Thursday, December 21, 2006

உராய்வு கவிதைத்தொகுப்பு - ஒரு பார்வை

முந்தைய நாயன்மார்களின் தேவாரங்களையும், புறநானூற்றுக் காவியங்களையுமே பாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்த எம்மை வியக்க வைக்கும் படியாக இன்று எம்மிடையே புதிய புதிய கவிஞர்களும், கதாசிரியர்களும் உருவாகிச் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மிக மிக இளவயதினர்கள் கூட கவி புனையும் ஆற்றல் கொண்டு கவிதைகளிலேயே தமது உணர்வுகளைக் கொட்டிக் கொண்டிருப்பதும் யாவரும் அறிந்ததே.

போர் தந்த பாதிப்பிலும், புலப்பெயர்வு தந்த சோகத்திலும், அநியாயங்களைக் கண்டு மனசு கொதித்ததிலும், சமூகத்தின் கோட்பாடுகளோடு முரண் பட்டதிலும்... என்று ஆர்ப்பரித்து எழுந்த, ஆற்றல்களை வெளிக் கொணர்ந்த… இளங் கவிஞர்களில் இளைஞன் என்ற சஞ்சீவ்காந்தும் ஒருவன்.

சஞ்சீவ்காந், இளைஞனாய் என்னுள் வியப்பை ஏற்படுத்தியவன். புலம் பெயர்ந்த இளைஞர்கள் அனைவருக்கும் உள்ள இரு மொழிகளோடும், இரு கலாச்சாரங்களோடுமான போராட்டம் சஞ்சீவ்காந்துக்கும் கண்டிப்பாக இருந்திருக்கும். புலம்பெயர் மண்ணின் மொழியோடும், கலாச்சாரத்தோடும் தன்னை இணைத்து தனது வாழ்நிலையை வளம் படுத்த வேண்டிய கட்டாயத்தின் மத்தியில் ஒரு இளைஞன் தழிழோடும் ஒன்றி நின்று தமிழில் இலக்கியம் படைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனாலும் இவைகளின் மத்தியில் நின்று தான் எதிர் கொண்ட ஒவ்வொரு முரணோடும் எழுத்தால் முட்டி மோதியவன் சஞ்சீவ்காந். இவனது தமிழின் ஆற்றலும் ஒவ்வொரு கருத்தை முன் வைக்கும் போதும் அதில் இருந்த தெளிவும், சிந்தனா சக்தியும் என்னை மட்டுமல்லாமல் பலரையும் வியக்க வைத்திருக்கின்றன.

இவன் கவிதைகளில் ஒன்று வானலையில் பாடலாக ஒலித்த போதும், தானே வந்து தன் குரலில் ஐபிசி வானொலியில் கவிதைகளை மிக அழகாக வாசித்த போதும் நான் மனம் வியந்து மிகவும் ரசித்தேன். இப்போது இவனின் கவிதைத் தொகுப்பு ஒன்று என் கரங்களில் தவழும் போது மகிழ்வாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

உராய்வு அழகு, கவித்துவம் என்று சொல்ல முடியாத, ஆனால் ஒருவித ஈர்ப்பைத் தன்னுள்ளே கொண்ட தலைப்பு.

"புதிய சிந்தனைகள், அவற்றை முதலாக்கிய செயற்பாடுகள், காணும் வெற்றிகள் என்று ஒழுங்கமைத்து முன்னேறும் மனித சமுதாயத்தின் நீண்டு நெடுத்திருக்கும் வாழ்வியற் கோட்பாட்டோடும், வரலாற்றோடும் முரண்பட்டு முட்டி மோதியும், உடன்பட்டு ஒட்டி உரசியும் உருவான சிந்தனைகளைக் கருவேற்றுப் பிரசவித்தவையே எனது கவிதைகள்" என்று சொல்லும் சஞ்சீவ்காந்தின் இக் கவிதைத் தொகுப்பில் மிகச் சிறியதாயும், அளவில் பெரியதாயும் என்று 54கவிதைகள் உள்ளன. கவிதைக்கு அழகும், மெருகும், கருவோடு கூடிய பொருளும், உணர்வும் தரக்கூடிய விதமாக மூனாவின் 41ஓவியங்களும், கணினியில் வடிவமைக்கப்பட்ட 14 ஓவியங்களும் கூடவே உள்ளன. 128 பக்கங்களைக் கொண்ட கைக்கு அடக்கமான சிறிய புத்தகம். 2005இல் பதிப்பாகி இருக்கிறது.

முதற் பக்கத்தைத் திறந்த உடனேயே, மதிப்புரையாகவோ அன்றி முகவுரையாகவோ ஒரே ஒரு வரியில் அமைந்த காலத்தின் கவிக்கூர் இவன் என்ற திரு.தாசீசியஸ் அவர்களின் வரி கவிதைகளுக்கும், புத்தகத்துக்கும் அழகையும், அர்த்தத்தையும் சேர்த்திருக்கின்றது.

திரு.கி.பி.அரவிந்தன் அவர்கள் தனது பார்வையை ஒரு கடிதம் போல அழகிய முகவுரையாகத் தந்துள்ளார்.

வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப் பட்ட தேசத்திலிருந்து பிடுங்கி எறியப் பட்ட ஒருவனின் சீற்றத்தோடு ஆரம்பிக்கிறது இத் தொகுப்பின் முதற் கவிதை.
வருகவென வரவேற்று
வாழ வைத்த ஆண்டுகளே
வரலாற்றில் நீர் எங்கு போனீர்?

திரும்பிப் பார்த்தால் நடந்து வந்த பாதையெங்கும் படிந்திருக்கும் போரின் சுவடுகளே இன்றைய எமது நிலையில் வரலாறாகியுள்ள கோபத்தைச் சொல்கிறது, வருக 2004 என்ற கவிதை.

இக் கவிதையிலேயே, யதார்த்தமான வாழ்வு மட்டுமே வேண்டும் என்ற மனதின் யாசிப்பு
வெள்ளை நிழல் வேண்டாம்
வெளிச்ச இரவு வேண்டாம்
சூரிய நிலவு வேண்டாம்
சுடாத வெயில் வேண்டாம்

என்ற வரிகளில் அழகாக வெளிப் படுகிறது.

தொடரும் கவிதைகள் விடுதலையின் வேட்கை, புலப்பெயர்வின் அவலம், சமூதாயத்தின் மூடக்கொள்கைகள் மீதான வெறுப்பு, கலாச்சாரம் என்ற பெயரிலான அறியாமைகள், பெண்விடுதலையின் மீதான ஆர்வம், பெண்கள் மீதான அழுத்தங்களில் எழுந்த கோபம், சமூகச் சிக்கல்கள், சமூகத்தின் மீதான மாற்றத்தின் வேண்டுதல்கள், அறிவியல் வளர்ச்சி, கணினி மொழி, காதல்… என்று பல்வேறு பட்ட விடயங்களைக் கருப்பொருளாகக் கொண்டு புதிய சிந்தனைகளை வேண்டி நிற்பவையாகவே இருக்கின்றன.

மொத்தத்தில் சமுதாய வளர்ச்சியிலும், வாழ்வியல் முன்னேற்றங்களிலும் அக்கறை கொண்ட ஒரு இளைஞனின், உணர்வுகளின் குவியல்களாயும், ஒரு இளைஞனுக்கே உரிய துடிப்புகளின் வெளிப்பாடுகளாயும்… கவிதைகள் அமைந்துள்ளன.

கவிதைக்கு எது அழகு? என்று கேட்டால், சரியாகச் சொல்ல முடியாத படி இன்றைய கவிதைகள் எதுகை, மோனை, அணி, நயம்… என்று எதுவுமே இல்லாமலும் கூட ஏதோ ஒரு வகையில் அழகு பெற்று பலரையும் கவர்கின்றன.

இத்தொகுப்பில் இடம் பெற்ற கவிதைகளில் எதுகை, மோனை, நயம்… என்று அழகிய வடிவிலான கவிதைகளும் உள்ளன. அந்த எந்த வடிவங்களும் இல்லாமல் நல்ல கருப்பொருட்களை மட்டும் தமக்குள்ளே புகுத்தியுள்ள கவிதைகளும் உள்ளன.

அவைகளில் மிகுந்த நயத்தோடும், கருத்தோடும் மட்டுமல்லாமல், இத் தொகுப்புக்கே மகுடமாகவும் அமைந்தது போன்ற கவிதை கடிதம்
ஏர் பிடித்த கைகளிலே
போர் கொடுத்த ஆயுதமோ
நேர் நிமிர்ந்த மார்பினிலே
யார் பதித்த குண்டுகளோ

நான் நடந்த தெருவினிலும்
வான் அளந்த வடக்கினிலும்
ஏன் இந்த சோதனையோ
என் மனசில் வேதனையே...

புலம் பெயர்ந்த இளைஞன் ஒருவன், போரிலே தகித்திருக்கும் தாயகத்தையே தாயாக உருவகித்து எழுதும் கடிதம் போல அமைந்த இந்தக் கவிதை எல்லோர் மனதையும் தொடக் கூடிய ஒரு கவிதை. மிகவும் அழகாகவும், மனதை ஆழமாகத் தொடக் கூடியதாகவும் கோர்க்கப் பட்ட வார்த்தைகள். அன்புள்ள தாயகமே ஆசை மகன் எழுதும் மடல்... என்று தொடங்கும் இக்கவிதை பாடலாக்கப் பட்டு ஒரு அழகிய பாடலாகவும் வெளி வந்து பலர் மனதையும் கவர்ந்தது குறிப்பிடத் தக்கது.
அன்புள்ள தாயகமே…
ஆசை மகன் எழுதும் மடல்

நானிங்கு நலமம்மா
நீயங்கு நலம் தானா?
எழுத மனம் நினைக்கிறதே
கண்ணீர் அதை நனைக்கிறதே….

….நில்லாமல் ஓடி வரும்
நிலவொளியும் காண்பீரோ
சொல்லாமல் பாடல் தரும்
குயிலோசை கேட்பீரோ

ஆராரோ கீதம் படிக்க
ஏணையும் அசைகின்றதா
ஊரெல்லாம் ஓலம் ஒலிக்க
உறவுகளும் அழுகின்றதோ...

ஏக்கமும், தாயகத்தின் மீதான தாபமும் மனதின் அடிநாதத்திலிருந்து ஆற்றாமையோடும், அழகாகவும் வெளிப்படுகின்ற அருமையான கவிதை. இது இளைஞனின் கவிதை உணர்வை அழகாக வெளிப்படுத்திய கவிதையும் கூட.

குறிப்பிடத்தக்க கவிதைகளில் திலீபன் என்ற கவிதையும் ஒன்று. நயமாக எழுதப்படும் கவிதைகளுக்கு உள்ள கவர்ச்சி போலவே, திருக்குறள் போல நறுக்கென்று சொல்லி விடும் கவிதைகளிலும் ஒரு வித கவர்ச்சி இருக்கிறது.
உண்ணாவிரதத்தின் பசிக்கு
தன்னை உணவாய் கொடுத்தவன்

நீட்டி முழக்காமல் நறுக்கென்று சொல்லி விட்ட அழகான கவிதை.

சில கவிதைகள் மற்றவர்களுக்கு ஆணையிடுவது போலவும், போதிப்பது போலவும் அமைந்துள்ளமையும் கண்டிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அந்தத் தொனிகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம். உதாரணமாக

இருட்டைக் கவிழ்த்து
வேளிச்சத்தின் மேல் ஏறி நில்

சுதந்திரத்தை விரி
உலகை அதில் கிடத்து
பண்பாட்டால் போர்த்து

சமுதாயத்தை நிர்வாணப்படுத்து
அதன் காயங்களில் முத்தமிடு
அழுக்குகளை நக்கு…

என்று தொடரும் செயற்படு(பொருள்)என்ற கவிதை
ஆசைகளோடு உறவு கொள்
தேவைகளைக் கருத்தரி
தேடல்களைப் பிரசவி

பழசை மென்று
புதுசாய் துப்பு

(பக்-54)
என்று முடிகிறது. இக்கவிதை சொல்ல வந்த விடயத்தை போதனை போலவோ அன்றி கட்டளை போலவோ இல்லாமல் கொஞ்சம் வேறு விதமாகச் சொல்லியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

ஓரிரு கவிதைகளில் கருப்பொருள் பிசகுவது போன்ற பிரமை ஏற்படுகிறது. உதாரணமாக
ஈழம் என்ற நான்காவது கவிதை
குருதி
கண்ணீர்
வியர்வை
நீருற்றி

என்பு
சதை
அங்கம்
பசளையிட்டு

ஏக்கம்
தவிப்பு
எதிர்பார்ப்பு
காவல்
வைத்து

நிழலுக்காய்
வளர்க்கும்
மரம்

இக்கவிதையைப் படிக்கும் போது, குருதி, கண்ணீர், சதை, அங்கம், உயிர்… இத்தனையையும் பயிரிட்டு வெறுமே நிழலுக்காக மட்டுமா எமக்கு ஈழம்? என்ற கேள்வி எழுகிறது. தாயகத்தின் விடுதலை என்பதும் அதற்காகக் கொடுக்கப் படும் விலையும் வெறும் நிழல் என்ற வார்த்தைகளுக்குள்ளோ அல்லது அர்த்தத்துக்குள்ளோ அடங்கி விடாது. ஆனாலும் இளைஞனின் பார்வையில் இதன் கருப்பொருள் வேறு விதமாகக் கூட இருக்கலாம். நான் பார்க்கும் கோணம் வேறாக இருக்கலாம்.

இவைகளோடு அதிகமான கவிஞர்களால் தொடப்படாத அறிவியல் சம்பந்தமான சில கவிதைகளையும் இளைஞன் படைத்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது. அப்படியான ஒன்றான
மரபணு என்ற கவிதையிலிருந்து சில வரிகள்
பாய் படுக்கை பாலின்றி
கரு ஒன்று உருவாகும்
தாய் தந்தை உறவின்றி
ஒரு பிள்ளை உருவாகும்

நிறம் என்ன திறம் என்ன
அத்தனையும் தேர்ந்தெடுத்து
யார் யாரைப் போலென்று
அற்புதமாய் அச்செடுத்து….


இப்படி பல்வேறு திசைகளிலும் விரிவு பட்ட சிந்தனைகளோடு உதித்த கவிதைகளின் தொகுப்பு இது. இதனோடு ஓய்ந்து விடாமல் இளைஞன் இனியும் கவி படைக்க வேண்டும். குறைகளைத் திருத்தி இன்னும் நிறைவாக எழுத வேண்டும். அத்தோடு நின்று விடாமல் படைப்புக்களைத் தொகுத்து பதிப்பாக்கி விடவும் வேண்டும்.

சந்திரவதனா
ஜேர்மனி
18.12.2006

Tuesday, December 19, 2006

Bala Anna

Editorial Tamil Guardian 17 December 2006

His driving purpose was always the well being of his people, as all those who engaged with him from any side of the table quickly came to understand. It is entirely in character that his final public words in November, confirming his diagnosis with cancer, were mainly about the plight of the Tamil people. He loved us as much as we adored him.



News that Mr. Anton Balasingham had passed away after a brief battle with cancer was met this week with shock and profound grief across the Tamil community. In the thirty years he was associated with the Tamil freedom struggle, he had truly become a legend in his own time. He was the LTTE’s theoretician for thirty years and its chief negotiator for most of that time. In that period, a fledgling guerilla group dedicated to the emancipation of the Tamil people grew and expanded into a national liberation movement with a powerful military and an apparatus of civil administration, while Bala Anna became an icon of the Tamil cause.

Mr. Balasingham was many things to the Tamil struggle. The formal titles of theoretician and chief negotiator do not capture them all. Within the LTTE he was a father figure. His door was always open to cadres and commanders alike. No subject was taboo, confidentiality was assured. Most importantly, of course, he was the struggle’s political strategist. Beyond the LTTE, he was approached for advice and guidance by a range of Tamils, from parliamentarians to journalists, supportive of the cause of freedom. He was eloquent in formal Tamil, but he could also address us in the colloquial, unraveling the complexities our struggle faced and bringing every one of us closer to it. Which is why his public addresses were so eagerly awaited.

It was Mr. Balasingham’s demonstrably keen intellect and political acumen that compelled LTTE leader Vellupillai Pirapaharan to ask him in 1979 to join the tiny group of young revolutionaries their movement then was. (And it was Mr. Balasingham’s recognition of Mr. Pirapaharan’s abilities as a leader and the LTTE’s institutional strengths that persuaded him to throw in his lot with the Tigers rather than any of the many other Tamil militant groups setting out on the long road of struggle.) The strength of the personal bond that grew between them is reflected in Mr. Pirapaharan’s poignant words this week as he awarded Bala Anna that unique title ‘Voice of the Nation.’

Nothing captures what Bala Anna meant to the Tamils as that title does. For three decades he spoke for us, the Tamil people. He led LTTE delegations in five attempts to negotiate a political solution with the Sinhala state. He represented us in our dialogue with the international community, both in public fora and private discussion. He explained the oppression we endure and defended our struggle for freedom. He was a formidable representative, aggressively and adeptly pursuing our interests. He could not be intimidated – though it was often tried. His razor sharp intellect was matched by a powerful personality.

But he was, as one commentator puts it, a quintessential negotiator. Amidst the heat of dispute he could find the sites of compromise. And, armed with the complete trust of the LTTE leadership, he would compromise – but not surrender. Thus he earned the begrudging respect of his interlocutors, both Sinhala and international. His driving purpose was always the well being of his people, as all those who engaged with him from any side of the table quickly came to understand. It is entirely in character that his final public words in November, confirming his diagnosis with cancer, were mainly about the plight of the Tamil people. He loved us as much as we adored him.

It is inevitable that Mr. Balasingham’s passing has brought joy to our enemies. Reflecting the character of some of them, there has been public jubilation at his death in parts of the south - just as when his illness was announced last month. This ugliness is characteristic of the oppression we fight.

It also reflects a misunderstanding of what Mr. Balasingham’s multi-faceted role was, of where the LTTE now is as a movement and where the Tamils are as a nation. The growth of LTTE over the past three decades has been inexorable, despite the ferocious violence unleashed on it and the Tamil people by the Sri Lankan state and its allies. Mr. Balasingham contributed immeasurably to that growth. His analytical, calculative approach has been institutionalized. Every arm of the LTTE routinely weighs its decisions before committing to a course of action, the long-term benefit to the Tamil cause the overarching priority. As the LTTE’s multi-faceted international engagement has grown in scale and complexity, new capabilities have emerged, both in the LTTE and wider Tamil nationalist movement. Mr. Balasingham guided many of these, devising strategies and advising key individuals. As deepening illness precluded a frontline role for Mr. Balasingham for much of this year, he was able to rest, secure his many tasks were being competently carried forward by others. The extent of his legacy will only be discernible in the fullness of time.

This newspaper and its staff are privileged to have had a very special relationship with Bala Anna. It began soon after he arrived in London in 1999. He readily agreed to meet the volunteers of the Tamil Guardian when we asked. Our discussions quickly became regular and frequent. We always met at the study in his home, where we were warmly welcomed by him and his wife, Adele. An experienced journalist, Mr. Balasingham had a passion for media. He also appreciated that we were committed to articulating the Tamil cause. He spent considerable time with us in prolonged discussion on the ethnic question, on the Tamil struggle, on international affairs, and many other subjects. The depth of his knowledge was unfathomable. A warm, convivial and humorous man, he was a patient tutor. He scrutinized our work and was generous with his praise and scathing in his criticism. Yet he never constrained us, encouraging us to write freely on the Tamil cause. As with a handful of other Tamil correspondents, he took us into his confidence in exchange for our discretion. In March 2000 we were privileged to be exclusively granted his first media interview after leaving Vanni. He gave many of his infrequent subsequent interviews to us.

Our relationship with the Balasinghams went beyond the production of the newspaper. It was individual, personal and very affectionate. They took an active interest in each of us, inquiring of those who met them about those who were not there. Bala Anna encouraged us to develop our individual interests and offered welcome advice on our academic and professional pursuits. We drew much inspiration and not a little courage from him. Being close to Bala Anna, we were, for a long time, acutely aware of his health difficulties. His health declined rapidly this year, but only until recently were we unable to converse regularly with him. His death comes as a devastating personal loss to each of us. Our hearts go out to Adele Aunty, his beloved wife and constant companion. Her loss is the deepest. We will all miss him very much. We, at the Tamil Guardian, couldn’t be more proud of our close association with Mr. Balasingham over the past seven years. He was, quite simply, a remarkable man.

Quelle - Tamil guardian(19 December 2006)

பொ. கருணாகரமூர்த்தியின் இருநூல்கள் வெளியீடு

1.கூடு கலைதல் - 11 சிறுகதைகளின் தொகுப்பு.
2.பெர்லின் இரவுகள் - நினைவலைகள்.

28.12.2006 அன்று மாலை 18:00 மணி
இடம் :
Mathura Restaurant
Kolonnen Str.43
19829 Berlin


வெளியீட்டுரைகள்:-
பெர்லின் இரவுகள்
சுசீந்திரன்
கூடுகலைதல்
உமா

விமர்சன உரைகள்:-
கலா ரஞ்ஜினி
தனபாலன்
பாமினி துஷ்யந்தன்
சந்தூஸ்
பரமு சிவா
வரதராஜன்
சாரு நிவேதிதா

ஆசிரியர் ஏற்புரை.
இராப்போசனம்

இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்!

தொடர்புகளுக்கு: பொ.கருணாகரமூர்த்தி
Tel.: 030-5449337

Friday, December 15, 2006

பாலாண்ணைக்கு ''தேசத்தின் குரல்'' எனும் கெளரவப்பட்டம்





Mr. Pirapaharan meets Mr. Anton Balasingham in Vanni in January 2005

வியாழன் 14-12-2006 23:08 மணி தமிழீழம் [செந்தமிழ்]

பாலாண்ணைக்கு ''தேசத்தின் குரல்'' எனும் கெளரவப்பட்டம் வழங்குவதில் பெருமையடைகிறேன் - தேசியத் தலைவர்

ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து ''தேசத்தின் குரல்'' என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார் என தமிழீழத் தேசியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தலைவரின் அறிக்கையின் முழுவடிவமும் வருமாறு........

தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
2006-12-14

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.

பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.

பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து ''தேசத்தின் குரல்'' என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.

''புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்''

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்


Quelle - Pathivu

Friday, December 01, 2006

பதியப்படாத பதிவுகள்

இன்று அப்பாவின் நினைவு நாள்.
அப்பாவின் நினைவுகளையும் சுமந்த கதை ஒன்றை மீள் பதிவு செய்கிறேன்.


"சோ" வென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும் செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும், கண்களும் காணாமல் போயிருந்தன.

சற்று நேரத்துக்கு முன் இராணுவக் கண்களைக் கண்டு மருண்டு, முகம் இருண்டு போயிருந்த சங்கவி இப்போது தன்னை மறந்து இலைகளில் இருந்து சொட்டும் மழை நீரைப் பார்த்து ரசித்த படி விறாந்தை நுனியில் நிற்பதைப் பார்த்த கதிரேசருக்குச் சந்தோஷமாக இருந்தது.

கதிரேசர் இன்று என்றுமில்லாத சந்தோஷத்தில் குளித்துக் கொண்டிருந்தார். பின்னே என்ன இருக்காதா? மகள் சங்கவி யேர்மனியில் இருந்து வந்திருக்கிறாள். அதுவும் பன்னிரண்டு வருடங்களின் பின்.

கதிரேசர் இப்படிக் கதிரைக்குள்ளும் கட்டிலிலுமாய் முடங்கிப் போய் இருக்கக் கூடிய ஆள் அல்ல. மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு வாட்ட சாட்டமான கட்டுடலுடன் அவர் ராஜநடை போடும் அழகே தனி அழகுதான். எப்போதும் சந்தோசமாக இருக்க விரும்பும் அவர் விடுமுறையிலே வீட்டுக்கு வந்தாலே வீடு அசாதாரண கலகலப்பில் மிதந்து அவர் அன்பில் திளைத்திருக்கும். மனைவி செல்லமும் பெரிய குங்குமப் பொட்டுடன் வளையல்கள் குலுங்க வீட்டுக்குள் வளைய வரும் காட்சி மங்களகரமாகவே இருக்கும்.

பின்னேரம் என்றாலே கதிரேசர் வீட்டுக்குள்ளே இருக்க மாட்டார். பிள்ளைகளையும் செல்லத்தையும் அழைத்துக் கொண்டு Beach, Park, படம் என்று சுற்றித் திரிவார்.

பருத்தித்துறைத் தோசை என்றாலே அவருக்குக் கொள்ளை பிரியம். அதற்காகவே மகள் சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஓடக்கரைக்குப் போவார். பகலில் எந்த வித அசுமாத்தமும் இல்லாமல் வேலியோடு வேலியாக மூடப் பட்டிருக்கும் சின்னச் சின்னச் சதுரத் தட்டிகள் மாலையானதும் திறக்கப் பட்டிருக்கும். உள்ளேயிருந்து "கள்" விட்டுப் புளிக்க விடப்பட்ட தோசைமாவில் சுடப்படும் தோசையின் வாசம் மூக்கைத் துளைக்கும்.

கதிரேசர் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு ஒவ்வொரு தட்டியாகத் தாண்டும் போது சங்கவி "ஏனப்பா போறிங்கள்? இங்கையே வேண்டுங்கோவன்." பொறுமையிழந்து கேட்பாள்.

கதிரேசர் "இவளட்டைத் தோசை சரியில்லை. இவளின்ரை பச்சைச் சம்பல் சரியில்லை." என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொன்றாகத் தாண்டி குறிப்பிட்ட தட்டியடியில் குனிந்து மூடு பெட்டியைக் கொடுத்து "முப்பது தோசை சுட்டு வையணை." என்கிற போது "என்ரை ராசா வந்திட்டியே." என்பாள் தோசை சுடும் பெண்.

ஏதோ அவளும் கதிரேசரும் நெருங்கிய உறவினர்கள் போல இருக்கும் அவளின் கதை. தோசை வாங்கி வாங்கியே பரிச்சயமான உறவு. "நல்லா நிறையச் சம்பல் போட்டு வையணை. பத்துப் பாலப்பமும் புறிம்பாச் சுட்டு வையணை. " கதிரேசர் சொல்லி விட்டு, சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, ரவுணுக்குள் போய் இன்னும் தேவையான வீட்டுச் சாமான்களையும் வாங்கிக் கொண்டு, திரும்பி வந்து தோசை பாலப்பத்தையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்.

வவுனியாவில் நிற்கும் சங்கவியின் நினைவலைகள் பருத்தித்துறையை வலம் வந்தன. பிறந்த மண்ணையும் அப்பா, அம்மா, சகோதரர்களுடனான அந்த வாழ்க்கையையும் நினைக்கும் போதெல்லாம் வீணையின் நரம்பை மீட்டும் போதெழுகின்ற மெல்லிய நாதத்தின் இனிமை தரும் சிலிர்ப்பு அவளுள் ஏற்படும்.

"என்ன சங்கவி ஆமியைக் கண்டு பயந்து போட்டியே? இஞ்ச வா. வந்து பக்கத்திலை இரு." மிகவும் ஆதரவாகவும் ஆசையாகவும் கதிரேசர் சங்கவியை அழைத்தார். நினைவுகள் தந்த சிலிர்ப்புடன் சங்கவி வந்து அவர் பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்து இடது கையால் அவர் முதுகைத் தடவி அணைத்துக் கொண்டு வீதியை நோக்கினாள்.

சற்று நேரத்துக்கு முன் சிங்கள இராணுவத்தின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபட்டுக் கிடந்த வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன்ரோட், சைக்கிள்களும், ஓட்டோக்களும், மனிதர்களுமாய் மீண்டும் உயிர்ப்புடன் தெரிந்தது.

பக்கத்தில் அமர்ந்திருந்த அப்பா கதிரேசரைப் பார்க்கப் பார்க்க சங்கவிக்கு ஒரே கவலையாக இருந்தது. அவரது அகன்ற தோள்கள் ஒடுங்கி மார்பகங்கள் வலுவிழந்து, கைகளும் கால்களும் சோர்ந்து... உடலுக்குள் நெளிந்து திரியும் நோயின் கொடிய வேதனையைக் கொன்று விடும் அளவு கொடிய வேதனை பிள்ளைகள் நாடு நாடாகச் சிதறியதால் ஏற்பட்ட தனிமையில் கண்ணுக்குள் தெரிய துவண்டு போயிருந்தார்.

அவர் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையாகிப் போனதை "மேற்கொண்டு வைத்தியம் செய்ய முடியாது எல்லாம் கை நழுவி விட்டது." என்று டொக்டரே கை விரித்த பின்தான் செல்லம் யேர்மனிக்கு ரெலிபோன் பண்ணி சங்கவியிடம் சொன்னாள். சங்கவியை ஒரு தரமாவது பார்த்து விடவேண்டுமென்ற ஆசைத் துடிப்பிலேயே அவர் இன்னும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்றும் சொன்னாள்.

உயிருக்கு உத்தரவாதமில்லாத தாயகத்தில் தனக்கொன்று ஆகி விட்டால் ஜேர்மனியில் விட்டு வரும் குழந்தைகள் சிறகிழந்து போவார்களே என்ற பயம் சங்கவியின் மனதைக் குழம்ப வைத்தாலும் அப்பாவின் பாசம் வலிந்திழுக்க போராடும் மனதுடன்தான் புறப்பட்டாள்.

தாயகத்தில் கால் வைத்த போது மனதுக்குள் ஏற்பட்ட இனம் புரியாத சந்தோசத்தையும் துள்ளலையும் முண்டித் தள்ளிக் கொண்டு முன்னுக்கு வந்து நின்றது பய உணர்ச்சிதான்.

"பொட்டை அழித்து விடு." பின்னுக்கு நின்ற சிங்களப் பெண் ஆங்கிலத்தில் கிசுகிசுத்த போது, பன்னிரண்டு வருடங்களாக ஜேர்மனியிலேயே தவிர்க்காத பொட்டைத் தவிர்த்து, பாழடைந்த நெற்றியுடன், கால்கள் பின்னித் தடுமாற, படபடக்கும் நெஞ்சுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்ததை நினைக்க சங்கவிக்கு மனசு கூசியது. "ஏன் இப்படி முகம் இழக்கப் பண்ணப் படுகிறோம்." என்று குமுறலாகக் கூட இருந்தது.

விமான நிலையத்தில் மாமாவை இனங் கண்டு, செக்கிங் பொயின்ற்ஸ் தாண்டி, வெள்ளவத்தை வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுத்து, வவுனியா புறப்படுவதற்கிடையில் சங்கவி நிறையத் தரம் எரிச்சல் பட்டு விட்டாள்.
"அந்நிய நாட்டில் எமக்கிருக்கும் சுதந்திரம் கூட எமது நாட்டில் எமக்கு இல்லையே" என்று மாமாவிடம் குமுறினாள்.

"வவுனியாவிலை ரெயின் நிண்டதும் ஓடிப் போய் லைன்ல நில். இல்லாட்டி பாஸ் எடுத்து வீட்டை போய்ச் சேர மத்தியானம் ஆகீடும்." மாமா ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் சங்கவி ஓடவில்லை.

அதன் பலனாக வவுனியா ரெயில்வே ஸ்ரேசனை நிறைத்து நின்ற சிங்கள இராணுவப் படைகளுக்கு நடுவில் நீண்டு, வளைந்து, நெளிந்து நின்ற மூன்று மனித வரிசைகளின் மிக நீண்ட வரிசையில் இறுதி ஆளாக அவள் நின்றாள். இறுதிக்கு முதல் ஆளாக அவளது மாமா நின்றார்.

அலுப்பு, களைப்பு, பயம், சலிப்பு, எல்லாவற்றையும் மீறிய ஆர்வத்துடன் அவள் முன்னுக்கு எட்டிப் பார்த்தாள். மூன்று வரிசைகளும் ஆரம்பிக்கும் இடங்களில் ஐந்து ஐந்து பேராகச் சிங்களப் பெண்கள் Uniform உடன் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். மேசைகளில் பெரிய பெரிய கொப்பிகள் இருந்தன. வரிசையில் முன்னுக்கு நிற்பவரை ஒரு பெண் எதுவோ கேட்டு எழுத, அடுத்த பெண் ஒரு கொப்பியைப் புரட்டி எதுவோ தேட, மற்றைய இரு பெண்களும் எழுதுவதும் பொலிஸ் ரிப்போர்ட்டையோ அல்லது வேறு எதையோ அக்கு வேறு ஆணி வேறாய் அலசிப் பார்த்து முடிப்பதுமாய் தொடர இறுதிப் பெண் ஒரு சின்ன ரோஸ் கலர் துண்டைக் கொடுக்க மனித வரிசை ஒவ்வொருவராக ஆறுதலாகக் கலைந்து கொண்டிருந்தது.

6.30 க்கு ரெயினால் இறங்கிய சங்கவியும் மாமாவும் சிங்களப் பெண்கள் இருந்த மேசையடிக்கு வரும் போது நேரம் எட்டு மணியைத் தாண்டியிருந்தது. மற்றைய இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே முடிந்து, அந்த வரிசைகளுக்குப் பொறுப்பாக இருந்த சிங்களப் பெண்கள் எழுந்து நின்று கைகளை மேலே உயர்த்தி உளைவு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே வவுனியாவில் இருந்து கொழும்பு வரை போய் வருபவர்களுக்காம். இந்த வரிசை சங்கவி போல் புதியவர்களுக்காம்.

அப்பா கதிரேசர் வவுனியாவில் ஸ்ரேசன் மாஸ்டராகப் பணி புரிந்த காலங்களில் அவரோடு கைகோர்த்துக் கொண்டு துள்ளித் திரிந்த Flattform இன்று சிங்கள இராணுவங்களால் நிறைந்திருக்கும் காட்சியை ஜீரணிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த சங்கவியை அந்தச் சிங்களப் பெண்கள் கேள்விகளாய்க் கேட்டு கோபப் படுத்தினார்கள்.

சங்கவிக்கு சிங்களம் விளங்குகிறதோ இல்லையோ என்பது பற்றியே அக்கறைப் படாத சிங்களப் பெண்கள் அவளின் கோபத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர்கள் கேள்விகளால் குடைந்து ஜேர்மனியப் பாஸ்போர்ட், ஐசி பார்த்து பொலிஸ் ரிப்போர்ட்டை ஆராய்ந்து பாடசாலை வரவுப் பதிவேடு போன்ற கொப்பியில் பெயர் விலாசம் எல்லாம் பதிந்து கடைசியாக முத்திரை போன்ற சைஸில் ஒரு ரோஸ் கலர் துண்டை நீட்டிய போது "அப்பாடா" என்ற உணர்வுடன் அதை வாங்கிப் பார்த்தாள்.

எல்லாம் சிங்களத்தில் எழுதப் பட்டிருந்தன. ஒன்றுமே புரியவில்லை.
சிங்கள இராணுவத்தின் விறைப்புகளையும், முறைப்புகளையும் தாண்டி செக்கிங்கில் கிளறப்பட்ட சூட்கேஸை அமத்திப் பூட்டிக் கொண்டு, வெளியில் வந்த போது நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.

"மாமா...! என்ன இது? எல்லாம் சிங்களத்திலை எழுதியிருக்கு. ஒண்டுமே விளங்கேல்லை. இதுதான் பாஸோ..?" ரோஸ் துண்டை நீட்டிய படி சங்கவி மாமாவை நோக்கினாள்.

"ஓமோம். இதுதான் பாஸ். கவனமா வைச்சிரு. துலைச்சியோ....! உன்ரை சரித்திரம் அவ்வளவுதான். இது ஒரு நாள் பாஸ்தான். நாளைக்குக் காலைமை வந்துதான் ஒரு கிழமைப் பாஸ் எடுக்கோணும்."

மாமா சொன்ன பின் சங்கவிக்கு அந்த மெல்லிய ரோஸ் கலர் பேப்பர் துண்டு மகா கனமாக இருந்தது. Handbag க்குள் வைத்து விட்டு அடிக்கடி திறந்து திறந்து அது பத்திரமாக இருக்கிறதா..! எனப் பார்த்துக் கொண்டாள்.

"ஏன் ஒருநாள் பாஸ்தான் தந்தவையள்? ஒரேயடியா ஒரு கிழமைக்குத் தந்தால் என்ன?" திருப்தியின்மையுடன் கேட்டாள்.

"உடனை அப்பிடித் தரமாட்டினம்."

"அப்ப நாளைக்கு இன்னொரு தரம் இங்கை வந்து தூங்கிக் கொண்டு நிக்கோணுமோ? ஏன் இந்தளவு கெடுபிடி? இதிலை இவையளுக்கு என்ன லாபமிருக்கு?"

"எல்லாம் தங்கடை கட்டுப் பாட்டுக்கை வைச்சிருக்கத்தான். பெடியளை(புலிகளை)உள்ளை நுழைய விடாமலிருக்கத்தான்."

"அப்ப இங்கை பெடியளே இல்லையோ..?"

"இருக்கிறதுக்கான சந்தர்ப்பம் இல்லை. இது ஆமியின்ரை கட்டுப் பாட்டுக்குள்ளை இருக்கிற இடம்."

சங்கவிக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தது.
"என்ன பிள்ளை.. ஒரே யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய். பிள்ளையளை நினைச்சுக் கவலைப் படுறியோ?" கதிரேசர் கேட்டதும்தான் சங்கவி மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தாள்.

"இல்லையப்பா... இவங்கள் காலைமை ரெயில்வே ஸ்டேசனிலை மணித்தியாலக் கணக்கிலை என்னையும் மாமாவையும் மறிச்சு வைச்சு கணக்கெடுப்பும், பதிவும் செய்ததை நினைக்க நினைக்க எனக்குக் கோபம் கோபமாய் வருது. அப்பிடியெண்டால்... இந்தப் பெடியள்(விடுதலைப்புலிகள்) இதுக்குள்ளை வரேலாதோ..? "

இப்பக் கதிரேசர் குனிந்து இரகசியமாக.. அவள் காதுக்குள்.. "எங்கடை பெடியளை இவங்களாலை என்ன செய்யேலும்..?" என்றார். சொல்லும் போதே நோயில் வாடிப் போயிருந்த அவர் கண்கள் பிரகாசித்ததை சங்கவி கவனிக்கத் தவறவில்லை. இரண்டு மாவீரர்களைப் பெற்றெடுத்த கதிரேசரிடம் தேசப்பற்றும் தமிழ்த்தாகமும் மரணத்தின் வாசலில் நிற்கும் இந்த நேரத்திலும் குறையாமல் இருந்தன.

சங்கவி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிரேசர் "என்ன பிள்ளை அப்பிடிப் பார்க்கிறாய்? உன்னைப் பார்த்திட்டன். இனி நான் நிம்மதியாக் கண்ணை மூடுவன்." என்றார்.

"இல்லையப்பா அப்பிடியொண்டும் நடக்காது..." சொல்லிக் கொண்டிருக்கும் போதே சைக்கிள் ஒன்று வந்து கேற் வாசலில் நிற்க, அழகிய இளைஞனொருவன் இறங்கி உள்ளே வந்தான். பக்கத்து அறைகளில் குடியிருப்பவர்களிடம்தான் அவன் வருகிறான் என சங்கவி நினைத்த போது "வா விமலன் வா." கதிரேசரும் செல்லமும் அவனைக் கோரசாக வரவேற்றார்கள்.

மாவீரனான தம்பி மொறிஸ் இப்போ உயிரோடு இருந்தால் இவன் வயதில்தான் இருப்பான். சங்கவி தனக்குள் நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

நடக்கவே கஸ்டப் படுகிற கதிரேசர் முக்கித்தக்கி கதிரைக்குள்ளால் எழுந்து சுவரைப் பிடித்துக் கொண்டு மெதுமெதுவாய் நடந்து அவரது அந்தக் குச்சி அறைக்குள் நுழைய விமலன் அவர் பின்னால் அறைக்குள் நுழைந்தான். செல்லமும் பின் தொடர சங்கவியும் உள்ளே போனாள்.

யார் வந்தாலும் வெளி விறாந்தையில் இருத்திக் கதைக்கும் அம்மாவும் அப்பாவும் நடந்த விதம் அவளுக்குச் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது.
கதிரேசர் கட்டிலில் அமர உதவி செய்த விமலன் தானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டான். "எப்பிடியப்பு இருக்கிறாய்..?" செல்லம் ஆதரவாய்க் கேட்டாள்.

"யார் இவன்..?" சங்கவிக்குள் ஆர்வம் கேள்வியாய் எழுந்தது.

"நீங்கள்..?" சங்கவி அவனை நோக்கினாள்.

"அக்கா..! நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தனனான். உங்கடை தம்பி மொறிசின்ரை நண்பன்தான் நான்."

தம்பி மாவீரனாகி வருடங்கள் பல ஓடிய பின் தம்பியின் நண்பனாக வந்தவனை வியப்புடன் பார்த்து "நான் வந்தது எப்பிடித் தெரியும்..?" என்றாள்.

"எல்லாம் தெரியும்." என்றான் அர்த்தத்துடன்.

இப்போ செல்லம் கிசுகிசுத்தாள். " விமல் வெளியாக்களுக்குத்தான் எங்கடை மருமகன். ஆனால் உள்ளுக்கு..."

செல்லம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமலன் சேர்ட்டை மேலே உயர்த்தி, இடுப்பிலே சொருகியிருந்த கடிதமொன்றை எடுத்து செல்லத்திடம் கொடுத்தான்.

அப்போதுதான் சங்கவி அதிர்ந்தாள். தலைக்குள் குருதி வேகமாகப் பாய்ந்ததை உணர்ந்தாள். விமலனின் இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு Pistole கள்.

"எப்படி..? எப்படி இது சாத்தியம்? இத்தனை தடைகளை மீறி...?"
இத்தனை தடைகளை மீறி எப்படி இவன் வைரவர் புளியங்குளத்துக்குள் நுழைந்தான்? குருமன் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்கள இராணுவத்தின் கண்களுக்குள் நிற்கும் இந்த வீட்டுக்குள் எப்படி நுழைந்தான்..?

"எப்படி விமலன்..? எப்படி இதெல்லாம் சாத்தியமாயிற்று..? உங்களட்டைப் பாஸ் இருக்கோ..?" கேள்விகளை அடுக்கினாள்.

"இல்லை அக்கா. என்னட்டைப் பாஸ் இல்லை."

"அப்ப... பிடிபட்டால்...?" சங்கவி நியமான பயத்துடன் கேட்டாள்.

விமலன் கழுத்து மாலையை இழுத்துக் காட்டினான். குப்பி தொங்கியது. வாயைக் கூட்டி உமிழ்வது போலச் செய்தான். இரண்டு குப்பிகள் கடைவாயின் இரண்டு பக்கங்களிலும் வந்து நின்றன. மீண்டும் அவைகளை உள்ளிழுத்து கொடுப்புக்குள் அடக்கி விட்டு இயல்பாகச் சிரித்தான். செல்லம் கொடுத்த தேநீரைக் குடித்தான். சங்கவிக்கு வியப்பும் படபடப்பும் அடங்க முன்னமே சைக்கிளில் ஏறிப் போய் விட்டான்.

சங்கவிக்கு தான் காலையில் ரெயில்வே ஸ்டேசனில் பார்த்த பதிவுக் கொப்பிகள் நினைவில் வர தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

நிகழ்வு-21.11.1997

சந்திரவதனா
யேர்மனி
1999

Monday, November 27, 2006

எங்கள் இலட்சிய மாடத்தின் அத்திவாரக் கற்களே!




எங்கள் இலட்சிய மாடத்தின்
அத்திவாரக் கற்களே!
அமைதியாக எம் மண்ணில்
புதைந்திருக்கும் விதைகளே!

பூகம்பங்களாய் களமாடிய நீங்கள்!
பூவிதழ்களாய் விரிந்திருக்கிறீர்கள்-ஆனால்
இங்கெரியும் தீபங்களால் நீங்கள்
மூட்டிடும் விளக்குகள் ஏராளம்.!

கல்லறைக்குள்ளிருந்தே களப்புலிகளைப் பிரசவிக்கும்
வல்லமை கொண்டவர்கள் நீங்கள்!
மலர்தூவ வருவோரின் மனங்களில் பொறிபாய்ச்சி
கனல் தெறிக்க வைப்பவர் நீங்கள!!

நெய்யூற்றி உங்கள் முன்னால்
விளக்கெரிப்போம் நாங்கள்-உங்கள்
இலட்சியத்தின் சுமையினை துணிந்தே
பொறுப்பெடுப்போம் நாங்கள்.!

- தீட்சண்யன் -

Sunday, November 26, 2006

தலைவருக்கு வாழ்த்துக்கள்


மாங்குளத்தில் மாவீரர் விழாக்கவி - (1990)


அரங்குகள் பல கண்ட
ஆசான் முருகேசனுக்கும்
அடுத்தடுத்துக் கவி படித்த
நல்ல தமிழ் கவிஞர்கட்கும்
அமர்ந்திருந்தும் ஆர்ப்பரித்தும்
கவி கேட்கும் மக்களுக்கும்
சிரம் தாழ்ந்த வணக்கம்!

வாருங்கள்!
மண்ணுக்காய் மரணித்த மாவீரர் தினம் சிறக்க
மடை திறந்த வெள்ளமென வாருங்கள்!
வந்து பாருங்கள்!
சனத்தோடு சனமாகக் கைகளைத் தட்டுங்கள்

முன்னிரண்டு விரலெடுத்து மூச்சிழுத்து
பன்னிரண்டு மைல் கேட்க விசிலடியுங்கள்
போதும்! அது போதும்!
பின் இரண்டு மணியளவில் வீடடைந்து
விழா மறந்து
மாவீரர் செயல் மறந்து
மாற்றான் ஷெல் மடியிலே வீழும் வரை
உறங்குங்கள்!

விடிந்தெழுந்து வேறேதும் சேதியுண்டா..?
என்று கேளுங்கள்..! வேறென்ன..!
ஈழ மண் மீட்டெடுக்க எவனோ ஈன்ற
இளைஞர்கள் இல்லையா எங்களிடம்!
நாமென்ன முட்டாள்களா!
நம் மகனை அனுப்புதற்கு!
என மெல்ல ஒதுங்குங்கள்.
- மிகுதி

Wednesday, November 22, 2006

அவல்


சன்னமாக மிதந்த மாமியின் குரல் ஓலமாக எழுந்த போதுதான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தேன். மாமி அப்படி அழுது நான் பார்த்ததில்லை. தூரத்துச் சொந்தமாக இருந்தாலும் மாமாவைத் திருமணம் செய்து கொண்டதால் மாமியாக எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்து விட்டவள்.

மாமியின் சீதன வீட்டின் ஒரு பகுதியில் அவளது தாய் தந்தையருக்கும் உரிமை இருந்தது. மாமியுடனான நெருக்கத்தில் நாங்கள் அடிக்கடி அந்த வீட்டுக்குப் போய் வருவோம். மாமியின் தாயார் செல்லம்மாப் பாட்டி இன்முகத்துடன் எங்களை வரவேற்பாள்.

நாற்சார முற்றத்தில் பெரியவர்கள் இருந்து கதைக்க, நாங்கள் பிள்ளைகள் எங்காவது ஒரு மூலையில் இருந்து சிப்பியோ, சோகியோ வீசிச் சம்பா விளையாடுவோம். மாமிக்கு நான்கு தம்பிமார். கடைசி இரண்டு தம்பிமாரும் எங்கள் சோடிகள்தான். எல்லோருக்கும் ஏழில் இருந்து பத்து வயதுக்குள்தான். ஆனாலும் கடைசித் தம்பி எழிலன் ஒருநாளும் எங்களோடு இருந்து விளையாட மாட்டான். எப்போதும் தாயின் சேலையை எடுத்து அரையும் குறையுமாக உடுத்திக் கொண்டு, சேலைத்தலைப்பால் போர்த்திக் கொண்டு நெளிவான். நாணிக் கோணி நிற்கும் அவனது பாவனை ஒரு பெண் போலவே இருப்பதாகச் சொல்லி எல்லோரும் சிரிப்பார்கள். ரசிப்பார்கள்.

"எழிலன்...! வாடா, விளையாடுவம்" என்றால் அழகாகச் சிரிப்பானே தவிர எங்களோடு சம்பா போடவோ, ஒளித்துப் பிடித்து விளையாடவோ வரமாட்டான்.

“பொம்பிளைப் பிள்ளையாப் பிறந்திருக்க வேண்டியவன்….“ செல்லம்மாப் பாட்டியும், பாட்டாவும் பெருமையோடு சொல்வார்கள்.

நடனம் ஆடிக் காட்டுவான். சரோஜாதேவி போலக் கண்களைச் சுழற்றி, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி மந்தகாசப் புன்னகையுடன் தலை குனிவான்.

அவன்தான் இறந்து விட்டானாம். இப்போது அவனுக்குப் பதினாறு வயதிருக்கும். ஓலங்களுக்கும் ஒப்பாரிகளுக்கும் நடுவில் அரசல் புரசலாய் ஏதேதோ கதைகள்.

கடிதம் எழுதி, கிணற்றுக்கட்டில் வைத்து விட்டு, கடிதத்தின் மேல் ஒரு கல்லையும் வைத்து விட்டு தன்னை முடித்துக் கொண்டு விட்டானாம். மாரிக்கிணறு. அதுவும் ஆழக் கிணறு. காலையில் செல்லம்மாப் பாட்டி தண்ணீர் எடுக்க கிணற்றடிக்குப் போன போதுதான் கிணற்றுக்குள் அவன் மிதப்பதைக் கண்டாவாம்.

கடிதத்தில் தனது சாவுக்கு நான்கு பேர் காரணம் என்றும் தனது விருப்பத்துக்கு மாறாக அவர்கள் நடக்கும் போதும் தன்னால் மறுக்க முடியவில்லை என்றும், அந்த உபாதையை தன்னால் தாங்க முடியாததாலேயே தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், அந்த நான்கு பேர்களின் பெயர்களையும் எழுதியிருந்தானாம். நான்கு ஆண்கள் இவனோடு பாலுறவு வைத்திருந்தார்களாம். எனக்கு எதுவும் சரியாகப் புரியவில்லை.

அவனுக்கு வந்தது உடல் உபாதையா, உள உபாதையா என்ற சிந்தனை ஏதுமின்றி „இவனைப் பார்த்தால் பொம்பிளை மாதிரித்தானே, அதாலைதான்…“ என்று ஒரு சாராரும், „இவன் விரும்பாமல் நடந்ததோ?“ என்று இன்னொரு சாராரும்… அவல் கிடைத்த திருப்தியில் மென்று கொண்டிருந்தார்கள்.

செல்லம்மாப்பாட்டியும் மாமியும் இன்னும் ஓலமிட்டு அழுது கொண்டிருந்தார்கள்.

சந்திரவதனா
ஜேர்மனி
22.11.2006

Wednesday, November 15, 2006

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்?


இவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. என் ஊரவன்தான். எனது வீதியில்தான் இவன் வீடும். என் அண்ணனின் நண்பனுக்கு இவன் அண்ணன் என்பதாலோ என்னவோ இவன் மீது எனக்கு ஒரு மதிப்பும் இருந்தது.

சின்னவயதில் அம்மா எதையாவது கொடுத்து விட்டு வரச் சொன்னால் கொண்டு போய் இவனது அம்மாவிடம் கொடுத்து விட்டு வருவேன். என் தோதுக்கு அங்கு யாரும் இல்லை. அவனது அக்கா என்னை விடப் பல வருடங்கள் மூத்தவள். மற்றதெல்லாம் பெடியன்கள். அதனால் அங்கு போவதில் எனக்கு ஆர்வமும் இருந்ததில்லை.

எனது அம்மாவும் அவனது அம்மாவும் மாலை வேளைகளில் எங்கள் வீட்டு விறாந்தை நுனியில் இருந்து ஏதோ குசுகுசுப்பார்கள். சில வேளைகளில் எங்கள் வீட்டு மல்லிகைப் பந்தலின் கீழ் இருந்தும் கதைப்பார்கள். இவனது அப்பாவும் இடையிடையே எனது அப்பாவுடன் கதைப்பார். எப்போதாவது அழகாக வெளிக்கிட்டுக் கொண்டு அம்மாவும் அப்பாவும் அவர்கள் வீட்டுக்குச் சோடியாகப் போய் வருவார்கள். நானும் கூடப் போக வேண்டிய கட்டங்களும் வந்திருக்கின்றன. அந்தப் பொழுதுகளை எப்படிக் கழிப்பது என்று தெரியாமல் நான் அவர்களது வீட்டுப் பூந்தோட்டத்துக்குள் சுற்றுவேன். தென்னைமரத்தோடு சாய்ந்திருப்பேன். என்னை விட நான்கு வயது அதிகமானாலும் அப்போது இவனும் சின்னப் பெடியன்தான். ஆனாலும் கிரிக்கெட் மட்டையோடு வெளியே போய் விடுவான். இவனது அக்கா மட்டும் என்னைக் கூப்பிட்டு வைத்துக் கொஞ்சம் கதைப்பா. இந்தளவு உறவு எமது இரு குடும்பங்களுக்கும் இடையே இருந்தது.

இந்த நித்தியங்களில் பெரிதான மாற்றங்கள் எதுவும் ஏற்படாமலே, காலங்கள் ஓடின. நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் காலை நான் பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கையில் வடமராட்சி வீதிச் சந்தியில் வைத்து இவன் ஏதோ ஒரு நோட்டீஸை விநியோகித்துக் கொண்டிருந்தான். நானும் தங்கையும் இவனைத் தாண்டும் போது எனக்கும் நீட்டினான். ஆண்கள் என்றாலே ஒதுங்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் அன்றைய பெண்களுக்கான எழுதப்படாத சட்டமாக இருந்தாலும், அதுவே எனது பழக்கமாகவும் இருந்தாலும் தந்தது இவன் என்பதால் தயங்காமல் வாங்கிச் சென்றேன். அது ஏதோ ஒரு பகிஸ்கரிப்பை ஒட்டிய நோட்டீஸ்தான்.

ஆனால் மதிய இடைவேளையில் வீடு திரும்பிய போது அண்ணன் கொஞ்சம் மூட்அவுட்டாக நின்றான். மதிய உணவில் கூடக் கை வைக்காமல் என்னையே காத்திருப்பது போல நின்றான். கண்களில் அவமானம் கலந்த கவலை தெரிந்தது. என்னைக் கண்டதும் "ஏன் அவன்(####) லெற்றர் தர வாங்கினனீ?" என்றான். எனக்கு அழுகையே வந்து விட்டது.

"ஆர் சொன்னது?" என்றேன்.

"அவன்தான்(####) சொன்னவன், உன்ரை தங்கைச்சி நான் லெற்றர் குடுக்க வேண்டினவள், என்று"

நல்லவேளையாக நான் அந்த நோட்டீஸை எனது பாடசாலைப் புத்தகங்களுடனேயே வைத்திருந்ததால் அதை அண்ணனிடம் காட்டி சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டேன். ஆனாலும் அவனின் அந்தச் செயல் என்னை மிகவும் உறுத்திக் கொண்டே இருந்தது. கவலையாகக் கூட இருந்தது.

அதன் பின் அவனை தெருவில் எங்காவது காண நேர்ந்தாலும், காணாத மாதிரியே பாவனை பண்ணினேன். „ஏன் அப்படி என் மேல் பழி சுமத்தினாய்?“ என்று கேட்பதற்கெல்லாம் அப்போது எனக்குத் துணிவு வரவில்லை. காலங்கள் வருடக்கணக்கில் ஓடிய போதும் எனக்கு அந்த சம்பவம் மறக்கவில்லை.

எனக்குத் திருமணமாகிய பின் எனது கணவர் கூட ஒருநாள் "அவன் லெற்றர் தர வாங்கினாயாமே!" என்று, சிறிய சந்தேகத்துடன் கேட்டார். அப்போது அவன் வெளிநாடு சென்று விட்டான்.

இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 10-12 வருடங்களின் பின் அவனுக்குத் திருமணப் பேச்சுக்கள் நடந்து அவனும் வெளிநாட்டிலிருந்து வந்து எங்கள் உறவுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.

அதன் பின்னர் எங்கள் ஊர் வழக்கப்படி ஒவ்வொரு உறவினர் வீட்டுக்கும் கால்மாறிச் செல்கையில் எமது வீட்டுக்கும் வந்தான். எமது வீட்டில் எல்லோருமாக அவனையும், மணப்பெண்ணையும் வரவேற்று வரவேற்பறையில் இருத்தி வைத்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அரைமணி நேரமாக நான் அந்தப் பக்கமே போகாமல் இருந்தேன். எனது தங்கைமார்தான் வந்து "அக்கா வாங்கோ. புதுமணத்தம்பதிகள் எப்பிடி வடிவாய் இருக்கினம் எண்டு பாருங்கோ" என்று வருந்தி அழைத்தார்கள். எனது அண்ணன் அப்போது ஊரில் இல்லை. இருந்திருந்தால் வந்து கதைக்கும் படி என்னை அழைத்திருக்க மாட்டான்.

மனமில்லாமல் வரவேற்பறைக்குச் சென்றேன். புதுமணக் களையோடு அவன் இருந்தான். எதுவுமே நடக்காதது போல என்னோடு கதைத்தான். என்னால் அதிகம் கதைக்க முடியவில்லை. „என் மீது ஏன் களங்கம் சுமத்த முயன்றாய்?“ என்று கேட்கவும் முடியவில்லை.

ஆனால் எப்போதோ ஒரு நாள் என் வீட்டுக்கு நான் இல்லாத வேளையில் வந்த போது எனது ஓட்டோகிராபை(autograph) எடுத்து „இது நீரோடு செல்கின்ற ஓடம். இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்.“ என்று அவன் எழுதி வைத்த பாடல் வரிகள் சட்டென்று நினைவில் வந்து போயின. அதைக் கூட ஏன் எழுதினான் என்று எனக்கு இன்றுவரை தெரியாது.

இத்தனைக்கும் அவன் ஒரு விளையாட்டுத்தனமான பொறுப்பற்ற பெடியன் அல்ல. படிப்பு, வேலை, குடும்பம்… என்று வாழ்க்கையின் படிகளில் சரியாகவே ஏறிக் கொண்டிருந்தவன்.

இன்றைக்கு, அவன் முகம் என் ஞாபகத்தில் அவ்வளவாக இல்லை. ஆனாலும் இற்றைக்கு 32வருடங்களுக்கு முந்திய அன்றைய பொழுதில், ஒரு பெண்ணை மிகப்பெரிய குற்றவாளியாக நிறுத்தக் கூடிய... குடும்ப வாழ்க்கையையே குலைக்கக் கூடிய... விதமான அந்தப் பழியை என் மேல் சுமத்த முனைந்த அவனது செயலுடன் கூடிய அந்த சம்பவம் என் நினைவில் இருந்து அகலவே இல்லை.

சுந்திரவதனா
15.11.2006

Monday, November 13, 2006

பேத்திகள் வந்திருந்தார்கள்














சிந்து, நிலா















சிந்து, நதி















நதி, நிலா

பேத்திகள் வந்திருந்தார்கள்.என்னைச் சுற்றியுள்ள மற்றைய எல்லாவற்றையும் மறந்திருந்தேன்.அஞ்சல்கள், பின்னூட்டங்கள் எல்லாம் வாசிக்கப் படாமல் அப்படியே இருந்து விட்டன. இனித்தான் அவைகளைக் கவனிக்க வேண்டும்.

Saturday, October 28, 2006

Thursday, October 26, 2006

குட்டைப் பாவாடைப் பெண்


பலத்த காற்றும், சிணுங்கும் மழையும், மரங்கள் சொரிந்த இலைகளை தெரு முழுவதும் இழுத்துக் கொண்டு திரிந்த அந்தக் குளிர்ந்த இரவில் அவள் அந்தத் தரிப்பிடத்தில் காத்திருந்தாள். பேருந்து நிற்க முன்னரே குட்டைப் பாவாடையுடன் பளிச்சென்று தெரிந்த அவளைக் கண்டு சில கண்கள் அகல விரிந்தன. பேருந்தினுள் அவள் ஏறியதும் ஒட்டு மொத்தப் பேரூந்துப் பயணிகளின் பார்வைகளும் அவள் பக்கம் ஒருதரம் திரும்பின. அவள் என்னைத் தாண்டும் போது "ஹலோ" என்ற படி அழகாகச் சிரித்துக் கொண்டாள். தாண்டிய பின்னும் தாண்டாமல் நின்ற, அவள் விட்டுச் சென்ற கமகமக்கும் உயர்தர வாசனைத் திரவியம் என்னுள் ஒருவித சந்தோச உணர்வைத் தோற்றுவித்தது.

ஆண்களில் சிலர் ஒரு தரம் அவளைத் திரும்பிப் பார்த்து விட்டு, எட்டாத கனி என்ற பாவனையுடன் அமைதியானார்கள். பெண்களில் கூடச் சிலர் திரும்பிப் பார்த்தார்கள். ஆடையின்றிய ஒரு பெண்ணின் முன் 100 வீதமான ஆண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டன என்று எங்கோ, எப்போதோ வாசித்த ஞாபகம். அதே புத்தகத்தில் இருந்த இன்னொரு செய்திதான் என்னுள் அதிகப்படி வியப்பை ஏற்படுத்தியது. ஆடையின்றிய பெண்ணின் முன் 80வீதமான பெண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டனவாம். குறிப்பாக பெண்களின் மார்பகங்கள் பெண்களையே வியக்க வைக்கின்றனவாம். இந்த செய்தி எந்தளவுக்கு உண்மையானது என்பதில் எனக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஆனால் இப்போது குட்டைப் பாவாடையின் கீழ் பளிச்சென்று தெரிந்த இவளது தொடைகள்தான் அந்த ஆண்களைத் திரும்ப வைத்தன என்றால், பெண்களை எது திரும்ப வைத்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

நானே ஒரு மனிதஜென்மமாக இருக்கும் போது, சில சமயங்களில் நான் தள்ளி நின்று மற்றைய மனிதர்களைப் பார்த்து எனக்குள்ளே நகைத்துக் கொள்வேன். இன்றும் அப்படியொரு நகைப்பு எனக்குள். இந்த மனிதர்கள்தான் எவ்வளவு பலவீனமானவர்கள். நான் மட்டும் இதற்கொன்றும் விதிவிலக்கல்ல. ஆனாலும் இன்று கொஞ்சம் அதிகமான நகைப்பும், மனிதர்கள் பற்றிய ஆய்வும் எனக்குள்.

அந்தக் குட்டைப் பாவாடைப் பெண் பன்னிரண்டு வயதுகள்வரை எனது கடைசி மகனுடன்தான் படித்துக் கொண்டிருந்தாள். இப்போதுதான் எனக்குள் எப்படித் தொடர்வது, என்ற குழப்பமான சிந்தனை குறுக்கிடுகிறது.

அப்போது பல தடவைகள் எங்கள் வீட்டுக்கும் வந்திருக்கிறான். சில தடவைகள் எனது சமையலைச் சுவைத்தும் இருக்கிறான். கடைசியாக வந்த போது நான் ஸ்பக்கற்றியும் (spaghetti), தக்காளி சோஸ் ம் செய்து கொடுக்க, சீஸ் துருவலை அதற்கு மேலே தூவி தனக்கு மிகவும் பிடித்த உணவு என்று சொல்லிச் சந்தோசமாகச் சாப்பிட்டு விட்டுச் சென்றான்.

அதற்குப் பின் இருவருடங்களாக அவ்வப்போது வீதிகளில் மட்டுந்தான் நான் அவனைச் சந்தித்தேன். படிப்பில் சற்று பின் தங்கி வகுப்பேற்றப் படாமல் எனது மகனை விட ஒரு வகுப்பு கீழே நின்று விட்டான். பின்னொரு சமயத்தில் மகன் சொன்ன அந்தச் செய்தி என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. வெறுமே புத்தகங்களிலும், பத்திரிகைச் செய்திகளினூடுந்தான் பிறப்பிலே ஆணான ஒருவன் சத்திர சிகிச்சைகள் மூலம் பெண்ணாவது பற்றி அறிந்து வைத்திருந்தேன். இவனுக்கும் ஆணாக இருப்பதில் இஸ்டமில்லையாம். பெண்ணாகப் போகிறானாம்.

இதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்ற சிந்தனை என்னுள் ஒருவித நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஆகும் என்பதற்கு அறிகுறியாக, முதற்படியாக, முதல் முதலாக அவனை மேக்அப்புடன் பெண்ணுடையுடன் கண்டேன். அப்போதும் கூட முழுவதுமான நம்பிக்கை எனக்கு வரவில்லை.

இப்போது அவன் பெண். கண்டவர்களைச் சுண்டி இழுக்கும் படியாகக் கவர்ச்சியாக உடையணிந்து, கண்ணுக்கு மை தீட்டி, உதட்டுக்கு சாயம் பூசி... இந்தக் குளிருக்குள்ளும் கால்கள் பளபளக்கும் படியான காலுறை அணிந்து... இனி இவன் என்றோ, அவன் என்றோ நான் விழிக்க முடியாத படி இவளாகி விட்டவன்.

அவனுக்கு 18வயதான போது சத்திரசிகிச்சை செய்து முழுவதும் பெண்ணாக மாறிக் கொண்டான். அவன் உணர்வுகள் அப்படி இருப்பதால் அவன் மாறியே ஆக வேண்டும் என்று அவனது மருத்துவரே சிபாரிசு செய்ய, மருத்துவத்திற்கான சலுகைகளை முழுவதுமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணானான்.

இப்போது 24வயதுகள் ஆகி விட்ட இவளது முன் சரித்திரம் பலருக்கும் தெரியாது. இவள் வேலை செய்யும் சுப்பர் மார்க்கட்டில் இவளைத் தாண்டிச் செல்லும் ஆண்களில் பலர் இவளது புன்சிரிப்பில் தடுமாறுவதும் அடிக்கடி நடப்பதுண்டு.

இருந்தும் ஸ்ரெபான் ஆக இருந்து தற்போது ஸ்ரெபானி ஆகி விட்ட இவளது குடும்ப வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பது, எப்போதும் போல என்னிடம் கேள்விக் குறியே!

சந்திரவதனா
25.10.2006

Saturday, October 21, 2006

உங்கள் நினைவுத் திருநாள்தான் எமது தீபாவளி


மாவீரரே!
உங்கள் நினைவுத் திருநாள் தான்
ஈழவர் எமது
தீபாவளியென்று கொண்டாடுகின்றோம்,
தீபங்கள் ஏற்றி மன்றாடுகின்றோம்,
நரனுக்கெதிரான நரகாசுரப் போரென்றும்,
அவனே அவர்களது ஆற்றொணா விரோதியென்றும்,
ஆரியர்கள் நடத்தி விட்ட அட்டகாசமே
போரியற் துறையில் புதினமாய் வடிவெடுத்து
பார்- இயல் ரீதியில் பிரச்சாரமானது...
பதிவுகளும் பெற்றது...
புரிந்து கொண்டீரோ...!


கதையின் வேர் அதுவல்ல!
எமக்கேயான எல்லையைக் காக்க
தமக்கேயான வலுவுடன் போரிட்டு
தரையில் புதைந்த நம்மவர் தினத்தை
தீபமேற்றி நற்திருநாளென
தூய நினைவுடன் மலர்கள் தூவி
தூபியின் முன்னால் மண்டியிட்டு
ஆண்டாண்டான தமிழர் தினமாய்
வரித்துக் கொண்டோம் வணங்கி நிற்போம்.

வரலாறு என்றால் என்னப்பா?- வெறுமனே
வந்தவையும் போனவையும் கூறும்
புரையேறிப்போன வாசக வடிவங்களா?
இல்லையப்பா!

புதிதாக நாமமைக்கும் புனிதப் பாதையதன்
போக்கும் வீச்சும் நேர்த்தியும் உறுதியும்
வளைவும் நெளிவும் சுழிவும் மிதப்பும்
நீக்கமற நேர்மையாய்க் காட்டி விடும்
போற்றலுக்குரிய பெரும் பாதையல்லவோ!?

நாமமைக்கும் பாதையது- அதாவது,
நீர் சிதைந்து உருவான விடுதலைப் பாதையது
மாவீரர் நீரெல்லாம் மண்ணுள் மண்ணாகி - எம்
கண்ணுள் ஊற்றுடைத்து கட்டிய பாதையது

இது வெறும் கல்லாலும் மண்ணாலும் கரியநிறத் தாராலும்
கனவேக வாகனங்கள் வந்து சறுக்கி நிற்கும்,
பொல்லாத பரல் மணலும் ஊரியும் சிறு கல்லும்
உருவாக்கி வைக்குமொரு சடத்துவப் பாதையா!?

அல்லவே அல்ல ஐயா!
விடலைப் பருவமதில் வீரமுடன் களமிறங்கி
சுடலைப் பயமோ சுகபோக நினைவோ
சொட்டும் மனதிருத்தா சுடர் ஒளித் திருவுருவாய்
கடலையும் காட்டையும் களமாடிக் கரைந்துறையும்
குடலைக் கொழுந்துகள் நீர் காட்டி நின்ற பாதையன்றோ!

மறப்போமா நாமும்மை மாவீர நாயகரே,
கிடப்போமா கண்தூங்கி நினைவலைகள் மீட்டாமல்,
இரப்பான்கள் சென்றாங்கே இரந்து கிடக்கட்டும்,
பறப்பான்கள் ஊர்பறந்து பிரச்சாரம் செய்யட்டும்,
கரப்பான்கள் அவர்களென கழித்தெறிந்து கடாசிவிட்டு
சுரப்பான்கள் எம்முளத்தில் சுதந்திர-நெய் ஊறலிட
வரப்பால் வழிநடந்தும் உரைப்பால் உளங்கவர்ந்தும்
நெருப்பாய் நிலையுணர்த்தி நித்திலத்தின் புரவலராய்
பரப்புரையும் செய்வோம் படைநடப்பும் செய்வோம்.
கரப்பால் மூடிய குஞ்சுகளாய் நாம் இருப்பதினி நடவாது-வான்
வரப்பிலும் பலவீரம் காட்டும் வகை வளர்ந்து விட்டோம்.

நினைப்பால்...
உம் நினைப்பால்...
நீர் வளர்த்த பெரு நெருப்பால்...
நாம் மூண்டு விட்டோம்- இனி
ஒருக்காலும் ஓயோம், உம் கனா
நிஜத்தால் உயிர்வுறும்-ஆம்
உருப்பெறும், இது உறுதி. (கவிதையை முழுமையாகப் படிக்க...)

தீட்சண்யன்
8.12.97

ஒலிபரப்பு - 29.12.97 புலிகளின்குரல்வானொலி.

Thursday, October 19, 2006

நியம் பேசியதால் நினைவாகியவன்




நிமலராஜனே!
செய்தி தந்த நின் மரணம்
இன்றெமக்குச் செய்தியானதோ!

உண்மைக்கு அங்கு
இதுதான் விதியோ
நேர்மைக்கு உந்தன்
உயிர்தான் பலியோ!

வரையறையற்ற
வஞ்சகச் செயல்களால்
தமிழர்களை வதைக்கின்ற
நிலையற்ற மனம் கொண்ட
பச்சோந்திகளின்
முறையற்ற செயலால்
தொடர்கின்ற சதியால்
உனக்கிந்தக் கதியோ!

நீ
சிதை பட்டுப் போன செய்தியில்
ஒரு கணம் நாம்
பதை பதைத்தோம்
மனம் துடித்தோம்

நேர்மையை மையாக்கி
எழுதுகோலை துணிவாய் தூக்கி
புலத்துக்கெல்லாம்
நியத்தை வடித்தவனே
நீ இன்று
எமக்கு எழுத்தானாயோ!

ஓங்கி ஒலித்த உன் குரல்
ஓய்ந்து போனதோ!

நியம் பேசியதால்
நீ இன்று
நினைவாகிப் போனாயோ!

19.10.2000

Tuesday, October 17, 2006

சாமத்தியச் சடங்கு அவசியமா?


அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது?


வீடியோ, கமரா என்பவற்றில் பதிவு செய்வதற்காக கட்டாயம் இது வேணும்! இல்லாவிட்டால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது? இந்த இயந்திர உலகில் நீங்கள் சாதாரணமாக ஒரு குடும்பப்படத்தை எடுத்து, வேலை மினக்கெட்டு எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டு இருப்பீர்களா?
சாமத்தியச் சடங்கு செய்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாம். இம்மாத ஒரு பேப்பரில் சுந்தரி எழுதியுள்ளார்.

அப்படியானால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகன் எப்படி இருப்பான் என்று எப்படித்தான் நடைமுறையில் தெரிந்து கொள்வது? அவனுக்கும் சாமத்திய வீடு செய்ய வேண்டுமா? இந்த இயந்திர உலகில் அவனை மட்டும் வேலை மினக்கெட்டு ஒரு குடும்பப் படமா எடுத்து...?

55வது ஒரு பேப்பரில் சாமத்தியச் சடங்கு அவசியமா என்ற எனது கட்டுரையின் ஒரு பகுதி இது தேவையா என்ற தலைப்பில் பிரசுரமாகி இருந்தது. அதற்கு எதிர்வினையாக 56வது ஒர பேப்பரில் வந்த சுந்தரியின் கட்டுரை கீழே

சாமத்தியச் சடங்கு தேவைதான்

கடந்த வார பெண்கள் பக்கத்தில், இது தேவையா? என்ற தலைப்பின் கீழ், பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் சாமத்தியசடங்கும் ஒன்று எனவும், அனாவசியமான எந்தவிதமான தர்க்கரீதியான காரணங்களும் அற்ற இந்தச்சடங்கைக் களைவதற்கு முன்வருவோமா? என்ற கேள்வியுடன் சந்திரவதனா தனது வாதத்தை முன் வைத்திருந்தா.

இந்த விஞ்ஞானயுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சூழலில் இந்த சாமத்திய சடங்கு இன்னும் அவசியமாகுகிறது. பெண்கள் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இந்த நேரத்தில் அவளைத் தனித்து விடாது. அது பற்றிய பயத்தை போக்கி, வயதில் அனுபவம் உள்ள உறவுப்பெண்கள் ஒன்று கூடி கேள்விகள் கேட்டு கதைத்து அப்பெண்ணிற்கு தன்னப்பிக்கை ஊட்டி, இனிச் சிறுமி அல்ல இளம் பெண்ணென புடவை கட்டி, பெருமை கூட்டி அவளை ஒரு பெண்ணாக்குகிறார்கள்.

எமது கலாச்சாரத்தின் பெருமையை பலர் புரிந்து கொள்வதில்லை. எம் மத்தியில் செத்த வீடு நடத்தால் கூட நாம் Counselling போகாமல் இருப்பதற்கு எங்கள் சமூக சடங்குகள் (கட்டி பிடித்து, வாய்விட்டளுது, ஒப்பாரி வைத்து, சாப்பாடு சமைத்து கொடுத்து, அத்திரட்டி, ஆட்டதிவசம், திவசம் என) பாதிக்ப்பட்டவரை தனித்திருக்க விடாது சடங்குகள் சமூகத்தின் நிழலில் துயர் ஆற வைக்கின்றன.

இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள் தான் அவளைக்காக்க வேண்டும் என்று ஊர் மக்களிடம் பிள்ளையை ஒப்படைப்பது என ஒரு பெரியவர் விளக்கம் சொன்னது நகைப்புக்கு இடமாக கலாச்சாரத்தை அவமான படுதுவதாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தா... இதில் நகைப்பதற்கு ஒன்றுமே இல்லை. சாமத்திய சடங்கின் மூலம் இன்னாருக்கு இத்தனை பிள்ளைகள், அதில் இந்த பிள்ளை வயதிற்கு வந்த பிள்ளை என அவளை வாழ்த்தும்போது அவள் உருவமும் மனதில் படிகிறது. ஊர் மக்கள் அவளை நமது ஊரின் பெண்ணாக வரித்தெடுத்து ஏதும் சிக்கலில் அப்பெண் மாட்டு படப்போகிறாள் என்று தெரியும் இடத்து அதை குடும்பத்திற்கு தெரியப்படுத்தியோ அல்லது அவளைக்கு புத்தி சொல்லியோ அவளைப் பேரிளம்பெண் பருவத்திற்கு வழி நடத்துகிறார்கள்.

இங்கு வெளிநாட்டில் நாம் இன்னும் ஆளை ஆள் சொந்த பந்தங்களைத் தெரிந்து கொள்வதே இப்படியான சடங்குகளின் மூலம்தான். முன்பு பிள்ளை பிறந்தல், 11ம்நாள் , 31ம் நாள் தொட்டிலில் இடுதல், காது குத்துதல், பெயர் சூட்டுதல், ஏடு தொடக்குதல், சாமத்தியம், கொழுக்கட்டை கொடுத்தல் (நிச்சயதார்த்தம்), கல்யாணம், செத்தவீடு, என பலப் சடங்குகள் எம்மத்தியில் இருந்தன. இப்போ அவை எல்லாம் எதற்கும் பெண்ணியம் பேசி தாங்களும் குழம்பி எங்களையும் குழப்பும் மேதாவித் தனத்தாலோ, நேரம் இன்மையாலோ சுருங்கி ஏதோ ஓன்று இரண்டு மட்டும் நடைமுறையில் உள்ளன.

அத்தோடு வெளிநாட்டு முறையிலான (கேக் வெட்டி சம்பெயின் உடைத்து) பேத்டே பார்ட்டிகள், முதலாவது, 18வது, 21வது, அதைவிட முப்பது, நாற்பது என எண்பது, தொண்ணூறு வரையும், அத்தோடு கல்யாண நாளுகளும் அதுவிட பாபக்கியூ பார்ட்டி, கிறிஸ்மஸ் பார்ட்டி வெடிங் ரிசப்சன் என எல்லா புலம் பெயர் மக்களும் வயது, பால், சாதி, மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு கொண்டாடுவது பற்றி சந்திரவதனா ஒன்றுமே சொல்லாது. சாமத்திய சடங்கை மட்டும் பொய்யான திணிப்புகளின் போலிக்கலாச்சாரத்தில் பொசுங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறா.

சாமத்திய வீடு ஏன் செய்கிறார்கள் என சந்திரவதனா சொன்ன அதே காரணத்தையே நானும் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்கிறேன். வீடியோ, கமரா என்பவற்றில் பதிவு செய்வதற்காக கட்டாயம் இது வேணும்! இல்லாவிட்டால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது? இந்த இயந்திர உலகில் நீங்கள் சாதாரணமாக ஒரு குடும்பப்படத்தை எடுத்து, வேலை மினக்கெட்டு எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டு இருப்பீர்களா?

ஒரு சபையில் அந்த பெரிய குடும்பத்தின் முழு வாரிசுகளையுமே காணவும், வேறு வேறு நாடுகளில் வசிப்பவர்கள் கூட இச்சந்தர்பத்தில் ஒன்று கூடவும் வாய்பாகிறது. சடங்குகளின் வீடியோ பார்த்து இரண்டு மூன்று கல்யாணங்கள் கூட சரிவந்திருக்கிறது என்றால் பாருங்களேன். எனது அனுபவத்தில் நடைபெற்ற எல்லாச் சாமத்தியங்களிலும் அப்பெணும் விரும்பி பங்கு பற்றுவதை காணக் கூடியதாகவுள்ளது.

என் வீட்டுச் சாமத்திய வீடு மற்றையவர் வீட்டைவிடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்காக?

இது சாமத்திய வீட்டிற்கு மட்டும்தான் பொருந்துமா? மனித இயல்பே மற்றவனிடமிருந்து தன்னை வேறுபடுத்தி உயர்த்திவைக்க முயல்வதுதான்.

சாமத்திய சடங்கு நான் முதலே கூறியது போல, உளவியல் காரணங்களோடு, குடும்பத்தின் ஒற்றுமையை அதிகரிக்கவும் சமூக நெருக்கத்தை கூட்டவும் வழிமுறை யாகுகின்றது. ஆனால் அதில் உள்ள சில இடையிட்டு நுழைந்தவைகள் தவிர்க்கப்பட வேண்டியவையே.

உதாரணமாக சாமத்தியத்தில் முதலில் தமிழ் முறைப்படி புடவை அணிந்து விட்டு பிறகு வடஇந்திய முறைப்படி முன்னால் தொங்கலை விட்டு இன்னுமொரு புடவை அணிவது. (இரண்டாவது புடவையை வடஇந்திய முறைப்படி கட்டுவது இப்போ எழுதாத சட்டமாகி விட்டது.

சாமத்திய சடங்கில் கேக் வெட்டுவது, ஆள் உயரத்தில் ஆண்டாள் மாலை போடுவது ( வீடியோகாரரும் கமராகாரரும் மேக்கப் லேடியும் சேர்ந்து சடங்கை சில இடங்களில் சடம்பமாக்கி விடுகிறார்கள்.)

இதை விட இதை ஆங்கில அகராதிக்குள் புகுந்து அப்பிடியே மொழி பெயர்க்க தேவையில்லை. Puberty ceremony என்பதை Age attainment ceremony என்றோ அல்லது Saree ceremony என்றோ அழைக்கலாம். (இடியப்பத்தை வெள்ளைக்காரன் தற்செயலாக அவித்தாலும் என்று String hopper என்று அழைப்பவர்கள் அல்லவா நாம்!)

விரலுக்கு தகுந்த வீக்கம் இருப்பது எல்லாச் சடங்குக்குமே நல்லது. வீட்டை மீள் அடகு வைத்தோ, தகுதிக்கு மீறி கடன் எடுத்தோ, கடினப்பட்டு உழைத்த சேமிப்பு எல்லாவற்றையும் செலவழித்து ஆடம்பரமாக செய்வதை தவிர்த்து கொள்வது எல்லாச் சடங்குக்குமே நல்லது. உண்மையான சடங்கை மாற்றாது, திரிக்காது சிக்கனமாகவும் சிறப்பாகவும் குடும்ப சமூக ஒற்றுமை பேணும் வகையில் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.


- சுந்தரி

இது தேவையா?


அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது?


வீடியோ, கமரா என்பவற்றில் பதிவு செய்வதற்காக கட்டாயம் இது வேணும்! இல்லாவிட்டால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது? இந்த இயந்திர உலகில் நீங்கள் சாதாரணமாக ஒரு குடும்பப்படத்தை எடுத்து, வேலை மினக்கெட்டு எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டு இருப்பீர்களா?
சாமத்தியச் சடங்கு செய்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாம். இம்மாத ஒரு பேப்பரில் சுந்தரி எழுதியுள்ளார்.

அப்படியானால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகன் எப்படி இருப்பான் என்று எப்படித்தான் நடைமுறையில் தெரிந்து கொள்வது? அவனுக்கும் சாமத்திய வீடு செய்ய வேண்டுமா? இந்த இயந்திர உலகில் அவனை மட்டும் வேலை மினக்கெட்டு ஒரு குடும்பப் படமா எடுத்து...?

55வது ஒரு பேப்பரில் சாமத்தியச் சடங்கு அவசியமா என்ற எனது கட்டுரையின் ஒரு பகுதி இது தேவையா என்ற தலைப்பில் பிரசுரமாகி இருந்தது.

அதற்கு எதிர்வினை கூறுவது போல சாமத்தியச் சடங்கு தேவைதான் என 56வது ஒரு பேப்பரில் சுந்தரி ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அவரிடம் நான் கேட்பது, "அப்படியானால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகன் எப்படி இருப்பான் என்று எப்படித்தான் நடைமுறையில் தெரிந்து கொள்வது? அவனுக்கும் சாமத்திய வீடு செய்ய வேண்டுமா?

56வது ஒர பேப்ரில் வந்த சுந்தரியின் கட்டுரை

சாமத்தியச் சடங்கு தேவைதான்

கடந்த வார பெண்கள் பக்கத்தில், இது தேவையா? என்ற தலைப்பின் கீழ், பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் சாமத்தியசடங்கும் ஒன்று எனவும், அனாவசியமான எந்தவிதமான தர்க்கரீதியான காரணங்களும் அற்ற இந்தச்சடங்கைக் களைவதற்கு முன்வருவோமா? என்ற கேள்வியுடன் சந்திரவதனா தனது வாதத்தை முன் வைத்திருந்தா.

இந்த விஞ்ஞானயுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சூழலில் இந்த சாமத்திய சடங்கு இன்னும் அவசியமாகுகிறது. பெண்கள் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இந்த நேரத்தில் அவளைத் தனித்து விடாது. அது பற்றிய பயத்தை போக்கி, வயதில் அனுபவம் உள்ள உறவுப்பெண்கள் ஒன்று கூடி கேள்விகள் கேட்டு கதைத்து அப்பெண்ணிற்கு தன்னப்பிக்கை ஊட்டி, இனிச் சிறுமி அல்ல இளம் பெண்ணென புடவை கட்டி, பெருமை கூட்டி அவளை ஒரு பெண்ணாக்குகிறார்கள்.

எமது கலாச்சாரத்தின் பெருமையை பலர் புரிந்து கொள்வதில்லை. எம் மத்தியில் செத்த வீடு நடத்தால் கூட நாம் Counselling போகாமல் இருப்பதற்கு எங்கள் சமூக சடங்குகள் (கட்டி பிடித்து, வாய்விட்டளுது, ஒப்பாரி வைத்து, சாப்பாடு சமைத்து கொடுத்து, அத்திரட்டி, ஆட்டதிவசம், திவசம் என) பாதிக்ப்பட்டவரை தனித்திருக்க விடாது சடங்குகள் சமூகத்தின் நிழலில் துயர் ஆற வைக்கின்றன.

இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள் தான் அவளைக்காக்க வேண்டும் என்று ஊர் மக்களிடம் பிள்ளையை ஒப்படைப்பது என ஒரு பெரியவர் விளக்கம் சொன்னது நகைப்புக்கு இடமாக கலாச்சாரத்தை அவமான படுதுவதாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தா... இதில் நகைப்பதற்கு ஒன்றுமே இல்லை. சாமத்திய சடங்கின் மூலம் இன்னாருக்கு இத்தனை பிள்ளைகள், அதில் இந்த பிள்ளை வயதிற்கு வந்த பிள்ளை என அவளை வாழ்த்தும்போது அவள் உருவமும் மனதில் படிகிறது. ஊர் மக்கள் அவளை நமது ஊரின் பெண்ணாக வரித்தெடுத்து ஏதும் சிக்கலில் அப்பெண் மாட்டு படப்போகிறாள் என்று தெரியும் இடத்து அதை குடும்பத்திற்கு தெரியப்படுத்தியோ அல்லது அவளைக்கு புத்தி சொல்லியோ அவளைப் பேரிளம்பெண் பருவத்திற்கு வழி நடத்துகிறார்கள்.

இங்கு வெளிநாட்டில் நாம் இன்னும் ஆளை ஆள் சொந்த பந்தங்களைத் தெரிந்து கொள்வதே இப்படியான சடங்குகளின் மூலம்தான். முன்பு பிள்ளை பிறந்தல், 11ம்நாள் , 31ம் நாள் தொட்டிலில் இடுதல், காது குத்துதல், பெயர் சூட்டுதல், ஏடு தொடக்குதல், சாமத்தியம், கொழுக்கட்டை கொடுத்தல் (நிச்சயதார்த்தம்), கல்யாணம், செத்தவீடு, என பலப் சடங்குகள் எம்மத்தியில் இருந்தன. இப்போ அவை எல்லாம் எதற்கும் பெண்ணியம் பேசி தாங்களும் குழம்பி எங்களையும் குழப்பும் மேதாவித் தனத்தாலோ, நேரம் இன்மையாலோ சுருங்கி ஏதோ ஓன்று இரண்டு மட்டும் நடைமுறையில் உள்ளன.

அத்தோடு வெளிநாட்டு முறையிலான (கேக் வெட்டி சம்பெயின் உடைத்து) பேத்டே பார்ட்டிகள், முதலாவது, 18வது, 21வது, அதைவிட முப்பது, நாற்பது என எண்பது, தொண்ணூறு வரையும், அத்தோடு கல்யாண நாளுகளும் அதுவிட பாபக்கியூ பார்ட்டி, கிறிஸ்மஸ் பார்ட்டி வெடிங் ரிசப்சன் என எல்லா புலம் பெயர் மக்களும் வயது, பால், சாதி, மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு கொண்டாடுவது பற்றி சந்திரவதனா ஒன்றுமே சொல்லாது. சாமத்திய சடங்கை மட்டும் பொய்யான திணிப்புகளின் போலிக்கலாச்சாரத்தில் பொசுங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறா.

சாமத்திய வீடு ஏன் செய்கிறார்கள் என சந்திரவதனா சொன்ன அதே காரணத்தையே நானும் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்கிறேன். வீடியோ, கமரா என்பவற்றில் பதிவு செய்வதற்காக கட்டாயம் இது வேணும்! இல்லாவிட்டால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது? இந்த இயந்திர உலகில் நீங்கள் சாதாரணமாக ஒரு குடும்பப்படத்தை எடுத்து, வேலை மினக்கெட்டு எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டு இருப்பீர்களா?

ஒரு சபையில் அந்த பெரிய குடும்பத்தின் முழு வாரிசுகளையுமே காணவும், வேறு வேறு நாடுகளில் வசிப்பவர்கள் கூட இச்சந்தர்பத்தில் ஒன்று கூடவும் வாய்பாகிறது. சடங்குகளின் வீடியோ பார்த்து இரண்டு மூன்று கல்யாணங்கள் கூட சரிவந்திருக்கிறது என்றால் பாருங்களேன். எனது அனுபவத்தில் நடைபெற்ற எல்லாச் சாமத்தியங்களிலும் அப்பெணும் விரும்பி பங்கு பற்றுவதை காணக் கூடியதாகவுள்ளது.

என் வீட்டுச் சாமத்திய வீடு மற்றையவர் வீட்டைவிடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்காக?

இது சாமத்திய வீட்டிற்கு மட்டும்தான் பொருந்துமா? மனித இயல்பே மற்றவனிடமிருந்து தன்னை வேறுபடுத்தி உயர்த்திவைக்க முயல்வதுதான்.

சாமத்திய சடங்கு நான் முதலே கூறியது போல, உளவியல் காரணங்களோடு, குடும்பத்தின் ஒற்றுமையை அதிகரிக்கவும் சமூக நெருக்கத்தை கூட்டவும் வழிமுறை யாகுகின்றது. ஆனால் அதில் உள்ள சில இடையிட்டு நுழைந்தவைகள் தவிர்க்கப்பட வேண்டியவையே.

உதாரணமாக சாமத்தியத்தில் முதலில் தமிழ் முறைப்படி புடவை அணிந்து விட்டு பிறகு வடஇந்திய முறைப்படி முன்னால் தொங்கலை விட்டு இன்னுமொரு புடவை அணிவது. (இரண்டாவது புடவையை வடஇந்திய முறைப்படி கட்டுவது இப்போ எழுதாத சட்டமாகி விட்டது.

சாமத்திய சடங்கில் கேக் வெட்டுவது, ஆள் உயரத்தில் ஆண்டாள் மாலை போடுவது ( வீடியோகாரரும் கமராகாரரும் மேக்கப் லேடியும் சேர்ந்து சடங்கை சில இடங்களில் சடம்பமாக்கி விடுகிறார்கள்.)

இதை விட இதை ஆங்கில அகராதிக்குள் புகுந்து அப்பிடியே மொழி பெயர்க்க தேவையில்லை. Puberty ceremony என்பதை Age attainment ceremony என்றோ அல்லது Saree ceremony என்றோ அழைக்கலாம். (இடியப்பத்தை வெள்ளைக்காரன் தற்செயலாக அவித்தாலும் என்று String hopper என்று அழைப்பவர்கள் அல்லவா நாம்!)

விரலுக்கு தகுந்த வீக்கம் இருப்பது எல்லாச் சடங்குக்குமே நல்லது. வீட்டை மீள் அடகு வைத்தோ, தகுதிக்கு மீறி கடன் எடுத்தோ, கடினப்பட்டு உழைத்த சேமிப்பு எல்லாவற்றையும் செலவழித்து ஆடம்பரமாக செய்வதை தவிர்த்து கொள்வது எல்லாச் சடங்குக்குமே நல்லது. உண்மையான சடங்கை மாற்றாது, திரிக்காது சிக்கனமாகவும் சிறப்பாகவும் குடும்ப சமூக ஒற்றுமை பேணும் வகையில் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.


- சுந்தரி

Monday, October 16, 2006

நினைவுகள் சிட்டுக்குருவிகளாய்...

மனசின் இடுக்குகளில் திட்டுத் திட்டாய் பயம் ஒட்டியிருக்க, என் வீட்டுப் பிச்சிப்பூ மரத்தில் குந்துவதும், நெல்லி மரத்தை அண்ணாந்து பார்ப்பதுவும், சிதம்பரத்திகளில் கெந்துவதுமாய்... நினைவுகள் சிட்டுக்குருவிகளாய் சிறகடித்துக் கொண்டிருந்தன. நான் எனது உடமைகளுடன் பேரூந்தினுள் நின்றேன்.

கிளிநொச்சி வெண்புறா நிலையத்திலிருந்து புறப்பட்டதில் இருந்து இதுவரையிலான பொழுதுகளின் வெயில் குளிப்பிலும், நிச்சுதனுடனான மோட்டார் சைக்கிள் பயணத்தின் அலுப்பினிலும் உடல் களைத்திருந்தது. மீண்டும் மீண்டுமாய் வேர்த்ததில் முகத்தில் ஏதோ ஒன்று படர்ந்து காய்ந்திருப்பது போன்ற உணர்வு தோன்றியது. தாகம் தண்ணீருக்காய் ஏங்க வைத்தது.

ஜேர்மனியில் பிள்ளைகளை விட்டு விட்டு வந்து, கிளிநொச்சியில் கணவரையும் விட்டு விட்டு நான் மட்டுமாய் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் என் வீடு நோக்கிச் செல்கிறேன். இடையிடையே என் மன இடுக்குப் பயங்கள் எட்டிப் பார்ப்பதில் நெஞ்சு திக்கிட்டுத் திக்கிட்டு அடங்குகிறது.

"நீங்கள் வெளிநாட்டிலை இருந்து வாறிங்களோ..?"

பேரூந்தின் நெரிசலுக்குள் உடமைகளோடு தள்ளாடித் தளர்ந்து நின்ற என் முகத்தில் ஏதாவது எழுதி ஒட்டியிருந்ததோ என்னவோ..! பக்கத்தில் நின்றவன் கேட்ட போது தடுமாறி "ஓம்" என்றேன். வரணி, கொடிகாமம்... என்று பேரூந்து தாண்டிக் கொண்டிருந்தது. வெளியில், கிளிநொச்சி போல வரண்டில்லாமல் பச்சை, பச்சையாய்... குளிர்ச்சியாய் `மா´ க்களும், `தென்னை´களும்... மிக மிக அழகாக... போரின் வடுக்கள் எதுவுமே தெரியாமல் உயிரோட்டமாகத் தெரிந்தன.

"கனகாலத்துக்குப் பிறகு வாறிங்களோ..?"

"ஓம்.. 16 வருசத்துக்குப் பிறகு வாறன்.
ஏன்.. எப்பிடி... அப்பிடிக் கேட்கிறீங்கள்..?"

"ஏதோ..! உங்கடை முகத்தைப் பார்த்தாலே தெரியுது. பயம் ஆர்வம் இரண்டும் உங்கடை கண்ணிலை இருக்குது."

இவனென்ன மனம் பார்க்கும் கண்ணாடி வைத்திருக்கிறானோ..? மனதுக்குள் வினாவினேன்.

"எந்த இடத்துக்குப் போறிங்கள்? உங்கடை... ஆராவது இங்கை....?"

அவனது கேள்வி மாவீரராக.. யாராவது என்பது போலவே எனக்குப் பட்டது. எனது தம்பிமார் மாவீரர் என்பதைச் சொல்வது சில சமயம் எனக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.. ஒரு கணம் உள்ளுணர்வு எச்சரிக்க "இல்லை... ஆத்தியடியிலை என்ரை வீடிருக்கு. அங்கைதான் போறன். தங்கைச்சி இருக்கிறா." என்றேன்.

சடாரென இரண்டு சீற்றுக்கு முன் இருந்த இளைஞன் திரும்பி "ஆத்தியடிக்கே போறிங்கள்? நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறன். ஓராங்கட்டையிலை இருந்து சூட்கேசுகளைத் தூக்கிக் கொண்டு வந்து தாறன்." என்றான்.

நிட்சயம் அவன் எனது தூரத்து உறவினர்களில் ஒருவனாக என் ஊரவனாகத்தான் இருப்பான். ஆனாலும் ரவுணுக்குப் போனால் ஓட்டோ பிடித்துக் கொண்டு சுலபமாக வீடு போய்ச் சேர்ந்து விடலாம். ஏன் யாரிடமாவது கடமைப் பட வேண்டும் என்ற நினைப்பில் நன்றி சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.

பேரூந்து நெல்லியடிச் சந்தியையும் தாண்டிய போது மனசுக்குள் இனம் புரியாத படபடப்பு. வந்து விட்டேன் என்ற நம்ப முடியாத ஒரு உணர்வு. கிராமக்கோட்டையும் கடந்து, மணியம் மாஸ்டரின் ரியூற்றரியைக் கடந்து.. ஓராங்கட்டையடிக்கு வந்த போது உதவுவதாகச் சொன்ன இளைஞன் இறங்கிக் கொண்டான்.

ஓராங்கட்டைச் சந்தி வீடு, மாமாவின் வீடு. முன்னர் கலகலத்துக் கொண்டிருந்த அந்த மெத்தை(மாடி) வீடு களையிழந்து போய் தெரிந்தது. பேரூந்து புறப்பட்டதுந்தான் சந்தியின் மற்றப்பக்க மூலைக் காணிக்குள் கேணல் சங்கரின் பெயர் எழுதிய கொடி மரத்தோடு சரிந்திருந்தது தெரிந்தது. எனக்குள் எழுந்த கேள்விக்கு, முதலில் கதை கொடுத்தவன் பதில் தந்தான். "ஆமி கோவத்திலை எல்லாத்தையும் அடிச்சு விழுத்திப் போட்டான்."

என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறானோ? அவனைத் தீர்க்கமாகப் பார்த்தேன். தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

மருதடியையும் தாண்டிய பேரூந்து பருத்தித்துறை ரவுணுக்குள் வந்து நின்ற போது எனக்கு வேறெங்கோ நிற்பது போன்ற பிரமையே தோன்றியது. களைத்து விழுந்து வெளியில் இறங்கிய போது மந்திகள் போல மரங்களிலும் மதில்களிலும் சீருடை துப்பாக்கி, சகிதம் சிங்கள இராணுவத்தினர் அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் இருப்பவர்கள் கூட என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். ஏளனமா, நட்பா என்று பிரித்தறிய முடியாத சிரிப்புகள்.

நியூ மார்க்கற்றைக்(புதிய சந்தை) காணவில்லை. நடுவெல்லாம் வெளியாய், சுற்றி வரக் கடைகள் என்று இருந்தன. முந்தைய அழகையோ கலகலப்பையோ அங்கு காண முடியவில்லை. ஏதோ ஒரு வெறுமை என்னையும் தொற்றிக் கொண்டது. முன்னர் இல்லாத ஓட்டோக்கள்(முச்சக்கர வாகனம்) மட்டும் அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டிருந்தன. சில நிறுத்தியிருந்தன. நிறுத்தியிருந்த ஒரு வாகனச் சாரதியை அழைத்து எனது வீட்டு முகவரி சொல்லிப் போக வேண்டும் என்றேன். 500ரூபா என்றான். ஏறிக் கொண்டேன்.

பத்திரகாளி அம்மன் கோவிலடியால் ஓடக்கரை வழியாக தங்கப்பழத்தின் சைக்கிள் கடையைத் தாண்டிய போது "நீங்கள் பிரபாக்கா வீட்டையோ போறிங்கள்?" சாரதி கேட்டான். "ஓம்" என்றேன். "அப்ப நீங்கள் மொறிசின்ரை அக்காவோ?" "ஓமோம்." ஊர் நிலைமைகளையும் சொல்லிக் கொண்டு வந்தான்.

ஹாட்லிக் கல்லூரி வீதியில் ஆத்தியடியை நோக்கி வாகனம் விரைந்த போது மனசு பறந்தது. இன்னதென்று சொல்ல முடியாத உணர்வில் கண்கள் பனித்தன.

ஆத்தியடிதான் எனது ஊர். அங்கே ஆலும் அரசும் தெற்கு வீதியை நிறைத்து நிற்க, அலரிகளால் எல்லை போட்டு அழகான அளவான புனிதமான ஆத்தியடிப் பிள்ளையார் கோயில். அத்திமரத்தில் பிள்ளையார் தோன்றி, கல்லிலே கற்பூரம் கொழுத்தி வழிபடப்பட்ட இடந்தான் பின்னர் ஊர் கூடி உணர்வோடு வழிபடும் இடமாகி அத்திமரப் பிள்ளையாரினால் ஆத்தியடி என்ற ஊரானதாக அம்மம்மா சொல்லியிருக்கிறா. ஆத்தியடி எனது ஊர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குள் அளவிலா ஆனந்தம்.

சப்பரம் என்றால் என்ன, தேர் என்றால் என்ன, சூரன் போர் என்றால் என்ன, அந்தப் பெரிய வடக்கு வீதியில் சில மணித்தியாலங்கள் தரித்து மேளக்கச்சேரியும், நாதஸ்வரமுமாய் நெஞ்சை நிறைத்து... மறக்க முடியாத நினைவுகள். அப்பாவின் கைபிடித்து அந்த வீதியில் நடந்ததிலிருந்து என் பிள்ளைகளை என் கையில் பிடித்து அந்த வீதியில் நடந்தது வரை எல்லாமே இனிமை.

வடக்கு வீதியில் கோயிலை ஒட்டிய பூங்காவனம். அது என்றும் நறுமணம் வீசும் நந்தவனம். திருவிழா இல்லாத காலங்களில் ஆத்தியடி இளைஞர்களின் விளையாட்டு மைதானமும் அந்த வடக்கு வீதிதான். காற்பந்து என்றால் என்ன, கைப்பந்து என்றால் என்ன அவர்கள் கூடிக் குதூகலிக்கும் இடம் அது.

தெற்கு வீதியில் ஆல், அரசுகளின் கீழ் பிரமாண்டமான நீளமான செதுக்கப் பட்டது போன்ற கற்கள். அவைகளில் நான் சின்னப் பெண்ணாக இருந்த போதுதான் இருந்திருக்கிறேன். வளர்ந்த பின் அவை பெண்களுக்குச் சொந்தமில்லை. ஆண்களின் சொத்துக்கள் அவை. அந்தக் கற்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த இளைஞர்கள் மேல் எனக்குப் பொறாமை வரும்.

ஆத்தியடி என்றாலே கண்முன் தோன்றும் பிள்ளையார் கோயிலை விட்டுச் சந்திக்கு வந்து, கிழக்கே நோக்கினால் கோயில் ஒழுங்கை விநாயகர் முதலியார் வீதியை நோக்கி வளைந்திருக்கும். வெள்ள வாய்க்காலோடு உள்ள சந்திக் கிணற்றிலே கோவணத்துடன் யாராவது குளித்துக் கொண்டிருப்பார்கள். அனாதரவாய் நிமிர்ந்திருக்கும் ஆவுரஞ்சிக் கல்லில், எப்போதாவது யாராவது ஒருவர் முதுகு தேய்த்துக் கொண்டிருப்பார்.மாடுகள் பக்கத்துத் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும். பனைகளில் இருந்து கொட்டிய பாளைகளும் பன்னாடைகளும் ஒழுங்கை முழுவதும் கோலம் போட்டிருக்கும்.

தெற்கே நோக்கினால் வடமராட்சி வீதி தெரியும். வீடுகளைப் பார்த்தால் மாமரம் இல்லாத வீடுகள் இல்லை. வேலிகள் எல்லாம் பூவரசும், கிளிசறியாவும், வாதனாராயணியும், ஒதியுமாகப் படர்ந்திருக்க, இடையிடையே சிதம்பரத்தி சிவந்திருக்கும். ஆங்காங்கு பாவாட்டைகளும் பரந்திருக்கும்

மேற்கு நோக்கினால் ஆத்தியடி ஒழுங்கை. முதலிலே தெரிவது வெறுங்காணியில் தனி ஒரு புளிய மரம். அதைச்சுற்றி நான்கைந்து பனைமரம். வேலியெல்லாம் பாவட்டையும், அண்ணாமுண்ணாவும். புளியின் அடியில் பெரிய பாம்புப் புற்று. அடிக்கடி உழுத்தம் பிட்டு மணக்கும். நாகபாம்புதான் அதற்குள்ளே வாழ்வதாய் ஆத்தியடி மக்களுக்கு அபாரமான நம்பிக்கை. விருட்சமாய் காணியை நிறைத்திருக்கும் அந்தப்புளி காய்ப்தே இல்லை. பூக்கும். சருகாகி விடும்.

வடக்கே நோக்கினால் ஹாட்லிக் கல்லூரி வீதி நீண்டு தெரியும். ஆர்ப்பரிக்கும் கடலலையின் ஒலி, ஒரு தாலாட்டுப் போலக் காதில் விழும். சற்றுத் தள்ளி கண்களைச் சுழற்றினால் வடக்கு வீதியைத் தாண்டி பனைகள், பனைகள்... எழுதி முடிக்க முடியாத அழகான சின்னஞ்சிறிய ஊர். அங்கு வாழக் கொடுத்து வைக்காத என்னை அது வரவேற்றதா? தெரியவில்லை.

மேற்கு நோக்கிய அந்த ஆத்தியடி ஒழுங்கையில் முச்சக்கர வண்டி நுழைந்த போது அந்தப் புளிய மரத்தைக் காணவில்லை. மூச்சு முட்டித் திணறும் படியாக ஒரு பெரிய மாடிவீடு காணியை முழுவதுமாக நிரப்பிய படி முளைத்திருந்தது. என் வீட்டின் முன் வந்து இறங்கிய போது கேற்றில் பெரிய மாங்காயப்பூட்டு தொங்கியது.

சந்திரவதனா
16.10.2006

2002 இல் எனது தாயகம் நோக்கிய பயண அனுபவங்களை எழுதத் தொடங்கினேன். ஆறுக்கு மேல் அது தெடராமலே நின்று விட்டது. இப்போது மீண்டும் தொடர்கிறது.

தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 4
தாயகம் நோக்கி - 5
தாயகம் நோக்கி - 6

இன்னும் தொடரும்

Saturday, October 14, 2006

வாழ்க்கைப் பாடங்கள்


இன்று காலையில் பிரெஞ்சு இனத்தவர் ஒருவரால் எழுதப்பட்ட மூதுரை ஒன்றை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் தமிழாக்கம்
வாழ்க்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன்னரே
எமது பாதி வாழ்க்கை போய் விடுகிறது.


இது என் மனதில் இன்னொரு விடயத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தது
குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதை நாம் முழுவதுமாக அறிந்து கொள்ள முன்னரே
எமது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விடுகிறார்கள்.


உண்மையைச் சொல்லப் போனால் எனது குழந்தைகளை நான் வளர்க்கத் தொடங்கிய போது குழந்தை வளர்ப்புப் பற்றிய பெரிதான அறிவு என்னிடம் இருக்கவில்லை. இப்போது, குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும். குழந்தைகளுடன் எப்படிப் பழக வேண்டும். என்னென்ன செய்ய வேண்டும்... என்று பல விடயங்கள் தெரிகின்றன. ஆனால் எனது குழந்தைகள் வளர்ந்து பேரப்பிள்ளைகளும் பிறந்து விட்டார்கள்.

வாழ்க்கையில் நாம் ஒவ்வொன்றையும் படித்து முடிக்கும் போது அதன் தேவைகளும் எம்மைக் கடந்து விடுகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Tuesday, October 10, 2006

முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி


எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை - 2ஆம் லெப். மாலதி 17 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்.

பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.

நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.

அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள்...தொடர்ச்சி

Sunday, October 08, 2006

ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்.


இசை என்பது மனித உணர்வுகளை அசைக்க வல்லது. துன்பம் இன்பம் இரு பொழுதுகளிலும் எம்மைத் தாங்கக் கூடியது. காற்றில் அதிர்வுகளை உண்டாக்கி, அதனூடு செவிப்பறைகளைத் தாக்கி, கொஹ்லியா (cochlea) குழியிலுள்ள செல்களில் மின்னழுத்த வேறுபாடுகளை உண்டாக்கி தண்டுவடம் மூலம் மூளையின் தலாமஸ் பகுதிக்கு விரைந்து, அங்கு வரும் உணர்வு அலைகளுக்கு ஏற்ப கட்டளை மின்னலைகளை உருவாக்கி, உடலின் வலிகளையும், நோய்களையும் நீக்க வல்லது.

என்னை ஒரு சிலர் கேட்பார்கள் "எத்தனையோ பிரச்சனைகள் நாட்டில், உலகில் என்று இருக்கின்றன. நீயென்ன சும்மா உந்தச் சினிமாப் பாடல்களை ரசிக்கிறாய்" என்று. அவர்களுக்கு நான் சொல்லும் பதில்கள் அவர்களைத் திருப்திப் படுத்துகின்றனவோ, இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இசை என்பது எனது உயிரை அசைக்கிறது என்பது உண்மை. எனது உணர்வுகளைத் தாலாட்டுகிறது என்பது உண்மை. எனது ஞாபகங்களை மென்மையாகவும், தன்மையாகவும் மீட்டுகின்றது என்பது உண்மை.

எந்த இசையையும் நான் ரசிப்பேன். அது சினிமாப் பாடல்தான் என்று முத்திரை குத்தி வைக்க வேண்டியதில்லை. எனது ஈழத்தின் மெல்லிசைப் பாடல்கள், பொப்பிசைப் பாடல்களில் தொடங்கி மேற்கத்திய இசை வரை நான் ரசிக்கிறேன். இந்த இசைகள் என் உயிரைச் சீண்டுகின்றன. எந்த ஒரு சோர்ந்த பொழுதிலும் எங்கோ ஒலிக்கும் ஒரு இசையில் நான் மெய் சிலிர்க்கிறேன்.

காதலின் இனிமையை, அன்பின் தழுவலை, சோகத்தின் போதான ஆதரவான அணைப்பை, குலுங்கி அழ வேண்டும் போன்ற உணர்வைத் தோற்றுவிக்கக் கூடிய இழப்பின் போதான வலிக்கான ஒத்தடத்தை... என்று ஒவ்வொரு உணர்வின் போதும் இந்த இசை என்னை அணைக்கிறது. தழுவுகிறது. தாலாட்டுகிறது. என் மனதை நீவி விடுகிறது.

இசைகளில், பாடல்களில் மயங்காதார் உண்டோ? பாம்புகள் கூட இசையில் மயங்குகின்றன. புன்னாகவராளி இராகம் இசைக்கும் போது அவை காற்றில் ஏற்படுத்தும் அதிர்வில் பாம்புகள் மயங்குகின்றன. இந்த இராகத்துக்கு கொடூர எண்ணம் உள்ளவர்களையும், கொலைவெறி கொண்டவர்களையும் அமைதிப் படுத்தும் சக்தி இருக்கிறதாம். இப்படி ஒவ்வொரு இராகத்துக்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கிறது.

பாட்டுக்கு பாலைவனப் பூக் கூடப் பூப் பூக்குமாம். மெட்டுக்கு வெண்ணிலவு கூடத் தலையசைக்குமாம். இது ஒரு கவிஞரின் அதீத கற்பனை கலந்த வரிகளாயினும் பாடல்களுக்கும் இசைக்கும் எம்மை அசைக்கும் சக்தி இருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களாலும் மருத்துவர்களாலும் உண்மை என நிரூபிக்கப் பட்ட கருத்து.

இன்பம், துன்பம், கோபம், அமைதி... என்று மனம் துள்ளுகின்ற அல்லது துவள்கின்ற எந்த விதமான நேரத்திலும், மகிழ்கின்ற எமது மனதுக்கு மகிழ்வு சேர்க்கவோ, அல்லது துவள்கின்ற எமது மனதுக்கு ஆறுதல் கூறவோ இந்தப் பாடல்களால் முடியும்.

நாம் நாளாந்தம் செய்யும் ஒவ்வொரு வேலையுடனும், செயற்பாட்டுடனும் பாடல்களும் இணைந்து நிற்கின்றன. கருவறையில் இருந்து வெளிவந்த, உலகத்தைத் தெரியாத அந்தப் பச்சைக் குழந்தைப் பருவத்தில் கூட நாம் அம்மாவின் தாலட்டுப் பாடலில் மயங்கி அழுவதை மறந்து, அமைதியாக உறங்கி விடுகிறோம். தொடரும் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகையான பாடல்களில் நாம் மயங்கி, மகிழ்ந்து, அமைதியாகிப் போகிறோம். அல்லது துள்ளிக் குதிக்கிறோம். அல்லது ஆறாத சோகத்தையும் அழுகையாக வடிக்கிறோம். இன்னும் எத்தனையோ வகையான உணர்வுகளை அனுபவிக்கிறோம்.

வேலைகள் என்று பார்க்கும் போது, நாற்று நடுபவருக்கு ஒரு பாட்டு, மீன் பிடிப்பவருக்கு ஒரு பாட்டு... என்று ஒவ்வொரு வேலைக்கும் அதனோடு இசையக் கூடிய, இசையுடன் கூடிய பாட்டு இருக்கும். போராட்டம் என்று பார்க்கும் போது அதற்கும் ஒரு பாட்டு(பரணி) இருக்கிறது. அந்தப் பாடல்களுக்கு துணிவையும், வீரத்தையும் மட்டுமல்லாமல் விடுதலை உணர்வையும் உற்சாகத்தையும் சேர்த்துத் தரக்கூடிய சக்கி இருக்கிறது. இதே போல ஒப்பாரிப் பாடல்களுக்கு மனதில் இருக்கும் சோகத்தை வடித்துக் கொட்ட ஏதுவான சக்தி இருக்கிறது. இவைகளில் இருந்தே இசையும் பாடல்களும் எம் வாழ்வோடு எந்தளவுக்கு ஒன்றியிருக்கின்றன என்பதையும் அவை எத்தகைய அவசியமானவை என்பதையும் எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

எனக்கு அனேகமான பாடல்களைக் கேட்கும் போது, எனது சின்ன வயதுடன் கூடிய, அப்பாவுடனான, அம்மாவுடனான, அண்ணாவுடனான, சொந்தங்களுடனான, நண்பர்களுடனான... என்று பல ஞாபகங்கள் அந்தந்தப் பாட்டுக்கு ஏற்ப வந்து போகின்றன. அந்த ஞாபகங்கள் சந்தோசமாய், சந்தோசம் கலந்த துன்பமாய், ஏக்கமாய், ஏக்கம் கலந்த இனிமையாய்... பல்வேறு வடிவங்களில் என் மனசை வருடுகின்றன. இந்த வருடலுடன் எனக்குப் பிடித்தமான ஒருவரையோ, இருவரையோ, பலரையோ அல்லது ஒரு சம்பவத்தையோ என் முன் கொண்டு வந்து நிறுத்தி என் கண்களைப் பனிக்க வைக்கின்றன.

உதாரணமாக, 70களில் நாம் பாடசாலைக்கு அவசரமாக வெளிக்கிடும் காலைப் பொழுதுகளில் துலாவைப் பதித்து கிணற்றில் நீர் மொண்டு குளிக்கும் போது, இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் ஒலித்த எமது மெல்லிசைப் பாடல்களில் குறிப்பாக கே.எஸ்.பாலச்சந்திரனின் பெற்ற மனம் பித்து என்பார்... என்ற பாடலை இப்போது கேட்டாலும், துலாவும் என் வீட்டுக் கிணறும், மெல்லிய இதமான சூடும், குளிரும் கலந்த தண்ணீரில் நான் குளித்த அந்தப் பொழுதுகளும் என் நினைவைக் குளிர வைக்கும். இதே போல எம்.பி.கோணேஸ் பாடிய பரமேசின் உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது, எனக்குத் தெரியுமா நீ என்னை நினைப்பது..., எஸ்.கே.பரராஜசிங்கம் பாடிய அழகான ஒரு ஜோடி கண்கள்... இன்னும் யாரோ ஒருவர் பாடிய முகத்தைப் பார்த்துக் குணத்தை அறிய அறிவை இறைவன் கொடுக்கவில்லை...
எம்.பாக்கியராஜா பாடிய புது ரோஜா மலரே.... என்று பாடல்களின் வரிசைகளும் அதனுடனான நினைவுகளும், உணர்வுகளும் நீண்டு கொண்டே போகும்.

வார இறுதியில் மதியப் பொழுதுகளில் ஒலிக்கும் கள்ளுக் கடைப் பக்கம் போகாதே.. சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே.. போன்ற பொப் இசைப் பாடல்களைக் கேட்கும் போது, அம்மா சமைக்கும் போது, கொதிக்கும் எண்ணெயில் வெங்காயத்தைப் போடும் கலகலத்த சத்தம் காதுக்குள் கேட்கும். கமகமக்கும் பொரியலின் வாசம் மூக்கினுள் வரும். கறுவாப் பட்டையின் இனிமை கலந்த நறுமணத்தை மூளை உணரும்.

1993இல் பூநகரித் தாக்குதலில் எனது தம்பி மரணித்த செய்தியில் நான் வாடிக் கிடந்த ஒரு பொழுதில் ஒரு ஒலிப்பேழை என் கரம் கிட்டியது. அதில் இடம் பெற்ற பாடல்களில் ஒன்றான,
ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.
சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!....
என்ற பாடலைக் கேட்கும் போது மனதை ஒரு தரம் வேதனை பிழிந்தெடுக்கும். தம்பியின் ஞாபகம் வாட்டும். இந்தப் பாடலும் அந்த சோகமும் என்னுள் ஒன்றாகப் பதிந்திருக்கின்றன. இது சோக உணர்வே ஆனாலும் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று மனது ஆவல் கொள்ளும்.

உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்....
என்ற வரிகளை மனசு மானசீகமாக மீண்டும் மீண்டுமாய் மீட்டிக் கொண்டே இருக்கும்.

இப்படியே ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போதும் ஏதோ ஒரு நினைவு வந்து மனசை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

இந்த உணர்வுகளையே கவிதையாக்கிப் பாடலாக்கி ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும், கேட்கும் பொழுதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்.... என உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்ற திரைப்படத்துக்காக ஒரு கவிஞர் எழுதினார். அப் பாடல் வெளி வந்த காலத்தில் பாடல்களை ரசிக்கும் அனேகமானோர் இது தமக்காகவே எழுதப் பட்ட பாடல் என்ற பிரமையோடு அதைப் பாடிக் கொண்டும், ரசித்துக் கொண்டும் திரிந்தார்கள். இந்த நினைப்பு எனக்குள்ளும் வந்தது. இப்பாடல் என்னுள்ளும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றுமே என் சின்ன வயசுக்கும் பொருந்தி என் மனதை மீட்டக் கூடியதாக இருந்தது.

ரெயிலின் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே... என்ற வரியில் மரம் நகர்ந்ததுக்கும் மேலாக இன்னும் நிறைய ஞாபகங்கள். ரெயினில் பயணம்... இது எனக்கு எப்போதுமே இனிய சந்தோச உணர்வைத் தருவது. இப்போது கூட ரெயின் ஓடும் சத்தம் கேட்டால், ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் எனது குடும்பத்துடன் புகையிரதத்தில் பயணித்ததும், அப்பாவின் ரெயில்வே குவர்ட்டர்ஸில் புகையிரதத்தின் சத்தங்களுடனேயே தூங்கிப் போனதும், ஞாபகத்தில் வந்து, இனம் புரியாதவொரு குதூகலம் கலந்த ஏக்கம் என்னுள் குடிகொள்ளும்.

மருதானை புகையிரதநிலையத்தில் கீழே தண்டவாளங்களில் புகையிரதங்கள் அடுக்கடுக்காய் ஊர, மேலே கடமையில் இருக்கும் அப்பாவின் அருகில் கதிரையில் அமர்ந்து, கதையளந்தபடி மருதானைக்கே உரிய மசாலாவடை, பொரித்த கஜூ, பொரித்த கச்சான்... என்று சுவைத்தவைகளையும் இன்னும் பல புகையிரத நிலையத்துடனான சம்பவங்களையும் இப்பாடல் மீட்டிப் பார்க்க வைக்கும்.

கட்டப் பொம்மன் கதையைக் கேட்ட ஞாபகம்... என்ற வரி பாடப் படும் போது, முழுக்க முழுக்க அப்பாவின் ஞாபகம். அப்பா கதை சொல்வதில் வல்லவர். அவர் இலங்கையின் எந்தப் பாகத்தில் கடமையில் இருந்தாலம், அங்கிருந்து அஞ்சலில் பத்திரிகைகளை எமக்கு அனுப்புவது மட்டுமல்லாது, வீட்டுக்கு வரும் போது எங்கள் வயதுக்கு ஏற்ப பல கதைப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வந்து வாசித்தும் காட்டுவார். வாசித்துக் காட்டும் போது அதற்கேற்ப நடித்தும் காட்டுவார். அவர் ஒரு முறை கட்டப்பொம்மன் கதையைச் சொன்ன போது, மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு தானே கட்டப் பொம்மன் ஆனது இன்னும் மனக்கண்ணில் தோன்றி சிலிர்ப்பைத் தரும்.

பாடல்களைக் கேட்கும் போது எனக்குள் ஊற்றெடுக்கும் நினைவுகள் ஒவ்வொன்றையும் நான் சொல்வதானால் எனக்கு இன்னும் நிறையப் பக்கங்கள் தேவை.

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்,
கேட்கும் பொழுதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்.
மிகவும் நிதர்சனமான வரிகள். ஒவ்வொரு பாடலின் போதும், ஏதேதோ நினைவுகள் ஊற்றாய் கசிந்து, நதியாய் விரிந்து... மனசை நனைக்கின்றன.

சந்திரவதனா
7.10.2006

Thursday, October 05, 2006

பரதேசிகளின் பாடல்கள்

அலை பாடும் பரணி


தாயகம்FM இணையத் தளத்தில் புதிய இறுவட்டு இணைக்கப் பட்டுள்ளது.

அலை பாடும் பரணி

விரைவில் இணைக்கப்பட உள்ளமை
வெல்லும் வரை செல்வோம்,
வரலாறு வந்த வல்லமை,
அன்னைத் தமிழ்

Monday, October 02, 2006

பயமுறுத்தும் பாடல்



நதி - 11.5.2006

சிலவாரங்களுக்கு முன் ஒரு நாள் நான் சமைத்துக் கொண்டிருந்த போது வரவேற்பறையில் பேப்பரையும் பென்சிலையும் வைத்து கிறுக்கிக் கொண்டிருந்த என் பேத்தி விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். வந்த வேகத்தில் எனது கால்களைக் கட்டிப் பிடித்து "அப்பம்மா..!" என்றாள். அவள் விழிகளில் பயம் குடி கொண்டிருந்தது.

எதையோ கண்டு பயந்து விட்டாள் என்பது எனக்குத் தெரிந்தது. எதுவாக இருக்கும் என்பதுதான் தெரியவில்லை. ஏதாவது சிறு பூச்சி வந்திருக்குமோ? யோசனையுடன் அடுப்பில் இருந்த எண்ணெய்ச் சட்டியைத் தூக்கித் தள்ளி வைத்து விட்டு, அவளையும் தூக்கிக் கொண்டு சமையலறையை விட்டு வெளியேறி வரவேற்பறையில் புகுந்து பார்த்தேன். ம்.. நான் தொலைக்காட்சியை கிண்டர் சணலுக்கு மாற்ற மறந்திருந்தேன்.

அவள் கண்களை இன்னும் பயத்துடன் விரித்து தொலைக்காட்சியைப் பார்த்த படி எனக்குக் காட்டினாள். சந்திரமுகி படத்துக்காக, ஜோதிகா கண்களை முழுசிய படி ஆடிக் கொண்டிருந்தாள். ராரா, சரசக்கு ராரா... பாடல் போய்க் கொண்டிருந்தது.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தப் பாடலா இவளைப் பயமுறுத்தியது? இந்தப் பாடலை தமது பிள்ளைகளின் விருப்பமாகப் பல பெற்றோர் உங்கள் விருப்பத்தில் வந்து கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். இவளுக்கு இரண்டு வயதுதானே.! அதுதான் பயந்தாளோ என்ற கேள்வி என்னுள் எழுந்தாலும் என்னால் அந்தப் பாடல்தான் அவளைப் பயமுறுத்தியிருக்கும் என்று முழுமையாக நம்ப முடியவில்லை. ஆனால் அன்று அதற்கு மேல் அவளை தாக்காட்டி விட்டு விட்டு தொடர்ந்து சமைக்க முடியவில்லை. அவளது அம்மா வரும்வரை அவள் எனது இடுப்பை விட்டு இறங்கவில்லை.

அதன் பின், எதற்காக அப்படிப் பயந்திருப்பாள் என்ற கேள்வியோடு, இடையிடையே கவனித்துப் பார்த்துக் கொண்டே வந்தேன். மீண்டும் அந்தப் பாடல் கடந்த வாரம் வந்தது. அதே மாதிரி அவள் விழுந்தடித்து ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். "ரீவீயை நிப்பாட்டுங்கோ "என்று பயத்துடன் சிணுங்கினாள்.

இப்போது திடப் படுத்திக் கொண்டேன், அவளது பயத்துக்குக் காரணம் அப்பாடல்தான் என்பதை.

பாடல் காட்சியை விடுத்து அப்பாடலைக் கேட்கும் போது எனக்கு அந்தப் பாடல் ரசிக்கக் கூடிய வகையில் பிடித்தே இருந்தது.

சந்திரவதனா
2.10.2006

Wednesday, September 27, 2006

ஏகாந்தக் கனவுகள்

வார்த்தைகளுக்குள்
பிடிபடாத உணர்வுகள்
வந்து விழ முடியாமல்
அந்தரிக்கின்றன

வந்து போகும் காலங்களில்
லயிக்க மறந்து
வரப் போகும் காலத்துக்காய்
தவம் கிடக்கிறது மனசு... more

மனதை மிகவும் பாதித்த பதிவு


மீண்டும் மீண்டுமாய் வந்து மனதை வாட்டுகிறது.

யாழ்பாணத்தில் பட்டினி சாவு

பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.... more

Tuesday, September 26, 2006

உவருக்கு வேறை வேலை இல்லை.


உவருக்கு வேறை வேலை இல்லை.
உதைச் செய்யிற நேரத்துக்கு உவர் வேறை வேலையைச் செய்யலாந்தானே!
உது என்ன பிரயோசனம் எண்டு இவர் எழுதிக் கொண்டிருக்கிறார்?
உந்த நேரத்துக்கு வேறையேதும் பிரயோசனமா எழுதலாந்தானே!


இப்படிக் கதைப்பவர்கள் பலர் எம் மத்தியில் இருக்கிறார்கள்.

இப்படிக் கதைப்பதிலேயே அவர்களது பாதி நேரங்களும் போய் விடுகின்றன.
மற்றவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதிலும் அதைக் குறைந்தது பத்துப் பேருக்காவது சொல்வதிலும் தாம் செய்ய வேண்டிய பிரயோசனமான வேலைகளை அவர்கள் கோட்டை விட்டு விடுகிறார்கள்.

ஒருவருக்கு அவருக்கான நேரத்தில் என்ன செய்யப் பிடிக்கிறதோ, அதை அவர் செய்யலாம். அது யாரையும் பாதிக்காத வரை... அதனால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராதவரை... அவர் அப்படிச் செய்வதில் எந்தப் பிரச்சனையும் யாருக்கும் இல்லை. அவருக்குப் பாட்டுக் கேட்கப் பிடித்தால் கேட்கலாம். வாசிக்க விருப்பமாக இருந்தால் வாசிக்கலாம். இல்லை இவை ஒன்றுமே இல்லாமல் நித்திரை கொள்ள விருப்பமாக இருந்தால் நித்திரை கொள்ளலாம். இது ஒரு மனிதனுக்கான சுதந்திரங்களில் ஒன்று. இந்த மனித சுதந்திரத்துக்குள் யாராவது மூக்கை நுழைத்து ஏன் நீ நித்திரை கொண்டாய்? இந்த நேரம் முழிச்சிருந்திருக்கலாமே! என்று கேட்பதோ அல்லது ஏன் இதை எழுதுகிறாய்? அதை எழுதலாமே! என்று கேட்பதோ அர்த்தமற்ற அநாகரீகமான செயல்.

இந்த அர்த்தமற்ற செயலைப் பலரும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாடல்களிலிருந்து சில வரிகள் - 9


மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

கேணல் சங்கர்



வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம் - யாழ்

வீரமரணம்-26.9.2001

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற் றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாக சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அநாகாPகச் செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது.

பதின்நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தமிழீழம் முன்பொருமுறையும் நெஞ்சில் அனல் சுமந்து பொங்கிப் பிரவாகித்தது. சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட தமிழீழ மக்களுக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிடுவதாகக் கூறி அமைதிப்புறா வேடமணிந்து எம் மண்ணில் காலூன்றியது இந்தியப்படை. ஆனால், காக்கவந்தவர்கள் தம்மைத் தாக்கத் தயாரானபோது ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீருமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்து, பாரத அரசின் உண்மை முகத்தை உலகறியச் செய்து காவியமானான் தியாகி திலீபன். அவனது உயிர்பிரிந்தபோது வரலாற்றில் என்றுமில்லாதவாறு, நெஞ்சில் அனல் பற்றியெழ பொங்கி எழுந்தது ஈழத் தமிழினம். அங்கே பிரகாசிக்கத் தொடங்கியது மக்கள் புரட்சி என்னும் புதிய விடுதலை ஒளி.
14 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் அதே தினத்தில் தான் மேற்கொண்ட அநாகாPகச் செயலால் தமக்கெதிராகப் போராடும் ஈழமக்களது உணர்வுகளையும், போரிடும் வீரியத்தையும் இன்னும் இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கின்றன சிங்களப் படைகள்.

தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.

வல்வெட்டித்துறை மண் தந்த வீரப்புதல்வர்கள் வரிசையில் வழிவந்தவர்தான் கேணல் சங்கர். 1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.

ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி 'கடற்புறா' என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர். சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர். இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர். இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.

இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது.
1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக 'சயனைட்' அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார். 2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார். இவ வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.

தேச விடுதலைக்காய் தன்னால் மட்டுமன்றி, தன் குடும்பத்தாலான முழுவதையும் தந்து நிற்கும் இவ வீரமறவன் மீது சிங்கள ஊடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்ததானது, தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும். இதற்கான பதிலை சிறீலங்கா வெகு விரைவில் பெற்றுக்கொள்ளும் நாட்கள் வரும்.

Quelle: எரிமலை(2004-செப்ரெம்பர் மாத இதழ்)

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite