர் வழங்கும் 20 பவுண்கள் பெறுமதியான வவுச்சரையும் கலையக விருதினையும் பெற்றுக்கொள்ளும் நாடகப்பிரதி- "எங்கடை பிள்ளைகள்"
பிரதியை யார்த்தவர்:- என்.கிருஸ்ணசிங்கம், நோர்வே.
3ம் பரிசாக ஈழத்து இலக்கிய நூல் ஒன்றினையும் மற்றும் கலையக விருதினையும் பெற்றுக்கொள்ளும் நாடகப் பிரதி- "தமிழ்ச்செல்வி"
பிரதியை யார்த்தவர்:- எஸ்.பாலச்சந்திரன், ஜேர்மனி.
4ம் பரிசாக கலையக விருதினைப் பெற்றுக்கொள்ளும் நாடகப்பிரதி- "நினைவுகளின் ஊர்வலங்கள்"
பிரதியை யார்த்தவர்:- அரியாலையூர் மாலினி வசந்த், ஜேர்மனி.
5ம் பரிசாக கலையக விருதினைப் பெற்றுக்கொள்ளும் நாடகப்பிரதி- "வேர்கள்"
பிரதியை யார்த்தவர்:- கே.எஸ்.அதுல்யகுமாரன், சுவிஸ்
தகவல்:- ஐ.பி.சி யின் ~சமுத்திரா- நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
▼
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ▼ February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )