ஐபிசி வானொலியில், இரவி அருணாச்சலம் அவர்கள் நடாத்திய ஒரு நிகழ்சியினூடு சக்தி பெண்கள் இதழின் அறிமுகம் கிடைத்தது. சக்தி இதழ் 1990 ஒகஸ்டில் மைத்திரேஜியின் முழுமுயற்சியுடனும் சுகிர்தா, கலிஸ்டா இராஜநாயகம் ஆகியோரின் பங்களிப்புடனும் காலண்டிதழாக ஆரம்பிக்கப் பட்டது. எனக்கு அறிமுகமான அந்தப் பொழுதில் அவ்விதழ் ராஜினி, அநாமிகா, பிறேம்ராஜ்(நோர்வே), ரவி(சுவிஸ்) ஆகியோரின் பக்கத்துணையுடன் தயாநிதியின்(நோர்வே) முழுமுயற்சியுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. சக்தியின் வெளியீடாக 10.7.1999 இல் புது உலகம் எமை நோக்கி என்ற புத்தகம் முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களுடன் வெளி வந்தது.
இந்தக் கட்டத்தில் ஐபிசியின் இதே நிகழ்ச்சியினூடு பத்மனாபஐயரின் முயற்சியுடன் வெளியாகும் லண்டன் நலன்புரிச் சங்க வெளியீடான இன்னுமொருகாலடியின் அறிமுகமும் கிடைத்தது.
சக்தியின் மூலம் மனோகரனின் அம்மா இதழின் அறிமுகம் கிடைத்து அதையும் பெற்று வாசிக்கத் தொடங்கினேன்.
தொடர்ந்த காலங்களில் ஓரளவுக்கேனும் பரந்துபட்ட சஞ்சிகைகள் வெளியீடுகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தன. இருந்தாலும் நான் வாழும் நகரம் தமிழர்களோ, தமிழ்க்கடைகளோ இல்லாத ஒரு நகரமாகையால் புதிய புதிய வெளியீடுகளை வலிந்து தேடிப் பெற்றாலேயன்றி சுலபமாகப் பெறுவதென்பது முடியாத காரியமாகவே இருந்தது. இன்னும் இருக்கிறது.
அப்படியிருந்தும் நானும் எனது கணவருமாக... போகுமிடங்களிலெல்லாம் வாங்கியும், நண்பர்களின் உதவியோடும்... என்று பெற்றுச் சேமித்து வைத்திருக்கும் தமிழ்ப்புத்தகங்கள்
புது உலகம் எமை நோக்கி(சக்தி வெளியீடு - 10.7.1999)
ஊடறு - பெண் படைப்பாளிகளின் தொகுப்பு - 2002(தொகுப்பாளர்கள் -றஞ்சி, தேவா, விஜி, நிரூபா )
பெண்கள் சந்திப்பு வெளியீடுகள்
பெண்கள் சந்திப்பு மலர் - 2001
பெண்கள் சந்திப்பு மலர் - 2002(பால்வினை சிறப்பு மலர்)
பெண்கள் சந்திப்பு மலர் - 2004
லண்டன் நலன் புரிச்சங்க வெளியீடுகள்
கிழக்கும் மேற்கும் (1997 )
இன்னுமொருகாலடி(1998)
யுகம் மாறும் (1999யூன்)
கண்ணில் தெரியுது வானம் (டிசம்பர்2001)
Adele Balasingam
The will to Freedom 2001(இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம்)
அருணன்
மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை (கட்டுரை-1997)
இரா.இராசேந்திரன்
லோகமானிய திலகர்(யூலை1986)
முனைவர் இரா.இளவரசு
இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்(1990)
முனைவர்.பா.இறையரசு
தமிழர் நாகரிக வரலாறு-(1993)
எழிலன்(திரு.அமலேந்திரன்)
இரவல் இதயங்கள் (கட்டுரை-மார்ச்1997, பூவரசு கலை இலக்கியப் பேரவை வெளியீடு)
க.கணபதிப்பிள்ளை
ஈழத்து வாழ்வும் வளமும்(1962)
கண்ணதாசன்
அர்த்தமுள்ள இந்து மதம் (9 பாகங்கள்)
கவிதைகள் 5வது தொகுதி – 1972
ஆ.சி.கந்தராஜா
உயரப்பறக்கும் காகங்கள் (சிறுகதைத் தொகுப்பு - 2003)
பாவனை பேசலன்றி(சிறுகதைத் தொகுப்பு - 2000)
தமிழ் முழங்கும் வேளையிலே(செவ்விகளின் தொகுப்பு - 14.11.2000, சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சிக்காக இவர் கண்ட 18 பேட்டிகள்)
கருக்கு பாமா
தழும்புகள் காயங்களாகி
பொ.கருணாகரமூர்த்தி
கிழக்கு நோக்கி சில மேகங்கள்( சிறுகதைத் தொகுப்பு ஏப்ரல்1996)
ஒரு அகதி உருவாகும் நேரம் (மூன்று குறுநாவல்கள்-ஏப்ரல்1996)
அவளுக்கென்றொரு குடில்(1999)
மு.கருணாநிதி
குறளோவியம் (1985)
கோசல்யா சொர்ணலிங்கம்
கோசல்யா கவிதைகள் (கவிதைகள்-2000)
சோ.சந்திரசேகரன்
இலங்கை இந்தியர் வரலாறு(1989)
சந்திரா தியாகராஜா(சந்திரா ரவீந்திரன்)
நிழல்கள் (சிறுகதைத் தொகுப்பு)
த.சரீஷ்
தென்றல் வரும் தெரு (கவிதைகள் 2002)
சாந்தி ரமேஷ்வவுனியன்
அழியாத ஞாபகங்கள் (கவிதைகள்-சித்திரை-2001)
இன்னொரு காத்திருப்பு (கவிதைகள் - 2000)
கலையாத நினைவுகள் (சிறுகதைத் தொகுப்பு-2001)
சித்தார்த்தன்
யாதும் ஊரே-1992
வேலணையூர் சுரேஸ்
களத்தீ(போர்க்காலக்கவிதைகள்-1992);
உலராத மண்(போர்க்காலக்கவிதைகள்-1995)
சுஜாதா
ஏன்? எதற்கு? எப்படி?(ஆனந்தவிகடன் வெளியீடு-1992)
புலவர் செந்துறைமுத்து
இலக்கண வரலாற்றுப் பேழை(1986)
வித்துவான் க.செபரத்தினம்
ஈழத்துத் தமிழ் சான்றோர்
மட்டுவில் ஞானக்குமாரன்
முகமறியா வீரர்களுக்காக (கவிதைகள் - 2000)
டொமினிக் ஜீவா
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (1999)
டீ.தங்கநேயன்
எம்.ஜ.ஆரும் ஈழத்தமிழரும்(ஈழமுரசு பிரசுரம்)
திக்கவயல் தர்மகுலசிங்கம்
வரலாற்றில் தமிழும் தமிழரும்(1999)
தி.திலீபன் - (நோர்வே நக்கீரனார்)
துப்பாக்கியில் துளிர் விடும் தேசம் (கவிதைகள்-1997)
சி.சு.நாகேந்திரன்
அந்தக் காலத்து யாழ்ப்பாணம்(2004)
நாவண்ணன்
கரும்புலி காவியம்
அக்கினிக்கரங்கள்(போர்க்கால உண்மைக்கதை-1995)
நித்தியகீர்த்தி(நிதி)
மீட்டாதவீணை(நாவல்-1972)
பழ நெடுமாறன்
தமிழீழம் சிவக்கிறது(1993)
பாலரஞ்சனி சர்மா
மனசின் பிடிக்குள் - (ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு-2001)
சு.மகேந்திரன்
காலவெளி(சிறுகதைகளும் கவிதைகளும் -2000)
மதன்
மதன் ஜோக்ஸ்-1
மதன் ஜோக்ஸ்-2
வந்தார்கள் வென்றார்கள் (1994)
மு.மேத்தா
கண்ணீர் பூக்கள் (கவிதைகள் -1974)
ரமேஸ்வவுனியன்
தேடல் (26கவிதைகள் - 2000)
ரவி-சுவிஸ்(பாலமோகன்)
செட்டை கழற்றிய நாங்கள் (கவிதைகள் - 1995)
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
தில்லையாற்றங்கரையில்(நாவல் Jan 1998)
பனிபெய்யும் இரவுகள்(நாவல் Sep 1993)
கவிஞர் வாலி
அவதார புருஷன் (கவிதை நடை - 1996)
சிகரங்களை நோக்கி
வைரமுத்து
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்(நாவல் 1991)
சிகரங்களை நோக்கி(கவிதைக்கதை 1992)
ஜெயமோகன்
நாவல் (விமர்சனம்)
காஞ்சி ஸ்டாலின்
செம்பியர் கோன் (நாடகம் - 1991)
தமிழீழவிடுதலைப்புலிகள் வெளியீட்டுப்பிரிவினரின் வெளியீடுகள்
அம்மாளைக் கும்பிடுறானுகள் - உண்மைக்கதைகள் (1994)
கப்டன் ரஞ்சன் (அரசியல் பிரிவு தமிழீழ விடுதலைப் புலிகள்-மாசி 1998)
உயிரைப்பிழியும் உண்மைகள் (ஜெகத் கஸ்பார்-வெரித்தாஸ் தமிழ்ப்பணிக்கு வந்த மடல்களின் தொகுப்பு)
மேஜர்.கிண்ணி(கஸ்ரோ-மார்கழி 1992)
மாவீரர் குறிப்பேடு(1990)
போர்ப்பறைப் பாடல்கள்
வானம் எம் வசம்(கவிதைகள்-1995)
ஏழு சிறுகதைகள்(வன்னியில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களின் 13சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு)
ஆறுமுகநாவலர்
நன்னூல் காண்டிகையுரை - எழுத்ததிகாரம்(2000)பதிப்பாசிரியர் புலியூர் கேசிகன்
நன்னூல் காண்டிகையுரை - சொல்லதிகாரம(2001)பதிப்பாசிரியர் புலியூர் கேசிகன்
ச.சரோஜா
மரியாதை ராமன் கதைகள்(நவம்பர்1990)
திருக்குறள்
சித்தர் பாடல்கள்(1987)
பாரதியார் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள்
திருமூலரின் திருமந்திர விருந்து
சங்கஇலக்கியம் 15 பாகங்கள்(1995)
பதினெண்கீழ்கணக்கு 5 பாகங்கள்
நளன் தமயந்தி
சிலப்பதிகாரம்(1984)
இரவல் கொடுத்ததால் என்னிடமிருந்து இல்லாமல் போன புத்தகங்களில் நினைவில் உள்ள சில
முகில்வாணன் கவிதைகள்
காசி ஆனந்தன் கவிதைகள்
படிக்காமலே விட்ட புத்தகங்களில் நினைவில் உள்ள சில
பகவத்கீதை
படிக்க விரும்பும் புத்தகங்களில் நினைவில் உள்ள சில
அம்பையின் படைப்புக்கள்
ஏழாம் உலகம்(ஜெயகாந்தனின்)
சில நேரங்களில் சில மனிதர்கள்(ஏற்கெனவே படித்திருந்தாலும் இன்னுமொருமுறை படிக்க விருப்பம்)
Gone with the wind
புத்தகங்களோடு-1
புத்தகங்களோடு-2
புத்தகங்களோடு-3
புத்தகங்களோடு-4
தற்சமயம் என்னிடமுள்ள புத்தகங்கள்-1
தற்சமயம் என்னிடமுள்ள புத்தகங்கள்-2
இவைகளில் பல புத்தகங்களுக்கு நான் மதிப்புரையும் விமர்சனமும் எழுதியுள்ளேன். அவைகளை அவ்வப்போது நேரம் கிடைக்கும் பட்சத்தில் இங்கு பதிய முயற்சிக்கிறேன்.
இவைகளை விட ஜேர்மனிய மொழியில் உள்ள ஓவியம், சரித்திரம், நாவல், சிறுகதை, மருத்துவம், புவியியல்... புத்தகங்கள் நிறைய உள்ளன. அவைகளை சமயம் வரும் போது மதிப்புரையுடன் இங்கு பதிய முயற்சிக்கிறேன்.
சந்திரவதனா
11.7.2005
2 comments :
அக்கா, ஈழத்து எழுத்தாளர்களையும் புலம் எழுத்தாளர்களையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
நன்றி sansuthan
Post a Comment