Friday, November 26, 2004

தலைவருக்கு 50வது பிறந்தநாள் வாழ்த்து



Wednesday, November 24, 2004

மாவீரன்



மக்கள் வாழ
மக்கள் வாழும் மண்ணது மீள
கற்கை மறந்தவன்
தாயின் தழுவல்
பொற்கை மறந்தவன்
சொந்த வீட்டுப்
படுக்கை மறந்தவன்
புதுத் தளிர்க்கை மறந்தவன்
பந்த பாசம் எல்லாம் ஒன்றாய்
வெந்து மாளும்
வேட்கை நிறைந்தவன்
மண்ணிலே தவழ்ந்து
மண்ணிலே நடந்து
மண்ணையே குருதியால் நனைத்து
மண்ணுக்காய் உரமாகி
கண்ணொத்த விடுதலைக்காய்
விண்ணையே அளந்தவன்.........

தீட்சண்யன்

Monday, November 22, 2004

சுவை சேருகிறதா?

தேநீரை கரண்டியால் கலக்கிக் குடிப்பதையும் விடசூடு பறக்க ஆற்றிக் குடிக்கும் போது அதில் சுவையும் சேர்ந்து கொள்கிறது என்கிறார்களே!இது பற்றிய உங்கள் கருத்து என்ன..?

Thursday, November 18, 2004

முறியாத பனை

- சந்திரா. ரவீந்திரன் -

நீண்ட வருடங்களாய் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாய் பரபரப்பு, சுறுசுறுப்பு! ஒருநாளில் இருதடவைகள் யாழ்ப்பாணம் நோக்கி வரும் ரயில்வண்டிகளின் சத்தங்கள்! ஜனங்கள் அவசரம் அவசரமாய்க் கூடிப்பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்!

சப்தங்கள் யாவும் ஓய்கிற போது பழையபடி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வரும் கடலை நெய்யின் கமறலும், பூட்ஸ்களின் தோல் மணமும்! சில சமயம் வயிற்றைக் குமட்டும்! பல சமயங்களில் அடிவயிற்றுக்குள் அப்பிக்கொண்டுவிடும் அச்சமோ, அருவருப்போ, கோபமோ என்று புரியாத ஒரு நெருடல் பந்தாக உருண்டு கொண்டே கிடக்கும்!

சூரியன் அஸ்தமிக்கும் பொழுதுகளில், ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், பொதிகளற்ற வெற்று ரயில் பெட்டிகளினுள்ளேயிருந்து “ஐயோ….அம்…..மா…..!" என்ற மரண ஓலம் எதிரொலியாய் விட்டுவிட்டுக் கேட்கும்! - மிகுதி

Monday, November 15, 2004

இவ்வார நட்சத்திரம் - ஜெயந்தி சங்கர்

இவ்வார வலைப்பூ நட்சத்திரமாக சிங்கப்பூரிலிருந்து ஜெயந்தி சங்கர் மிளிர்கிறார். இவரது ஆக்கங்களை இணையத்தளங்களின் மூலை முடுக்குகளிலெல்லாம் காணலாம். இவரது இவ்வார வலைப்பூ ஸ்பெஷலை வாசித்து மகிழ தமிழ்மணம் அல்லது தோழியர் பக்கம் செல்லுங்கள்.

Thursday, November 11, 2004

கப்டன் மயூரன்(சபா)


சிவா தியாகராஜா

என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது. அன்று 17.6.1993 - காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான்.

என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன். எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது..... மிகுதி

Wednesday, November 10, 2004

அவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளப் பெண்மணி சிரித்துச் சிரித்து நிகழ்ச்சி நடாத்திக் கொண்டிருக்கிறார்.

அதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தார்.

"பாரடி அந்தப் பெண்ணை. என்னமாச் சிரிச்சுக் கொண்டிருக்கிறாள். பார்க்கவே சந்தோசத்திலை மனசு நிறையுது. நீயும் இருக்கிறியே..! எப்ப பார்த்தாலும் மூஞ்சையை உம் மெண்டு வைச்சுக் கொண்டு.. "

"ம்..கும் அவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல. "

"என்ன அப்பிடி.. அவ்வளவு திடமாய் சொல்லுறாய்?"

"உலகமே பார்க்கக் கூடியதா இப்பிடிச் சிரிச்சுப் போட்டு வீட்டை போனால் அவளின்ரை புருசன் சும்மா இருப்பானே..? "

"குத்திக் காட்டிறாயாக்கும்."

"நான் குத்தவும் இல்லை. வெட்டவும் இல்லை. உண்மையைச் சொல்லுறன்."

"இஞ்சைபார். இந்தக் குத்தல் கதையளை மட்டும் விட்டிடு. உன்னையென்ன ரீவீ ஸ்ரேசனுக்குப் போய் சிரிக்கச் சொல்லுறனே. வீட்டிலையிருந்து அவளை மாதிரிச் சிரியன். "

"அவளுக்குத்தானே கல்யாணமே நடக்கேல்லைப் போல எண்டு சொல்லுறன்."

Sunday, November 07, 2004

எப்படி..? எல்லாமே ரொஜான் வைரஸ்கள்.

இரண்டு நாட்களாக கணினியோடு மல்யுத்தம் நடத்துவது போன்றதான உணர்வு. கணினிக்குள் நுழையவே முடியாமல் இருப்பதும், பலதர முயற்சியின் பின் அப்பாடா என்று நுழையும் போது, கணினி அப்படியே ஸ்தம்பித்து விடுவதும் என்று பாடாய்ப் படுத்தி விட்டது. மிக நல்ல பாதுகாப்பான வைரஸ் தடுப்பை நான் வைத்திருந்த போதும் எப்படி..? எல்லாம் உட் புகுந்தன. எல்லாமே ரொஜான் வைரஸ்கள். ஒருவாறு அழித்து விட்டேன் என்ற திருப்தியோடு நிமிரும் போது விண்டோஸ் செயலிழந்து விட்டது என்ற எச்சரிக்கை. எழுதிக் கொண்டிருக்கும் போது கணனியின் ஸ்தம்பிதம் எழுதியதையே தொலைக்கும் படி ஆக்கி விட்டது. இப்படியே நேற்றைய பொழுது எந்தவிதப் பயனுமின்றிக் கரைந்து போய் விட்டது. 5ந்திகதிக்குள் எழுதித் தருகிறேன் என்ற என் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டன. பல மின்னஞ்சல்களுக்கான பதில்கள் எழுதிக் கொண்டிருக்கும் போதே இடை நடுவில் நிறுத்தப் பட்டு விட்டன.

இந்த நிலையிலும் தமிழ்மணத்துக்கு வந்த போது என்றென்றும் அன்புடன் பாலாவின் பல்லவியும் சரணமும் என்னைத் தன்பால் ஈர்த்தன. அதற்குப் பதில் எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டென்பதால், இடை நடுவே நிறுத்த நிறுத்த மீண்டும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் தொடர்ந்தேன். ஒருவாறு ஓரளவுக்காவது பதில்களை எழுதி அனுப்பிய போது அங்கு எந்தப் பதிலையுமே பார்க்க முடியவில்லை. 5comments இருப்பதாகக் காட்டுகிறதே தவிர அவைகளைப் பார்க்க முடியவில்லை.

Wednesday, November 03, 2004

தீயணைப்புப் பயிற்சி

ஈழநாதன் தீயணைப்பு நாடகம் என்ற தலைப்பில் சிங்கப்பூரில் நடைமுறைப் படுத்தப் படும் தீயணைப்புப் பயிற்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இது விடயத்தில் நான் வாழும் யேர்மனி மிகுந்த கவனமாகவே உள்ளது.
நான் யேர்மனியை நேசிப்பதற்கு யேர்மனியில் நடைமுறையில் இருக்கும் இது போன்ற மனித நேயமான செயற்பாடுகளும் முக்கிய காரணிகளாகின்றன.

இங்குள்ள பாடசாலைகளில் அடிக்கடி இந்தத் தீயணைப்புப் பயிற்சி நடக்கும்.
பிள்ளைகள் எப்படி ஓடி, தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது
மிகுந்த கவனமான முறையில் சொல்லிக் கொடுக்கப் படும்.

அதை விட டிஸ்கோ, தியேட்டர்... போன்ற பலர் நடமாடும் இடங்களிலும் இப்பயிற்சி அடிக்கடி நடக்கும். டிஸ்கோ நிலையத்தின் பாதுகாப்புத்தன்மை, அதாவது தீ என்று வரும் போது மக்கள் தப்பித்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளனவா என ஆராயப் படும். அவசரகால வெளிச் செல் பாதைகள் உண்மையிலேயே, ஆபத்தான நேரங்களில் கும்பலாக ஓடும் மக்கள், வெளிச்செல்வதற்கு ஏற்ற வகையில் சரியாக அமைக்கப் பட்டுள்ளனவா என அடிக்கடி ஆராயப் படும்.

கடந்த வருடம் ஒரு டிஸ்கோ நிலையத்தில் அவசரகால வெளிச் செல் பாதையின் கதவு ஒன்று டிஸ்கோ நேரம் திறக்கப் படாமல் இருந்ததற்காக அந்த நிலையம் கோர்ட் வரை செல்ல வேண்டியிருந்தது.

கடந்த வருடம் அல்லது இவ்வருட ஆரம்பம் என நினைக்கிறேன். ஸ்பெயினில் ஒரு டிஸ்கோ தீப்பற்றி எரிந்ததில் பலர் அநியாயமாக உயிரை மாய்த்துக் கொண்டனர். அதன் பின்னான ஆராய்சியில் அங்கு சரியான அவசரகால வெளிச்செல் பாதைகள் அமைக்கப் படவில்லை என்பது கண்டு பிடிக்கப் பட்டது.

இப்படியான அநாராப்பான சம்பவங்கள் யேர்மனியில் மிகமிகக் குறைவு.
சட்டம், ஒழுங்கு, கல்வி... போன்றதான விடயங்களில் யேர்மனி மிகக் கவனமாகவே இருக்கிறது.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite