Thursday, June 20, 2013

கேட்டலும் பார்த்தலும்

"பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!" என்றிருந்ததைப் பார்த்திருக்கக் கூடாதுதான். பார்த்தததன் விளைவு பல இரவுகள் தூக்கமின்றித் தவித்தேன். பகல்களிலும் அக் காட்சியை என் மனக்கண்ணில் இருந்து அகற்ற முடியாது பெரிதும் அவஸ்தைப் பட்டேன்.

அப்படியான பல செய்திகளைக் கேட்டிருக்கிறேன். வாசித்திருக்கிறேன்.  ஆனால் பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்ப்பது உளரீதியாக எத்துணை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்போதுதான் முழுமையாக உணர்கிறேன்.

இன்னும் கூட அடிக்கடி எனது கட்டுப்பாட்டையும் மீறி அக்காட்சி எனக்குள் தோன்றித் தோன்றி என்னைப் பாடாய் படுத்துகிறது. சமையலறையில் கத்தியைத் தொடும் ஒவ்வொரு பொழுதிலும் மனதுக்குள் ஒரு நடுக்கம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

Wednesday, June 19, 2013

சுட்டுவிரல்

ஞாயிற்றுக்கிழமை சமையலறையில் புதிய கத்தியொன்றை சுத்தம் செய்வதாக என் சுட்டுவிரலைத்தான் கீறிக் கொண்டேன். சட்டென கழுத்து வெட்டிக் கொல்லப்பட்ட பெண்களின் நினைவில் மனம் வலித்தது. 

சற்று ஆழமான கீறு என்பதால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதாயிற்று. பலன் தலையைக் கூட சரியாக வாரிக்கட்ட முடியாதபடி தீப்பந்தம் போல விரலில் ஒரு பெரிய பந்தம். குளிப்பதே பெரும் பாடாயிருந்தது. சில சமயங்களில் சமநிலை கூடத் தட்டுப்படும் போல இருந்தது. கைகளை இழந்தவர்களும், கால்களை இழந்தவர்களும் என்னை அசௌகரியப் படுத்திக்கொண்டே இருந்தார்கள்.

அப்பாவைப் பற்றிய நினைவுகள்


அப்பாவைப் பற்றிய நினைவுகள் என் நினைவுகளிலிருந்து நீங்குவதில்லை. குறிப்பாக எனது ஒவ்வொரு முன்னேற்றத்தின் போதும் அப்பாவை நெஞ்சார நினைத்துக் கொள்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு விடயங்களையும் எவ்வளவு நாசூக்காகவும், தந்திரமாகவும் எனக்குப் போதித்து என்னை ஆளாக்கினார் என்பதை நினைந்து நினைந்து வியப்பேன். எனது கல்வி, கலை, ஒழுங்கு... போன்ற விடயங்களில் அதீதமான கண்டிப்போடும், கவனிப்போடும் அம்மா என்னை நேர்த்தியாக்கும் போது, விளையாட்டு விளையாட்டாகவே அப்பா என்னை நேர்த்தியாக்கினார். மடியில் வைத்துக் கதைகள் சொல்லி, கடற்கரையில் தானும் குழந்தையாகி என்னோடு ஓடிப்பிடித்து விளையாடி, சரித்திரக்கதைகளை நடித்துக் காட்டி..

அதே நேரத்தில் சில கஷ்டங்களின் போதும், தடுமாற்றங்களின் போதும் கூட அப்பாவை நினைக்காமல் இருக்க முடிவதில்லை. அப்பா சில விடயங்களில் கவனம் செலுத்துமாறு பலதடவைகள் எனக்குச் சொல்லியிருக்கிறார். ஏனோ நான் அவ்விடயங்களில் கவனம் செலுத்தாது மிகவம் அசிரத்தையாக இருந்து விட்டேன். அதனால் ஏற்படும் பின்னடைவுகளின் போது அப்பாவின் சொல்லைக் கேட்டிருக்கலாமே என்று மனம் பேதலிக்கத் தவறுவதில்லை.
17.6.2013

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite