பூவரசம் இலைகளுக்கு நாங்கள் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தோமா என்று யோசித்த போது பரியாரிமார் மருந்தைக் கொடுத்து சுத்தமான பூவரசம் இலையில் தேனுடன் குழைத்து சாப்பிடும் படி சொல்லுவது ஞாபகத்தில் வந்தது. அடுத்தடுத்து ஞாபகத்தில் வந்தவை இலைகளைச் சுற்றி பீப்பீ ஊதினோம். குழைகளை ஆட்டுக்கு உணவாக்கினோம்.
பூவரசம் கதியால்களும், மரங்களும் இல்லாத வீடுகள் எமது ஊரில் இல்லையேன்றே சொல்லலாம். மதில் வீடுகளில் கூட கிணற்றடியைச் சுற்றியாவது பூவரசு நட்டிருப்பார்கள். அம்மரங்களிலிருந்து இடையிடையே நூல் விட்டு இறங்கும் மசுக்குட்டிகள் (மயிர்க்கொட்டிகள்) கூட வாசிப்பின் போது பலதடவைகள் மசமசப்பையும், பயத்தையும் தந்தன.
இப்போது அடுத்த நாவலிலும் அதே பூவரசு சிலாகிக்கப் படுகிறது.
சுள்ளிடும் வெயிலைத் தடுக்க குடை விரித்திருக்கும் பூவரசமர இலைகள். அதன் கீழிருந்து... என்றும், பூவரசம் பூவில் அழகில்லை, மணமில்லை, அளகத்தில் சூட உதவுவதில்லை...என்றும் தொடர்கிறது எஸ்போவின் ´தீ`.
No comments :
Post a Comment