Wednesday, February 09, 2005

தத்துவம்


"உன்னைக் கொடு
என்னைத் தருவேன்"
காதலிக்கையில்

"உன்னைக் கட்ட
என்ன தருவாய்"
கல்யாணத்தில்

"உன்னைக் கட்டி
என்ன கண்டேன்"
தொடரும் வாழ்வில்

சந்தோசமான சம்பவம்

காதலர்தினத்துக்காக காதல் கொண்ட மனங்கள் பூக்களுடனும் கவிதைகளுடனும் காத்திருந்த வேளையில் இங்கு யேர்மனியில் ஒரு சந்தோசமான சம்பவம் நிகழ்ந்தது. காதலர்தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 2000இல் நடந்த அந்த சம்பவம் எனது நினைவில் வந்துள்ளது. அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.

Schweiz எல்லைக்கு அருகாமையில் யேர்மனியின் Badzeckingen என்ற நகரிலே வாழ்ந்து கொண்டிருந்த இலங்கையரான சுதந்திரராஜா என்பவருக்கு ஒரு சந்தோச அதிர்ச்சி கிடைத்தது.

சுதந்திரரராஜா 5 வருடங்களாக மனைவி குழந்தைகளைப் பிரிந்து தனியே Badzeckingen இல் வாழ்ந்துகொண்டிருந்தார். அவர் தனது சகவேலையாட்களுடன் மிகவும் நட்பாகப் பழகுவது மட்டுமல்லாது, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு எந்த வித பிரதியுபகாரத்தையும் எதிர்பாராது எப்போதும் உதவி செய்து கொண்டும் இருப்பாராம். அவரது இந்த நல்ல குணத்தினால் அவர் மேல் பிரியம் வைத்திருந்த அவரது சகவேலையாட்கள், அவரது மனதில் உள்ள கவைலையத் தீர்க்க விரும்பினார்கள்.

அவரது கவலை - குடும்பத்தைப் பிரிந்த எல்லா இலங்கையர் போலவும் தன் மனைவி குழந்தைகளை தன்னிடம் அழைக்க வேண்டுமென்பதே. அதற்கு அவருக்கு தடையாக இருந்தவை வீடும், பணமுமே. அதாவது இங்கு யேர்மனியில் ஒருவர் தனது மனைவி குழந்தைகளை தன்னிடம் அழைக்க வேண்டுமென்றால், அவரிடம் அவர்கள் வாழ்வதற்குப் போதுமான அளவைக் கொண்ட (வாடகை வீடே போதும்) வீடும், அவர்கள் வாழ்க்கைச் செலவுக்குத் தேவையான அளவு உழைப்பும் இருக்க வேண்டும். அவை அவரிடம் இருக்கவில்லை.

அவரது இந்த இக்கட்டையும், மனத்துயரையும் கண்டு அவர் துயர் நீக்க விரும்பிய அவரது சகவேலையாட்கள்(யேர்மனியர்), அவருக்குத் தெரியாமலே யேர்மனியின் தொலைக்காட்சிச் Channel களில் ஒன்றான SAT-1 நடத்தும் Nur die liebe zaehlt என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு இவரைப் பற்றி எழுதிப் போட்டார்கள்.

கிடைத்ததே அதிர்ஸ்டம் சுதந்திரராஜாவுக்கு.

நிகழ்ச்சித்தயாரிப்பாளர்களின் ஏற்பாட்டின் படி காதலர்தினத்துக்கு முதல்நாள் சக வேலையாட்களால் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு இவர் அழைத்து வரப் பட்டார்.
வெறும் பார்வையாளராக வந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த சுதந்திரராஜாவை அவர்கள் திடீரென முன்னுக்கு அழைத்து, அவருடன் சிறிது உரையாடிவிட்டு சகலவிதமான புதிய தளபாடங்களும் போட்ட வீடு ஒன்றைக் கொடுத்தார்கள். சில நிமிடங்கள் கழித்து அவரது மனைவி குழந்தைகளை அழைத்து அவர் முன் நிறுத்தினார்கள். ஏதிர்பாராது அந்த சந்தோச அதிர்ச்சியில் நெக்குருகிப் போனவர்கள் சுதந்திரராஜாவின் குடும்பத்தவர்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும்தான்.

அது மட்டுமா!
காதலர்தினத்திலிருந்து இரு வாரங்களுக்கு வேலையிலிருந்து விடுப்பும் எடுத்துக் கொடுத்திருந்தார்கள்.

சுதந்திரராஜா அந்நிய நாட்டில் அன்பானவராயும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவராயும் வாழ்ந்ததற்கான பயனை உடனேயே பெற்றுக் கொண்டார்.

இப்போது எப்படி இருக்கிறார் என்று அறிவதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது.
அவராக வந்து சொன்னால்தான்.....

ஒரு சின்ன அதிசயம்

எங்கள் வீட்டுக்குள் ஒரு சின்ன அதிசயம் நடந்தது.
உங்களுக்கு எப்படியோ...? எனக்கு இது அதிசயம் போலத்தான்.

அதாவது
எனது அண்ணன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
அண்ணி பிறந்தநாள் டிசம்பர் 10ந் திகதி.

7வருடங்கள் கழித்து தம்பியின் திருமணம்.
அம்மா அப்பா பெண் பார்த்து (பேச்சுத் திருமணம்) திருமணம் நடந்தது.
தம்பியின் மனைவி பிறந்தநாளும் டிசம்பர் 10ந் திகதியே.

அது மட்டுமா..!!!
இருவரின் பெயரும் மஞ்சுளா.

பெயரும் பிறந்தநாளும் ஒன்றாக மருமகள்கள் எங்கள் வீட்டில்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite