
அரசியல் விளையாட்டுக்களில் மீண்டும் பலியானவை அப்பாவி உயிர்களே!
மூன்று வருடங்களின் முன் உலகையே திடுக்கிட வைத்த தாக்குதலில் பலியாகிப் போனது
3000 க்கு மேற்பட்ட வெறும் அப்பாவி மக்கள்தான்.
எமது நாட்டில் நடக்காததா..? அமெரிக்காவுக்கு இது வேணும்..? என்பது போன்றதான குரல்கள்
போர் அனர்த்தங்களால் பாதிக்கப் பட்ட நாடுகளில் இருந்து ஆற்றாமையோடு எழுந்திருந்தாலும்
இந்த நிகழ்வினால் மனசாரப் பலர் வருந்தினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
இன்று தொலைக்காட்சியில் அந்த அனர்த்தத்தில்
தாய் தந்தையரை இழந்த குழந்தைகளையும்
உறவுகளை இழந்தோரின் கண்ணீரையும் பார்க்கும் போது
இதெல்லாம் எதற்காக என்று மனம் கலங்குகிறது.