முடி உதிருது என்று ஜேர்மனிக்கு வந்த தொடக்கத்தில் (1986-1987) ஒரு மருத்துவரிடம் போனேன். அவர் பெண் மருத்துவர். . கதவு வாசலில் நின்ற படியே என்னை அவர் பார்த்த பார்வை..... இப்பவும் மறக்க மாட்டேன். அப்படியே தூரத்திலேயே நின்றபடி - 'தலை இழுக்கும்போது உதிரும் முடியையும் அதே போல் முழுகிப்போட்டு தலை இழுக்கும்போது உதிரும் முடியையம் எண்ணிக்கொண்டு வா பார்ப்போம்' என்றார்.
இவ்வளவு
தலைமுடியை வைத்துக் கொண்டு வேலைமெனக்கெட்டு அங்கு வந்திருக்கிறேன் என்பது போன்ற பாவனை
அவரிடம். அவருக்கென்ன தெரியும்..! செவ்விளனியும். கொப்பறா தேங்காயும் போட்டுக் காய்ச்சி
அதைத் தினமும் தவறாமல் என் தலையில் தேய்த்துத் தேய்த்து அம்மா வளர்த்து விட்ட முடியில்
அரைவாசிக்கு மேல் கொட்டி விட்டிருப்பது. எனது நீண்ட கூந்தல் நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே
போய்க் கொண்டிருப்பது. இரட்டைப்பின்னலுக்குள்ளேயே அடங்க மறுத்த முடி இப்போது பஞ்சத்தில்
வாடியவன் போல் ஒற்றைப் பின்னாலாகி நலிந்து நிற்பது.
இந்த டொக்டர்
சரியில்லையென்று சொல்லி இன்னொருவரிடம் போனேன். அவர் என்னைப் பார்த்ததும் அதிர்ந்து
போனார். இவ்வளவு முடி வைத்திருக்கிறாய்... என்று வாயைப் பிளந்தார். பிறகு சாட்டுக்கு
என் தலைமுடியைத் தொட்டுப் பார்த்து விட்டு 'கொட்டும் முடியை எண்ணிக் கொண்டு வா' என்றார்.
அன்றிலிருந்து
இன்று வரை தலைமுடி கொட்டிக் கொண்டுதான் இருக்கிறது. எடுத்துக் குப்பைக் கூடையில் போட்டு
விட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறேன். அதன்பின் எந்தத் தோல் வைத்தியரையும் நான் நாடியதில்லை.
சந்திரவதனா
3.6.2014
No comments :
Post a Comment