Sunday, April 30, 2006

சினைமுட்டைப்பை(ovary) மாற்று சிகிச்சை


- Srishiv -


இந்தக்கட்டுரையில் சினைமுட்டைப்பை (ovary)மாற்று சிகிச்சை பற்றி பார்ப்போம்,
குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளாகக்கருதப்படும் இந்தியா, சீனா, சப்பான் போன்ற நாடுகளில் இந்த விஞ்ஞான முன்னேற்றம் மிக மெதுவாகவே இருக்கின்றது.சீனாவில் சென்ற 2002ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதியில் இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியதைத்தொடர்ந்து, அடுத்த மாதமே நம் இந்தியாவின் தொழில் நகரங்களுள் சிறந்த நகரமான மும்பையில் நடந்தேறியது. மருத்துவர். திரு. பிரவீன் ம்ஹாத்ரே என்பவரின் சீரிய முயற்சியால், டி.எஸ்.கோத்தாரி மருத்துவமணை , மும்பையில் சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை நல்லமுறையில் நடந்தேறியது. இந்த சினைமுட்டைப்பையினை டர்னரின் நோய் (Turner's Syndrome)(இது பெண்களிடம் உள்ள ஒரு குரோமோசோம் குறைபாடு, ஒரே ஒரு x குரோமோசோம் மட்டுமே இருத்தல், இதன் விளைவுகள், குள்ளமாகப்பிறத்தல், இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் குறைபாடுள்ள அல்லது அளவு குறைந்த வளர்ச்சியுடைய பாலுறுப்புக்களுடன் பிறக்கும் குழந்தை)(இந்த நோய் 2000 குழந்தைகளுள் 1 குழந்தைக்கு வரும் வாய்ப்புள்ளது)தாக்கியிருந்த ஒரு 17 வயது பெண்ணிற்கு மாற்று சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இந்த டர்னரின் நோய் தாக்கிய குழந்தைகள் தங்கள் ஆயுளுக்கும் ஹார்மோன் தெரபி என்று கூறப்படும் ஒருவகை மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவேண்டியிருக்கும் , இந்த சிகிச்சை புற்றுநோயினை தோற்றுவிக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த சினைமுட்டைப்பையினை தானமாகக்கொடுத்தவர் அந்த பெண்ணின் 26 வயது உறவுப்பெண் ஒருவர், அவர் இரண்டு குழந்தைக்குத்தாயானவரும் கூட. - தொடர்ச்சி

Tuesday, April 25, 2006

Mit dem Piepsen im Ohr


TAG DES LÄRMS / Reinhard Sorg und Norbert Eisen über die Gefahren sehr lauter Töne für das Gehör

Haarsinneszellen knicken bei zu hohem Schalldruck ab - Tinnitus droht

THUMILAN SELVAKUMARAN

Hörschäden - oft sind laute Geräusche die Ursache. Ein Piepsen im Ohr kann die letzte Warnung vor einem Tinnitus sein. Wir leben in einer "Lärmgesellschaft". Und heute, am internationalen Tag des Lärms, sollen die fatalen gesundheitlichen Folgen von zu lauten Geräuschen und Musik ins Bewusstsein gerückt werden.


Ein lauter Schrei ist für die empfindlichen Haarsinneszellen im Ohr genauso gefährlich wie zu laute Musik oder Lärm in Fabriken. Marita Pusch (13) aus Hall ist in dieser Hinsicht vorbildlich: "Musik höre ich lieber leise."
FOTO: THUMI

SCHWÄBISCH HALL "Durch richtigen Umgang mit Lärm lassen sich gesundheitliche Schäden vermeiden", sagt Reinhard Sorg. Rock-Konzerte oder Disko-Besuche seien nicht zwingend schädlich. "Nach drei Stunden Musikkonsum bei 80 Dezibel sollte jeder eine Pause einlegen. Idealerweise acht Stunden", sagt der Hörgerätespezialist. Sorg weiß, dass es meist nicht bei den drei Stunden bleibt.... more

Sunday, April 23, 2006

வீட்டுவேலைகளைச் செய்வதில் ஆண்கள்

வீட்டுவேலைகளைச் செய்வதில் ஆண்கள் உண்மையிலேயே சோம்பலானவர்கள் என்கிறார் எழுத்தாளர் Lili Stollowsky.

தினமும்
பெண்கள் சமையலறையில் 90நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள்.
ஆண்கள் 7நிமிடங்களை மட்டுமே.

பெண்கள் தோய்த்து அயர்ண் பண்ணுவதற்கு 30நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள்.
ஆண்கள் 2 நிமிடங்களை மட்டுமே.

பெண்கள் வீட்டைத் துப்பரவாக்குவதற்கும் அடுக்குவதற்கும் 109நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள்.
ஆண்கள் 11 நிமிடங்களை மட்டுமே.

பெண்கள் பிள்ளைகளைப் பராமரிக்க 170 நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள். ஆண்கள் 70 நிமிடங்களை மட்டுமே.

மொத்தமாக பெண்களை விட 3மணி நேரங்கள் அதிகமாக
ஆண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது.

Monday, April 17, 2006

கவிஞர் நாவண்ணனுக்கு...




ஆற்றொழுக்கில் நின்ற அழுத விழிகளோடு...

...நண்பனே
இதற்கு முன் நான்
யாத்து வந்த கவிதைகளை
யான் படிக்க
உன் வீட்டில்
பூத்த முகத்தோடு
கேட்டு தலையசைப்பாய்-இன்று
யாத்து வந்தேன்
கவிதை உனக்காக-உயிர்
நீத்த உடலாய்-இங்கு
நிமிர்ந்து கிடக்கிறது.
கேட்கிறதா என் கவிதை?
பாத் தொடுக்க முடியாமல்
பதறிடுது என் நாக்கு
வற்றாப்பளையூர் தீட்சண்யா-நின்
வாய் மூடி விட்டதய்யா-இன்று
பற்றறுத்து விட்டு
பயணிக்கத் தொடங்கிவிட்டாய்
பந்தம் அறுத்து பாசம் அறுத்து
சொந்தம் விடுத்து சொர்க்கப் பிரவேசமா?...


...ஆற்றொழுக்கில் நின்ற என் அழுத விழிகளிலே
கவிதை விரல் கொண்டென் கண்ணீரைத் துடைத்தவனே
இன்று உனக்காய்
கவிதை வரி தீட்டிக் கண் கலங்கி அழவைத்தாய்
ஆற்றும் வகையறியேன்-உன்னவளை, பிள்ளைகளை
தேற்றும் வகையறியேன்-நீயோ
கூற்றுவன் மாளிகையில் குடியிருக்கப் போனாயே தீட்சண்யா!..."
என்று என் அண்ணன் தீட்சண்யனின் இறுதி ஊர்வலத்தில் கவி பாடி வழியனுப்பி வைத்தாய்.

இன்று, நீ மறைந்த சேதியில்...
கவியேதும் எழுத வார்த்தையின்றி..
நான்

Friday, April 14, 2006

வெற்றிப் படியேறு வெட்டித் தடை வீழ்த்தி


சிந்தனைக் கட்டுரை
- பாவன்னா பானா -

பொருளாதார வளம் கண்ட நாடுகளில் தனிமனிதர்களும் நிறுவனங்களும் தத்தமது நாடுகளை அத்தகைய நிலைக்குக் கொண்டு வர வெவ்வேறு விதமான உற்பத்தி யுக்திகளைக் கையாண்டார்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒரு அணுகுமுறையைக் கையாள அவைகளுக்கு வெளியே ஆசியாவில் வேறொரு விதமான அணுகுமுறை கையாளப்பட்டது
குபேரர்களான யப்பானியர்களால். பொருளாக்கத்தில் செல்வச் செழிப்படைந்த இந்த இரு தரப்பினரதும் இலக்கு ஒத்ததாயினும் அதனை எட்டுவதில் அவர்களது சிந்தனைதான் வேறுவிதமாக இருந்தது. மிகுதி

Thursday, April 13, 2006

எட்டுக்கோடு


எட்டுக்கோடு கெந்தி விளையாடும் சுவாரஸ்யமான விளையாட்டு. இதையும் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். சிறுமியரில் இருந்து உயர்தரவகுப்புப் பெண்கள் வரையிலான பாடசாலைப் பெண்களின் பிரதான விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று. வீடுகளிலும் இதை ஆர்வமுடன் விளையாடுவார்கள்.

பெரும்பாலும் இதை வெளி முற்றங்களிலும், இடமிருக்கும் பட்சத்தில் உள் இடங்களிலும் விளையாடுவார்கள். வீடுகளில் மட்டும் அண்ணன், தம்பிமாரும் இவ் விளையாட்டில் சேர்ந்து கொள்வார்கள்.

இதை விளையாடுவதற்கு ஒரு சிறிய ஓட்டுத் துண்டும், அண்ணளவாக 300செ.மீற் நீளமும், 150செ.மீற் அகலமும் கொண்ட தரையும் கோடு போட ஒரு வெண்கட்டி அல்லது ஒரு ஓட்டுத் துண்டு அல்லது ஒரு தடியும் போதும். நீள் சதுரத்தை நீளப்பாடாகக் கீறி நீளப்பாடாக நடுவேயும், அகலப்பாடாக நான்காகவும் பிரித்துக் கோடு போட்டு விட்டால் விளையாடுவதற்கான தளம் ரெடி.

கால்களில் குத்தி விடாமல் இருக்க ஓட்டுத்துண்டை சரியான முறையில் தேய்த்து வைத்திருக்க வேண்டும். ஏறக்குறைய 3செ.மீற் நீள, அகலம் கொண்ட இந்த ஓட்டுத்துண்டை எமது பாடசாலைகளிலும் வீடுகளிலும் சிப்பி என்றே சொல்வோம்.

எட்டுச் சதுரங்கள் கொண்ட இப்பெட்டியில் இடது பக்கம் நான்கு பெட்டிகளும், வலது பக்கம் நான்கு பெட்டிகளும் இருக்கும். விளையாட்டை இடது பக்கம் இருந்தே தொடங்க வேண்டும். இடது பக்கமாகப் போகும் போது ஐந்தாவது பெட்டி அதாவது வலது பக்கத்தின் மேற்பெட்டி வீடு. இங்கு காலாறி ஓய்வெடுக்கலாம்.

இனி எப்படி விளையாடுவது எனப் பார்ப்போம்.

சிப்பியை இடது பக்க முதற் பெட்டியில் போட வேண்டும். போடும் போது சிப்பி கண்டிப்பாகப் பெட்டிக்குள் விழ வேண்டும். கோடுகளில் வீழ்ந்து விடக் கூடாது.

ஒற்றைக்காலால் கெந்தி, அந்தச் சிப்பியை மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்துக் கொண்டு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பெட்டிகளுக்குள் கெந்தி ஐந்தாவது பெட்டிக்குள் இரண்டு கால்களையும் வைத்து நின்று விட்டு மீண்டும் ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் கெந்தி வெளியில் போக வேண்டும்.

இதே முறையில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போட்டு இதே ஒழுங்கில் சென்று மிதித்து, எடுத்துக் கொண்டு வெளியில் போக வேண்டும். ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போடும் போது இடது பக்க மூலையில் நின்றே போட வேண்டும்.

எட்டுப் பெட்டிகளும் விளையாடி முடிந்தால் அடுத்த கட்டம்.

இப்போது சிப்பியை முதற் போலவே போட்டு, ஒற்றைக்காலால் கெந்தி மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்து, தூக்கி வைத்திருக்கும் கால் பாதத்தில் விரல்களின் மேல் வைத்துக் கொண்டு கெந்த வேண்டும். கெந்தும் போது சிப்பி கீழே வீழ்ந்து விடக் கூடாது. எட்டாவது பெட்டிக்கு வந்ததும் சிப்பியை பெட்டிக்கு வெளியில் போட்டு விட்டு கெந்தி அதை மிதிக்க வேண்டும்.

அடுத்த கட்டம்.

சிப்பியை தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு பெட்டிகளில் நடக்க வேண்டும். ஒற்றைக்கால் முதற்பெட்டியிலும் மற்றையகால் இரண்டாவது பெட்டியிலும்.. என்று வைத்து நடக்க வேண்டும். முகம் மெதுவாக மேலே தூக்கப் பட்டிருக்க வேண்டும். நடக்கும் போது "சரியோ? சரியோ?" என்று கேட்க வேண்டும். கால் விரல்கள் கோடுகளில் பட்டு விடக் கூடாது. பட்டுவிட்டால் "பிழை" என்பார்கள். 5வது பெட்டியில் இரண்டு கால்களையும் வைத்து நின்று கண்களைத் திறந்து பார்த்து விட்டு மீண்டும் ஆறாவது ஏழாவது பெட்டிகளைக் கடந்து எட்டாவது பெட்டிக்கு வந்ததும் தலையில் உள்ள சிப்பியை கண்களை மூடிய படி நின்று வெளியில் வீழ்த்தி விட்டு கண்களைத் திறக்க வேண்டும். பின் கெந்தி மிதிக்க வேண்டும்.

அடுத்த கட்டம்.

சரியாகச் சிப்பியில் மிதித்து விட்டால், சிப்பியை கையில் எடுத்து எட்டுக்கோட்டுக்கு புறமுதுகு காட்டி நின்று கொண்டு, சிப்பியை தலைக்கு மேலால் எட்டுக்கோட்டுக்குள் எறிய வேண்டும். சிப்பி கோடுகளிலோ, வெளியிலோ, ஐந்தாவது பெட்டிக்குள்ளோ விழக் கூடாது.

மூன்று சந்தர்ப்பங்கள் உங்களுக்குத் தரப்படும். சிப்பி எந்தப் பெட்டிக்குள் விழுகிறதோ அந்தப் பெட்டி உங்களுக்குச் சொந்தம். அது உங்கள் பழம். நீங்கள் அதற்குள் காலாறிப் போகலாம். மற்றவர்கள் அதைக் கடந்துதான் போகலாம். அவர்கள் அதற்குள் கால் வைக்க முடியாது.

அடுத்த பழத்துக்கு மீண்டும் முதலிலிருந்து விளையாட வேண்டும்.

இரண்டு பேருக்கு அடுத்தடுத்த பெட்டிகளில் பழம் வந்து விட்டால் மற்றவர்கள் எப்படியாவது பாய்ந்து இரண்டு பெட்டிகளையும் கடக்க வேண்டும். யார் கூடிய பழங்கள் எடுக்கிறாரோ அவர் வென்றவர் ஆகிறார்.

இதே போல ஆறுகோடு என்ற விளையாட்டும் உண்டு. ஆறு கோடில் ஓட்டுத் துண்டைக் கையில் எடுக்காமல் கெந்தியபடி, ஒவ்வொரு பெட்டியாகக் காலால் தட்டி மிதித்துக் கொண்டு போக வேண்டும்.

என்னால் நினைவு படுத்த முடிந்தவைகளையே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இந்த விளையாட்டுப் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் அவைகளைத் தந்தீர்களானால் உதவியாக இருக்கும்.

Monday, April 10, 2006

கொக்கான் வெட்டும் முறை


கொக்கான் வெட்டுதல்

முதலில் கைகளுக்குள் கற்களை வைத்துக் கொண்டு மார்பிளை மேலெறிந்து விட்டு, அது கீழே விழுந்து மீண்டும் மேலெழுந்து விழுவதற்குள், சுட்டு விரலால் நிலத்தைத் தொட்டு விட்டு மார்பிளை ஏந்த வேண்டும்.

மார்பிளை
இரண்டு தரம் தரையில் மோத விட்டாலோ,
நிலத்தில் சுட்டு விரல் படா விட்டாலோ,
மார்பிளை பிடிக்காமல் விட்டாலோ,
பிடிக்கும் போது கைகளுக்குள் உள்ள கற்களில் ஒன்று கீழே விழுந்து விட்டாலோ ஆள் அவுட்.
எந்தக் கட்டத்திலும் மார்பிள் இருதரம் தரையைத் தொடக் கூடாது.

இரண்டாவதாக,
மார்பிளை மேலெறிந்து விட்டு கற்களைக் கீழே நிலத்தில் போட வேண்டும். மார்பிள் நிலத்தில் வீழ்ந்து மேலெழுந்ததும் இரண்டு கற்களை எடுத்து விட்டு மார்பிளை ஏந்த வேண்டும். இரண்டு கற்களை எடுக்கும் போது மற்றைய இரண்டு கற்களிலும் விரல்கள் பட்டு விடக் கூடாது. மீண்டும் மார்பிளை மேலெறிந்து... மற்றைய இரண்டு கற்களையும் அதே முறையில் எடுக்க வேண்டும்.

மூன்றாவதாக,
இரண்டாவது முறை போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் எடுக்கும் போது ஒவ்வொரு கல்லாக இரண்டு கற்களை எடுக்க வேண்டும். மீண்டும் அதே போல மற்றைய இரண்டு கற்களையும் எடுக்க வேண்டும். கற்களை எடுக்கும் கையாலேயே மார்பிளையும் ஏந்த வேண்டும். ஏந்தும் போது மார்பிள் கற்களில் பட்டு நிலத்தில் வீழ்ந்து விட்டாலோ கற்களில் ஏதாவது வீழ்ந்து விட்டாலோ ஆள் அவுட்.

நான்காவதாக,
இரண்டாவது மூன்றாவதைப் போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் கற்களை எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும்.(இதன் போது கற்களைச் சிதற விடாமல் ஒன்றாக நிலத்தில் போடுவது நல்லது.)

ஐந்தாவதாக,
கற்களை போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மார்பிளை ஏந்த வேண்டும். இதன் போது கொஞ்சம் விரைவு காட்டா விட்டால் மார்பிளை விட்டு விடுவீர்கள்.

ஆறாவதாக,
நான்காவது முறையைப் போல நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். கற்களை எடுக்கும் போதும் நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும். ஆனால் கற்களைப் போடும் போதோ, அள்ளி எடுக்கும் போது மார்பிளை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும்.

ஏழாவதாக,
ஐந்தாவது முறையைப் போல கற்களை போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும்.
ஆனால் ஆறாவதைப் போல, கற்களைப் போடும் போதோ, சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்கும் போதோ மார்பிளை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும்.

எட்டாவது, (பழம்)
கற்களையும் மார்பிளையும் ஒன்றாக மேலெறிந்து புறங்கையில் ஏந்த வேண்டும். ஐந்தையும் ஏந்தி விட்டால் மீண்டும் அந்த ஐந்தையும் ஒன்றாக மேலெறிந்து உள்ளங்கையில் ஏந்த வேண்டும். பிடித்து விட்டால் ஐந்து புள்ளிகள். புறங்கையிலும் ஏந்தி, ஒன்றிரண்டு தரையிலும் வீழ்ந்து விட்டால் புறங்கையில் ஏந்தியதை மீண்டும் மேலெறிந்து அது கீழே வருவதற்கு இடையில் தரையில் வீழ்ந்ததையும் எடுத்துக் கொண்டு மேலெறிந்ததையும் ஏந்தி விட வேண்டும். புறங்கையில் எத்தனை கற்கள் வந்ததோ அத்தனை புள்ளிகள். எறிந்து ஏந்தும் போது ஒன்று தவறி வீழ்ந்தாலும் ஆள் அவுட்.

ஒவ்வொரு முறையும் ஒருவர் அவுட்டானால் அடுத்தவர் தான் அவுட்டான இடத்திலிருந்து தொடர வேண்டும்.

இது எமது கிராமத்திலும் பாடசாலையிலுமாக விளையாடப்பட்ட முறை.

சந்திரவதனா
9.4.2006

Sunday, April 09, 2006

கல்லுச் சுண்டுதல்

தமிழர்கள் பாரம்பரியமாக விளையாடும் விளையாட்டுக்களில் கல்லுச்சுண்டும் விளையாட்டும் ஒன்று. இவ்விளையாட்டை வயது பேதமின்றி, ஆண் பெண் பேதமின்றி சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோருமாக ஒன்று கூடி இருந்து விளையாடுவார்கள்.

இவ்விளையாட்டுக்கு, கல்லைச் சுண்டினால் தடங்கி நின்று விடாமலோ, மேலே பறக்காமலோ, சுண்டிய வேகத்துக்கு ஏற்ப போகக் கூடிய எந்தத் தளமும் ஏதுவானது. இதை இரண்டுக்கு மேற்பட்ட எத்தனை பேரும் கூடி இருந்து விளையாடலாம். இதற்கு சிறிய கற்கள் (அல்லது புளியங்கொட்டைகள்) உகந்தவை. இரண்டிலிருந்து இரட்டை இலக்க எண்கள் கொண்ட எத்தனை கற்களையும் உபயோகிக்கலாம். அவை கைகளுக்குள் கொள்ளக் கூடிய அளவுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

வீடுகளிலும், பாடசாலைகளிலும் இவ்விளையாட்டை வழுக்கலான அல்லது சொரசொரப்பான சீமேந்துத் தரைகளில் விளையாடுவார்கள்.

விளையாடும் முறை மிகவும் சுலபமானதே.

முதலில், கொஞ்சக் கற்களாயின் ஒற்றை உள்ளங்கைக்குள்ளும், ஒற்றைக் கைக்குள் அடங்காதவையாயின் இரண்டு கைகளைச் சேர்த்து இரட்டை உள்ளங்கைகளுக்குள்ளும் வைத்து நிலத்தில் மெதுவாக வீசிப் போட வேண்டும். கற்கள் ஒன்றொடொன்று ஒட்டி இராமல் தள்ளித் தள்ளி இருந்தால் வெல்வதற்கான சாத்தியங்கள் அதிகம்.

அடுத்து, தரையில் போடப் பட்ட கற்களில் இரண்டு கற்களுக்கு நடுவே சின்ன விரலாலோ அன்றி சுட்டு விரலாலோ கோடு கீற வேண்டும். அப்படிச் செய்யும் போது கற்களில் விரல் பட்டு விடக் கூடாது.

சரியாக, கற்களில் விரல்கள் படாமால் கீறி விட்டால், கீறிய அந்தக் கையிலுள்ள ஒரு விரலால், அந்த இரண்டு கற்களில் ஒன்றைச் சுண்டி மற்றதில் பட வைக்க வேண்டும்.

சரியாகக் கோடு கீறி, குறி வைத்த கல்லையே சுண்டிய கல்லால் தொட்டு விட்டால் சுண்டியவர் அந்த இரண்டு கற்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.

இதே போல் தொடர்ந்தும் ஒவ்வொரு இரண்டு கற்களாகச் சுண்டிச் சுண்டி அதில் ஒன்றை எடுத்துச் சேர்க்க வேண்டும்.

முக்கிய நிபந்தனைகள்
கோடு கீறும் போது விரல்களோ கையின் வேறெந்தெப் பகுதியுமோ கற்களில் பட்டு விடக் கூடாது.
கோடு கீறிய விரல் உள்ள கையின் ஏதாவது ஒரு விரலால் மட்டுமே சுண்டலாம்.
சுண்டும் கல் குறி வைத்த கல்லில் கண்டிப்பகப் பட வேண்டும்.
சுண்டும் கல்லோ, குறி வைக்கப் பட்ட கல்லோ மற்றைய கற்களில் பட்டு விடக் கூடாது.
இருந்த இடத்தை விட்டு அரக்கக் கூடாது. (சற்றே பின்பக்கத்தைத் தூக்கி உன்னலாம்.)

ஒருவர் ஆட்டமிழந்தால் அவர் முழுமையாக வெளியில் போக வேண்டியதில்லை. தான் எடுத்ததை வைத்துக் கொண்டு, மற்றவர்கள் ஆட்டம் இழக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் காத்திருக்க வேண்டும். அதிர்ஸ்டம் இருந்தால் கடைசி இரண்டு கற்களாவது இவரிடம் வந்து சேரலாம்.

ஒரு வட்டம் முடிய ஒவ்வொருவரும் எத்தனை கற்கள் எடுத்திருக்கிறார்களோ அத்தனை புள்ளிகள் அவர்களுக்கு. எத்தனை வட்டங்கள் விளையாடுவது என்பதை முதலிலேயே தீர்மானித்து வைத்திருந்து அத்தனை வட்டங்களையும் விளையாடி முடித்ததும் மொத்தமாக யார் அதிக புள்ளி எடுத்தாரோ அவர் வென்றவர் ஆகிறார்.

இந்த விளையாட்டில் பெரியவர்களை விட சிறியவர்கள் வெல்வதற்கான சாத்தியம் அதிகம். ஏனெனில் சிறியவர்களது விரல் மெலிதாக இருக்கும். சிறிய இடைவெளியுடன் உள்ள கற்களுக்கு நடுவில் கூட கீறிச் சுண்டி விடுவார்கள்.

சந்திரவதனா
9.4.2006

நான் ஏற்கெனவே எழுதிய இந்தப் பதிவில் வசந்தனும், ஷ்ரேயாவும் தந்த தகவல்களையும் சேர்த்து மீளப் பதிந்துள்ளேன்.

Friday, April 07, 2006

கொக்கான் வெட்டுதல்


"கொக்கான் வெட்டுதல்" என்ற எமது கிராமிய விளையாட்டுப் பற்றி சில மாதங்களின் முன் ஒரு பதிவு போட்டிருந்தேன். அதற்கு வலையுலக நண்பர்களில் சிலர் தமது கருத்துக்களையும் ஆர்வத்துடன் தந்திருந்தார்கள். இப்போது கொக்கான் வெட்டுதல், மாங்கொட்டை போடுதல், எட்டுக் கோடு... போன்ற எமது விளையாட்டுக்கள் பற்றியும் ஒவ்வொரு கிராம நகரங்களிலும் எந்தெந்த விதிமுறைகளில் அவைகள் விளையாடப் பட்டன என்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். தெரிந்தவர்கள் உங்கள் உங்கள் இடங்களில் நீங்கள் விளையாடிய விதிமுறைகளைத் தந்துதவுங்கள்.

Wednesday, April 05, 2006

கழுதை பெண்ணை விட விசுவாசமானதா?


தலைப்பே அபத்தமாக இல்லையா!
இன்றைய ஜேர்மனியப் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தி இது.

இந்தியாவின் இராஜஸ்தானில் பாடசாலைப் பாடப் புத்தகங்களில் "ஒரு கழுதை, ஒரு குடும்பப் பெண்ணைப் போன்றது. சரியாகச் சொல்வதானால் கழுதை, குடும்பப் பெண்ணை விட ஒரு படி உயர்ந்தது" என்று குறிப்பிடப் பட்டுள்ளதாம்.

ஏன் கழுதை ஒருபடி உயர்ந்ததெனில், ஒரு பெண் சில சமயங்களில் கணவன் மேல் குற்றம் கண்டு தனது பிறந்த வீட்டுக்குப் போய் விடுவாளாம். ஆனால் கழுதை ஒரு போதும் அப்படிப் போக மாட்டாதாம். எப்போதும் எஜமானனுக்கு விசுவாசமாக இருக்குமாம்.

இந்தப் பாடப்புத்தகத்தை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளதாம்.

Tuesday, April 04, 2006

நேபாளத்தில் பசுவைக் கொன்றதாக பெண்ணுக்கு சிறைத்தண்டனை


நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நீதிமன்றம் ஒன்று, பசுமாட்டினை கொன்ற குற்றத்திற்காக, பெண்மணி ஒருவருக்கு நீண்ட கால சிறைத்தண்டனையினை விதித்துள்ளது. இந்து மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நேபாளத்தில் பசுமாடுகள் புனிதமாக கருதப்பட்டு, அவற்றினை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

தலைநகர் காத்மண்டுவின் வடமேற்கு பகுதியில், சுமார் ஐந்நூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சன்குவாசபா மாவட்டத்தின் நீதிமன்றமானது, குற்றம் சாட்டப்பட்ட பெண்மணிக்கு, அதிகபட்ச தண்டனையான 12 ஆண்டு கால சிறைத்தண்டனையினை விதித்துள்ளது. கிரிபா போதேனி என்று அழைக்கபடும் இந்த பெண்மணி, பசு மாட்டினை கொன்று, உண்டு விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டதினை தொடர்ந்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். ஆனால் தான் பசு மாட்டினைக் கொல்லவில்லை என அப்பெண்மணி மறுத்துள்ளார்.

Quelle-BBC 03.06.2006

Monday, April 03, 2006

படித்து ரசித்தது

தோழமைக்கு...
- மு.கந்தசாமி நாகராஜன் -

எதிர்பாராத வேளையில்
எனக்குக் கிடைத்த
உன் நட்பால்
இன்றும் உணர்கின்றேன்
அன்பின் வலிமையை!

சந்தித்து
ஆண்டுகள்
ஆன போதிலும்
இன்றும் கேட்கின்றேன்
உன்
இதயத்தின் ஒலிகளை...

உன்
மொழிகளைக் கேளாத
செவிகளும் வியக்கின்றன
என் இதயத்துள் ஒலிக்கும்
உன்
மொழிகளைக் கண்டு.

இன்னமும்
கர்ணனையே
உயர் நண்பனென்று
போற்றும்
அறிவிலிகளைக் கண்டு
மெளனமாய்
சிவந்து போகின்றன
என்
விழிகளும் இன்று.

பாலையில்
நான் காய்ந்த போது
சோலையைக் காட்டிய
நீ
சோலையில் நான்
சுகிக்கும்போது
தொலைவில்தான்
நிற்கின்றாய்

அன்பென்பதை
அறிந்திடாத
எனக்குக் கூட
அதன் ஆற்றலையும்
புரிய வைத்த
உன்னால்தான்
இன்னமும்
என்
பேனாமுனைகள்
ஈரத்தைக் கசிகின்றன.

திசை தொ¢யா
அலைகடலுள்
என்னை
மீட்டெடுத்த
தோணி
நீ!

மொழி தொ¢யா
முட்டாள் என்னை
மொழிஞனாக்கிய
சிற்பி
நீ!

கலையறியா
காட்டான்
என்னை
கலைஞனாக்கிய
கலைமகள்
நீ!

முத்து
பிறப்பது
அதிசயமில்லை
கண்டெடுப்பதுதான்.
என்னைக்
கண்டெடுத்தது
நீயேதான்!

உன்னால்
பிறந்த
என் மொழிகள்
இன்று
உனக்காகவே
அர்ப்பணம் ஆகின்றன!

என்றென்றும்
நாம்
தொடர்ந்திடத்தான்
இன்றும்
வேண்டுகின்றேன்
இறையை நான்

- மு.கந்தசாமி நாகராஜன் -
Quelle - Pathivukal

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite