Thursday, June 01, 2006
மதுமிதாவுக்காக
வலைப்பதிவர் பெயர்: சந்திரவதனா
வலைப்பூ பெயர்: மனஓசை
சுட்டி(url) : http://manaosai.blogspot.com/
வலைப்பூ பெயர்: ஈழகானங்கள்
சுட்டி(url) : http://padalkal.blogspot.com/
வலைப்பூ பெயர்: ஈழத்துக் கலைஞர்கள்
சுட்டி(url) : http://kalaignarkal.blogspot.com/
வலைப்பூ பெயர்: காதல்
சுட்டி(url) : http://kathal.blogspot.com/
வலைப்பூ பெயர்: குழந்தைகள்
சுட்டி(url) : http://kulanthaikal.blogspot.com/
வலைப்பூ பெயர்: சாதனை பெண்கள்
சுட்டி(url) : http://vippenn.blogspot.com/
வலைப்பூ பெயர்: சினிமாப் பாடல்கள்
சுட்டி(url) : http://cinemapadalkal.blogspot.com/
வலைப்பூ பெயர்: சிறுகதைகள்
சுட்டி(url) : http://chandravathanaa.blogspot.com/
வலைப்பூ பெயர்: தமிழீழம்
சுட்டி(url) : http://thamileelam.blogspot.com/
வலைப்பூ பெயர்: தாயககீதங்கள்
சுட்டி(url) : http://thayagageetham.blogspot.com/
வலைப்பூ பெயர்: தீட்சண்யம்
சுட்டி(url) : http://theedchanyam.blogspot.com/
வலைப்பூ பெயர்: துணுக்குச் செய்திகள்
சுட்டி(url) : http://seithikal.blogspot.com/
வலைப்பூ பெயர்: படித்தவை
சுட்டி(url) : http://padiththavai.blogspot.com/
வலைப்பூ பெயர்: புகைப்படம்
சுட்டி(url) : http://pukaippadam.blogspot.com/
வலைப்பூ பெயர்: புத்தகம்
சுட்டி(url) : http://thamilbooks.blogspot.com/
வலைப்பூ பெயர்: புனர்வாழ்வு
சுட்டி(url) : http://tronews.blogspot.com/
வலைப்பூ பெயர் : பெண்கள்
சுட்டி(url) : http://pennkal.blogspot.com/
வலைப்பூ பெயர் : பெட்டகம்
சுட்டி(url) : http://sammlung.blogspot.com/
வலைப்பூ பெயர்: மகளிர்
சுட்டி(url) : http://mahalir.blogspot.com/
வலைப்பூ பெயர்: மருத்துவம்
சுட்டி(url) : http://maruththuvam.blogspot.com/
வலைப்பூ பெயர்: மாவீரர்கள்
சுட்டி(url) : http://maaveerarkal.blogspot.com/
வலைப்பூ பெயர் : Tagesthemen
சுட்டி(url) : http://thumi.blogspot.com/
ஊர்: ஸ்வெபிஸ்ஹால்
நாடு: ஜேர்மனி
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: திரு மாலன் அவர்கள்.
முதல் முதலாக 2003 ஜூலை மாதத் திசைகளில் உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில் என்று திரு.மாலன் அவர்கள் Blog ஐ அறிமுகப் படுத்தினார். அப்போது இது எப்படிச் சாத்தியமாகும் என்று ஆச்சரியப் பட்டேன்.
மாலன் அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு வலைப்பூ என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது. அதன் பின் இது பற்றி யாழ் கருத்துக்களத்திலும் பேசினார்கள்.
சும்மா பாமினியில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிக்கோட்டுக்கு மாற்றி எழுதுவதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. சுரதாவின் ஆயுதத்தின் உதவியுடன், எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நாகரீகம் என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது.
அந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையினரே தமிழில் வலை பதியத் தொடங்கியிருந்தார்கள். அதனால் மதி கந்தசாமியின் வலைப்பதிவுகளின் தொகுப்பு உதவியுடன் எல்லோருடைய பதிவுகளையும் ஓடி ஓடி வாசிக்க முடிந்தது. ஆனால் இன்றோ எமக்குத் தெரியும் படியாக நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் தமிழில் உள்ளன. அத்தனையையும் ஒரே நாளில் வாசிக்க முடியாத அளவுக்கு அவைகளில் எழுதிக் குவித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
அன்று வலை பதியத் தொடங்கிய அத்தனை பேரும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பலபேர் இடை நடுவில் ஏதேதோ காரணங்களினால் தமது பதிவுகளைத் தூங்க விட்டு விட்டார்கள். அதே நேரத்தில் இன்றும் பலர் ஆரோக்கியமான சுவாரஸ்யமான பதிவுகளைப் புதிது புதிதாகப் பதிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தொடங்கிய காலத்துக்கும், இன்றைய காலத்துக்கும் இடைப்பட்டதான காலப் பகுதியில் யார் யார் எங்கெங்கே புதிய விடயங்களைப் பதிந்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு வலைப்பூவாகப் போய்ப் பார்த்துத்தான் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு பெரிய சிக்கல் இருந்தது.
அந்தச் சிக்கலை நிவர்த்தி செய்யும் விதமாக காசி தயாரித்த தமிழ்மணம் தமிழ்வலைப்பூக்களுக்கெல்லாம் தலைப்பூவாக விளங்குகின்றது. இந்தத் தமிழ்மணம் செய்வது வலைப்பூ ஆர்வலர்களுக்கான ஒரு அரிய பணி. பதிந்த எந்த வலைப்பூவையும் சுலபமாகக் கண்டு பிடிக்கவும், புதிய பதிவுகளை உடனுக்குடன் சிரமமின்றி கண்டு கொண்டு வாசிக்கவும் மிகவும் உதவுகிறது.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 27.7.2003
இது எத்தனையாவது பதிவு: மனஓசையில் 423வது.
எனது எல்லா வலைப்பதிவுகளையும் சேர்த்தால் 1500க்கு மேல்
இப்பதிவின் சுட்டி(url): http://manaosai.blogspot.com/2003_07_27_manaosai_archive.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரம். எதை விரும்பினாலும் அதை என்னால் அங்கே பதிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது. இவைகளோடு இலவசம். சுலபமாக எதையும் இணைக்கக் கூடிய தன்மை.
வலைப்பூவின் அறிமுகம் வித்தியாசமானதாகவே இருந்தது.
சந்தித்த அனுபவங்கள்: சந்தோசமான அனுபவங்களே.
வலைப்பூக்களின் அறிமுகமும், அதனாலான அனுபவங்களும் உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய சமாச்சாரங்களாகவே இருந்தன. இன்னும் இருக்கின்றன. பல விடயங்களை உடனுக்குடன் பலரின் பார்வைக்குக் கொண்டு வரவும், சந்தோசங்கள், உணர்வுகள், நினைவுகள், அறிந்தவைகள்.. படித்தவைகள்... என்று பல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் எண்ணங்கள், கருத்துக்களை அறிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கிறது.
உலகத்தின் எங்கோ ஒரு மூலையை ஆறுதலாக வீட்டில் இருந்து தரிசிக்க முடிகிற திருப்தி ஏற்படுகிறது.
பெற்ற நண்பர்கள்: பல இனிய நண்பர்கள்.
முகம் தெரியா விட்டாலும், தமது சந்தோசங்களையும், ரசனைகளையும் அவ்வப்போது என்னோடும் பகிர்ந்து, என்னைச் சந்தோசப் படுத்துவது மட்டுமல்லாமல், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தாமாகவே ஓடி வந்து உதவ முனையும் நல்ல உறவுகள்.
கற்றவை: நிறைய. கல்லாதவை அதையும் விட அதிகம்.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: தாராளமான சுதந்திரம்
இனி செய்ய நினைப்பவை: நினைப்பது எல்லாவற்றையும் செய்து விட முடிவதில்லை. அதனால் செய்தால், அதன் பின் சொல்கிறேன்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
பருத்தித்துறையில் ஆத்தியடி என் பிறப்பிடம்.தியாகராஜா சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் நான் இரண்டாவது. பெண்களுள் மூத்தவள். கற்றது வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில்.
கணிதமும் கல்வியும் என்னோடு நன்றாகவே இசைந்திருந்தாலும் காதலும், கல்யாணமும் அந்த வயதில் இன்னும் இசைவாக இருந்தன. அதன் சின்னமாய் என் சந்தோசங்களாய் திலீபன், தீபா, துமிலன் என மூவர். அவர்களிடமிருந்து அதி அற்புத பரிசுகளாய் சிந்துவும், நதியும் என் பேத்திகள்.
என் பெற்றோர்கள் கற்றுத் தந்த வாசிப்பு எனக்கு மிகவும் பிடிக்கிறது. அதனால் நிறைய வாசிக்கிறேன்.
மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு எழுதவும் பிடிக்கிறது. கோபங்களையும் குமுறல்களையும் மட்டுமல்ல என்னைச் சுற்றியுள்ள உண்மைகளையும் எனது எண்ணங்களையும் கூட எழுத்தால் கூறுவது எனக்கு மிகுந்த வசதியாக இருக்கிறது. அநியாயங்களையும் அக்கிரமங்களையும் மென்று விழுங்காமல் வெளிச்சம் போட்டுக் காட்டக் கூட எழுத்து உதவுகிறது. அதனால் எழுத வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் எழுதுகிறேன்.
தஞ்சம் என்று வந்த போது என்னைத் தாங்கிய நான் 20 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற யேர்மனியின் ஸ்வெபிஸ்ஹால் நகரையும் அங்கு வாழ் மக்களையும் எனது தாயகத்துக்கு அடுத்த படியாக நேசிக்கிறேன்.
என்னிடம் மனிதநேயமும் மனதில் பாசமும் நிறையவே உண்டு. கலைகளில் ஆர்வமும் கலைஞர்களில் மதிப்பும் உண்டு. மண்ணுக்காய் தம் இன்னுயிரை ஈந்த அந்த மான மறவர்களை மனதாரப் பூசிக்கிறேன்.
அநீதி கண்டால் எந்தளவுக்குக் கொதித்துப் போகிறேனோ அதையும் விட அதிகமாக அன்பு எந்த வடிவில் கிடைத்தாலும் அடிமையாகிப் போகிறேன்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
யாருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும்.
மதுமிதாவுக்காக
வலைப்பதிவர் பெயர்: சந்திரவதனா
வலைப்பூ பெயர்: மனஓசை
சுட்டி(url) : http://manaosai.blogspot.com/
வலைப்பூ பெயர்: ஈழகானங்கள்
சுட்டி(url) : http://padalkal.blogspot.com/
வலைப்பூ பெயர்: ஈழத்துக் கலைஞர்கள்
சுட்டி(url) : http://kalaignarkal.blogspot.com/
வலைப்பூ பெயர்: காதல்
சுட்டி(url) : http://kathal.blogspot.com/
வலைப்பூ பெயர்: குழந்தைகள்
சுட்டி(url) : http://kulanthaikal.blogspot.com/
வலைப்பூ பெயர்: சாதனை பெண்கள்
சுட்டி(url) : http://vippenn.blogspot.com/
வலைப்பூ பெயர்: சினிமாப் பாடல்கள்
சுட்டி(url) : http://cinemapadalkal.blogspot.com/
வலைப்பூ பெயர்: சிறுகதைகள்
சுட்டி(url) : http://chandravathanaa.blogspot.com/
வலைப்பூ பெயர்: தமிழீழம்
சுட்டி(url) : http://thamileelam.blogspot.com/
வலைப்பூ பெயர்: தாயககீதங்கள்
சுட்டி(url) : http://thayagageetham.blogspot.com/
வலைப்பூ பெயர்: தீட்சண்யம்
சுட்டி(url) : http://theedchanyam.blogspot.com/
வலைப்பூ பெயர்: துணுக்குச் செய்திகள்
சுட்டி(url) : http://seithikal.blogspot.com/
வலைப்பூ பெயர்: படித்தவை
சுட்டி(url) : http://padiththavai.blogspot.com/
வலைப்பூ பெயர்: புகைப்படம்
சுட்டி(url) : http://pukaippadam.blogspot.com/
வலைப்பூ பெயர்: புத்தகம்
சுட்டி(url) : http://thamilbooks.blogspot.com/
வலைப்பூ பெயர்: புனர்வாழ்வு
சுட்டி(url) : http://tronews.blogspot.com/
வலைப்பூ பெயர் : பெண்கள்
சுட்டி(url) : http://pennkal.blogspot.com/
வலைப்பூ பெயர் : பெட்டகம்
சுட்டி(url) : http://sammlung.blogspot.com/
வலைப்பூ பெயர்: மகளிர்
சுட்டி(url) : http://mahalir.blogspot.com/
வலைப்பூ பெயர்: மருத்துவம்
சுட்டி(url) : http://maruththuvam.blogspot.com/
வலைப்பூ பெயர்: மாவீரர்கள்
சுட்டி(url) : http://maaveerarkal.blogspot.com/
வலைப்பூ பெயர் : Tagesthemen
சுட்டி(url) : http://thumi.blogspot.com/
ஊர்: ஸ்வெபிஸ்ஹால்
நாடு: ஜேர்மனி
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: திரு மாலன் அவர்கள்.
முதல் முதலாக 2003 ஜூலை மாதத் திசைகளில் உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில் என்று திரு.மாலன் அவர்கள் Blog ஐ அறிமுகப் படுத்தினார். அப்போது இது எப்படிச் சாத்தியமாகும் என்று ஆச்சரியப் பட்டேன்.
மாலன் அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு வலைப்பூ என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது. அதன் பின் இது பற்றி யாழ் கருத்துக்களத்திலும் பேசினார்கள்.
சும்மா பாமினியில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிக்கோட்டுக்கு மாற்றி எழுதுவதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. சுரதாவின் ஆயுதத்தின் உதவியுடன், எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நாகரீகம் என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது.
அந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையினரே தமிழில் வலை பதியத் தொடங்கியிருந்தார்கள். அதனால் மதி கந்தசாமியின் வலைப்பதிவுகளின் தொகுப்பு உதவியுடன் எல்லோருடைய பதிவுகளையும் ஓடி ஓடி வாசிக்க முடிந்தது. ஆனால் இன்றோ எமக்குத் தெரியும் படியாக நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் தமிழில் உள்ளன. அத்தனையையும் ஒரே நாளில் வாசிக்க முடியாத அளவுக்கு அவைகளில் எழுதிக் குவித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
அன்று வலை பதியத் தொடங்கிய அத்தனை பேரும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பலபேர் இடை நடுவில் ஏதேதோ காரணங்களினால் தமது பதிவுகளைத் தூங்க விட்டு விட்டார்கள். அதே நேரத்தில் இன்றும் பலர் ஆரோக்கியமான சுவாரஸ்யமான பதிவுகளைப் புதிது புதிதாகப் பதிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தொடங்கிய காலத்துக்கும், இன்றைய காலத்துக்கும் இடைப்பட்டதான காலப் பகுதியில் யார் யார் எங்கெங்கே புதிய விடயங்களைப் பதிந்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு வலைப்பூவாகப் போய்ப் பார்த்துத்தான் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு பெரிய சிக்கல் இருந்தது.
அந்தச் சிக்கலை நிவர்த்தி செய்யும் விதமாக காசி தயாரித்த தமிழ்மணம் தமிழ்வலைப்பூக்களுக்கெல்லாம் தலைப்பூவாக விளங்குகின்றது. இந்தத் தமிழ்மணம் செய்வது வலைப்பூ ஆர்வலர்களுக்கான ஒரு அரிய பணி. பதிந்த எந்த வலைப்பூவையும் சுலபமாகக் கண்டு பிடிக்கவும், புதிய பதிவுகளை உடனுக்குடன் சிரமமின்றி கண்டு கொண்டு வாசிக்கவும் மிகவும் உதவுகிறது.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 27.7.2003
இது எத்தனையாவது பதிவு: மனஓசையில் 423வது.
எனது எல்லா வலைப்பதிவுகளையும் சேர்த்தால் 1500க்கு மேல்
இப்பதிவின் சுட்டி(url): http://manaosai.blogspot.com/2003_07_27_manaosai_archive.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரம். எதை விரும்பினாலும் அதை என்னால் அங்கே பதிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது. இவைகளோடு இலவசம். சுலபமாக எதையும் இணைக்கக் கூடிய தன்மை.
வலைப்பூவின் அறிமுகம் வித்தியாசமானதாகவே இருந்தது.
சந்தித்த அனுபவங்கள்: சந்தோசமான அனுபவங்களே.
வலைப்பூக்களின் அறிமுகமும், அதனாலான அனுபவங்களும் உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய சமாச்சாரங்களாகவே இருந்தன. இன்னும் இருக்கின்றன. பல விடயங்களை உடனுக்குடன் பலரின் பார்வைக்குக் கொண்டு வரவும், சந்தோசங்கள், உணர்வுகள், நினைவுகள், அறிந்தவைகள்.. படித்தவைகள்... என்று பல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் எண்ணங்கள், கருத்துக்களை அறிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கிறது.
உலகத்தின் எங்கோ ஒரு மூலையை ஆறுதலாக வீட்டில் இருந்து தரிசிக்க முடிகிற திருப்தி ஏற்படுகிறது.
பெற்ற நண்பர்கள்: பல இனிய நண்பர்கள்.
முகம் தெரியா விட்டாலும், தமது சந்தோசங்களையும், ரசனைகளையும் அவ்வப்போது என்னோடும் பகிர்ந்து, என்னைச் சந்தோசப் படுத்துவது மட்டுமல்லாமல், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தாமாகவே ஓடி வந்து உதவ முனையும் நல்ல உறவுகள்.
கற்றவை: நிறைய. கல்லாதவை அதையும் விட அதிகம்.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: தாராளமான சுதந்திரம்
இனி செய்ய நினைப்பவை: நினைப்பது எல்லாவற்றையும் செய்து விட முடிவதில்லை. அதனால் செய்தால், அதன் பின் சொல்கிறேன்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
பருத்தித்துறையில் ஆத்தியடி என் பிறப்பிடம்.தியாகராஜா சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் நான் இரண்டாவது. பெண்களுள் மூத்தவள். கற்றது வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில்.
கணிதமும் கல்வியும் என்னோடு நன்றாகவே இசைந்திருந்தாலும் காதலும், கல்யாணமும் அந்த வயதில் இன்னும் இசைவாக இருந்தன. அதன் சின்னமாய் என் சந்தோசங்களாய் திலீபன், தீபா, துமிலன் என மூவர். அவர்களிடமிருந்து அதி அற்புத பரிசுகளாய் சிந்துவும், நதியும் என் பேத்திகள்.
என் பெற்றோர்கள் கற்றுத் தந்த வாசிப்பு எனக்கு மிகவும் பிடிக்கிறது. அதனால் நிறைய வாசிக்கிறேன்.
மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு எழுதவும் பிடிக்கிறது. கோபங்களையும் குமுறல்களையும் மட்டுமல்ல என்னைச் சுற்றியுள்ள உண்மைகளையும் எனது எண்ணங்களையும் கூட எழுத்தால் கூறுவது எனக்கு மிகுந்த வசதியாக இருக்கிறது. அநியாயங்களையும் அக்கிரமங்களையும் மென்று விழுங்காமல் வெளிச்சம் போட்டுக் காட்டக் கூட எழுத்து உதவுகிறது. அதனால் எழுத வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் எழுதுகிறேன்.
தஞ்சம் என்று வந்த போது என்னைத் தாங்கிய நான் 20 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற யேர்மனியின் ஸ்வெபிஸ்ஹால் நகரையும் அங்கு வாழ் மக்களையும் எனது தாயகத்துக்கு அடுத்த படியாக நேசிக்கிறேன்.
என்னிடம் மனிதநேயமும் மனதில் பாசமும் நிறையவே உண்டு. கலைகளில் ஆர்வமும் கலைஞர்களில் மதிப்பும் உண்டு. மண்ணுக்காய் தம் இன்னுயிரை ஈந்த அந்த மான மறவர்களை மனதாரப் பூசிக்கிறேன்.
அநீதி கண்டால் எந்தளவுக்குக் கொதித்துப் போகிறேனோ அதையும் விட அதிகமாக அன்பு எந்த வடிவில் கிடைத்தாலும் அடிமையாகிப் போகிறேன்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
யாருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும்.
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
▼
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )