ஹோமம் வளர்த்து, அக்னி சாட்சியாய், மேள தாளம், நாதஸ்வரத்துடன் மாலைமாற்றி ஒரு சம்பிரதாயக் கல்யாணம். அம்மாவுடன் மகன் துமிலனும், மருமகள் செலினாவும்.
அம்மாவின் உடல் நிலையில் ஒன்றரை மணித்தியாலங்கள் பயணம் செய்து வந்து, ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ந்து கல்யாணமண்டபத்தில் அம்மாவால் இருக்க முடியுமா என்ற கேள்வியும்இ பயமும் எங்கள் எல்லோரிடமும் இருந்தது. அம்மாவிடம் ஒரு தயக்கமும் இருந்தது. ஆனாலும் அம்மா வந்து கல்யாணத்தைக் கண்டு களித்து, எம்முடன் ஒன்றாக இருந்து, விருந்துண்டு மீண்டும் ஒன்றரை மணித்தியாலங்கள் பயணித்துச் சென்றா. அந்த ஐந்து மணித்தியாலங்களும் அம்மா அங்கு எங்களுடன் கூடி நின்றது பெரும் சந்தோசம்.