Tuesday, May 18, 2004

சினிமாப் பாடல்கள் - 11


தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

சுதியும் லயமும் ஒன்று சேர
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

உலக வாழ்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும் போது முடியும்

மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழ்நீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பும் இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாலம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை.


தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா


விரக்தி சொட்டும் இப்பாடலைக் கேட்கும் போது கூடிய பங்கு சோகம்தான் தெரிகிறது. ஆனால் படத்திலோ பாடற்காட்சி விரக்தி, சோகம், சென்ரிமென்ரல் எனபதோடு அழகும் கலந்து சுவைக்கிறது. காரணம் கமலஹாசன் மது அருந்தி விட்டு கிணற்றுக்கட்டில் நின்று பாடிப்பாடி பரதநாட்டியத்துடன் தள்ளாடுகிறார்.

ஓம் நமச்சிவாய
தங்கநிலாவினை அணிந்தவா
பாடுகிறேன்..........
பஞ்சபூதங்களும் முகவடிவாகும்.
ஆறு காலங்களும் ஆடைகளாகும்.......
என்ற பாடலுக்கு சைலஜா நடனமாடும் போது
பஞ்சபூதங்களும் முகவடிவாகும்.........

என்ற வரிகளுக்கேற்ப சைலஜாவின் முகபாவம் சரியாக அமையவில்லை. வெறும் கை தட்டலுக்கும் பாராட்டுக்களுக்குமாகவே சைலஜா நடனமாடினார் என்று பாலகிருஸ்ணனாக வந்த கமலஹாசன் எழுதிய விமர்சனத்துடன் ஆரம்பிக்கிறது சைலஜாவுக்கும் கமலுக்குமிடையில் சண்டையும் சலங்கைஒலி படமும்.

கமலஹாசனின் படங்கள் தோல்வி காண்பது குறைவு. அதிலும் சலங்கை ஒலி அருமையாக அமைந்து விட்ட படங்களில் ஒன்று. படம் முழுவதிலுமே நர்த்தனம்.

கதையின் படி
சைலஜா வேறு யாருமல்ல. ஏழ்மை நிலையிலிருந்த கமல் நாட்டிய உலகில் முன்னுக்கு வர உதவிய, கமலின் காதலுக்குப் பாத்திரமாகிய ஜெயப்பிரதாவின் மகள்தான் அவள். ஜெயப்பிரதாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி சீதனப் பிரச்சனையால் திருமணத்தன்றே கணவனால் கைவிடப்பட்டவள்.
கமலுக்கும் அவளுக்குமிடையில் காதல் அரும்பி கல்யாணம் பற்றிச் சிந்திக்கும் வேளையில் அவளைக் கைவிட்ட கணவன் தன் பிழை உணர்ந்து, திரும்பி வந்து அவளை அழைத்துச் சென்று விடுகிறான். அதிலிருந்து கமல் குடிகாரனாகி விடுகிறான்.

அந்த விரக்தி இந்த வரிகளில் இயைபு கலந்து அழகாகச் சொல்லப் பட்டுள்ளன.
பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாலம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை.


அடுத்து
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

என்று அழகாக மடக்கு அணியில் ஒலிக்கும் இவ்வரிகள் பாடல் எடுப்பாக அமைந்ததற்கான முக்கிய காரணிகளில் ஒன்று என்றே எனக்குத் தோன்றுகிறது.

பல வருடங்கள் கழித்து கமல் வாழும் இடத்தில் சைலஜாவின் நாட்டிய நிகழ்ச்சி நடை பெறுகிறது. அங்குதான் கமல் அவளது நாட்டியத்தைப் பற்றி பத்திரிகையில் விமர்சிக்க, கமலின் விமர்சனத்தால் எரிச்சலடைந்த சைலஜா ஊர் சென்றதும் தனது தாயிடம் அந்த விமர்சனத்தைக் காட்டி சினக்கிறாள். குடிகாரன் என்று சொல்லித் திட்டுகிறாள்.

விமர்சனம் எழுதியவர் பாலகிருஸ்ணன்(கமலஹாசன்) என்பவர் என்னும் போது ஜெயப்பிரதாவுக்கு அது தனது பாலகிருணஸ்ணன்தான் என்ற உண்மை விளங்கி விடுகிறது. அவர் குடிகாரனாக இருப்பது அவளுக்குக் குழப்பத்தையும் வேதனையையும் கொடுக்க.. நிலைமையை அறியும் விருப்புடனும், பரிகாரம் தேடும் முனைப்புடனும் அந்தப் பாலகிருஸ்ணனிடமே நடனம் பயில சைலஜாவை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறாள்.
ஆனால் ஜெயப்பிரதாவின் கணவர் ஏதோ ஒரு விபத்தில் ஏற்கெனவே இறந்து விடுகிறார். ஜெயப்பிரதா நல்லாக வாழ்கிறாள் என்ற நம்பிக்கையோடே வாழ்ந்து கொண்டிருக்கும் கமலுக்கு அவள் கணவனில்லாத தனிமரமாய் வாழ்கிறாள் என்பது தெரிந்து விடக்கூடாது என்பதில் கமலின் நண்பனும், ஏற்கெனவே ஜெயப்பிரதாவுக்குப் பரிச்சயமுமான சரத்பாபு அக்கறை கொண்டதால் ஜெயப்பிரதா தன்னைக் காட்டிக் கொள்ளாமல் தனது மகள் சைலஜாவை கமலிடம் நடனம் பயில வைக்கிறாள்.

இந்தக் கட்டத்தின் ஒரு பொழுதில்தான் கமல் நன்றாக மது அருந்தி விட்டு மழை கொட்டும் ஒரு இரவில் கிணற்றுக்கட்டின் மேல் நின்று இந்த நடனத்தை ஆடுவதாகக் காட்சி.

குடிபோதையில் தள்ளாடியபடி கிணற்றுக்கட்டில் ஆடும் போது நடனம் அழகாயும், கிணற்றுக்குள் விழுந்து விடக் கூடும் என்ற நிலை நகைச்சுவை கலந்த தத்தளிப்பாகவும் இருந்தாலும் பாடல் வரிகள் விரக்தியோடு தத்துவார்த்தமும் கலந்து ஒரு விதமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன.

கமல் குடிபோதையுடன் இந்த நடனத்தை ஆடுவதைப் பார்த்து மனம் பதைத்து ஜெயப்பிரதா அவரைக் காப்பாற்ற விளையும் போது
பொட்டில்லையே நெற்றியில் என்பது உறுத்த கணவனை இழந்திருந்த போதும் கமலைக் கவலைப் படுத்தக் கூடாது என்பதற்காக அவசர முடிவாக குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு போகிறாள். இது தமிழ்ப்படத்தில் ஒரு புரட்சி.

கமல் ஜெயப்பிரதாவைக் கண்டு அதிர்ந்து மகிழ்ந்து அவள் பொட்டு மழையில் நனைகிறதே அழிகிறதே என்று பதைத்து அவசரமாய் தன் கைகளால் மழைத்துளிகள் அவள் நெற்றியில் விழாதவாறு தடுத்து........ இது சென்ரிமென்ரல்.

ஆனாலும் பாடல் இளையராயாவின் இசையில் பாலசுப்ரமணியத்தின் குழைவான குரலில் எதுகை, மோனை, இயைபு, உவமானம், உவமேயம், மடக்கு என்று எல்லாம் கலந்து மனதை விட்டகலாத ஒரு பாடலாகவே அமைந்து விட்டது.

சந்திரவதனா
யேர்மனி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite