Sunday, June 19, 2005

வடலி

மோப்பக் குழையும் அனிச்சம் - முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

பிள்ளைகளின் மனமோ அனிச்சம் பூவை விடவும் மென்மையானது. பெற்றோரின் முகம் கோணினாலே வாடிப் போய் விடக் கூடியது. பெற்றோர்கள் பிள்ளைகள் மீது செலுத்தும் அதி கூடிய கட்டுப்பாடு குடும்பத்தின் பொருளாதாரநிலை, தாயின் மனநிலை, பிள்ளைகளுடனான தந்தையின் நெருக்கமின்மை... போன்றவை குழந்தைகள் வன்முறையாளர்களாக, பொதுநல நோக்கற்றவர்களாக, நற்பண்புகளை இழந்தவர்களாக வளர்வதற்கான காரணிகளாக அமைகின்றன என்பது கனேடிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கைகளில் தெரிய வந்துள்ளது. பிள்ளைகள் 100வீதம் சரியானவர்களாக, தாங்கள் நினைப்பது போலானவர்களாக வளர வேண்டும் என நினைத்து, பல பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அளவுக்கதிமான கட்டுப்பாட்டை மிகக் கடுமையாகத் திணிக்கிறார்கள். இது பிள்ளைகளை உளரீதியாக எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். த.சிவபாலு(எம்.ஏ) அவர்கள் எழுதிய இது சம்பந்தமான கட்டுரை ஒன்று யூன் மாத வடலியில் இடம் பெற்றுள்ளது. பெற்றோர்கள் வாசித்துப் பயன் பெறுங்கள்.

இதை விட வைத்திய கலாநிதி ஆ.விசாகரெத்தினம் எழுதும் ஆய்வுக் கட்டுரை(சீவ உற்பத்தி) சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி வந்துள்ளது. விந்து பற்றிய இன்றைய விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருமூலர் சொல்லி வைத்திருக்கின்றார் என்ற செய்தி அதில் இடம் பெற்றுள்ளது. ஆச்சரியந்தான்.

இவைகளோடு இன்னும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. வடலியை இணையத்தில் காணமுடியாதது பெருங்குறையே!

வடலியிலிருந்து கிடைத்த தகவல்களில் சில
நீரைக்காணாத வேர்கள் என்னும் திரைப்படம் வைகாசிமாதம் 22ம் திகதி விம்பிள்டன் பொல்கா அரங்கில் காண்பிக்கப் பட்டுள்ளது.வளர்ந்து வரும் இளங்கவிஞர் இரா.திலீபன் அவர்களின் புகழில்லாப் புகலிடம், ஈரவிழிகள், சொல் ஓவியம் என்ற மூன்று நூல்கள் கடந்த சித்திரையில் லண்டன் ஈலிங் துர்க்கையம்மன் ஆலயத்தில் வெளியிடப் பட்டன.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite