
புதுவருடம் இத்தனை சோகத்தைச் சுமந்து வரப்போகிறதென யாராவது நினைத்தோமா..?
போரின் வடுக்கள் ஆறுமுன்னே எங்கள் சந்தோசங்களைக் கடல் கொண்டு போகுமென துளியாவது உணர்ந்தோமா?
அலை வந்து தழுவும்... தாலாட்டும்.. என்றுதான் எண்ணியிருந்தோம். இத்தனை கோரமாய் உயிர் பறித்துப் போகுமென்று எண்ணினோமா?
கண்மூடி முழிக்க முன் எம்முன்னே இத்தனை அழிவுகள் நடக்கும் என்று கனவிலாவது கண்டோமா?
போர்க்காலங்களில் போலக் கூட இம்முறை வருடத்தை வரவேற்க முடியவில்லை.
யாருக்கும் வாழ்த்துச் சொல்லவும் ஒப்பவில்லை. மனசு மலைத்துப் போய் நிற்கிறது.
உறவுகளைப் பறிகொடுத்த எங்கள் உறவுகளின் ஓலங்கள் மனதைப் பிசைகின்றன. கண்கள் பனிக்கின்றன.
இயற்கையின் சீற்றம் இத்தனை கொடியதா..?
கடலே எழுந்தே வீழ்ந்ததே...!