Wednesday, March 14, 2007

மரியாதை என்றால் என்ன?

எது சரி, எது பிழை, எது கூடாது என்பதற்கான அளவு கோல்கள் எமது மூளையில் சின்ன வயதிலேயே பதிக்கப் பட்டு விடுகிறது. பொய் சொல்லாதே, களவெடுக்காதே, பிச்சை எடுக்காதே, மது அருந்தாதே, புலால் உண்ணாதே... என்று எமக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து, முதலில் அம்மா, பின்னர் ஆசிரியர், தொடர்ந்து புத்தகங்கள்... என்று எங்கள் மூளையில் சில விடயங்கள் பதிக்கப் பட்டு விடுகின்றன. அதனால்தான் அவைகளில் ஏதேனும் ஒன்றையேனும் நாம் செய்ய வேண்டிய கட்டாயநிலை வரும் போது எங்கள் செய்கைகளுக்கு நாமே நியாயங்களைத் தேடிக் கொள்கிறோம். அல்லது குற்ற உணர்வில் குறுகிக் கொள்கிறோம். பொய் சொல்லாதே என்று படிப்பித்த ஆசிரியரே பொய் சொல்வதைக் காண நேர்ந்தால் ஏமாற்றமும் கோபமும் ஏற்படுகிறது.

பதின்ம வயதுகளில் உணர்வுகளை எமது கட்டுக்குள் வைக்கவோ, பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கவோ எம்மால் முடிவதில்லை. சுற்றியுள்ள எதையும் கவனத்தில் கொள்ளாமல் எமது உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் அடிமையாகி விடுகிறோம். வயது ஏற ஏற ஒவ்வொன்றின் பின்விளைவுகளைப் பற்றியும் சிந்திக்கிறோம். மரியாதைக்குப் பயப் படுகிறோம். இது கூடாது என்று எம்மால் தீர்மானிக்க முடிகிறது. அதனால் நாமே எமக்கு ஒரு எல்லை போட்டு வாழப் பழகிக் கொள்கிறோம். ஆசைகள், தேவைகள்... என்று எது வரும் போதும் சுற்றி உள்ளவர்களைப் பாதிக்காத விதமாக அவைகளை நிறைவேற்றப் பார்க்கிறோம். முடியாத போது எமது ஆசைகளையே குழி தோண்டிப் புதைத்து விடுகிறோம்.

யாருக்காகவும் எங்கள் சுயங்களை இழக்க வேண்டிய அவசியமில்லைத்தான். ஆனாலும் பல சமயங்களில் தவிர்க்க முடியாமல் இழக்க வேண்டியும் வருகிறது. காரணம் எம்மைச் சுற்றியுள்ளவர்கள்.

எம்மைச் சுற்றியுள்ளவர்கள் என்று குறிப்பிடும் போது எம்மேல் அன்பு செலுத்துபவர்கள், நாம் அன்பு கொண்டவர்கள், எங்களோடு கூடப் பிறந்தவர்கள், நாமாக எம்மோடு சேர்த்துக் கொண்டவர்கள்... என்று பலர் அடங்குகிறார்கள். இவர்களோடு எம்மைச் சுற்றியுள்ள சமூகமும் அடங்குகிறது. சமூகம் என்றால் என்ன? நாமும் அதற்குள் ஒருவர்தானே. ஆனாலும் அந்தச் சமூகத்தில் எமது தலை உருளும் போது மரியாதை போகிறதே என்று பயப் படுகிறோம்.

அப்போதும் ஒரு கேள்வி எழுகிறது. மரியாதை என்றால் என்ன? மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதுதான் மரியாதையா?

மரியாதை என்றால் என்ன?

எது சரி, எது பிழை, எது கூடாது என்பதற்கான அளவு கோல்கள் எமது மூளையில் சின்ன வயதிலேயே பதிக்கப் பட்டு விடுகிறது. பொய் சொல்லாதே, களவெடுக்காதே, பிச்சை எடுக்காதே, மது அருந்தாதே, புலால் உண்ணாதே... என்று எமக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து, முதலில் அம்மா, பின்னர் ஆசிரியர், தொடர்ந்து புத்தகங்கள்... என்று எங்கள் மூளையில் சில விடயங்கள் பதிக்கப் பட்டு விடுகின்றன. அதனால்தான் அவைகளில் ஏதேனும் ஒன்றையேனும் நாம் செய்ய வேண்டிய கட்டாயநிலை வரும் போது எங்கள் செய்கைகளுக்கு நாமே நியாயங்களைத் தேடிக் கொள்கிறோம். அல்லது குற்ற உணர்வில் குறுகிக் கொள்கிறோம். பொய் சொல்லாதே என்று படிப்பித்த ஆசிரியரே பொய் சொல்வதைக் காண நேர்ந்தால் ஏமாற்றமும் கோபமும் ஏற்படுகிறது.

பதின்ம வயதுகளில் உணர்வுகளை எமது கட்டுக்குள் வைக்கவோ, பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கவோ எம்மால் முடிவதில்லை. சுற்றியுள்ள எதையும் கவனத்தில் கொள்ளாமல் எமது உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் அடிமையாகி விடுகிறோம். வயது ஏற ஏற ஒவ்வொன்றின் பின்விளைவுகளைப் பற்றியும் சிந்திக்கிறோம். மரியாதைக்குப் பயப் படுகிறோம். இது கூடாது என்று எம்மால் தீர்மானிக்க முடிகிறது. அதனால் நாமே எமக்கு ஒரு எல்லை போட்டு வாழப் பழகிக் கொள்கிறோம். ஆசைகள், தேவைகள்... என்று எது வரும் போதும் சுற்றி உள்ளவர்களைப் பாதிக்காத விதமாக அவைகளை நிறைவேற்றப் பார்க்கிறோம். முடியாத போது எமது ஆசைகளையே குழி தோண்டிப் புதைத்து விடுகிறோம்.

யாருக்காகவும் எங்கள் சுயங்களை இழக்க வேண்டிய அவசியமில்லைத்தான். ஆனாலும் பல சமயங்களில் தவிர்க்க முடியாமல் இழக்க வேண்டியும் வருகிறது. காரணம் எம்மைச் சுற்றியுள்ளவர்கள்.

எம்மைச் சுற்றியுள்ளவர்கள் என்று குறிப்பிடும் போது எம்மேல் அன்பு செலுத்துபவர்கள், நாம் அன்பு கொண்டவர்கள், எங்களோடு கூடப் பிறந்தவர்கள், நாமாக எம்மோடு சேர்த்துக் கொண்டவர்கள்... என்று பலர் அடங்குகிறார்கள். இவர்களோடு எம்மைச் சுற்றியுள்ள சமூகமும் அடங்குகிறது. சமூகம் என்றால் என்ன? நாமும் அதற்குள் ஒருவர்தானே. ஆனாலும் அந்தச் சமூகத்தில் எமது தலை உருளும் போது மரியாதை போகிறதே என்று பயப் படுகிறோம்.

மரியாதை என்றால் என்ன? மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதுதான் மரியாதையா?

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite