
மீண்டும் ஒரு பெண்குழந்தை இந்தக் கோரத்துக்குப் பலியாகியிருக்கிறது.
6வயதுகள் மட்டுமே நிரம்பிய Ayla, 23.5.2005 அன்று, 37வயதுகள் நிரம்பிய ஒருவரால் கடத்தப் பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டு கொலை செய்யப் பட்டிருக்கிறாள். இது நடந்தது Zwickau (Sachsen)இல்.
இக்கொடுஞ்செயலைச் செய்த 37வயதானவர் 1998இல் தனது பெறாமக்கள் இருவருடன் பாலியல் துர்ப்பிரயோகத்தில் ஈடுபட்டதன் காரணமாக இருவருடத் தண்டனை அனுபவித்திருக்கிறார்.
இதே 37வயதானவர் தனது 17வயதில் ஒரு வயதான பெண்ணைக்கத்தியால் குத்தியதற்காக 15வருட தண்டனை பெற்றுள்ளார். ஆனாலும் இளம்வயதினருக்கான சட்டத்தைக் காட்டி தண்டனை பத்து வருடங்களாகக் குறைக்கப் பட்டிருக்கிறது.
இப்படியானவர்களுக்கான தண்டனைகளின் கனம் குறைவாக இருப்பதுதான் தவறுகள் தொடர்வதற்கான பெரும் காரணிகளாக இருக்கின்றனவோ?
இப்படியானவர்களை மீண்டும் மீண்டும் சமூகத்தின் மத்தியில் நடமாட விடுவது எத்தகைய பயங்கயரமானது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இருந்தும் சட்டங்கள் இவைக்கு உறுதுணையாகின்றனவே!