Thursday, November 10, 2005

படித்ததில் பிடித்த ஒரு கதையும் கருத்தும்.


கோ.கணேஷின் பதிவிலிருந்து

முன்னொரு காலத்தில் ஐக்கிய குடியரசில் ஒரு பிரபு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினார். தன் குதிரை வண்டியில் ஊர் சுற்றும் பொழுது ஒரு இடத்தில் ஒரு ஏழை விவசாயி புற்களைத் தின்று கொண்டிருந்தான். உடனே அந்த பிரபு அவனிடம் போய் அவன் புற்களைத் தின்பதற்கான காரணத்தைக் கேட்டார். அவனும் தன் ஏழ்மை நிலை காரணமாக புற்களைத் தின்பதாக சொல்கிறான். உடனே அவனை தன் வண்டியில் ஏற சொல்கிறார்.

வண்டியில் செல்லும் பொழுது அந்த விவசாயி தன் வீட்டில் தன் மகனும் மனைவியும் புற்களைத் திண்று கொண்டிருப்பதாக சொல்கிறான். அதற்கு அந்த பிரபு அவர்களையும் வண்டியில் ஏற்றிக் கொள்வோம் என்று சொல்கிறார். உடனே அந்த விவசாயி தன் அண்ணனும் அவன் மனைவி மக்களும் புற்களைத்தான் தின்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறான். அவர்களையும் வண்டியில் ஏற்றிக் கொள்வதாக பிரபு உறுதியளிக்கிறார்.

பூரிப்படைந்த விவசாயி "உங்கள் வீட்டில் இத்தனை பேருக்கு வேலை இருக்கும் பொழுது ஏன் முன்னமே பணியாட்களை அந்த வேலைகளுக்கு அமர்த்தவில்லை?" என்று கேட்கிறான். அதற்கு அந்த பிரபு "என் வீட்டு தோட்டத்தில் புற்கள் இடுப்பளவு உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றன அவைகளை நீக்குவதற்காகவே உங்களை அழைத்துச் செல்ல சம்மதித்தேன்"
என்று சொல்கிறார்.

வேடிக்கைக்காக சொல்லப்பட்ட விஷயம் தான் என்றாலும் அதிலுள்ள கருத்து ஆழமானது. பிறரது கஷ்டத்தைத் தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்பவர்கள் இந்த உலகத்தில் அநேகம் பேர் இருக்கிறார்கள்.

6 comments :

டிபிஆர்.ஜோசப் said...

சந்திரவதனா!

உங்களுடைய பதிவுகள் எனக்கு பிடித்திருந்ததால் உங்கள் ப்ளாக்கை என்னுடைய 'பிடித்தமான வலைப்பூக்கள்' பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாமா என கேட்டு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். பதிலே இல்லை.

என்ன, செய்துக்கொள்ளட்டுமா?

Chandravathanaa said...

தாரளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் ஜோசஃப்.

உங்கள் மின்னஞ்சல் எனக்குக் கிடைத்தது. அதில் உங்கள் முகவரி மட்டுமே
சரியாகத் தெரிகிறது. மற்றதெல்லாம் கேள்விக்குறிகளாகவே தெரிந்தன.. இது பற்றிக் கேட்டு
அதாவது என்ன எழுதினீர்கள் என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எழுத நினைத்தேன். ஆனால்
வழமையான மற்றைய மின்னஞ்சல்களுக்கான பதில்கள் போலவே இதுவும் தாமதமாகிக் கொண்டிருந்தது.
இப்போ நீங்கள் அது பற்றி இங்கே எழுதியதால் உடன் பதில் தர முடிகிறது.

டிபிஆர்.ஜோசப் said...

மிக்க நன்றி.

Ganesh Gopalasubramanian said...

நன்றி சந்திரவதனா. இது நண்பன் ஒருவன் எனக்கு சொன்ன கதை.

வெளிகண்ட நாதர் said...

இந்த கமண்ட் போடற லிங்க்ல வர ஜெர்மன் வரிகளை என்னான்னு சொல்லுங்களே, கொஞ்ச்ம் தமிழ்ல

Chandravathanaa said...

வெளிகண்டநாதர்
எதைக் கேக்கிறிங்கள்?

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite