Monday, March 13, 2006

கண்டு கொள்ளப் படாத பாடல்


ஓரிரு வாரங்களுக்கு முன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் மகாநதி திரைப்படம் ஒளிபரப்பானது. ஏற்கெனவே பார்த்த படம்தான். ஆனாலும் பிடித்த படமென்பதால் மீண்டும் ஒரு முறை பார்த்தேன். முன்னர் பார்த்த போதிருந்த தாக்கம் தற்போது ஏற்படவில்லையாயினும் நீண்ட நாட்களின் பின் நித்திரை கொள்ளாமல் இருந்து, ஒரு திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து முடித்தேன்.

இப்படத்திலே வரும் பாட்டுக்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்திருந்தன. ஆனாலும் இப்பாடலை யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

துவக்கம் எங்கே
இது வரை சரிவரப் புரியவில்லை

துவக்கம் எங்கே
இது வரை சரிவரப் புரியவில்லை
துவங்கியதை
தொடர்ந்திடப் புதுவழி தெரியவில்லை
புதிர்களும் புதுக்கவி புனைந்திட
நெருங்கிட என் மனம் மருகிட
மயங்குதே கலங்குதே
சொல்லின்றியே தயங்குதே
அலைகள் எழுந்து
கரைகள் கடந்து....


குற்றம் செய்யாமலே ஜெயிலுக்குச் சென்று விட்ட கமலகாசனை சுகன்யா சந்திக்கும் காட்சி இது. கமலகாசன் ஜெயிலுக்குள்ளும் சுகன்யா வெளியில் பார்வையாளருமாக...

எதுகை மோனையுடன் அழகான வார்த்தைக் கோர்ப்புகளும், இதமான சந்தமும் கூடிய பாடல். ஆனால் இப்பாடலைப் பலருக்குத் தெரியாது. எந்த வானொலியிலும் இப்பாடலை விருப்பப்பாடலாக யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. படத்தில் வரும் மற்றைய பாடல்களில் சில, பலரது கவனத்துக்கு உள்ளானதால் இது கவனத்தில் இருந்து தவறி விட்டதோ?

படம் - மகாநதி(1994)
பாடியவர்கள் - S.P.பாலசுப்பரமணியம்+ ஜானகி


துவக்கம் எங்கே
இது வரை சரிவரப் புரியவில்லை
துவங்கியதை
தொடர்ந்திடப் புதுவழி தெரியவில்லை
புதிர்களும் புதுக்கவி புனைந்திட
நெருங்கிட இரு மனம் மருகிட
மயங்குதே கலங்குதே
சொல்லின்றியே தயங்குதே
அலைகள் எழுந்து
கரைகள் கடந்து....

சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புதுயுகம் அரும்புமோ

சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன


காவல் வைத்தாலும் உன்மீது
ஆவல் கொண்டாடும் உள்ளம் உள்ளம்
காலம் கைகூடும் என்றெண்ணி
காதல் கொண்டாடும் எண்ணம் எண்ணம்

கூண்டில் என் வாசம் என்றாலும்
மீண்டும் நான் வந்தால் அந்நேரம்
வேண்டும் நான் வாழ உந்தன் நெஞ்சம்

வானம் நின்றாலும் சாய்ந்தாலும்
வையம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
பாவை பெண்பாவை உந்தன் தஞ்சம்

ஜீவன் வெவ்வேறு ஆகாமல்
ஜென்மம் வீணாகிப் போகாமல்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புதுயுகம் அரும்புமோ

சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

நாட்கள் ஒவ்வொன்றும் துன்பம்
தூக்கம் இல்லாமல் செல்லும் செல்லும்
வீசும் பூந்தென்றல் உன்பாட்டை
நாளும் என் காதில் சொல்லும் சொல்லும்


பாரம் நெஞ்சோரம் என்றாலும்
ஈரம் கண்ணோரம் என்றாலும்
உள்ளம் உன் பேரைப் பாடும் பாடும்

நேசம் எந்நாளும் பொய்க்காமல்
நெஞ்சைத் துன்பங்கள் தைக்காமல்
நாளை பொற்காலம் கூடும் கூடும்.

நெஞ்சில் எப்போதும் உன் எண்ணம்
கண்ணில் எந்நாளும் உன் வண்ணம்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புதுயுகம் அரும்பலாம்

சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன
எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புதுயுகம் அரும்பலாம்

சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

சந்திரவதனா

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite