Monday, June 25, 2007

பிரசுரமான கதை

அன்றைய பேப்பரைப் பார்த்த போது பற்றிமாவுக்கு ஆச்சரியமான சந்தோசம். அந்தக் கதை பிரசுரமாகியிருந்தது. அதை அவள்தான் எழுதியிருந்தாள். எழுதிய பின் தனது உற்ற நண்பியிடம் காட்டி, “நல்லாயிருக்கு" என்று சொன்ன போது வீரகேசரிக்கு அனுப்புவதாகத் தீர்மானித்தாள். அவளது கனவுகளில் அதுவும் ஒன்று. ´தனது கதை பிரசுரமாக வேண்டும்.´ அது சாதாரணமான ஒரு எழுத்தாளனுக்கு இருக்கக் கூடிய ஆசையில் எழுந்த கனவல்ல. இவளுக்கேயான பிரத்தியேகமான ஆசை.

அவள் அதை ஒரு கடிதமாகத்தான் எழுதினாள். ஆனாலும் கடிதமாகக் கொடுப்பதில் உள்ள அன்றைய 1975ம் ஆண்டுக்குரிய பயமும், தயக்கமுந்தான் அதைக் கதையாக எழுத வைத்தது. அதை அவன் வாசிப்பான் என்ற நம்பிக்கை.

அவள் வேற்று நகரில் இருந்து பருத்தித்துறைக்கு வந்து மாமா வீட்டில் தங்கியிருந்து படிக்கிறாள். இரவு ரியூசன் முடிந்து பேரூந்தில்தான் வீட்டுக்குப் போவாள். பேரூந்து ரவுண் வரைதான் செல்லும். அவள் வீடு வரையுள்ள மிகுதி தூரத்துக்கு பேரூந்து ஓட்டம் இல்லை. அதனால் அவள் ரவுணுக்குள் இருக்கும் புகாரி சேலைக் கடையடியில் காத்து நிற்க, அவளது மாமா வந்து கூட்டிச் செல்வார்.

பருவ வயது. தடைகளும், அந்த நேரங்களுக்கேயுரிய கட்டுப்பாடுகளும் மனதின் அலைவுகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி விடுவதில்லைத்தானே. புகாரி கடை முதலாளி அழகானவன். கட்டுடல் கொண்ட இளைய ஆண். எமது சாதாரண தமிழர்களின் தோலை விட அவனது தோல் வெள்ளையானது. சற்று வித்தியாசமானவன். இவள் தனியாகத் தனது கடை முன்னே காத்திருக்கும் போது அவன்தான் வலிய வந்து கதை கொடுத்து... சில வாரங்களில் உள்ளே வந்து தங்கும் படி அழைத்து.. வீரகேசரி பேப்பர் கொடுத்து வாசிக்கச் சொல்லி... ஒரு நாள் காதலையும் வெளிப் படுத்தி விட்டான். இவளும் காதலித்தாள் என்பது அவளுக்கு மட்டுந்தான் தெரியும். அவனிடம் கூட இவள் தனது காதலைச் சொல்லவில்லை. அவன் முஸ்லீம். இவள் கிறிஸ்டியன். அது போக ஒரு பெண் தனது காதலை வெளிப்படையாக நண்பியிடம் சொல்லக் கூடப் பயப்படும் காலம்.

அவளது மாமாவுக்கு இந்த விவகாரம் தெரிந்தால் கதை கந்தலாகி விடும். படிப்பும் அவ்வளவுதான். தோலை உரித்து, அவளது அம்மா, அப்பாவிடமே அனுப்பி விடுவார்.

ஒவ்வொரு நாளும் புகாரி இவள் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். இவளோ எந்த முடிவும் சொல்லாமலே இருந்தாள். ஆனால் அவனைக் காண்பதிலும், அவனோடு ஒரு சில வார்த்தைகளேனும் பேசுவதிலும் மிகுந்த இன்பம் கண்டாள். இப்படியே சில மாதங்கள் ஓடி க.பொ.த உயர்தர வகுப்புப் பரீட்சை நெருங்கியது. இப்போது அவன் கண்டிப்போடு சொல்லி விட்டான் “முடிவைச் சொல்“ என்று.

அதுதான் அவள் காதல் தோய்த்து ஒரு கடிதத்தை அல்ல, கதையை எழுதினாள். அதை வீரகேசரிக்கு அனுப்பும் படி அவனிடமே கொடுத்தாள். கண்டிப்பாக அவன் அதை வாசிப்பான் என்ற நம்பிக்கையில்தான் தானே அதை அஞ்சல் செய்யாமல் அவனிடம் கொடுத்தாள்.

அடுத்த வாரமே கதை பிரசுரமாகியிருந்தது. அவளது காதலையும் விட, அது அவளது முதற்கதை. அவளின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. ஆனாலும் அவளால் களிப்புற முடியவில்லை. கதை எழுதியவரின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் அவள் பெயர் இருக்கவில்லை. அங்கு புகாரியின் பெயர் இருந்தது. வீரகேசரி அனுப்பி வைத்த 50ரூபாய் சன்மானமும் புகாரிக்குத்தான்.

அதற்குப் பிறகு அவள் புகாரி கடையில் மாமாவுக்காகக் காத்திருப்பதில்லை.

சந்திரவதனா
25.6.2007

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite