Sunday, July 16, 2006

இணையத்தளங்களால் வாசிக்கும் தன்மை குறைந்து விட்டதா?


ஐபிசி தமிழில் செவ்வாய்க்கிழமை இரவு இலக்கிய மாலை நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இம்முறை வாசிக்கும் பழக்கத்தை எப்படி அதிகரிக்கச் செய்யலாம் என்ற கருத்துப்படவே விடயங்களைக் கலந்துரையாடினார்கள்

நூலகவியலாளர் செல்வராஜா, வெளியான புத்தகங்கள் பற்றியும், வாசிப்பின் அவசியத்தைப் பற்றியும் அழகாகச் சொன்னார். தொலைபேசி அழைப்பில் வந்தவர்கள், இன்னும் பலவிதமான கருத்துக்களைச் சொன்னார்கள்.

பிறந்தநாளுக்கோ அன்றி வேறு விசேடங்ககளுக்கோ பரிசளிக்கும் போது, புத்தகங்களைப் பரிசுப் பொருட்களாகக் கொடுங்கள் என்று கௌரி.மகேஸ்வரன் சொன்னார். உண்மையிலேயே அது வரவேற்கப் படக் கூடிய நல்ல கருத்து. நூல்களைப் பரிசாக, அன்பளிப்பாகக் கொடுப்பதும், பெறுவதும் ஒரு இனிய விடயம்தான். ஆனாலும் நூல்களை அன்பளிப்பாகத் கொடுத்து விட்டால் மட்டும் வாசிக்கும் தன்மை அதிகரித்து விடுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இன்னுமொருவர் கருத்துக்களைத் தரும் போது, இணையத் தளங்கள் அதிகமானதால் வாசிக்கும் தன்மை குறைந்து விட்டது எனக் குற்றம் சாட்டியிருந்தார். அந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே.ராஜெனோ, நூலகவியலாளர் செல்வராஜாவோ ஏனோ அந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை.

இணையத்தளங்களில் உள்ள விடயங்களை வாசிக்காமல் எப்படிக் கிரகித்துக் கொள்வது, என்பது எனக்குப் புரியவில்லை. இணையத்தளங்களின் வரவு வாசிக்கும் தன்மையைக் கூட்டியிருக்கின்றது என்றே என்னால் சொல்ல முடிகிறது.

எனது கருத்து சரியா தவறா என்பதை அறிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

சந்திரவதனா
15.7.2006

4 comments :

பாலசந்தர் கணேசன். said...

சினிமாவினால் நாடகம் பாதிக்கபட்டது. டீவி மற்றும் வீடியோவினால் சினிமா பாதிக்க பட்டது. காரணம் ஒரு ஊடகம் மற்றொன்றோடு தெளிவாக உரசுகிறது. இணையத்தினால் புத்தகங்கள் வாசிப்பு பாதிப்பு என்பது எதிர்காலத்தில் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இணையம் அந்த அளவிற்கு இன்னமும் வரவில்லை. முக்கியமாக கம்ப்யூட்டர் தொழில் நுட்ப புத்தகங்கள் கூட விற்பனை அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஈ-புக் வடிவில் அந்த புத்தகங்கள் வெற்றி அடையவில்லை. படிக்கின்றவர்களை இணையம் இன்னமும் திருப்பவில்லை. இந்த சூழ்நிலை மாற வாய்ப்புகள் இன்னமும் பலமாகவே உள்ளது.

மலைநாடான் said...

/பிறந்தநாளுக்கோ அன்றி வேறு விசேடங்ககளுக்கோ பரிசளிக்கும் போது, புத்தகங்களைப் பரிசுப் பொருட்களாகக் கொடுங்கள் என்று கௌரி.மகேஸ்வரன் சொன்னார். உண்மையிலேயே அது வரவேற்கப் படக் கூடிய நல்ல கருத்து. நூல்களைப் பரிசாக, அன்பளிப்பாகக் கொடுப்பதும், பெறுவதும் ஒரு இனிய விடயம்தான். ஆனாலும் நூல்களை அன்பளிப்பாகத் கொடுத்து விட்டால் மட்டும் வாசிக்கும் தன்மை அதிகரித்து விடுமா என்ற கேள்வியும் எழுகிறது./

இவை வாசிக்கப்படுமா ? என்ற சந்தேகத்துடனேயே, நண்பர்களின் கொண்டாட்டங்களில் புத்தகங்களைப் பரிசளிக்கின்றேன்.

இணையத்தால் இப்போதைக்கு வாசிப்பு பழக்கத்திற்குப் பாதிப்பு இல்லையென்பதே என் கருருத்தும்.

ராஜனின் படம் அருமை.
பாராட்டுக்கள்

Chandravathanaa said...

பாலசந்தர் கணேசன்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நீங்கள் சொல்வது போல சினிமாவினால் நாடகமும், தொலைக்காட்சியால் சினிமாவும் பாதிப்படைந்தது உண்மைதான்.

ஆனால் இணையத்தால் வாசிப்புக் குறைந்து விடுவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஈ-புக்கும் வாசிக்கத்தானே.

இணையங்களின் வரவில் புத்தகங்கள் பத்திரிகைகளின் விற்பனைகளில் பெருமளவான பாதிப்பு ஏற்பட்டதே தவிர, வாசிப்பு ஆர்வம் கொண்டவர்கள் இணைய வசதி இருக்கும் பட்சத்தில் இணையங்களில் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Chandravathanaa said...

மலைநாடான்,
நானும் பலருக்கு புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்திருக்கிறேன்.
கொடுக்கும் போது கூடியபங்கு வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களா என்று பார்த்துத்தான் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் சில சமயங்களில் வாசிப்பார்களா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite