உயிரோடு உனக்கென்ன பகை?
நேற்றைய பயணம்
இலட்சியப் பாதையில்
இன்றைய சயனம்
அலட்சியப் போக்கிலா
வாயில் கக்கும் நெருப்பு
சூழலை மட்டுமா கெடுக்கும்
ஈரலையும் பொசுக்கும்
ஈன்றவர் இதயம் துடிக்கும்
காற்றின் போக்கில்
தூசுகள்தான் போகும்
ஆற்றின் வேகத்தில்
துரும்புகள்தான் அலையும்
வழிகாட்டி இங்கே
விழி மூடலாமா?
படகோட்டி இங்கே
தடம் மாறலாமா?
வீட்டுக்கு மூத்தவனே
விடியலுக்காய் பூத்தவனே
விட்டிலாய் மாறாதே
மாயையில் மாளாதே!
தீபா செல்வகுமாரன்
11.12.1997
நிலவுமொழி செந்தாமரையை (https://www.facebook.com/photo.php?fbid=1143642165673791&set=a.169553609749323.27936.100000840568456&type=3&theater) சிகரெட்டுடன் பார்த்ததும் எனக்குள் தோன்றியது கவலை மட்டுமே! என்னைச் சுற்றியுள்ள யார் புகைத்தாலும் நான் கவலைப்படுவேன். அவர்கள் எனக்குப் பிடித்தமானவர்களாய் இருந்தால் இன்னும் அதிகமாகக் கவலைப்படுவேன். ஏன் இப்படி இந்தப் புகையில் தங்களைத் தாங்களே கருக்கிக் கொள்கிறார்கள் என நினைத்துக் கொள்வேன்.
எனக்கு ஏனோ நிலவையும் பிடிக்கும். அதனால்தான் கவலையும் வந்தது. எனது மகள் தீபா 1997 இல் எழுதிய இந்தக் கவிதையும் நினைவில் வந்தது.
சந்திரவதனா
14.10.2016
சூழலை மட்டுமா கெடுக்கும்
ஈரலையும் பொசுக்கும்
ஈன்றவர் இதயம் துடிக்கும்
காற்றின் போக்கில்
தூசுகள்தான் போகும்
ஆற்றின் வேகத்தில்
துரும்புகள்தான் அலையும்
வழிகாட்டி இங்கே
விழி மூடலாமா?
படகோட்டி இங்கே
தடம் மாறலாமா?
வீட்டுக்கு மூத்தவனே
விடியலுக்காய் பூத்தவனே
விட்டிலாய் மாறாதே
மாயையில் மாளாதே!
தீபா செல்வகுமாரன்
11.12.1997
நிலவுமொழி செந்தாமரையை (https://www.facebook.com/photo.php?fbid=1143642165673791&set=a.169553609749323.27936.100000840568456&type=3&theater) சிகரெட்டுடன் பார்த்ததும் எனக்குள் தோன்றியது கவலை மட்டுமே! என்னைச் சுற்றியுள்ள யார் புகைத்தாலும் நான் கவலைப்படுவேன். அவர்கள் எனக்குப் பிடித்தமானவர்களாய் இருந்தால் இன்னும் அதிகமாகக் கவலைப்படுவேன். ஏன் இப்படி இந்தப் புகையில் தங்களைத் தாங்களே கருக்கிக் கொள்கிறார்கள் என நினைத்துக் கொள்வேன்.
எனக்கு ஏனோ நிலவையும் பிடிக்கும். அதனால்தான் கவலையும் வந்தது. எனது மகள் தீபா 1997 இல் எழுதிய இந்தக் கவிதையும் நினைவில் வந்தது.
சந்திரவதனா
14.10.2016
No comments :
Post a Comment