Friday, February 11, 2005

ஒரு சாகரமோ..!


தமிழ்வலைப்பதிவுகளின் வளர்ச்சி ஒரு பெரு விருட்சமாகியுள்ளது. சில சமயங்களில் ஒரு சமுத்திரமோ என்று கூட எண்ணும் படி இவ்வளர்ச்சி எம்மைப் பிரமிக்க வைக்கிறது. அறிவியல், தொழில்நுடப்பம், விஞ்ஞானம், இலக்கியம், சமையற்கலை, வரைகலை என்று எல்லாவற்றையும் தனக்குள்ளே நிரப்பி வைத்திருக்கின்றன வலைப்பதிவுகள். இவ் வலைப்பதிவுகள் பற்றிய செய்தியை என் போன்றவர்களுக்கு முதலில் அறிமுகப் படுத்திய பெருமை திசைகளுக்கே.

இம்மாத திசைகளில் வலைப்பதிவுகளுக்ப் பரிசு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அதில் இப்படிக் குறிப்பிடப் பட்டுள்ளது.
தமிழ் வலைப்பூக்கள் என்கிற கருத்தாக்கத்தையும் திசைகள்தான் முதலில் அறிமுகப்படுத்தியது. திசைகள் இதழ் வெளிவந்த ஐந்து மாதங்களுக்குள் ஜூலை 2003 இதழில் 'வலைப்பூக்கள்' என்று வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தி, மாவின் வார்த்தைகளில் " நூறு பூக்கள் மலரட்டும்" என்று வாழ்த்தியது. இன்று 300 வலைப்பதிவுகளுக்கு மேல் மலர்ந்திருக்கின்றன. அவற்றில் அலசப்படும் கருத்துக்கள் பல துறையைச் சார்ந்தவை. சில மூத்த எழுத்தாளர்கள் கருதுவது போல அவை 'கையெழுத்துப் பத்திரிகை' அல்ல. தமிழர்களின், குறிப்பாக இளைய தலைமுறையின் சிந்தனைப் போக்குகளை நேரிடையாக அறிந்து கொள்ள உதவும் சாதனம்.

உண்மைதான் வலைப்பதிவுகளில் வயது பேதமின்றிப் பலரும் எழுதுகின்றனர். இளையதலைமுறையினர் தமது சிந்தனைகளையும் கருத்துக்களையும் தயக்கமின்றிப் பகிர்நது கொள்கிறார்கள். இதை விட இலைமறைகாய்களாக இருந்த எத்தனையோபேர் எழுத்துலகில் தம் தடங்களையும் பதித்துள்ளார்கள். தனிமைப் படுத்தப்பட்ட சூழலிலிருந்து தம்மைத் தாமே மீட்டெடுத்திருக்கிறார்கள். எந்த ஊடகங்களையும் காத்திராமல் தாமே தமது கருத்துக்களை துணிவோடு வெளியில் சொல்லியிருக்கிறார்கள். கூடவே முகந்தெரியாதவர்களுடன் நல்ல நட்பையும் வளர்த்துக் கொண்டுள்ளார்கள். சமூகச்சீரழிவாளர்களைப் புடம் போட்டுக் காட்டியுள்ளார்கள். இந்த வலைப்பதிவுகளை செழுமைப் படுத்தும் நோக்கோடு செயற்பட்டு கணினி பற்றியதான பலதொழில்நுட்பங்களைக் கூடக் கற்றுக் கொண்டுள்ளார்கள்.

இலக்கியச் சந்திப்புக்களும் நடக்கின்றன. முன்னர் ஒருமுறை ஈழநாதன் தனது பதிவில் சிங்கப்பூரில் வலைப்பதிவாளர்கள் சிலர் சந்தித்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். வேறுசில சந்தோசமான சந்திப்புகள் பற்றியும் வலைப்பதிவுகளில் வாசித்த ஞாபகம். இன்று மூர்த்தி நேற்று சிங்கப்பூரில் வலைப்பதிவாளர்களில் சிலர் சந்தித்தது பற்றி மிகவும் அழகாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளார். (கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கிறது.)

No comments :

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite