Sunday, June 26, 2005

மரணத்தை உடம்பில் குண்டுகளாய்...


மரணத்தை உடம்பில் குண்டுகளாய் கட்டிக் கொண்டு..
சிரித்த படி கை காட்டி விட்டுப் போய் வெடித்துச் சிதறுபவர்களை நினைத்தாலே... மனசு பதறும். எப்படி..? எப்படி...? என்று உள்ளுக்குள் ஏதோ ஒன்று அலறும்.

திடீரென்று வந்த ஒரு வேகத்தில் தற்கொலை செய்வதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

தப்புவதற்கான சாத்தியங்கள் குறைவாயினும், தப்புவதற்கான சாத்தியம் இருக்கும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையுடன் ஆயுதமேந்திப் போராடுவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

சாவேன் என்று தெரிந்து கொண்டு... அதற்கான ஆயத்தங்களை முற்கூட்டியே செய்து கொண்டு... உடம்பிலே குண்டைக் கட்டிக் கொண்டு... சிரித்துக் கொண்டு... கை காட்டிச் செல்லும்... அந்த மனசுக்குள் என்ன இருக்கும்...?

என்னுள் ஆயிரந்தடவைகள் அல்லது இலட்சந்தடவைகள் அல்லது அதையும் விட அதிகமான தடவைகள் எழுந்து விட்ட கேள்வி இது.


சாகப் போகிறேன் என்று தெரிந்து கொண்டு, குண்டு வெடிப்பதற்கான ஆழியை அழுத்தும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான அந்தக் கணப்பொழுதில்... 21வயதுகள் மட்டுமே நிரம்பிய பலஸ்தீனப் பெண்ணான Wafa al-Biss

பரிதாபம். சாகவில்லை என்பதற்காகச் சந்தோசப்பட முடியாத பொழுதுகளும் உண்டென்றால் இதுதான். குண்டு வெடிக்கவில்லை. Wafa al-Biss இப்போ சிறையிலிருந்து அழுகிறாள்.

புகைப்படங்கள் - ஈ.பீ.ஏ

3 comments :

Akbar Batcha said...

வாழ்வதற்கு இனி ஒன்றுமில்லை. தனக்குப் பின்னால் வரும் சமுதாயமாவது தான் படும் அவதைகளிலிருந்து மாறட்டும் என்ற எண்ணமே இவ்வாறு அவர்களை மனித வெடிகுண்டுகளாய் மாற்றிவிடுகிறது. இது உளவியல் மற்றும் சமூகவியலின் அடிப்படையைக் கொண்டே நிகழ்கிறது. இதற்கு தீர்வு என்ன என்பது பலருக்குத் தெரிந்தாலும் இது ஒரு தனிமனித வாழ்வை மட்டும் சார்ந்ததல்ல எனும்போது அந்த தீர்வை செயல்படுத்த இயலாமல் போய்விடுகிறது.

பிரச்சனைகளின் ஆழத்தை ஆய்ந்துப் பார்ப்பதே இதற்கு சிறந்த மருந்து.

arumai said...

சந்திரவானா, இதில் கவனிக்கப் படவேண்டிய விடயம், அந்தக் கணம். இறக்கப் போகிறேன் என்ற அந்தக் கணத்தினை அவளது முகம் பிரதிபலிக்கிறது. குண்டோடு போய் வெடிக்கும் வேறு எந்தப் படத்தையும் நான் இந்த நிலையில் காணவேயில்லை.

இந்தப் பெண்ணானவள் ஒரு தடவை சமையலறையில் எரிவாயு வெடித்து கடுமையான எரிகாயங்களுக்குள்ளானவள். உற்றுக் கவனித்தால் அவளது உடலில் உள்ள எரிகாயங்கள் தெரியும். இவள் சிகிச்சைக்காக காஸா பகுதியில் அனுமதிக்கப் பட்டிருந்தவள். உடலில் வடுக்களோடு அவள் வாழ விரும்பாமல் இருந்திருக்கலாம். எதுவானாலும் மனிதக் குண்டாக அவள் வெடிக்காமல் போனதால் பல உயிர்கள் காப்பற்றப் பட்டதே அந்தளவில் நிம்மதி.

Chandravathanaa said...

இளங்கோ, அக்பர் பாட்ஷா, அருமை
உங்களது வரவுகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
அருமை நீங்கள் தந்த மேலதிக தகவல்களுக்கும் நன்றி.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite