Thursday, November 17, 2016
இராஜன் முருகவேல் (சோழியான்)
முகம் தெரியாத உறவுகளுக்காக மனம் கலங்குவதும் வாழ்வில் சாத்தியமாகிறது.
உலகப்பந்தின் முன் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் படத்தோடுதான் இராஜன் முருகவேல் யாழ் இணையத்தில் சோழியானாக எனக்கு அறிமுகமானார். அது 2001 என்று நினைக்கிறேன். இணையத்துக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்த ஆரம்பப் பொழுது. எப்போதும் கருத்தாடல், கருத்து மோதல் என்று நேரம் காலம் பாராது அதே தியானமாய் இருந்து எழுதித் தள்ளினோம். அப்போது யாழ்கருத்துக்களத்தில் எழுதியவைகள் எல்லாவற்றையும் தொகுத்தாலே சில நூல்களை உருவாக்கி விடலாம்.
இராஜன் முருகவேல் உருவாக்கினார். எனது படைப்புகளில் 25 படைப்புகளைத் தேர்ந்தெடுத்து „பதியப்படாத பதிவுகள்“ என்ற பெயரில் ஒரு மின்னூலை உருவாக்கினார். அதை 30.10.2004 இல் தனது தமிழமுதம் என்னும் இணையத்தளத்திலும் வெளியிட்டு வைத்தார். இத்தனைக்கும் அவரை நான் நேரில் பார்த்ததுமில்லை. தொலைபேசியதுமில்லை. மின்னஞ்சல் தொடர்புகள் கூட இருந்ததாக ஞாபகம் இல்லை. எல்லாம் பொதுவெளியில் பேசிக்கொண்டவைதான்.
இணையம் என்னும் பெருவெளி இன்றெமக்கு பல நட்புகளைத் தந்திருக்கிறது. „அது நட்பே அல்ல, அது உறவே அல்ல“ என்று வாதிடுபவர்களும் உள்ளார்கள்.
எப்படித்தான் யார் வாதிட்டாலும் சோழியான் என்று எம்மால் நன்கு அறியப்பட்ட இணையம் தந்த நண்பன் இராஜன் முருகவேலின் இறப்புச் செய்தி என்னுள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தத்தான் செய்தது. கேட்டதும் ஆற்றாமையினால் புரண்டெழுந்து அழுது புலம்பாவிட்டாலும் மனம் வலிக்கத்தான் செய்தது.
சோழியானுடனான நட்பு கிட்டத்தட்ட 15 வருடங்கள் நீண்டது. ஆரம்பத்தில் நாங்கள் யாழ் கருத்துக்களத்தில் நிறையவே பேசினோம். கருத்திட்டோம். எதிர்வாதம் புரிந்தோம். ஆனாலும் நண்பர்களாகவே இருந்தோம். ஜெர்மனியில் வெளிவந்து கொண்டிருந்த பூவரசு இதழில் இன்னும் இருவருடன் இணைந்து நால்வராக „இனி அவர்கள்“ என்றதொரு நெடுங்கதையும் எழுதினோம். தொடர்ந்த காலங்களில் பிறந்தநாட்கள், பெருநாட்களிலாவது வாழ்த்தைத் தெரிவித்து எமது நட்பை உறுதிப் படுத்திக் கொண்டே இருந்தோம்.
இராஜன் முருகவேல் எப்போதும் எழுதிக் கொண்டே இருந்தார். அவரது எழுத்தில் எப்போதும் ஒரு பண்பு இருக்கும். தேவையற்ற வார்த்தைகள் எதுவும் இராது. நகைச்சுவை கண்டிப்பாகக் கலந்திருக்கும். இணைய அரட்டைகளை முன்வைத்து எழுதிய அவரது ஐஸ்கிறீம் சிலையே நீதானே... குறிப்பிடத்தக்கது. இன்னும் பல எழுதினார். அவர் தொகுத்து தனது இணையத்தில் வெளியிட்ட ஈழத்துப் பாடல்கள் எண்ணிலடங்காதவை. இன்னும்... இன்னும்… அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
வருந்துகிறேன் சோழியான்! உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!
சந்திரவதனா
16.11.2016
என் தம்பியர்
அன்றொரு பொழுதில் ஈழம் வென்று தருவதாகச் சொல்லிச் சென்றனர் என் தம்பியர். இன்றவர்கள் இல்லை. நின்றாடுவது ஈழக்கனவும் அவர்கள் பற்றிய நினைவுகளுமே!
சந்திரவதனா
11.11.2016
https://www.facebook.com/search/top/…
மனசு விசித்திரமானது
மனசு விசித்திரமானது.
யாரை உள்வாங்கும் யாரைப் புறந்தள்ளும் என்பது அதற்கே தெரிவதில்லை. சிலரை மட்டும் நெஞ்சிருத்தி வைத்திருக்கும்
சந்திரவதனா
08.11.2016
யாரை உள்வாங்கும் யாரைப் புறந்தள்ளும் என்பது அதற்கே தெரிவதில்லை. சிலரை மட்டும் நெஞ்சிருத்தி வைத்திருக்கும்
சந்திரவதனா
08.11.2016
காதலையும், கவிதையையும்
காதலையும், கவிதையையும் முகநூலில் கொட்டும் ஆண்கள், அவைகளைத் தமது மனைவியரிடமும், பெண்கள் தமது கணவர்களிடமும் கொட்டினால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும்.
சந்திரவதனா
28.10.2016
சந்திரவதனா
28.10.2016
KG பேனா
திருடன் மணியன்பிள்ளை பற்றிய
குறிப்புகளைப் படித்ததிலிருந்து எனது பாடசாலைத் தோழி ஒருத்தி நினைவில்
வந்து கொண்டிருக்கிறாள். அப்போது எனக்கு அவள் மேல் கோபம் இருந்தது. என் KG
பேனா களவு போய் விட்டதில் மிகுந்த வருத்தம் இருந்தது.
பின்பொரு சமயத்தில் அவளுக்காக வருந்தினேன். அப்பா இல்லாதவள். என் பேனாவை அவள்தான் எடுத்தாளா என்பது எனக்கு இன்னமும் சரியாகத் தெரியாது.
ஒருவேளை எடுத்திருந்தாலும், ஒரு போதும் அதைப் பாடசாலைக்குக் கொண்டு வந்து எழுதவோ, „நானும் KG பேனை வைத்திருக்கிறேன்“ என்று சொல்லித் தம்பட்டமடிக்கவோ முடியாத நிலையில் தவித்திருந்த துர்ப்பாக்கியவதி.
சந்திரவதனா
20.10.2016
http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=158%3Akg-&catid=39%3A2009-07-02-22-34-59&Itemid=15
பின்பொரு சமயத்தில் அவளுக்காக வருந்தினேன். அப்பா இல்லாதவள். என் பேனாவை அவள்தான் எடுத்தாளா என்பது எனக்கு இன்னமும் சரியாகத் தெரியாது.
ஒருவேளை எடுத்திருந்தாலும், ஒரு போதும் அதைப் பாடசாலைக்குக் கொண்டு வந்து எழுதவோ, „நானும் KG பேனை வைத்திருக்கிறேன்“ என்று சொல்லித் தம்பட்டமடிக்கவோ முடியாத நிலையில் தவித்திருந்த துர்ப்பாக்கியவதி.
சந்திரவதனா
20.10.2016
http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=158%3Akg-&catid=39%3A2009-07-02-22-34-59&Itemid=15
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
▼
2016
(
23
)
- ▼ November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )