உருளைக்கிழங்கு
களவெடுத்ததற்காக இரு மனிதர்களை பெற்றோலோ அன்றி வேறேதோ ஊற்றி உயிரோடு
கொளுத்தினார்கள் சிலர். அதை வேடிக்கையாகவும், வினையாகவும் பார்த்துக் கொண்டு
நின்றார்கள் இன்னும் சிலர். பார்த்துக் கொண்டு நின்ற அத்தனை பேரும் ஒன்றிணைந்து
தடுத்திருந்தால் அந்த உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
உருளைக்கிழங்கைத் திருடிய
திருடர்கள்தானே! எப்படிக் கொடூரமாய்ச் செத்தால் எமக்கென்ன என்பது போலவோ அன்றி
நல்லாகச் சாகட்டுமே என்பது போலவோ கல்லுளிமங்கர்களாக
இருந்து விட்டார்கள்.
திருடர்கள் ஏன்
உருவாகிறார்கள் என்று பெரும்பாலானவர்கள் சிந்திப்பதில்லை. அதுவும் வயிற்றுக்காகத்
திருடுபவர்கள்...?
ஒரு மனிதனின் அடிப்படைத்
தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத அரசும், இரக்கமற்ற சமூகமும் இருக்கும் வரை
திருடர்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள். திருடனைத் திருந்தவே விடாத சட்டம்
இருக்கும் வரை திருடர்கள் பெருகிக் கொண்டே இருப்பார்கள்.
`திருடன்
மணியன்பிள்ளை´ என்ற நூலின், பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். மைக்கேல் இந்நூல் பற்றிச் சொன்ன
பின்தான் தேடிப்பார்த்தேன். 590 பக்க நாவலைப் பற்றி 5 பந்திகளில் எழுதி முடித்து
விட்டார் மைக்கேல். (https://www.facebook.com/photo.php?fbid=352599961746466&set=a.140907742915690.1073741827.100009893940426&type=3&theater)
இணையத்திலும் விரவியிருக்கின்றன நூல் பற்றிய குறிப்புகள்.
இப்போது
`திருடன் மணியன்பிள்ளை´யையும்
வாசித்து விடவேண்டுமென்று மனம் உன்மத்தம் கொண்டுள்ளது.
சந்திரவதனா
17.10.2016
Monday, October 17, 2016
எழுதினால்_கொஞ்சம்_தேவலை
சின்ன வயதில் சிந்தாமணி, கல்கண்டு, கல்கி, குமுதம், ஆனந்தவிகடன்…
போன்றவைகளில் தொடர்களை வாசித்து விட்டு அடுத்த தொடருக்காக பெருந்தவிப்புடன்
ஒரு கிழமை காத்திருப்போம். அந்த ஒரு கிழமைக்குள் அண்ணன், நான், தம்பி
பார்த்திபன் மூவரும் அத்தொடர்களைப் பற்றி நிறையவே அலசி ஆராய்வோம். அடுத்து
என்ன வரும் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு கதை புனைந்து கதைத்துக் கொள்வோம். சில
கதைகள் பற்றி அம்மாவுடனும் கதைப்போம். அம்மாவும் எல்லாவற்றையும் கரைத்துக்
குடித்திருப்பா.
அதை நினைவு படுத்துகிறது உமையாழ் பெரிந்தேவியின் எழுதினால்_கொஞ்சம்_தேவலை (https://www.facebook.com/…/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%A…)
இப்போது சோலிகள் பல. அப்போதிருந்த அந்தளவு எதிர்பார்ப்பும், புத்தகங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், யார் முதலில் வாசிப்பது என்பதிலான பிக்கல், பிடுங்கல்களும் இல்லை. வாசித்த பலதையே மறந்து போகுமளவுக்கு வயதும் ஏறிக் கொண்டிருக்கிறது.
இருந்தாலும், அவ்வப்போது உமையாழ் எதிர்பார்த்துக் காத்திருந்த நபர் வந்தாரா? றியாத் விமானநிலையத்திலிருந்து உமையாளை அழைத்துச் சென்றாரா? என்ற கேள்விகள் மனதில் எழுத்தான் செய்கிறது.
சந்திரவதனா
16.10.2016
அதை நினைவு படுத்துகிறது உமையாழ் பெரிந்தேவியின் எழுதினால்_கொஞ்சம்_தேவலை (https://www.facebook.com/…/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%A…)
இப்போது சோலிகள் பல. அப்போதிருந்த அந்தளவு எதிர்பார்ப்பும், புத்தகங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், யார் முதலில் வாசிப்பது என்பதிலான பிக்கல், பிடுங்கல்களும் இல்லை. வாசித்த பலதையே மறந்து போகுமளவுக்கு வயதும் ஏறிக் கொண்டிருக்கிறது.
இருந்தாலும், அவ்வப்போது உமையாழ் எதிர்பார்த்துக் காத்திருந்த நபர் வந்தாரா? றியாத் விமானநிலையத்திலிருந்து உமையாளை அழைத்துச் சென்றாரா? என்ற கேள்விகள் மனதில் எழுத்தான் செய்கிறது.
சந்திரவதனா
16.10.2016
குட்டைப் பாவாடைப் பெண்
ஒரு நியதி போல நாம் ஒரு சிலரை அடிக்கடி எதேச்சையாகச் சந்தித்துக் கொள்வோம். அப்படித்தான் இவளையும்.
அனேகமான ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் நானும், கணவருமாக சுப்பர்மார்க்கெட்டுக்குப் போவோம். அங்கிருக்கும் 12 கவுண்டர்களில் ஏதாவதொன்றில் அவள் இருப்பாள். அதில் இல்லாத பொழுதுகளில் சுப்பர்மார்க்கெட் தகவல்நடுவத்திலோ, பேக்கரியிலோ, இன்னும் எங்காவது ஓரிடத்திலோ தென்படுவாள். ஒரு சிரிப்புடனோ, கையசைப்புடனோ அல்லது ஒரு ´ஹலோ` வுடனோ கடந்து கொள்வோம்.
இன்று அவள் நாங்கள் போன கவுண்டரிலேயே இருந்தாள். முகத்துக்கு நன்றாக அரிதாரம் பூசி, புருவங்களை வில்லாக வளைத்துக் கீறி, உதட்டுக்குச் செக்கச்செவேலெனச் சாயம் பூசி... பளிச்சென்று சிரித்தாள். கார்ட்டை இயந்திரத்தினுள் போட்டு வேண்டிய பொருட்களுக்கான கணக்கைச் சரிசெய்த கையோடு, கார்ட்டை இழுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு பின் நிற்கும் வரிசையைக் கூடப் பொருட்படுத்தாது நாலு வார்த்தை பேசிச் சிரித்தாள்.
இவளைப் பற்றி இற்றைக்குப் பத்து வருடங்களின் முன் நான் எழுதிய ஒரு பதிவு
பலத்த காற்றும், சிணுங்கும் மழையும், மரங்கள் சொரிந்த இலைகளை தெரு முழுவதும் இழுத்துக் கொண்டு திரிந்த அந்தக் குளிர்ந்த இரவில் அவள் அந்தத் தரிப்பிடத்தில் காத்திருந்தாள். பேருந்து நிற்க முன்னரே குட்டைப் பாவாடையுடன் பளிச்சென்று தெரிந்த அவளைக் கண்டு சில கண்கள் அகல விரிந்தன. பேருந்தினுள் அவள் ஏறியதும் ஒட்டு மொத்தப் பேரூந்துப் பயணிகளின் பார்வைகளும் அவள் பக்கம் ஒருதரம் திரும்பின. அவள் என்னைத் தாண்டும் போது "ஹலோ" என்ற படி அழகாகச் சிரித்துக் கொண்டாள். தாண்டிய பின்னும் தாண்டாமல் நின்ற, அவள் விட்டுச் சென்ற கமகமக்கும் உயர்தர வாசனைத் திரவியம் என்னுள் ஒருவித சந்தோச உணர்வைத் தோற்றுவித்தது.
சந்திரவதனா
15.10.2016
அனேகமான ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் நானும், கணவருமாக சுப்பர்மார்க்கெட்டுக்குப் போவோம். அங்கிருக்கும் 12 கவுண்டர்களில் ஏதாவதொன்றில் அவள் இருப்பாள். அதில் இல்லாத பொழுதுகளில் சுப்பர்மார்க்கெட் தகவல்நடுவத்திலோ, பேக்கரியிலோ, இன்னும் எங்காவது ஓரிடத்திலோ தென்படுவாள். ஒரு சிரிப்புடனோ, கையசைப்புடனோ அல்லது ஒரு ´ஹலோ` வுடனோ கடந்து கொள்வோம்.
இன்று அவள் நாங்கள் போன கவுண்டரிலேயே இருந்தாள். முகத்துக்கு நன்றாக அரிதாரம் பூசி, புருவங்களை வில்லாக வளைத்துக் கீறி, உதட்டுக்குச் செக்கச்செவேலெனச் சாயம் பூசி... பளிச்சென்று சிரித்தாள். கார்ட்டை இயந்திரத்தினுள் போட்டு வேண்டிய பொருட்களுக்கான கணக்கைச் சரிசெய்த கையோடு, கார்ட்டை இழுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு பின் நிற்கும் வரிசையைக் கூடப் பொருட்படுத்தாது நாலு வார்த்தை பேசிச் சிரித்தாள்.
இவளைப் பற்றி இற்றைக்குப் பத்து வருடங்களின் முன் நான் எழுதிய ஒரு பதிவு
பலத்த காற்றும், சிணுங்கும் மழையும், மரங்கள் சொரிந்த இலைகளை தெரு முழுவதும் இழுத்துக் கொண்டு திரிந்த அந்தக் குளிர்ந்த இரவில் அவள் அந்தத் தரிப்பிடத்தில் காத்திருந்தாள். பேருந்து நிற்க முன்னரே குட்டைப் பாவாடையுடன் பளிச்சென்று தெரிந்த அவளைக் கண்டு சில கண்கள் அகல விரிந்தன. பேருந்தினுள் அவள் ஏறியதும் ஒட்டு மொத்தப் பேரூந்துப் பயணிகளின் பார்வைகளும் அவள் பக்கம் ஒருதரம் திரும்பின. அவள் என்னைத் தாண்டும் போது "ஹலோ" என்ற படி அழகாகச் சிரித்துக் கொண்டாள். தாண்டிய பின்னும் தாண்டாமல் நின்ற, அவள் விட்டுச் சென்ற கமகமக்கும் உயர்தர வாசனைத் திரவியம் என்னுள் ஒருவித சந்தோச உணர்வைத் தோற்றுவித்தது.
சந்திரவதனா
15.10.2016
வாயில் ஏன் புகை?
வாயில் ஏன் புகை?
உயிரோடு உனக்கென்ன பகை?
நேற்றைய பயணம்
இலட்சியப் பாதையில்
இன்றைய சயனம்
அலட்சியப் போக்கிலா
உயிரோடு உனக்கென்ன பகை?
நேற்றைய பயணம்
இலட்சியப் பாதையில்
இன்றைய சயனம்
அலட்சியப் போக்கிலா
வாயில் கக்கும் நெருப்பு
சூழலை மட்டுமா கெடுக்கும்
ஈரலையும் பொசுக்கும்
ஈன்றவர் இதயம் துடிக்கும்
காற்றின் போக்கில்
தூசுகள்தான் போகும்
ஆற்றின் வேகத்தில்
துரும்புகள்தான் அலையும்
வழிகாட்டி இங்கே
விழி மூடலாமா?
படகோட்டி இங்கே
தடம் மாறலாமா?
வீட்டுக்கு மூத்தவனே
விடியலுக்காய் பூத்தவனே
விட்டிலாய் மாறாதே
மாயையில் மாளாதே!
தீபா செல்வகுமாரன்
11.12.1997
நிலவுமொழி செந்தாமரையை (https://www.facebook.com/photo.php?fbid=1143642165673791&set=a.169553609749323.27936.100000840568456&type=3&theater) சிகரெட்டுடன் பார்த்ததும் எனக்குள் தோன்றியது கவலை மட்டுமே! என்னைச் சுற்றியுள்ள யார் புகைத்தாலும் நான் கவலைப்படுவேன். அவர்கள் எனக்குப் பிடித்தமானவர்களாய் இருந்தால் இன்னும் அதிகமாகக் கவலைப்படுவேன். ஏன் இப்படி இந்தப் புகையில் தங்களைத் தாங்களே கருக்கிக் கொள்கிறார்கள் என நினைத்துக் கொள்வேன்.
எனக்கு ஏனோ நிலவையும் பிடிக்கும். அதனால்தான் கவலையும் வந்தது. எனது மகள் தீபா 1997 இல் எழுதிய இந்தக் கவிதையும் நினைவில் வந்தது.
சந்திரவதனா
14.10.2016
சூழலை மட்டுமா கெடுக்கும்
ஈரலையும் பொசுக்கும்
ஈன்றவர் இதயம் துடிக்கும்
காற்றின் போக்கில்
தூசுகள்தான் போகும்
ஆற்றின் வேகத்தில்
துரும்புகள்தான் அலையும்
வழிகாட்டி இங்கே
விழி மூடலாமா?
படகோட்டி இங்கே
தடம் மாறலாமா?
வீட்டுக்கு மூத்தவனே
விடியலுக்காய் பூத்தவனே
விட்டிலாய் மாறாதே
மாயையில் மாளாதே!
தீபா செல்வகுமாரன்
11.12.1997
நிலவுமொழி செந்தாமரையை (https://www.facebook.com/photo.php?fbid=1143642165673791&set=a.169553609749323.27936.100000840568456&type=3&theater) சிகரெட்டுடன் பார்த்ததும் எனக்குள் தோன்றியது கவலை மட்டுமே! என்னைச் சுற்றியுள்ள யார் புகைத்தாலும் நான் கவலைப்படுவேன். அவர்கள் எனக்குப் பிடித்தமானவர்களாய் இருந்தால் இன்னும் அதிகமாகக் கவலைப்படுவேன். ஏன் இப்படி இந்தப் புகையில் தங்களைத் தாங்களே கருக்கிக் கொள்கிறார்கள் என நினைத்துக் கொள்வேன்.
எனக்கு ஏனோ நிலவையும் பிடிக்கும். அதனால்தான் கவலையும் வந்தது. எனது மகள் தீபா 1997 இல் எழுதிய இந்தக் கவிதையும் நினைவில் வந்தது.
சந்திரவதனா
14.10.2016
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
▼
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
- ▼ October 2016 ( 9 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )