Monday, August 21, 2006

வாழ்வும் வரும் சாவும் வரும்...


வாழ்வும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒரு நாள் விடிவும் வரும்
கொஞ்சம் வரும் ஓய்ந்தே இரு
நாளைய நாளில் வரமாய் வரும்

வீதியிலை நடக்கிறேன்

விதியை நினைக்கிறேன்
தமிழனாய் பிறந்து நான்

தினமும் தவிக்கிறேன்... - தொடர்ச்சி

பாடலை ஒலி வடிவில் கேட்க
viduthalai.mp3

பாடல் - விடுதலை
பாடல் வரிகள் - சுஜீத்.ஜீ
இசை - சந்தோஷ்
பாடல் காட்சியில் - சுஜீத்.ஜீ + சந்தோஷ்


புலம்பெயர்ந்த எமது இளைஞர்கள் இன்று பல்துறைகளிலும் கால் பதித்துக் கொண்டு வருவதை நாம் அறிகிறோம். மொழி, காலநிலை, கலாச்சாரம், புலப்பெயர்வு... என்ற பல்வேறு முரண்களின் நடுவே நின்று வாழ வேண்டிய இளைய சமூகத்தினர் தமது திறமைகளை வெளிப்படுத்துவதில் பல சிக்கல்களையும் எதிர் நோக்குகிறார்கள். "இது இதுதான் எமக்கு" என்று முத்திரை குத்தி வைக்கப் பட்ட விடயங்களைத் தாண்டி இன்னொரு விடயத்தைத் தொடும் எந்த ஒரு புதிய செயற்பாடும் முதலில் யாராலும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அது கட்டுடைத்தல் போன்றதானதொரு பிரமையையே எமது பெரியோரிடம் ஏற்படுத்துகின்றது. இந்தப் பிரமையினால் இளையோருக்குக் கொடுக்கப் படும் அழுத்தங்கள் மிகமிக அதிகமே. அந்த அழுத்தங்களினால் பல இளைஞர்கள் தமக்கே உரிய, தமக்குப் பொருத்தமான துறைகளில் நிலைத்து நிற்க முடியாது மனம் ஒடிந்து தொடங்கியதைப் பாதியிலே நிறுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் மனஉறுதி படைத்தவர்கள்தான் எல்லா அழுத்தங்களையும் தாண்டி கொஞ்சமேனும் வெளியில் வந்திருக்கிறார்கள்.

அப்படி வந்தவர்களில் சுஜீத்ஜீ யும் ஒருவர். "எனக்கு சங்கீதம் தெரியாது" என்று சொல்லும் சுஜீத்ஜீ எல்லாவிதமான இசைகளிலும் நாட்டம் கொண்டவர்.

"ஏன் ராப் இசையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?" என்று கேட்டால் "புலம்பெயர் ஈழத்தமிழருக்கென்று தனித் துறையாக இறங்க வேண்டும் என்றால் பழக்கம் குறைவான ஏதாவது ஒரு இசையினை தெரிவு செய்தால் வித்தியாசப் படலாம் என்ற எண்ணம்" என்றும் "சில உணர்வுகளினை சங்கீதத்தால் சொல்லி விடமுடியாது" (உதாரணம் : விடுதலை பாடல்) என்றும் சொல்கிறார்.

இவரது விடுதலை என்ற பாடல் ரீரீஎன் நடாத்தும் ஒளிக்கீற்று நிகழ்ச்சியில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது. உணர்வு பூர்வமான அந்தப் பாடல் வரிகளை எழுதியவர் சுஜீத்ஜீ யேதான். அழகிய முறையிலான இசையும் ராப் இசைக்கே உரிய முறையில் பாடப்பட்ட விதமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளன. இசையை அமைத்த சந்தோசும், சுஜீத்தும் இணைந்தே பாடல் காட்சியில் வருகிறார்கள். பலரையும் கவர்ந்து விட்ட பாடல். ராப் இசையை ரசிக்கும் எவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடிய பாடல். ராப் இசையை ரசிக்காதவர்கள் கூட பாடல் வரிகளில் ஈர்க்கப் படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

(நிகழ்ச்சியில் இடம் பெற்ற மற்றைய பாடல்கள் கூட தரமான பாடல்களாகவே அமைந்திருந்தன. சில பாடல்களுக்கான காட்சிகளிலும், கமராவிலும் இன்னும் திருத்தங்களும் கவனங்களும் தேவையென்பது குறிப்பிடப் படவேண்டிய ஒன்றாயினும், ஒவ்வொரு பாடல்களுக்குமான இசையமைப்புகள் எமது கலைஞர்களின் வளர்ச்சியைப் பறை சாற்றுவதாகவே அமைந்திருந்தன. )

ஈழத்தமிழர்கள் இப்பொழுது பல துறைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவ்வகையில் இசைத்துறையில் அதுவும் மேற்கத்திய இசையில் தனக்கிருந்த திறமையினை சிங்கிள்ஸ் என்ற இசைத்தட்டை வெளியிட்டதன் மூலமாக உணர்த்தியிருக்கிறார் சுஜீத்.ஜி.

சுஜீத்.ஜி யுடனான ஒரு நேர்காணல்

எப்படி இந்த இசையில் நாட்டம் வந்தது?
எனக்கு எல்லாவிதமான இசைகளிலும் நாட்டம் உண்டு. இருப்பினும் எல்லோரும் செய்கிற ஒரு விடயத்தினை நானும் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தபோது ஏதாவது வித்தியாசமாக செய்வோமே என்று எண்ணினேன்.

ஏன் இவ் இசையினைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
இன்று மேற்குலகைப் பொறுத்தவரையில் இரண்டுவகையான இசை அதிகமாக இளைஞர்களை ஆக்கிரமிக்கிறது. ஒன்று றிதம் அண்ட் புழூஸ் இசை மற்றையது கிப்பொப் இசை. நான் லண்டனில் இருக்கிற காரணத்தினால் இவை என்னையும் ஆக்கிரமித்து விட்டது.

இதற்கான இசைப் பயிற்சியினை எங்கே பெற்றீர்கள்?
இசைப்பயிற்சியினை எங்கும் பெறவில்லை. கேள்விஞானம் என்று சொல்லலாம். பிரபல்யம் அடைகிற ஆங்கிலப் பாடல்கள் அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். அவைகளை கேட்கும் வழக்கம் உண்டு அவ்வளவுதான். மற்றப்படி சிங்கள்ஸ்க்கு இசையமைத்த சந்தோஷ் மூலமாகவும் பல விடயங்களை அறிந்து கொண்டேன்.

ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகும் பாடல்களினைக் கேட்டுத் தமிழில் பாடல்களை எழுத கேள்வி ஞானம் உதவியது என்கிறீர்களா?
அப்படியல்ல. நான் ஏற்கனவே சில பாடல்களை எழுதிய அனுபவம் பெற்றிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு எப்படியான இசைக்கும் பாடல்களை எழுத முடியும் என்ற நம்பிக்கையினைத் தந்தது.

இந்த இசை அனைவரையும் கவரும் என்கிறீர்களா?
உலகில் எதுவுமே எல்லோரையும் கவர்ந்து விடுவதில்லை. அதற்கு என்னுடைய படைப்பும் விதிவிலக்கல்ல. நான் இலக்கு வைத்த இளைஞர்களை அதாவது மேற்குலகில் வாழும் தமிழ் இளைஞர்களை நிச்சயமாகக் கவரும், கவர்கிறது.

அதென்ன மேற்குலகில் வாழும் தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்திருக்கிறீர்கள்?
எந்த ஒரு பொருளுக்கும் அதற்கான நுகர்வோர் வட்டம் இருக்கும். அதுபோல என்னுடைய இலக்கு மேற்குலகில் வாழும் தமிழ் இளைஞர்கள். காரணம் நான் ஏற்கனவே சொன்னது போல மேற்குலக இசையின் ஆக்கிரமிப்பு அவர்கள் மேலும் இருக்கிறது. எங்களை ஆக்கிரமிக்கும் அந்த இசைக்குள் தமிழினை செலுத்தியிருக்கிறேன்.

இதனைத் தமிழ் ஆர்வலர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?
ஏற்கனவே இந்தச் சிக்கலுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. நான் தவறான பாதையில் செல்வதாகச் சொன்னார்கள். ஏன் என்று விளக்கம் தர அவர்களால் முடியவில்லை. இந்தியாவின் கர்நாடக மானிலத்து இசைக்குள் தமிழ் தவழும்போது மகிழ்ச்சி அடைபவர்கள் ஏன் மேற்கத்தேய இசைக்குள் தமிழ் துள்ளத் துன்பப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் எல்லாத் தமிழ் ஆர்வலர்களும் இப்படிப் பேசமாட்டார்கள் என்று நினைக்கிறேன். கர்நாடக இசையினால் சொல்லமுடியாத சிலவற்றை கிப்பொப் இசை சொல்லும்.

- சங்கீதா

சுஜீத்.ஜி பற்றி

SujeethG, as a child, he had no such ambitions of becoming a musical artist. When in London, he realised he had a knack for finding flaws in Tamil songs and would talk about how he could have composed it better, and had his own ideas on how to do things differently. So one day he decided to put pen to paper.

He has always felt if his work is good in his eye, that's enough for him. He wasn't expecting recognition or praise from anyone. SujeethG wasn't just musically artistic, he writes stories, poems and has even made one or two short films.

His friends who asked him to write them songs appreciated his talents. Unfortunately none of the songs were recorded. But plenty of praise came his way. After waiting in hope of his work would getting produced into records, he decided to showcase his talents by making his own album.
(His debute album SINGLES was released in 2005, next one CEYLON hope to be released in January 2007)

I want to show people that an Eelam Tamil also can do something in music. He wanted to project a positive message to society, to make people realise that Eelam Tamils are artistic in this field and can get far in the industry. Although he admires a lot of artists for their various talents, he isn't interested in following current eastern musical trends; he's following his own personal taste.
"I want to provide the second generation of Tamils living in the western world something they can relate to. Even though putting Tamil lyrics to this kind of music would be difficult, I knew I could achieve it."

He certainly has the know how to manipulate the Tamil language to suit any musical structure. This is what makes him different. He has no professional training in the music field and has no musical background. His knack is natural and is helped by observing people in the industry.

He aims to show that ordinary hard working people can achieve their goals.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite