Monday, September 26, 2005

ஏமாற்றம்

ஏதோ ஒரு உந்துதலில், அன்றைய பொழுதின் இறுக்கத்தில் அல்லது இனிமையில் என் மனப்போக்கில் எதையாவது எழுதுவேன். அவைகளில் முடிக்காமல் போனவை பல. அப்படியான ஒரு துண்டு இது. என் மனதுக்குள் இருக்கும் இதன் தொடர்ச்சியை எழுதி முடிப்பேனா அல்லது இப்படியே விட்டு விடுவேனா என்பது எனக்கே தெரியாத விடயம்.

என் கண்ணுக்குள் தெரிந்த உலகம் குளிரில் உறைந்து கிடந்தது. கால்கள் தன்போக்கிலே நடந்தாலும் மனசு வீட்டுக்குத் திரும்பி விடு என்று கெஞ்சியது. குருவிகளினதும் கோட்டான்களினதும் கூச்சலும் சிறகடிப்பும் ஆற்றுப் படுக்கைக்கேயுரிய ஆத்மார்த்த சலசலப்புகளாயிருந்தன. ஆற்றைக் குறுக்கறுத்து நின்ற பாலத்தைக் கடக்கும் போது குத்தெனத் தெரிந்த ஆற்றின் மீது படர்ந்திருந்த குளிர்ந்த அமைதி (ஏதோ ஒன்று) சுனாமியை ஞாபகப் படுத்தி என்னைக் கிலி கொள்ளச் செய்தது.

அழகான இயற்கை ஏதோ ஒரு கணத்தில் ஆக்ரோஷமாக உயிர் குடிக்கும் என்ற உண்மை இப்போதெல்லாம் அடிக்கடி மனசை உதைத்து விட்டுச் செல்கிறது. நேற்றிரவு பெண்கள் சந்திப்பு மலரில்(2004) வாசித்த, கருக்கு பாமாவின் அந்தி சிறுகதை நினைவுக்குள் உருண்டது. யாருக்கும் கடமைப் படாமல் தான் என்ற வீறாப்புடன் வாழ்ந்த கிழவி ஒரு இரவின் தனிமையில் மழையில் நிரம்பியிருந்த பள்ளத்தில் வீழ்ந்து இறந்து போன கதை சாதாரணமான கதைதான். ஆனால் அதைப் பாமா எழுதிய விதம் மனசைத் தொடும்படியாக இருந்தது. பல சொற்கள் விளங்கவில்லையானாலும் கதையோடிய விதம் மனசைப் படுத்தியது. அந்த நினைவில் சப்பாத்தையும் துளைத்துக் கொண்டு கால்விரல்களில் ஏறிய குளிரை மனசு கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்தது.

நான் தனியே நடந்து கொண்டிருந்தேன். ஆற்றங்கரையும் அதையொட்டிய புல்வெளியும் பனி போர்த்தியிருந்தன. தூரத்தில் அந்தப் பனியின் மேல் நின்று சில ஜேர்மனியர்கள் மிகவும் சிரத்தையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆசிரியர் ஆணானாலும் நீண்ட கூந்தலைப் பிடியாகக் கட்டியிருந்தார்.

மீண்டும் மீண்டுமாய் பாமாவின் கதாநாயகக் கிழவி மனசுக்குள் உருண்டாள்.
உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களைத் தாண்டும் போது ஆசிரியர் பல தடவைகள் தலையை என் பக்கம் திருப்பினார். நான் நடந்து கொண்டிருந்தேன்.

இலக்கின்றிய நடையல்ல, இலக்கோடுதான். ஒரு மணித்தியாலம் நடக்கலாம் என்று தீர்மானித்த பொழுதே அந்த வீடுவரை போய் வரலாம் என்ற ஆவலும் கூடவே எழுந்தது. எத்தனை காலமாகி விட்டது அந்தப் பக்கம் போய்...! ஏதோ ஒரு உந்துதல் இன்று.

March - 2005

- தொடரும் -

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite