Friday, March 26, 2004

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென.......

(படம்: நீ வருவாயென, பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசை:ராஜ்குமார்)

காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிசமும் வருசமடி..

என்கிறார் ஒரு கவிஞர்.
(காதலன் படத்தில் என்னவளே.. அடி என்னவளே..)

உண்மைதான். காத்திருத்தல் என்பது மிகவும் கடினமான விடயம்தான். ஆனாலும் அந்தக் காத்திருத்தலில் ஏக்கம், தவிப்பு, ஆசை இவைகளையும் மீறிய ஒரு இனிமையும் கண்டிப்பாக இருக்கும்.

பிரசவிக்கப் போகும் குழந்தையை எதிர் பார்த்திருக்கும் தாயின் காத்திருத்தல். பிரசவ அறையில் மனைவியை விட்டு வெளியே காத்திருக்கும் கணவனின் காத்திருத்தல், பரீட்சையை எழுதி விட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களின் காத்திருத்தல், வேலைக்குப் போய் விட்ட அம்மா திரும்பி வரும் வரை வழிமேல் விழி வைத்து வாசலில் தவமிருக்கும் குழந்தையின் காத்திருத்தல், இரு வேறு நாடுகளிலாய்ப் பிரிந்து போய்விட்டு தாம் சந்திக்கப் போகும் நாளுக்காய் காத்திருக்கும் கணவன், மனைவியரின் காத்திருத்தல், ஒரு பார்வைக்காய், ஒரு சிரிப்புக்காய், ஒரு ஹலோவுக்காய் காத்திருக்கும் காதலர்களின் காத்திருத்தல், என்று இந்தக் காத்திருத்தல் பல்வேறு பட்ட விடயங்களுக்காக இருந்தாலும் உணர்வுகள் அதாவது காத்திருப்பவர்களின் மனங்களின் உணர்வுகள் - தவிப்பு, ஏக்கம், இனிமை, கனவு என்று எல்லாம் கலந்ததாகவே இருக்கும்.

இவற்றில் காதலர்களின் காத்திருப்பைக் கவிஞர்கள் கூறும் விதங்கள் மிக அழகாக அமைந்துள்ளன.

ஊரில் அதாவது தாயகத்தில் காத்திருப்புகள் படுத்திருந்து முகட்டைப் பார்த்த படியோ அல்லது மாமரத்தின் கீழோ வேப்பமரத்தின் கீழோ.... ஏகாந்தத்தில் இருக்கும். ஆனால் இங்கு வெளிநாட்டில் ஐரோப்பிய இயந்திர அவசரத்தில் காத்திருத்தலும் ஏகாந்தமும் வேறு விதத்தில் அமைந்திருக்கும். பல பேர் கொண்ட ஓர் இடத்தில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கும் போதும் மனம் மட்டும் ஏகாந்தத்தில் எங்கோ சென்று நிற்கும்.

எங்கு நின்றாலும் என்ன செய்தாலும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் காதல் மனங்களின் காத்திருப்பும, தவிப்பும், ஏக்கமும் ஒன்றாகவே இருக்கும்.

இரவிலே புரண்டு படுக்கையில் ஏற்படும் சிறு விழிப்பில் கூட காத்திருக்கும் மனம் ஏங்கித் தவிக்கும். தூக்கம் கலைந்த பின்னும் ஏக்கத்துடன் தண்ணீரையும் ஊற்றிக் குளித்து, சாப்பாட்டுடன் ஏக்கத்தையும் மென்று விழுங்கி வேலைக்கு ஓடுகையிலும் ஏக்கத்துடன் நினைவுகளையும் கொண்டோடி காத்துக் காத்து யாருக்காக அந்தக் காத்திருப்போ அவரையே மனம் சுற்றிச் சுற்றித் தொட்டு மகிழ்ந்து, சிலிர்த்து, ஏங்கி, துவண்டு............... காதலர்களின் காத்திருப்பு இப்படியே அலுக்காமல் சலிக்காமல் தொடரும்.

பக்கத்தில் நீயும் இல்லை.
பார்வையில் ஈரம் இல்லை.
சொந்தத்தில் பாஷை இல்லை.
சுவாசிக்க ஆசை இல்லை.....
கன்னி உன்னைக் காத்திருப்பேன்
கால் கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும் வரை
தேகம் போல நான் கிடப்பேன்..
என்கிறார் இன்னொரு கவிஞர்.

(படம்:சிகரம், பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்)

இங்குதான் கவிஞர்களின் திறமைகள் எம்மை வியக்க வைக்கின்றன. ஏக்கங்களும் காத்திருப்புகளும் எமக்குள்ளே வியாபித்து நின்றாலும் இந்தக் கவிஞர்கள் போல் எம்மால் அதை இத்தனை அழகாக வெளிப்படுத்த முடிவதில்லையே!

நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம் பெற்ற பாடலில் கவிஞர் காத்திருந்ததை இன்னுமொரு விதமாக மிகவும் அழகாகச் சொல்கிறார்.

What a waiting..
What a waiting
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதல் மனம் நோகும் வரை......
நாற்று வைத்துக் காத்திருந்தால்
நெல்லுக் கூட முளைத்திருக்கும்........
என்ன ஒரு அருமையான கற்பனை!


ம்... இவையெல்லாம் வெறும் கற்பனைதானா..?
அல்லது உண்மையிலேயே காதலர்களின் மனசு காத்திருப்புகளின் போது இவ்வளவு உணர்வு பூர்வமான அவஸ்தைகளைக் கொண்டு தவிக்கிறதா..? என்று பார்த்தால்....... இந்த மனசு இருக்கிறதே! அது உண்மையிலேயே மிகமிக விசித்திரமானதுதான். இந்தப் பிரிவை என்னால் தாங்க முடியுமா...? என்று நினைத்து நினைத்தே சஞ்சலப்பட்டு, தவித்து, ஏங்கி, நாட்களை எண்ணி, மலைத்து உள்ளுக்குள் உருகி மாயும். ஆனாலும் வருடங்களாக நீண்ட அந்தக் காத்திருப்பு, காலத்தின் ஓட்டத்துடன் ஓடி ஒரு நாளாகக் குறுகிய பின்னர் அந்த ஒரு நாளைக் கடக்க இந்த மனசு கஷ்டப் படுமே! அந்தக் கஷ்டம் மகா பெரியது. அந்த நாளின் ஒவ்வொரு கணமுமே இந்த மனசுக்கு ஒவ்வொரு யுகமாகத்தான் தெரியும். ஒவ்வொரு கணத்தையும் இந்த மனம் காலப் பெரிய யுகமாகக் கடக்கும்.

ஒரு கவிஞர் இப்படிச் சொல்கிறார்.
காத்திருக்கும் வேளையெல்லாம் கண்ணிமையும் பாரம்
காதல் வந்து சேர்ந்து விட்டால் பூமி வெகு தூரம்.......

(படம்:சொல்லாதே, பாடியவர்:ஹரிஹரன்)

இப்படியாக கவிஞர்களால் அழகாகவும் வியப்பு ஏற்படுத்தும் வகையிலும் சொல்லப் பட்டவை, காத்திருக்க வேண்டிய தேவை வராத சிலருக்கு இதென்ன கவிஞர்கள் தத்துப் பித்தென்று உளறுகிறார்கள் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கலாம். ஆனால் அதை அனுபவித்தவர்களுக்கும், அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும்தான் அப் பாடல் வரிகளின் கற்பனையும் மகிமையும் புரிந்து கவிஞர்களின், கற்பனைத் திறனில் ஒரு லயிப்பு ஏற்படும்.

நீ வருவாயென..! படத்தில் இடம் பெற்ற இப்பாடல் கூட காத்திருப்பவரின் மனசைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு அழகிய கவிதையாகியுள்ளது. S.A.ராஜ்குமாரின் இசையும் S.P.பாலசுப்பரமணியத்தின் குரலும் பாடலுக்கு இன்னும் இனிமையையும் அழகையும் சேர்த்துள்ளன.

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென


இந்தப் பாடலுக்கு நிறைய விளக்கங்கள் சொல்லத் தேவையில்லை. அர்த்தங்கள் ஒழித்து வைக்கப் படாமல் வெளிப்படையாக ஆனால் கவிதை நயம் குறையாமல் காத்துக் காத்து கண்கள் பூத்துப் போனது சொல்லப் படுகிறது.

வைதேகி காத்திருந்தாள் படத்துக்காகக் கூட
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி


என்ற பாடல் எழுதப் பட்டு.. அது பலரது மனதையும் பலகாலமாக தன்வசப் படுத்தியிருந்தது.

காத்திருக்கும் போது கண்ணிமையே பாரமாகுமென்றால்
காத்திருப்பதில் கண் பூத்திருப்பது வாஸ்தவம்தான்.

தென்றலாக நீ வருவாயா யன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன்


காத்துக் காத்து கண்கள் பூத்திருக்கும் மனசின் ஆசையை இப்படி சுலபமாக அழகாக கவிதை நயத்துடன் சொல்ல எல்லோராலும் முடியாது.

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென
தினம் தினம் சேகரித்தேன்.
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென
வாசகனாகி விட்டேன்.
கவிதை நூலோடு கோலப் புத்தகமும்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்


இவ்வளவும் பொய்யில்லை. உண்மையாக நடக்கும் விடயங்கள். ஒருவரைப் பிடித்து விட்டால் அவருக்காக தமது பழக்கங்களையே மாற்றிக் கொள்பவர்கள் பலர். அதிலும் காதலர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. காதலனோ காதலியோ எந்த வழியால் போவார்களோ அந்த வழிக்குத் தேவையின்றிச் செல்வதும், பேரூந்துக்காகக் காத்திருக்கும் போது எதில் அவர் இருந்திருப்பாரோ அதில் போய் இருந்து பார்ப்பதும், வாசிப்பு ரசனையே இல்லாதவர்கள் கூட தேடித் தேடி புத்தகங்களை வேண்டி வாசிப்பதுவும்......... காதல் உலகில் சர்வசாதாரணம். அதை எழுத்தில் வடிக்கத்தான் பலருக்கு முடிவதில்லை. ஆனால் மனசுக்குள் மென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு காகம் "கா" வெனக் கரைந்தாலும்
என் வாசல் பார்க்கிறேன்.


இங்கு ஐரோப்பியாவில் காகம் கரைந்து காத்திருப்பு நடக்கவில்லையானாலும் ஊரிலே காகத்தையும் தபாற்காரனையும் காத்திருந்து களிப்புறுபவர் நிறையப்பேர்.

சருகாய் அன்பே காத்திருக்கின்றேன்
எங்கே உன் காலடி!


நீயில்லாத நான் சருகாய்.. உன் காலடிக்குள் மிதிபட இந்தச் சருகு காத்திருக்கிறது என்று சொல்வதாய் இந்த வரிகள்.

மணி பார்த்து தினம் வழி பார்த்து...........

மீண்டும் வருகிறது. மணி பார்த்து.... தினம் வழி பார்த்து.............. அதுதான் காத்திருப்பின் உன்னத பணி.... மணி பார்ப்பது.. செக்கன் கம்பியின் ஒரு அசைவே ஓராயிரம் யுகத்தை உணர்த்தும் காதலர்களின் இந்தக் காத்திருப்பும், காதல் உள்ளங்களின் ஏக்கமும் எங்களையும் தொட்டு விடுகிறது.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite