எவ்வளவு சுலபமாக நாம் சிலதை மறந்து விடுகிறோம். இணையமோ, முகநூலோ இல்லையென்றால் இன்றையநாள் தமிழினியின் நினைவுநாள் என்பதை நான் நினைத்திருக்க மாட்டேன்.
நாங்கள் சாதாரணமனிதர்கள்தான். எங்களால் மட்டுமே ஒருவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடவும், நினைத்த மாத்திரத்தில் தூக்கியெறிந்து விடவும் முடியும்.
தமிழினி என்ற ஆளுமையை நான் அண்ணாந்து பார்த்தது ஒரு காலம். சிறையிலிருந்து
வெளியில் வந்த பின் அவளது புகைப்படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து
அவள் கண்கள் என்ன சொல்ல விளைகின்றன என விடை தேடியது இன்னொரு காலம்.
முகநூலில் அவளது ஆக்கங்களைப் படித்து, விமர்ச்சித்து நட்பாக இருந்தது
சொற்பகாலம். மிகமிகச் சொற்பகாலம்.
அவள் இறந்த பின்தான் அவளைப் பற்றியிருந்த நோய் பற்றி அறிந்து அதிர்ந்தேன்.
`ஒரு கூர்வாளின் நிழலில்´ வாசிக்கத் தொடங்கி, சில பக்கங்களுடன் எனது கண்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக (https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/10153911735227869) நின்று போயிருந்தது. அதனால் அது பற்றிய சர்ச்சைகள் எதற்கும் நான் இதுவரை பதிலளிக்கவில்லை.
இன்னும் தமிழினி பற்றி பல்வேறு கசப்பான கருத்துக்கள். அதன் மீதான உண்மைகள், பொய்கள்... போன்றவற்றிலான ஆராய்ச்சிகளும், கேள்விகளும் மனதை ஒரு புறம் குடைந்தாலும், அவள் பற்றிய நினைவுகள் தோன்றும் போதெல்லாம் எனக்குள் தோன்றும் வேதனை இன்றும் என்னை ஆக்கிரமித்திருக்கிறது.
மீண்டும் `ஒரு கூர்வாளின் நிழலை´க் கையில் எடுத்துள்ளேன். வாசித்த பின்னர்தான் அது பற்றிப் பேசமுடியும்.
சந்திரவதனா
18.10.2016
அவள் இறந்த பின்தான் அவளைப் பற்றியிருந்த நோய் பற்றி அறிந்து அதிர்ந்தேன்.
`ஒரு கூர்வாளின் நிழலில்´ வாசிக்கத் தொடங்கி, சில பக்கங்களுடன் எனது கண்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக (https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/10153911735227869) நின்று போயிருந்தது. அதனால் அது பற்றிய சர்ச்சைகள் எதற்கும் நான் இதுவரை பதிலளிக்கவில்லை.
இன்னும் தமிழினி பற்றி பல்வேறு கசப்பான கருத்துக்கள். அதன் மீதான உண்மைகள், பொய்கள்... போன்றவற்றிலான ஆராய்ச்சிகளும், கேள்விகளும் மனதை ஒரு புறம் குடைந்தாலும், அவள் பற்றிய நினைவுகள் தோன்றும் போதெல்லாம் எனக்குள் தோன்றும் வேதனை இன்றும் என்னை ஆக்கிரமித்திருக்கிறது.
மீண்டும் `ஒரு கூர்வாளின் நிழலை´க் கையில் எடுத்துள்ளேன். வாசித்த பின்னர்தான் அது பற்றிப் பேசமுடியும்.
சந்திரவதனா
18.10.2016