
யாழ். நூலகம் எரியூட்டப்பட்ட 27 ஆவது ஆண்டு நாளான 31.05.08 அன்று உலகம் எங்கும் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது.
ஈழத் தமிழர்களின் பெரும் சொத்தாகவும், கல்விப்புலமையின் குறியீடாகவும் விளங்கிய யாழ். நூலகத்தின் வரலாறு, ஈழத்தமிழர்களின் அரசியல் மற்றும் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தது.

1933 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலத்தில் அந்த நூலகத்தின் வலிமிகுந்த வரலாறு இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனை சோமீதரன் உருவாக்கியுள்ளார்.
சிதைவுற்ற யாழ். நூலகத்தின் காட்சிகள், அங்கு பணியாற்றியோரின் வாக்குமூலங்கள், பத்திரிகை நறுக்குகள், உரைகள், கறுப்பு வெள்ளையிலான காணொளி நேர்காணல்கள், வரைபடங்கள், எடுத்துரைப்புக்கள் ஆகியவற்றுடன் "எரியும் நினைவுகள்" தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் மற்றும் யேர்மன் மொழிகளில் எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
"நிகரி" தயாரிப்புக் குழுவினர் 2006 ஆம் ஆண்டில் இருந்து இதனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எண்பதுகளில் வாழ்ந்த, உணர்ந்த ஒரு தலைமுறையின் எரியும் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Quelle - Puthinam