வாசித்தலில் கூட மனம் ஒட்டாத ஒரு பொறுமையின்மையான நேரத்தில் இன்று தற்செயலாக பொ. கருணாகரமூர்த்தியின் சாதல் என்பது... என் கண்களில் பட்டது. கருணாகரமூர்த்தியினது என்பதால் அலையும் மனதை இழுத்து நிறுத்தி வாசித்தேன்.
இம்மாத காலச்சுவடில் பிரசுரமாகியுள்ளது.
கற்பனைகளை விட உண்மைக்கே முக்கியத்துவம் கொடுப்பவை பொ. கருணாகரமூர்த்தியின் படைப்புகள். இந்தப் படைப்பு மனதில் மெல்லிய சோகத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. ஒருவித மனக்கவலையுடன் எழுதப்பட்டது போன்றும் தோன்றியது. கூடவே ஒரு ஆணின் உணர்வுகளும், சபலங்களும் தயங்காது எழுதப்பட்டிருந்தது.
எழுத்தின் போக்கு ஏனோ மனதை நெருடுகிறது. கருணாகரமூர்த்தி, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?
17.7.2015
http://kalachuvadu.com/issue-187/page64.asp
சாதல் என்பது... பொ. கருணாகரமூர்த்தி