ஆனால் எந்த நிலையிலும், எந்த அவசரத்திலும் ஏதாவது ஒரு பாடலின் சில வரிகள் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்பாடலைக் கண்டிப்பாகக் கேட்டே ஆக வேண்டும் போல மனசு அந்தரிக்கும். அவ்வரிகள் பாடலின் தொடக்க வரிகளாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. இடைவரிகளாகக் கூட இருக்கலாம்.
முன்னர் என்றால் அப்பாடல்களை எல்லாம் நம்மால் கேட்க முடிவதில்லை. வீட்டில் இருக்கும் ஒலி, ஒளி நாடாக்களில் அவை இருந்தால்தான் மனதின் அந்த அவா நிவர்த்தியாகும். இப்போது என்றால் அப்படியில்லை. நினைத்தவுடன் நினைத்ததைக் கேட்கலாம்.
அப்படி என் நினைவுகளில் வந்து அவ்வப்போது என்னை அருட்டும் வரிகளைக் கொண்ட
பாடல்களில் ஒன்று
எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா
தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே துன்பம் தரவில்லையா...
இன்னொன்று
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே...
இன்னுமொன்று
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்...
இப்படி எத்தனையோ பாடல்கள். ஏன் எதற்கு என்றே தெரியாமல் எனக்குள்ளே மாறி மாறி இசைத்துக் கொண்டே இருக்கின்றன.
நேற்றைய என் நினைவுகளில் வந்த பாடல் வரிகள்
இதழோடு இதழ் சேரும் காரணமென்ன
அது இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன
சொல்லில் தோன்றுமோ மன்மதக் கலை அள்ளிப்பார்க்க வேண்டும்
உன் முல்லைப்பூவிதழ் மெல்ல என்னிடம் முத்தம் சிந்த வேண்டும்
இன்றைய என் நினைவுகளில்
அலையாய் மோதிக் கொண்டே இருக்கும் பாடல்
அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்திப்பழத்தைக் குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினைக் காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்...