நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று பேரூந்தில் பயணிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. இரவின் இருளிலும் வெளி அழகாக இருக்கும். ரசிப்பதாகத்தான் நினைத்துக் கொண்டு ஏறினேன். முகப்புத்தகம் முழுவதும் சுவாரஸ்யங்கள் கொட்டிக் கிடந்தன. இதை முடித்து விட்டுப் பார்ப்போம். ஆ இதுவும் நல்லாயிருக்கு. இதையும் முடிப்போம். இப்படியே முடியாமல் என் வாசிப்பு தொடர்ந்து கொண்டிருக்கவே தரிப்பிடம் வந்து விட்டது. என்னைச் சொல்லிக் குற்றமில்லை.
சந்திரவதனா
16.11.2015
Monday, November 16, 2015
Monday, November 02, 2015
தமிழ்செல்வனுடன்
தமிழ்செல்வனுடன் அரசியல்துறை அலுவலகத்தில்
28.05.2002 |
தமிழ்செல்வனுடன் அரசியல்துறை அலுவலகத்தில் 28.05.2002
தலைவர் பிரபாகரனுக்கும் எமக்கும் இடையில் ஒரு பாலமாக எப்போதும் இருந்தவர் தமிழ்செல்வன். தமிழ்செல்வனை முதல் முதல் நான் வன்னியில் 2002 மே மாதத்தில் சந்தித்த போது அவர் அதே சிரிப்புடன், எப்போதும் நாம் பத்திரிகைகளிலும், ஒளி நாடாக்களிலும் பார்த்தவர் போலவே என்னை எதிர் கொண்டார். அக்கா..! அக்கா..! என்று உரிமையோடு அழைத்து அன்போடு பேசினார். அவரது அன்பும், பழகும் தன்மையும் எனக்கு ஆச்சரியமான சந்தோசத்தையே தந்தன.
நாங்கள் வன்னியில் வெண்புறாவில் நின்ற சமயத்தில் அடிக்கடி வந்து எம்மைச் சந்தித்து எமக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். எப்போது வந்தாலும் அக்கா.. என்ற படி வந்து என்னோடு பேசி விட்டுத்தான் செல்வார்.
ஒருதரம் கதையில் சொன்னார் "மொறிஸ் வடமராட்சிக்கும், நான் தென்மராட்சிக்கும் பொறுப்பாய் இருந்தோம். நான் இங்கு வந்து விட்டேன். மொறிசும் வருவதாகத்தான் இருந்தது. அதற்கிடையில் மாவீரனாகி விட்டார்" என்று.
எம்மோடு அவருக்கு 2002 இலிருந்து மின்னஞ்சல் தொடர்புகள் இருந்தன. அலெக்ஸ்சும், வசந்தனுமே அவரது மின்னஞ்சல்களை அவரது பெயரில் எனக்கு அனுப்பி வைப்பார்கள். ஒவ்வொரு மின்னஞ்சலுமே அன்புடன் அக்காவுக்கு... என்றுதான் தொடங்கியிருக்கும். அன்புடன் சகோதரன், சு.ப. தமிழ்ச்செல்வன் என்று முடித்திருப்பார்.
அலெக்சும், வசந்தனும் ஒரே நபர்களா என்ற சந்தேகம் எனக்கு இடையிடையே ஏற்பட்டதுண்டு. பின்னர் ஒரு தடவை ஜேர்மனி, ஸ்ருட்கார்ட் நகரில் அலெக்சுடன் அருகில் இருந்து கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
தமிழ்செல்வன் ஜேர்மனிக்கு வரும் போதுகளில் மின்னஞ்சல் மூலம் அறிவித்து விட்டுத்தான் வந்தார். வந்து நின்ற போதும் தொலைபேசியில் அழைத்து பலதடவைகள் கதைத்தார். நாங்கள் அவரை நேரே சென்றும் சந்தித்தோம். (ஒரு தடவை சந்தித்த போது பாலா அண்ணையும் கூட இருந்தார். பாலாண்ணை எனது தம்பி மயூரனை நன்கு அறிந்து வைத்திருந்தார்)
இறந்தாலும் இறவாது
நினைவுகளில் என்னோடு வாழ்பவர்களில்
தமிழ்செல்வனும் ஒருவர்.
கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு என்பது போல
சிலர் பற்றி சொல்ல முடிவது சிறிதே. சொல்லாதவை பெரிது.
சந்திரவதனா
02.11.2015
Labels:
2002
,
தமிழ்செல்வன்
,
தாயகப் பயணம்
,
தாயகம்
,
வன்னி
,
விடுதலைப்புலிகள்
கப்டன் மயூரன் (சபா - பாலசபாபதி)
தம்பிமார்கள் அக்காமார்களுக்குக் கிடைத்த கொடைகள்.
அவர்களிடம் பட்ட அன்புக் கடனை தீர்த்து வைக்கும் பாக்கியம்
எல்லா அக்காமாருக்கும் வாய்த்து விடுவதில்லை.
http://captain-mayuran.blogspot.de/
அவர்களிடம் பட்ட அன்புக் கடனை தீர்த்து வைக்கும் பாக்கியம்
எல்லா அக்காமாருக்கும் வாய்த்து விடுவதில்லை.
http://captain-mayuran.blogspot.de/
Captain Majuran (Saba) 01.11.1970 . 11.11.1993 |
Captain Majuran (Saba) 01.11.1970 . 11.11.1993
Labels:
தாயகம்
,
மயூரன்
,
விடுதலைப்புலிகள்
,
வீரச்சாவு
Monday, October 26, 2015
ஞானம் 175 - ஈழத்து புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழில்
சந்தோசங்கள் எதிர்பாராமல் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. நான் 1999 இல் எழுதி சக்தி இதழில் பிரசுரமான சிறுகதை ஒன்று எனக்குத் தெரியாமலே ஞானம் 175 - ஈழத்து புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழில் பிரசுரமான போது வராத சந்தோசத்தை நேற்று அர்த்த ஜாமத்தில் ஒரு செய்தியாக வந்த இந்தப் படம் தந்தது. அன்போடு அனுப்பி வைத்த மயூரனுக்கு (Inuvaijur Mayuran) மிக்க நன்றி.
Friday, October 16, 2015
Thumilan´s Wedding on 07.08.2015
ஹோமம் வளர்த்து, அக்னி சாட்சியாய், மேள தாளம், நாதஸ்வரத்துடன் மாலைமாற்றி ஒரு சம்பிரதாயக் கல்யாணம். அம்மாவுடன் மகன் துமிலனும், மருமகள் செலினாவும்.
அம்மாவின் உடல் நிலையில் ஒன்றரை மணித்தியாலங்கள் பயணம் செய்து வந்து, ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ந்து கல்யாணமண்டபத்தில் அம்மாவால் இருக்க முடியுமா என்ற கேள்வியும்இ பயமும் எங்கள் எல்லோரிடமும் இருந்தது. அம்மாவிடம் ஒரு தயக்கமும் இருந்தது. ஆனாலும் அம்மா வந்து கல்யாணத்தைக் கண்டு களித்து, எம்முடன் ஒன்றாக இருந்து, விருந்துண்டு மீண்டும் ஒன்றரை மணித்தியாலங்கள் பயணித்துச் சென்றா. அந்த ஐந்து மணித்தியாலங்களும் அம்மா அங்கு எங்களுடன் கூடி நின்றது பெரும் சந்தோசம்.
Wednesday, October 14, 2015
செல்வா
தலைவர் பிரபாகரனை முதல்முறை(30.05 2002 ) சந்தித்த பொழுது, “பிபிசி தமிழ்ச் சேவையில் விவரணம் ஒன்றின் போது உறுதியோடு பேசிய, 14 வயதிலேயே இரண்டு கைகளையும் இழந்த ஒரு பெண்ணை நவம் அறிவுக்கூடம் போயும் சந்திக்க முடியாது போய் விட்டது என்று ஆதங்கப் பட்டேன்.
„நீங்கள் சொல்லுறது செல்வாவை எண்டு நினைக்கிறன். அவ நவம் அறிவுக் கூடத்திலை இல்லை. இங்கை கிட்டத்தான் இருக்கிறா” என்றார்.
„அந்தப் பிள்ளையை சந்திக்க வாய்ப்பிருக்கோ?“ கேட்டேன்.
„இப்பவே சந்திக்கலாம். பத்து நிமிசத்துக்குள்ளை ஆள் வந்திடும்” என்றார்.
அவர் சொன்ன படி பத்தாவது நிமிடத்தில் கையில்லாத போதும் மனவலிமையோடு வாயாலும், காலாலும் எலக்ரோனிக் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் செல்வா அங்கே நின்றாள்.
என் விருப்பத்துக்கு அமைய வாயால் ஒரு கவிதை எழுதித் தந்தாள். வியப்பாக இருந்தது.
சந்திரவதனா
12.10.2015
Labels:
2002
,
2015
,
செல்வா
,
தலைவர்
,
தலைவர் பிரபாகரன்
,
தாயகப் பயணம்
,
தாயகம்
,
பிரபாகரன்
,
வன்னி
Thursday, September 17, 2015
அவள் காத்து நின்றாள்
நேற்று நான் வேலைக்குச் சென்ற போது அவள் வேலைத்தளத்து வாசலில் காத்து நின்றாள்.
24 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தவள், கடைசி வருடங்களில் ஏதோ ஒரு வித அதிருப்தியினால் அவதிப்பட்டுக் கொண்டே இருந்தாள். வேலையை விட்டு விடப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். எப்போதும் எமது தலைமை அதிகாரியிலிருந்து அடிமட்டத்தில் உள்ளவர் வரை எல்லோரிலும் ஏதேதோ குறைகள் கண்டு பிடித்து எல்லோரையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது நச்சரிப்பும், எரிச்சலும்... தாங்காது அவள் வேலையை விட்டுப் போனால் காணும் என்று நினைக்கும் அளவுக்கு எல்லோருமே வந்து விட்டிருந்தார்கள். அவ்வப்போது தமக்குள் அவள் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். என்னோடு அவள் நல்ல மாதிரி நடந்து கொண்டிருந்தாலும் அவளது தொணதொணப்பைக் கேட்க முடியாமல் நான் கூட அவள் வேலையை விட்டுப் போய் விட்டால் நல்லதேன்றே ஒரு கட்டத்தில் நினைத்தேன்.
அந்த நாளும் வந்தது.
திடீரென்று வேலையின் இடையில் தலைமைப்பொறுப்பாளரின் அறைக்குச் சென்று சில பல குறைகளைச் சொல்லித் திட்டி விட்டு தான் இராஜினாமா செய்யப் போகிறேன் என்று சொல்லி விட்டாள்.
அவளது அநாகரீகமான செயல் தலைமை அதிகாரிக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர் அமைதியாக „மிகவும் சந்தோசம், போய் விடு“ என்று சொல்லி அவளை அனுப்பி விட்டார். அத்தோடு அவளுக்கும் எனக்குமான தொடர்பு மெதுமெதுவாகக் குறைந்து விட்டது. மீண்டும் மீண்டுமாய் அவள் தொலைபேசியில் அழைத்து, குறைகளே சொல்வதை என்னால் கேட்க முடியாதிருந்தது.
அவள் சென்ற பின்னான எனது வேலை நேரங்கள் அமைதியாகவே கழிந்தன. மற்றைய தோழிகள் எல்லோருமே „அப்பாடா போய் விட்டாள்“ என்று மிகுந்த ஆசுவாசத்துடன் இருந்தார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றினாலும் அவ்வப்போது அவள் இல்லாத குறை தென்படத்தான் செய்தது.
அவளைப் போல அறிவார்ந்து பேசக் கூடிய, எந்தத் பொருள் பற்றிப் பேசினாலும் அது பற்றிப் பேசவோ, தர்க்கிக்கவோ கூடிய இன்னும் சொல்லப் போனால் கதைக்க, சிரிக்க அவ்வப்போது கோபப் பட… என்று அவளைப் போல யாருமே அவள் போன இந்த ஒன்பது மாதங்களில் எனக்குக் கிடைக்கவில்லை. அவள் என் வாழ்வில் ஏதோ ஒரு சிறு பங்கு இடத்தையாவது எடுத்திருந்தாள்.
நான் அவளை என து 31 வது வயதில் முதன் முதலாகச் சந்தித்த போது உலகின் பல கூறுகளை எனக்குத் தெரியாது. ஜெர்மன் மொழியும் அவ்வளவாகத் தெரியாது. அவளுக்கு ஆங்கிலம் துளியும் தெரியாது. ஜெர்மனியைப் பூர்வீகமாகக் கொண்ட போலந்து நாட்டுக்காரி அவள். ஆனாலும் நிறையவே பேசினோம். நிறையவே சிரித்தோம். பேசவே கூடாது என்று எனது சமுதாயம் எனக்குத் தடை விரித்திருந்த விடயங்களைக் கூடப் பேசினோம். சேர்ந்து சாப்பிட்டோம். ஐஸ்கிறீம் சுவைத்தோம். தேநீர் அருந்தினோம். வாய் விட்டுச் சிரித்தோம்.
அந்த அவளேதான் எனக்காக என் வேலைத்தள வாசலில் காத்து நின்றாள். என்னைக் கண்டதும் ஓடி வந்து இறுகக் கட்டி அணைத்தாள். எனக்குள்ளும் ஏதோ ஒரு சந்தோசம் அலை புரண்டது. கிட்டத்தட்ட பத்துநிமிடங்கள் நின்று பேசி விட்டுச் சென்றாள். மீண்டும் அதே அறிவார்ந்த பேச்சு. சிரிப்பு...
எந்தவித சிந்தனையுமின்றி, வார்த்தைகளைத் தேடிப் பொறுக்கித்தான் பேச வேண்டும் என்ற பயமின்றி இயல்பாகப் பேசக் கூடிய இப்படியான உறவுகளும் கண்டிப்பாக வேண்டுமென்பதை அதன் பின்னான என் மனதின் சந்தோசம் எனக்கு உணர்த்தியது.
சந்திரவதனா
17.9.2015
24 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தவள், கடைசி வருடங்களில் ஏதோ ஒரு வித அதிருப்தியினால் அவதிப்பட்டுக் கொண்டே இருந்தாள். வேலையை விட்டு விடப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். எப்போதும் எமது தலைமை அதிகாரியிலிருந்து அடிமட்டத்தில் உள்ளவர் வரை எல்லோரிலும் ஏதேதோ குறைகள் கண்டு பிடித்து எல்லோரையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது நச்சரிப்பும், எரிச்சலும்... தாங்காது அவள் வேலையை விட்டுப் போனால் காணும் என்று நினைக்கும் அளவுக்கு எல்லோருமே வந்து விட்டிருந்தார்கள். அவ்வப்போது தமக்குள் அவள் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். என்னோடு அவள் நல்ல மாதிரி நடந்து கொண்டிருந்தாலும் அவளது தொணதொணப்பைக் கேட்க முடியாமல் நான் கூட அவள் வேலையை விட்டுப் போய் விட்டால் நல்லதேன்றே ஒரு கட்டத்தில் நினைத்தேன்.
அந்த நாளும் வந்தது.
திடீரென்று வேலையின் இடையில் தலைமைப்பொறுப்பாளரின் அறைக்குச் சென்று சில பல குறைகளைச் சொல்லித் திட்டி விட்டு தான் இராஜினாமா செய்யப் போகிறேன் என்று சொல்லி விட்டாள்.
அவளது அநாகரீகமான செயல் தலைமை அதிகாரிக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர் அமைதியாக „மிகவும் சந்தோசம், போய் விடு“ என்று சொல்லி அவளை அனுப்பி விட்டார். அத்தோடு அவளுக்கும் எனக்குமான தொடர்பு மெதுமெதுவாகக் குறைந்து விட்டது. மீண்டும் மீண்டுமாய் அவள் தொலைபேசியில் அழைத்து, குறைகளே சொல்வதை என்னால் கேட்க முடியாதிருந்தது.
அவள் சென்ற பின்னான எனது வேலை நேரங்கள் அமைதியாகவே கழிந்தன. மற்றைய தோழிகள் எல்லோருமே „அப்பாடா போய் விட்டாள்“ என்று மிகுந்த ஆசுவாசத்துடன் இருந்தார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றினாலும் அவ்வப்போது அவள் இல்லாத குறை தென்படத்தான் செய்தது.
அவளைப் போல அறிவார்ந்து பேசக் கூடிய, எந்தத் பொருள் பற்றிப் பேசினாலும் அது பற்றிப் பேசவோ, தர்க்கிக்கவோ கூடிய இன்னும் சொல்லப் போனால் கதைக்க, சிரிக்க அவ்வப்போது கோபப் பட… என்று அவளைப் போல யாருமே அவள் போன இந்த ஒன்பது மாதங்களில் எனக்குக் கிடைக்கவில்லை. அவள் என் வாழ்வில் ஏதோ ஒரு சிறு பங்கு இடத்தையாவது எடுத்திருந்தாள்.
நான் அவளை என து 31 வது வயதில் முதன் முதலாகச் சந்தித்த போது உலகின் பல கூறுகளை எனக்குத் தெரியாது. ஜெர்மன் மொழியும் அவ்வளவாகத் தெரியாது. அவளுக்கு ஆங்கிலம் துளியும் தெரியாது. ஜெர்மனியைப் பூர்வீகமாகக் கொண்ட போலந்து நாட்டுக்காரி அவள். ஆனாலும் நிறையவே பேசினோம். நிறையவே சிரித்தோம். பேசவே கூடாது என்று எனது சமுதாயம் எனக்குத் தடை விரித்திருந்த விடயங்களைக் கூடப் பேசினோம். சேர்ந்து சாப்பிட்டோம். ஐஸ்கிறீம் சுவைத்தோம். தேநீர் அருந்தினோம். வாய் விட்டுச் சிரித்தோம்.
அந்த அவளேதான் எனக்காக என் வேலைத்தள வாசலில் காத்து நின்றாள். என்னைக் கண்டதும் ஓடி வந்து இறுகக் கட்டி அணைத்தாள். எனக்குள்ளும் ஏதோ ஒரு சந்தோசம் அலை புரண்டது. கிட்டத்தட்ட பத்துநிமிடங்கள் நின்று பேசி விட்டுச் சென்றாள். மீண்டும் அதே அறிவார்ந்த பேச்சு. சிரிப்பு...
எந்தவித சிந்தனையுமின்றி, வார்த்தைகளைத் தேடிப் பொறுக்கித்தான் பேச வேண்டும் என்ற பயமின்றி இயல்பாகப் பேசக் கூடிய இப்படியான உறவுகளும் கண்டிப்பாக வேண்டுமென்பதை அதன் பின்னான என் மனதின் சந்தோசம் எனக்கு உணர்த்தியது.
சந்திரவதனா
17.9.2015
Thursday, September 03, 2015
எம்மவர்கள் எழுதுவதிலோ, புனைவதிலோ தாழ்ந்தவர்கள் அல்லர்.
உங்களை நோவதை என்னால் தவிர்க்க முடியவில்லை இரவி அருணாச்சலம்! ஜெயமோகனின் எழுத்தை நான் குறை கூறவில்லை. அது நல்லதாக இருக்கலாம். அதன் சுவை உங்களுக்கு தேவாமிர்தத்தை விட மேலாகவும் இருக்கலாம்.
அவரது படைப்பைப் போல ஒரு படைப்பை உங்களால் தர முடியாது என நீங்கள் கருதினால் அது உங்கள் மீது அதாவது உங்கள் எழுத்துக்கள் மீது உங்களுக்கு உள்ள அபிப்பிராயம் எனக் கொள்ளலாம். ஆனால் ///என் சக ஈழத்துப் படைப்பாளிகள் எவராலும் அவ்வாறான படைப்பினைத் தந்துவிட முடியாது என்பது என் திண்ணம்/// என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்? இன்று மட்டுமல்ல, முன்னும்பல தடவைகள் இப்படி எழுதி விட்டீர்கள்.
உயிரை உருக்கும், நெஞ்சத்தைக் கிள்ளும்... எத்தனை படைப்புகளை (புனைவுகளும் அடக்கம்) எம்மவர்கள் (நீங்கள் குறிப்பிடும் அந்த உங்கள் சக படைப்பாளிகள் ) தந்து விட்டார்கள். அப்படியான எம்மவர்களது உயிர் தீண்டும் படைப்புகளை ஜெயமோகனால் தர முடியுமா?
ஜெயமோகனின் எழுத்துகளோ அல்லது வேறுயாரது எழுத்துக்களோ உங்களுக்குப் பிடித்திருந்தால் அவைகளையும், அவர்களையும் தாரளாமாகப் பாராட்டுங்கள். தவறேதும் இல்லை. அவர்களை உயர்த்துவதாக நினைத்து எம்மவர்களைத் தாழ்த்தாதீர்கள்.
எம்மவர்கள் எழுதுவதிலோ, புனைவதிலோ தாழ்ந்தவர்கள் அல்லர்.
அவரது படைப்பைப் போல ஒரு படைப்பை உங்களால் தர முடியாது என நீங்கள் கருதினால் அது உங்கள் மீது அதாவது உங்கள் எழுத்துக்கள் மீது உங்களுக்கு உள்ள அபிப்பிராயம் எனக் கொள்ளலாம். ஆனால் ///என் சக ஈழத்துப் படைப்பாளிகள் எவராலும் அவ்வாறான படைப்பினைத் தந்துவிட முடியாது என்பது என் திண்ணம்/// என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்? இன்று மட்டுமல்ல, முன்னும்பல தடவைகள் இப்படி எழுதி விட்டீர்கள்.
உயிரை உருக்கும், நெஞ்சத்தைக் கிள்ளும்... எத்தனை படைப்புகளை (புனைவுகளும் அடக்கம்) எம்மவர்கள் (நீங்கள் குறிப்பிடும் அந்த உங்கள் சக படைப்பாளிகள் ) தந்து விட்டார்கள். அப்படியான எம்மவர்களது உயிர் தீண்டும் படைப்புகளை ஜெயமோகனால் தர முடியுமா?
ஜெயமோகனின் எழுத்துகளோ அல்லது வேறுயாரது எழுத்துக்களோ உங்களுக்குப் பிடித்திருந்தால் அவைகளையும், அவர்களையும் தாரளாமாகப் பாராட்டுங்கள். தவறேதும் இல்லை. அவர்களை உயர்த்துவதாக நினைத்து எம்மவர்களைத் தாழ்த்தாதீர்கள்.
எம்மவர்கள் எழுதுவதிலோ, புனைவதிலோ தாழ்ந்தவர்கள் அல்லர்.
Friday, July 24, 2015
வலன்ரீனா
இன்றாவது அவளைப் பற்றி நான் எழுதி விட வேண்டும். 13 வருடங்களாக மன இடுக்குகளில் ஒளிந்திருப்பவள்.
அவள் ஒரு சிங்களப் பெண். பெயர் வலன்ரீனா. மிகவும் மென்மையாகப் பேசத் தெரிந்தவள்.
இடுப்பில் குடத்துடன் தண்ணீர் மொண்டு கொண்டு செல்ல வந்திருந்தாள். பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அவளைப் பிடித்துப் போயிருந்தது. அவளுக்கும் என்னைப் பிடித்திருந்தது என்றுதான் நினைக்கிறேன். கிணற்றிலிருந்து தண்ணீரை மொண்டு குடத்தை நிரப்பும் போதும் சரி, குடத்தை இடுப்பில் வைத்துத் திரும்பும் போதும் சரி என்னுடன் கதைத்துக் கொண்டே இருந்தாள். எனது அந்தரமான மனநிலை பற்றி அவளுக்கு ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
„தம்பி விடுதலைப்போரில் மாவீரனாகி விட்டான்“ என்றாள். ஆச்சரியம் மேலிட „எங்கே நடந்தது?“ என்று கேட்டேன். தாங்கள் முதலில் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும் அங்கு நடந்த போரில்தான் தம்பியை இழந்ததாகவும் சொன்னாள். விடுதலைப்புலிகள்தான் தமக்கு இப்போது இங்கே பாதுகாப்புத் தந்திருக்கிறார்கள் என்றாள்.
நான் எனது தம்பிமாரைப் பற்றியும் சொன்னேன்.
உடனே அவள் „நானும் அம்மாவும் மட்டுந்தான் அங்கே எங்கள் வீட்டில் தனியாக வசிக்கிறோம். ஒருக்கால் வந்து விடு. உன்னைப் பார்த்தால் எனது அம்மா மிகவும் சந்தோசப் படுவாள்“ என்றாள்.
இப்போது ஒரு முக்கியமான விடயத்துக்காகக் காத்திருப்பதால் வர முடியாத சங்கடமான நிலையில் உள்ளேன் என்பதைச் சொன்னேன். என்ன விடயம் என்று சொல்லி விடலாமா என்று கூட யோசித்தேன். எனது தயக்கத்தைப் பார்த்து „கனதூரம் இல்லை. பக்கத்தி லைதான் வீடு“ அவள் மீண்டும் மீண்டுமாய் வலிந்தழைத்தாள். ஒரே ஒரு தடவை வரும்படி இரந்து கேட்டாள்.
நான் அவள் காட்டிய பக்கம் பார்த்தேன். எந்த வீடும் என் கண்களுக்குத் தெரியவில்லை. எல்லா வீடுகளுமே அங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்தனவோ?
„உடனை போயிட்டு வந்திடலாம்“ என்றாள்.
அவளது அன்பான வேண்டுதலும், கனிவான பேச்சும், என்னைத் தன் அம்மாவிடம் அழைத்துப் போக வேண்டுமென்ற ஆர்வமும், ஆவலும் அதீதமானதாகவே இருந்ததால் என் மனது மிகவும் சஞ்சலப்பட்டது. ஒருக்கால் போயிட்டு வருவோமா என்ற எண்ணம் என்னை உந்திக் கொண்டே இருந்தது. ஆனாலும் போகவில்லை.
அன்று 30.05.2002 தலைவர் பிரபாகரனைச் சந்திப்பதற்காக கிளிநொச்சி வெண்புறாநிலையத்திலிருந்து புறப்பட்டு இடையில் மரங்களும், செடிகொடிகளும் நிறைந்து மறைந்திருந்த ஒரு குடிசையடியில் அடுத்து வரப்போகும் வாகனத்துக்காகக் காத்திருந்தோம். வாகனம் வருமா? எப்போது வரும்? அல்லது பிரபாகரனே அங்குதான் வரப்போகிறாரா? என்று எத்தனையோ கேள்விகள் தொக்கி நிற்க காத்திருந்த அந்த வேளையில்தான் வலன்ரீனா அங்கே குடத்துடன் வந்தாள். மிகவும் மெல்லிய, சிறிய, அழகிய, இளம் சிங்களப் பெண்.
இன்றும் கூட எனக்குள் ஒரு வேதனை. அவளது ஆசைக்கு இணங்கி ஒரு தரம், ஒரே ஒரு தரம் போய் அவளது அம்மாவைச் சந்தித்திருக்கலாமே என்று.
சந்திரவதனா
24.7.2015
அவள் ஒரு சிங்களப் பெண். பெயர் வலன்ரீனா. மிகவும் மென்மையாகப் பேசத் தெரிந்தவள்.
இடுப்பில் குடத்துடன் தண்ணீர் மொண்டு கொண்டு செல்ல வந்திருந்தாள். பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அவளைப் பிடித்துப் போயிருந்தது. அவளுக்கும் என்னைப் பிடித்திருந்தது என்றுதான் நினைக்கிறேன். கிணற்றிலிருந்து தண்ணீரை மொண்டு குடத்தை நிரப்பும் போதும் சரி, குடத்தை இடுப்பில் வைத்துத் திரும்பும் போதும் சரி என்னுடன் கதைத்துக் கொண்டே இருந்தாள். எனது அந்தரமான மனநிலை பற்றி அவளுக்கு ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
„தம்பி விடுதலைப்போரில் மாவீரனாகி விட்டான்“ என்றாள். ஆச்சரியம் மேலிட „எங்கே நடந்தது?“ என்று கேட்டேன். தாங்கள் முதலில் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும் அங்கு நடந்த போரில்தான் தம்பியை இழந்ததாகவும் சொன்னாள். விடுதலைப்புலிகள்தான் தமக்கு இப்போது இங்கே பாதுகாப்புத் தந்திருக்கிறார்கள் என்றாள்.
நான் எனது தம்பிமாரைப் பற்றியும் சொன்னேன்.
உடனே அவள் „நானும் அம்மாவும் மட்டுந்தான் அங்கே எங்கள் வீட்டில் தனியாக வசிக்கிறோம். ஒருக்கால் வந்து விடு. உன்னைப் பார்த்தால் எனது அம்மா மிகவும் சந்தோசப் படுவாள்“ என்றாள்.
இப்போது ஒரு முக்கியமான விடயத்துக்காகக் காத்திருப்பதால் வர முடியாத சங்கடமான நிலையில் உள்ளேன் என்பதைச் சொன்னேன். என்ன விடயம் என்று சொல்லி விடலாமா என்று கூட யோசித்தேன். எனது தயக்கத்தைப் பார்த்து „கனதூரம் இல்லை. பக்கத்தி லைதான் வீடு“ அவள் மீண்டும் மீண்டுமாய் வலிந்தழைத்தாள். ஒரே ஒரு தடவை வரும்படி இரந்து கேட்டாள்.
நான் அவள் காட்டிய பக்கம் பார்த்தேன். எந்த வீடும் என் கண்களுக்குத் தெரியவில்லை. எல்லா வீடுகளுமே அங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்தனவோ?
„உடனை போயிட்டு வந்திடலாம்“ என்றாள்.
அவளது அன்பான வேண்டுதலும், கனிவான பேச்சும், என்னைத் தன் அம்மாவிடம் அழைத்துப் போக வேண்டுமென்ற ஆர்வமும், ஆவலும் அதீதமானதாகவே இருந்ததால் என் மனது மிகவும் சஞ்சலப்பட்டது. ஒருக்கால் போயிட்டு வருவோமா என்ற எண்ணம் என்னை உந்திக் கொண்டே இருந்தது. ஆனாலும் போகவில்லை.
அன்று 30.05.2002 தலைவர் பிரபாகரனைச் சந்திப்பதற்காக கிளிநொச்சி வெண்புறாநிலையத்திலிருந்து புறப்பட்டு இடையில் மரங்களும், செடிகொடிகளும் நிறைந்து மறைந்திருந்த ஒரு குடிசையடியில் அடுத்து வரப்போகும் வாகனத்துக்காகக் காத்திருந்தோம். வாகனம் வருமா? எப்போது வரும்? அல்லது பிரபாகரனே அங்குதான் வரப்போகிறாரா? என்று எத்தனையோ கேள்விகள் தொக்கி நிற்க காத்திருந்த அந்த வேளையில்தான் வலன்ரீனா அங்கே குடத்துடன் வந்தாள். மிகவும் மெல்லிய, சிறிய, அழகிய, இளம் சிங்களப் பெண்.
இன்றும் கூட எனக்குள் ஒரு வேதனை. அவளது ஆசைக்கு இணங்கி ஒரு தரம், ஒரே ஒரு தரம் போய் அவளது அம்மாவைச் சந்தித்திருக்கலாமே என்று.
சந்திரவதனா
24.7.2015
Friday, July 17, 2015
சாதல் என்பது...
பெண்களின் மனஉணர்வுகளை ஆண்களும், ஆண்களின் மனஉணர்வுகளைப் பெண்களும் எழுதித்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். ஒரு கணவன் தனது உண்மையான மனஉணர்வுகள் எல்லாவற்றையும் தனது மனைவியிடம் சொல்லி விடுவதில்லை. மனைவியும்தான். சொன்னால் பிரச்சனையாகி விடும் என்பதுதான் அதற்கான முக்கிய காரணம்.
வாசித்தலில் கூட மனம் ஒட்டாத ஒரு பொறுமையின்மையான நேரத்தில் இன்று தற்செயலாக பொ. கருணாகரமூர்த்தியின் சாதல் என்பது... என் கண்களில் பட்டது. கருணாகரமூர்த்தியினது என்பதால் அலையும் மனதை இழுத்து நிறுத்தி வாசித்தேன்.
இம்மாத காலச்சுவடில் பிரசுரமாகியுள்ளது.
கற்பனைகளை விட உண்மைக்கே முக்கியத்துவம் கொடுப்பவை பொ. கருணாகரமூர்த்தியின் படைப்புகள். இந்தப் படைப்பு மனதில் மெல்லிய சோகத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. ஒருவித மனக்கவலையுடன் எழுதப்பட்டது போன்றும் தோன்றியது. கூடவே ஒரு ஆணின் உணர்வுகளும், சபலங்களும் தயங்காது எழுதப்பட்டிருந்தது.
எழுத்தின் போக்கு ஏனோ மனதை நெருடுகிறது. கருணாகரமூர்த்தி, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?
17.7.2015
வாசித்தலில் கூட மனம் ஒட்டாத ஒரு பொறுமையின்மையான நேரத்தில் இன்று தற்செயலாக பொ. கருணாகரமூர்த்தியின் சாதல் என்பது... என் கண்களில் பட்டது. கருணாகரமூர்த்தியினது என்பதால் அலையும் மனதை இழுத்து நிறுத்தி வாசித்தேன்.
இம்மாத காலச்சுவடில் பிரசுரமாகியுள்ளது.
கற்பனைகளை விட உண்மைக்கே முக்கியத்துவம் கொடுப்பவை பொ. கருணாகரமூர்த்தியின் படைப்புகள். இந்தப் படைப்பு மனதில் மெல்லிய சோகத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. ஒருவித மனக்கவலையுடன் எழுதப்பட்டது போன்றும் தோன்றியது. கூடவே ஒரு ஆணின் உணர்வுகளும், சபலங்களும் தயங்காது எழுதப்பட்டிருந்தது.
எழுத்தின் போக்கு ஏனோ மனதை நெருடுகிறது. கருணாகரமூர்த்தி, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?
17.7.2015
http://kalachuvadu.com/issue-187/page64.asp
சாதல் என்பது... பொ. கருணாகரமூர்த்தி
Thursday, July 09, 2015
வக்கிரங்கள்
எனக்குத் தெரிய ஒரு பெண் குழந்தை தனது உறவுக்காரர் ஒருவர் தன்னுடன் பிழையாக நடக்கிறார், அத்து மீறுகிறார் என்பதை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்து ஒருவாறு வெளியில் சொன்ன போது - சுற்றியுள்ள மற்றைய உறவுகள் - குறிப்பாகப் பெண்களே அவள் இப்படியொரு ஊத்தைத்தனமான பொய்யைச் சொல்கிறாள் என்று சொல்லி அவள் மீதே பழியைப் போட்டு அவளைப் பொய்காரி ஆக்கி விட்டார்கள்.
Wednesday, July 01, 2015
பெருவிரல்
என்ன நடக்கிறது என்று சிந்திக்க முன்னமே அது நடந்து விட்டிருந்தது. அடித்துச் சாத்திய கதவின் ஓசையா, வலி பற்றிய மூளைக்கான அறிவிப்பா முந்திக் கொண்டதெனத் தெரியவில்லை. திரும்பிய போதுதான் தெரிந்தது பொறியில் மாட்டிய எலியாய் நான் நிற்பது.
எப்படி நடந்தது? எல்லாமே சரியாகத்தானே போய்க் கொண்டிருந்தன. வழமையைப் போல மீண்டும் ஒரு கணத்தில் கவனத்தை எங்கோ சிதற விட்டு விட்டேனே!
அழக் கூட முடியவில்லை. வலி என்னை இனியில்லை என்றளவுக்கு வருத்தியது. என்னிலிருந்து 200மீற்றர் தூரத்தில் அந்த உணவகத்தை மொய்த்திருந்தவர்கள் சிரிப்பும், களிப்புமாய் உணவைச் சுவைத்துக் கொண்டும், ஐஸ்கிறீமை ரசித்துக் கொண்டும், அற்ககோல் நிரம்பிய பானங்களை ருசித்துக் கொண்டும் எத்துணை ஆனந்தமாக இருந்தார்கள். வழமையில் அதனருகில்தானே எனது வாகனத்தை பார்க் பண்ணுவேன். இன்று பார்த்து ஏன் இங்கே?
என்னைப் பார்ப்பார் யாருமில்லை. பார்த்தவர்களும் நான் என்ன செய்கிறேன் என்று பார்ப்பது அநாகரிகம் என்பது போல பார்த்தும் பார்க்காமல் இருந்தார்கள். உதவி, உதவி என்று நான் கத்தும் போதெல்லாம் காற்று அதை மறுபக்கமாக தன்னோடு அள்ளிச் சென்று கொண்டிருந்தது. கொஞ்சநஞ்சமாக மிஞ்சிய என் ஒலியும் அவர்களின் சிரிப்புக்குள் கரைந்து கொண்டிருந்தது.
யாராவது என்னைத் தாண்ட மாட்டார்களா என்று ஏக்கத்துடன் மனம் தவித்த போது என்னை நோக்கி ஒரு மோட்டார் வாகனம். அதில் ஒரு இளம்சோடி. அந்த வலியிலும் மனம் நம்பிக்கையில் மகிழ்ந்தது.
கஸ்ரப்பட்டு எனது இடது கையை கையை உயர்த்தி அவர்களை சைகையால் அழைத்து எனது வலது கையைச் சுட்டிக் காட்டினேன். வாய் உதவி உதவி என்று ஒலி எழுப்பியது. அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தவாறு எனக்குக் கையைக் காட்டி மகிழ்ச்சி தெரிவித்தவாறு என்னைக் கடந்தார்கள்.
இப்போது சட்டென்று அறுந்து விழுந்த நம்பிக்கையில் வலியோடு பயமும் தொற்றிக் கொண்டது. ஒவ்வொரு கணமும் யுகமாய் என்னை வதைத்துக் கொண்டிருந்தன.
எப்படி அது நடந்தது என்று தெரியவில்லை. டிக்கியைத் திறந்து சில பொருட்களை வைத்துச் டிக்கிக்கதவை அடித்துச் சாத்தியவாறே காரின் இடதுபக்கம் விரைந்த போதுதான் அது நடந்தது. கைவிரலை நெரித்து விட்டேன் என்று மட்டும் முதலில் உணர முடிந்தது. ஆனால் விரல் எடுக்க முடியாதபடி சிக்கி விட்டது என்பது பின்புதான் தெரிந்தது. லொக் விழுந்து விட்டதால் சும்மா கதைவைத் திறக்க முடியவில்லை. வலதுகைப் பெருவிரல் மாட்டியிருப்பதால் இடதுகையை வலது பக்கத்துக்கு நீட்டி சுவிச்சை அழுத்தவும் முடியவில்லை. எனது ஒவ்வொரு சிறு அசைவும் என் உயிரையே வதம் செய்தன. யாராவது வந்து திறந்து விடாமல் நான் அசையவே முடியாது.
எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை நோக்கி யாரும் வருவதாக இல்லை. அவர்களில் அனேகமானோர் தமது மாலைப் பொழுதை நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உணவகங்களிலும், மதுபானச் சாலைகளிலும், கோப்பிக்கடைகளிலும் இனிதே கழித்துக் கொண்டிருந்தார்கள்.
மீண்டும் ஒரு இளம்சோடி. தேவாலயப்பக்கத்திலிருந்து படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். என்னிலிருந்து குறைந்தது 100மீற்றர் தூரமாவது இருக்கும். அவர்கள் என் பக்கம் திரும்பாமலே உணவகப் பக்கமாகப் போய் விடலாம். நான் அவசரமாக இடது கையை உயர்த்தி அசைத்தேன். அவர்கள் என்னைக் கண்டு விட்டார்கள். ஆனால் மகிழ்வோடு கையை அசைத்து விட்டு திரும்பி உணவகம் நோக்கி நடக்க எத்தனித்தார்கள்.
நான் மிகுந்த பிரயத்தனப்பட்டு எனது குரலை உயர்த்தி எனக்கு உங்கள் உதவி தேவை என்றேன். அதிர்ஸ்டம் அந்தளவேனும் இருந்திருக்க வேண்டும். என் வேண்டுதல் அவர்களது செவிகளைச் சென்றடைந்து விட்டது. ஆச்சரியமும், கேள்வியும் முகங்களில் தொக்கி நிற்க என்னை நோக்கி வந்தார்கள்.
என் நிலைமையை சைகோயோடு விளக்கினேன். புரிந்ததும் அந்த ஆண் அவசரமாக கதவை அழுத்தித் திறந்து விட்டான். வலது கையின் பெருவிரல் சப்பளிந்து போய் இருந்தது. தாளமுடியாத வலியில் கைகளை உதறினேன். பெருவிரல் வெடித்திருந்ததில் குருதி சிதறியது.
அந்தப் பெண் ஏதாவது வகையில் எனக்கு உதவ எத்தனித்தாள். „இந்தியர்களா நீங்கள்?“ எனக் கேட்டேன். „ஓம்“ என்றார்கள். பெயரையோ, வேறு விபரங்களையோ கேட்கும் நிலையில் அப்போது நான் இருக்கவில்லை.
பிறகென்ன மருத்துவமனை, அவசரப்பிரிவு, காத்திருப்பு... என்று நேற்றைய பொழுது (29.06.2015) நடுஇரவு 12 மணிவரை அங்கேயே போய்விட்டது.
எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து பெருவிரல் எலும்பு அந்த இடத்தில் நசிந்தும், சிதைந்தும் போயிருக்கிறது என்றார் மருத்துவர். இப்போது எல்லாம் ஸ்தம்பிதம். பத்துப் போட்ட வலது கையுடன் நான்.
சந்திரவதனா
30.6.2015
எப்படி நடந்தது? எல்லாமே சரியாகத்தானே போய்க் கொண்டிருந்தன. வழமையைப் போல மீண்டும் ஒரு கணத்தில் கவனத்தை எங்கோ சிதற விட்டு விட்டேனே!
அழக் கூட முடியவில்லை. வலி என்னை இனியில்லை என்றளவுக்கு வருத்தியது. என்னிலிருந்து 200மீற்றர் தூரத்தில் அந்த உணவகத்தை மொய்த்திருந்தவர்கள் சிரிப்பும், களிப்புமாய் உணவைச் சுவைத்துக் கொண்டும், ஐஸ்கிறீமை ரசித்துக் கொண்டும், அற்ககோல் நிரம்பிய பானங்களை ருசித்துக் கொண்டும் எத்துணை ஆனந்தமாக இருந்தார்கள். வழமையில் அதனருகில்தானே எனது வாகனத்தை பார்க் பண்ணுவேன். இன்று பார்த்து ஏன் இங்கே?
என்னைப் பார்ப்பார் யாருமில்லை. பார்த்தவர்களும் நான் என்ன செய்கிறேன் என்று பார்ப்பது அநாகரிகம் என்பது போல பார்த்தும் பார்க்காமல் இருந்தார்கள். உதவி, உதவி என்று நான் கத்தும் போதெல்லாம் காற்று அதை மறுபக்கமாக தன்னோடு அள்ளிச் சென்று கொண்டிருந்தது. கொஞ்சநஞ்சமாக மிஞ்சிய என் ஒலியும் அவர்களின் சிரிப்புக்குள் கரைந்து கொண்டிருந்தது.
யாராவது என்னைத் தாண்ட மாட்டார்களா என்று ஏக்கத்துடன் மனம் தவித்த போது என்னை நோக்கி ஒரு மோட்டார் வாகனம். அதில் ஒரு இளம்சோடி. அந்த வலியிலும் மனம் நம்பிக்கையில் மகிழ்ந்தது.
கஸ்ரப்பட்டு எனது இடது கையை கையை உயர்த்தி அவர்களை சைகையால் அழைத்து எனது வலது கையைச் சுட்டிக் காட்டினேன். வாய் உதவி உதவி என்று ஒலி எழுப்பியது. அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தவாறு எனக்குக் கையைக் காட்டி மகிழ்ச்சி தெரிவித்தவாறு என்னைக் கடந்தார்கள்.
இப்போது சட்டென்று அறுந்து விழுந்த நம்பிக்கையில் வலியோடு பயமும் தொற்றிக் கொண்டது. ஒவ்வொரு கணமும் யுகமாய் என்னை வதைத்துக் கொண்டிருந்தன.
எப்படி அது நடந்தது என்று தெரியவில்லை. டிக்கியைத் திறந்து சில பொருட்களை வைத்துச் டிக்கிக்கதவை அடித்துச் சாத்தியவாறே காரின் இடதுபக்கம் விரைந்த போதுதான் அது நடந்தது. கைவிரலை நெரித்து விட்டேன் என்று மட்டும் முதலில் உணர முடிந்தது. ஆனால் விரல் எடுக்க முடியாதபடி சிக்கி விட்டது என்பது பின்புதான் தெரிந்தது. லொக் விழுந்து விட்டதால் சும்மா கதைவைத் திறக்க முடியவில்லை. வலதுகைப் பெருவிரல் மாட்டியிருப்பதால் இடதுகையை வலது பக்கத்துக்கு நீட்டி சுவிச்சை அழுத்தவும் முடியவில்லை. எனது ஒவ்வொரு சிறு அசைவும் என் உயிரையே வதம் செய்தன. யாராவது வந்து திறந்து விடாமல் நான் அசையவே முடியாது.
எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை நோக்கி யாரும் வருவதாக இல்லை. அவர்களில் அனேகமானோர் தமது மாலைப் பொழுதை நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உணவகங்களிலும், மதுபானச் சாலைகளிலும், கோப்பிக்கடைகளிலும் இனிதே கழித்துக் கொண்டிருந்தார்கள்.
மீண்டும் ஒரு இளம்சோடி. தேவாலயப்பக்கத்திலிருந்து படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். என்னிலிருந்து குறைந்தது 100மீற்றர் தூரமாவது இருக்கும். அவர்கள் என் பக்கம் திரும்பாமலே உணவகப் பக்கமாகப் போய் விடலாம். நான் அவசரமாக இடது கையை உயர்த்தி அசைத்தேன். அவர்கள் என்னைக் கண்டு விட்டார்கள். ஆனால் மகிழ்வோடு கையை அசைத்து விட்டு திரும்பி உணவகம் நோக்கி நடக்க எத்தனித்தார்கள்.
நான் மிகுந்த பிரயத்தனப்பட்டு எனது குரலை உயர்த்தி எனக்கு உங்கள் உதவி தேவை என்றேன். அதிர்ஸ்டம் அந்தளவேனும் இருந்திருக்க வேண்டும். என் வேண்டுதல் அவர்களது செவிகளைச் சென்றடைந்து விட்டது. ஆச்சரியமும், கேள்வியும் முகங்களில் தொக்கி நிற்க என்னை நோக்கி வந்தார்கள்.
என் நிலைமையை சைகோயோடு விளக்கினேன். புரிந்ததும் அந்த ஆண் அவசரமாக கதவை அழுத்தித் திறந்து விட்டான். வலது கையின் பெருவிரல் சப்பளிந்து போய் இருந்தது. தாளமுடியாத வலியில் கைகளை உதறினேன். பெருவிரல் வெடித்திருந்ததில் குருதி சிதறியது.
அந்தப் பெண் ஏதாவது வகையில் எனக்கு உதவ எத்தனித்தாள். „இந்தியர்களா நீங்கள்?“ எனக் கேட்டேன். „ஓம்“ என்றார்கள். பெயரையோ, வேறு விபரங்களையோ கேட்கும் நிலையில் அப்போது நான் இருக்கவில்லை.
பிறகென்ன மருத்துவமனை, அவசரப்பிரிவு, காத்திருப்பு... என்று நேற்றைய பொழுது (29.06.2015) நடுஇரவு 12 மணிவரை அங்கேயே போய்விட்டது.
எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து பெருவிரல் எலும்பு அந்த இடத்தில் நசிந்தும், சிதைந்தும் போயிருக்கிறது என்றார் மருத்துவர். இப்போது எல்லாம் ஸ்தம்பிதம். பத்துப் போட்ட வலது கையுடன் நான்.
சந்திரவதனா
30.6.2015
Friday, April 24, 2015
நானும் அவர்களும்
நான்
யாருடன் பேசலாம்
யாருடன் பேசக் கூடாது
என்பதையெல்லாம்
அவர்களேதான் தீர்மானிக்கிறார்கள்!
யாருடன் பேசலாம்
யாருடன் பேசக் கூடாது
என்பதையெல்லாம்
அவர்களேதான் தீர்மானிக்கிறார்கள்!
தாம்
யார் யாருடனெல்லாம்
உறவு வைத்திருக்கிறார்கள் என்ற விடயத்தில்
நான் தலையிடவே கூடாது என்ற
நிபந்தனையைச் சற்றும் தளர்த்தாமல்!
சந்திரவதனா
2015
யார் யாருடனெல்லாம்
உறவு வைத்திருக்கிறார்கள் என்ற விடயத்தில்
நான் தலையிடவே கூடாது என்ற
நிபந்தனையைச் சற்றும் தளர்த்தாமல்!
சந்திரவதனா
2015
Friday, April 17, 2015
பூவரசம் இலைகளுக்கு நாங்கள் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தோமா ?
என்ன ஒற்றுமை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மாதொருபாகன் நாவலில் பூவரசு முக்கியப்படுத்தப் பட்டிருந்தது. அந்நாவலை வாசிக்கும் பொழுது எனக்குள் எழுந்த கேள்விகளில் பூவரசு பற்றிய கேள்வியும் பெரிதாக இருந்தது.
பூவரசம் இலைகளுக்கு நாங்கள் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தோமா என்று யோசித்த போது பரியாரிமார் மருந்தைக் கொடுத்து சுத்தமான பூவரசம் இலையில் தேனுடன் குழைத்து சாப்பிடும் படி சொல்லுவது ஞாபகத்தில் வந்தது. அடுத்தடுத்து ஞாபகத்தில் வந்தவை இலைகளைச் சுற்றி பீப்பீ ஊதினோம். குழைகளை ஆட்டுக்கு உணவாக்கினோம்.
பூவரசம் கதியால்களும், மரங்களும் இல்லாத வீடுகள் எமது ஊரில் இல்லையேன்றே சொல்லலாம். மதில் வீடுகளில் கூட கிணற்றடியைச் சுற்றியாவது பூவரசு நட்டிருப்பார்கள். அம்மரங்களிலிருந்து இடையிடையே நூல் விட்டு இறங்கும் மசுக்குட்டிகள் (மயிர்க்கொட்டிகள்) கூட வாசிப்பின் போது பலதடவைகள் மசமசப்பையும், பயத்தையும் தந்தன.
இப்போது அடுத்த நாவலிலும் அதே பூவரசு சிலாகிக்கப் படுகிறது.
பூவரசம் இலைகளுக்கு நாங்கள் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தோமா என்று யோசித்த போது பரியாரிமார் மருந்தைக் கொடுத்து சுத்தமான பூவரசம் இலையில் தேனுடன் குழைத்து சாப்பிடும் படி சொல்லுவது ஞாபகத்தில் வந்தது. அடுத்தடுத்து ஞாபகத்தில் வந்தவை இலைகளைச் சுற்றி பீப்பீ ஊதினோம். குழைகளை ஆட்டுக்கு உணவாக்கினோம்.
பூவரசம் கதியால்களும், மரங்களும் இல்லாத வீடுகள் எமது ஊரில் இல்லையேன்றே சொல்லலாம். மதில் வீடுகளில் கூட கிணற்றடியைச் சுற்றியாவது பூவரசு நட்டிருப்பார்கள். அம்மரங்களிலிருந்து இடையிடையே நூல் விட்டு இறங்கும் மசுக்குட்டிகள் (மயிர்க்கொட்டிகள்) கூட வாசிப்பின் போது பலதடவைகள் மசமசப்பையும், பயத்தையும் தந்தன.
இப்போது அடுத்த நாவலிலும் அதே பூவரசு சிலாகிக்கப் படுகிறது.
சுள்ளிடும் வெயிலைத் தடுக்க குடை விரித்திருக்கும் பூவரசமர இலைகள். அதன் கீழிருந்து... என்றும், பூவரசம் பூவில் அழகில்லை, மணமில்லை, அளகத்தில் சூட உதவுவதில்லை...என்றும் தொடர்கிறது எஸ்போவின் ´தீ`.
Sunday, April 12, 2015
மாதொருபாகன்
ஒரு நாவலை வாசிக்கத் தொடங்கும் போது பெரும்பாலும் சற்று இழுநிலை இருக்கும். சற்றுத்தூரம் போய்விட்டால் நிறுத்த மனம் வராது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் வாசிக்கத் தொடங்கிய போதும் அப்படியானதொரு நிலை இருந்தது. அதனோடு ஒன்றி விட்ட பின் வாசிக்க நேரம் தேடி மனம் அலைந்த பொழுதுகளும் இருந்தன.
இப்போது வாசித்து முடித்து நாட்களாகி விட்டன. அதன் பின் எத்தனையோ சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று வாசித்து விட்டேன். ஆனாலும் இன்னும் அந்தக் கதை மாந்தர்களான பொன்னாவும், காளியும் என்னருகிலேயே வாழ்வது போன்றதொரு பிரமையிலிருந்து மீளமுடியவில்லை.
தொண்டுப்பட்டியும், குடைவிரித்து விருச்சமாக விரிந்திருக்கும் பூவரசுவும், திருச்செங்கோடும்... என்று மனசுக்குள் கனவும், நினைவுமான கற்பனை தோய்ந்த ஒரு நிலை. கதை நடந்த அந்தப் பூமிக்கே போய் வந்தது போன்றதொரு உணர்வு.
எத்தனையோ புதியசொற்கள். பொருளே புரியாமல் முதலில் தடுமாறி பின் புரிந்து கொண்ட இடங்கள். யாரிடம் போய் கேட்பது என்று தெரியாத பல கேள்விகள்.
அடுத்தொரு நாவலைத் தொடும் வரை மனசு இதிலிருந்து விடுபடுமா எனத் தெரியவில்லை.
Sunday, March 29, 2015
புரிந்துணர்வு ஒப்பந்தம்
எனக்கும் அவர்களுக்கும்
இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
எனது விட்டுக்கொடுத்தல்களினால்தான்
இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது
இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
எனது விட்டுக்கொடுத்தல்களினால்தான்
இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது
29.3.2015
Friday, March 27, 2015
பறத்தலுக்கான சுதந்திரம்
சிறகுகளைப் பறித்து
கக்கத்தில் வைத்துக் கொண்டு
பறத்தலுக்கான சுதந்திரம் பற்றி
வாய் ஓயாது
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்
சந்திரவதனா
27.3.2015
கக்கத்தில் வைத்துக் கொண்டு
பறத்தலுக்கான சுதந்திரம் பற்றி
வாய் ஓயாது
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்
சந்திரவதனா
27.3.2015
Thursday, March 26, 2015
காகம் வெள்ளை
காகம் வெள்ளை என்கிறார்கள் அவர்கள்
ஒரு தரம் இல்லை கறுப்பு என்றேன்
மறதலித்து காகம் வெள்ளைதான் என்கிறார்கள்
மீண்டும் இல்லை என்றேன்
கோபமாக கடுங்கோபமாக காகம் வெள்ளை என்கிறார்கள்
நான் மௌனமாகி விட்டேன்
இப்போது அவர்கள் நம்புகிறார்கள்
நான் அவர்களை நம்பி விட்டதாக!
சந்திரவதனா 26.3.2015
ஒரு தரம் இல்லை கறுப்பு என்றேன்
மறதலித்து காகம் வெள்ளைதான் என்கிறார்கள்
மீண்டும் இல்லை என்றேன்
கோபமாக கடுங்கோபமாக காகம் வெள்ளை என்கிறார்கள்
நான் மௌனமாகி விட்டேன்
இப்போது அவர்கள் நம்புகிறார்கள்
நான் அவர்களை நம்பி விட்டதாக!
சந்திரவதனா 26.3.2015
Sunday, March 08, 2015
Fatou Mandiang Diatta
என்னால் இன்னும் அந்த வலியையும், இரத்தத்தையும் நினைவு படுத்திக் கொள்ள முடிகிறது. எனது அம்மா சொன்னாள் என்னை அழக்கூடாது என்றும், நான் அழுதால் எமது குடும்ப கௌரவத்தில் கறை படிந்து விடும் என்றும்.
ஏறக்குறைய 30 வருடங்களின் முன், அப்போது எனக்கு நான்கு வயதுகள்தான் இருக்கும். ஒரு வயதான பெண் எனது பெண்உறுப்பை வெட்டிச் சிதைத்தாள். மயக்க மருந்து இல்லாமலே அது நடந்நது. அந்த நேரத்தில் நான் எனது இரு உதடுகளையும் இறுக அழுத்திக் கொண்டிருந்தேன்.
எனது பெயர் Fatou(Fatou Mandiang Diatta). நானும் எல்லா சேனேகல் பெண்களையும் போல வெட்டப்பட்டவள் தான். சிறுமிகளுக்கு விருத்தசேதனம் செய்தே ஆக வேண்டும். அப்படித்தான் குர்ஆன் சொல்கிறது. செய்யாவிட்டால் அவர்களுக்கு கணவன் கிடைக்க மாட்டான். ஏனெனில் அவர்கள் தூய்மை அற்றவர்கள். உண்மையற்றவர்கள்.
இப்போது நான் ஒரு முழுமையான பெண் இல்லை. எப்போதும் எதையோ ஒன்றை இழந்தது போலவே நான் உணர்கிறேன். எனது பாடல்கள்தான் என்னை ஆற்றுகின்றன.
செனேகலில் 1982 இல் பிறந்து, 2006 இலிருந்து ஜெர்மனியில் பேர்லினில் வாழும் Fatou Mandiang Diatta இன்று ஒரு ராப் இசைப்பாடகி. தனது கோபங்களையெல்லாம் பாடல்களில் வெளிப்படுத்துகிறாள். தனது பாடல்களாலும், கல்வியாலும் அந்த காட்டுமிராண்டித் தனமான பாரம்பரியத்துக்கு எதிராகப் போரிடும் நோக்குடன் நான்காவது முறையாக தற்போது தனது தாயகத்திற்குத் திரும்பியுள்ளாள்.
(உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி உலகில் பிறப்புறுப்பு விருத்தசேதனம் என்ற காட்டுமிராண்டித்தனத்தால் 125 மில்லியன் பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.)
"Ich bin eine Überlebende"
Friday, March 06, 2015
Kelen (Kazakhstan movie)
நேற்றிரவு Kelin படம் பார்த்தேன். இன்னும் மனதுக்குள் அந்தப் பனிப்புலமும்,
அந்த மாந்தர்களுமே... ஒவ்வொரு பாத்திரமுமே மிகக் கச்சிதமாக... நடிப்பென்றே
சொல்ல முடியவில்லை. உண்மையைத் தரிசித்தது போன்றதொரு பிரமையும், அதிர்வும்.
Sunday, March 01, 2015
சில முகங்கள்
எத்தனை வருசக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும் போதுதான்
சில முகங்கள் தென்படுகின்றன. சந்தர்ப்பங்களே வாய்க்காமல் உள்ளே
மூடிக்கிடக்கும் முகங்கள் எத்தனையோ, வெளிப்படாமலே அவை புதைந்து போய்
விடுகின்றன. (- மாதொருபாகன் நூலிலிருந்து. 83ம் பக்கம்)
Monday, February 23, 2015
பகிர்வும் பறிப்பும்
யாரேனும் ஒருவர்
ஏதேனும் ஒன்றைக் காட்டி
எப்போதுமே
துயரங்களையும் சந்தோசங்களையும்
பகிர்ந்து கொண்டும் பறித்துக் கொண்டும்
இருக்கிறார்கள்
சந்திரவதனா
2015
ஏதேனும் ஒன்றைக் காட்டி
எப்போதுமே
துயரங்களையும் சந்தோசங்களையும்
பகிர்ந்து கொண்டும் பறித்துக் கொண்டும்
இருக்கிறார்கள்
சந்திரவதனா
2015
பரதன்
இன்று எனது நண்பி மாலினியின் (Malini Sivagnanasundaram) மகன் பரதனின் (Parathan)
பிறந்தநாள். நெஞ்சார வாழ்த்துகிறேன். பரதனை நினைக்கும் போதெல்லாம்
மனதுக்குள் ஒரு நெகிழ்வு. நான் எப்போதோ புலம்பெயர்ந்து விட்டேன்.
மாலினிக்கு என் தம்பி மொறிஸின் (Parathan - Paratharajan) வளர்ச்சியையும்,
பணிகளையும் பார்த்துக் கொண்டு வாழும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
என் தம்பி மொறிஸின் நினைவாக மாலினி தனது மகனுக்கு பரதன் என்று பெயர்
வைத்ததைக் கூட 2010 இல் தான் அறிந்து கொண்டேன். உண்மையிலேயே நெகிழ்ந்தேன்.
Happy Birthday Parathan!
Chandravathanaa
18.2.2015
Happy Birthday Parathan!
Chandravathanaa
18.2.2015
Wednesday, February 11, 2015
அவர் ஒன்றும் குழந்தைப்பிள்ளை அல்லவே!
அ. முத்துலிங்கத்தின் `பதினொரு பேய்கள் ´ கதை கடந்தமாதம் காலச்சுவடில் வெளியான உடனேயே நான் வாசித்திருந்தேன்.
அது பற்றி இப்போது ஏன் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? அன்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
அது பற்றி இப்போது ஏன் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? அன்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
´அ. முத்துலிங்கம் விடுதலைப்புலிகள் பற்றிப் புனைந்த போது உங்கள்
எதிர்கருத்தை எழுதினீர்கள். இப்போது வேறொரு இயக்கம் பற்றி எழுதியதால்
பேசாமல் இருக்கிறீர்களா?` என்று கேட்டு.
முதலாவது - ஒருவருக்கு எப்போதும் எழுதக் கூடிய மனநிலை இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
இரண்டாவது - அதில் சொல்லப் பட்ட விடயங்களில் எது உண்மை, எது புனைவு என்பதை அறுதியிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு அது பற்றிய தெளிவும் என்னிடம் இருக்கவில்லை.
2011 இல் `எல்லாம் வெல்லும்´ என்ற அந்தக் கதையை வாசித்த போது அந்தப்புனைவு ஒரு பொய்யான ஆவணமாகி விடும் என்ற ஆதங்கம் என்னுள் எழுந்தது. அது பொய்தான் என்பதை என்னால் எனக்கே உறுதிப்படுத்த முடிந்தது. எழுதக் கூடிய மனநிலையும் இருந்தது. எழுதினேன்.
`பதினொரு பேய்கள்´ வாசித்த போதும் மனதுள் ஒரு வித எரிச்சல் தோன்றியது. சும்மா ஒரு கதையாக இருந்தால் வேறு. ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பைப் பற்றிய கொச்சைப்படுத்தல் அது. விடுதலைப் போராட்டத்துக்கு என்று தம்மை அர்ப்பணித்த பெண்கள் பற்றிய தவறானதொரு ஆவணப்பதிவு அது.
எப்படித்தான் - தான் நேரே நின்று பார்த்தது போல இப்படியெல்லாம் எழுதுகிறாரோ..! என்ற ஆதங்கம் மீண்டும் எழுந்தது. ஆனாலும் அது பற்றி எழுதக் கூடிய மனநிலை எனக்கு இருக்கவில்லை.
ஒருவர் ஒரு தரம் ஒரு பிழையைச் செய்து, அதைச் சுட்டிக் காட்டியபின், மீண்டும் அதே பிழையைச் செய்வாராயின் நாம் என்ன தான் செய்யலாம்?
அவர் ஒன்றும் குழந்தைப்பிள்ளை அல்லவே!
சந்திரவதனா
11.2.2015
முதலாவது - ஒருவருக்கு எப்போதும் எழுதக் கூடிய மனநிலை இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
இரண்டாவது - அதில் சொல்லப் பட்ட விடயங்களில் எது உண்மை, எது புனைவு என்பதை அறுதியிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு அது பற்றிய தெளிவும் என்னிடம் இருக்கவில்லை.
2011 இல் `எல்லாம் வெல்லும்´ என்ற அந்தக் கதையை வாசித்த போது அந்தப்புனைவு ஒரு பொய்யான ஆவணமாகி விடும் என்ற ஆதங்கம் என்னுள் எழுந்தது. அது பொய்தான் என்பதை என்னால் எனக்கே உறுதிப்படுத்த முடிந்தது. எழுதக் கூடிய மனநிலையும் இருந்தது. எழுதினேன்.
`பதினொரு பேய்கள்´ வாசித்த போதும் மனதுள் ஒரு வித எரிச்சல் தோன்றியது. சும்மா ஒரு கதையாக இருந்தால் வேறு. ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பைப் பற்றிய கொச்சைப்படுத்தல் அது. விடுதலைப் போராட்டத்துக்கு என்று தம்மை அர்ப்பணித்த பெண்கள் பற்றிய தவறானதொரு ஆவணப்பதிவு அது.
எப்படித்தான் - தான் நேரே நின்று பார்த்தது போல இப்படியெல்லாம் எழுதுகிறாரோ..! என்ற ஆதங்கம் மீண்டும் எழுந்தது. ஆனாலும் அது பற்றி எழுதக் கூடிய மனநிலை எனக்கு இருக்கவில்லை.
ஒருவர் ஒரு தரம் ஒரு பிழையைச் செய்து, அதைச் சுட்டிக் காட்டியபின், மீண்டும் அதே பிழையைச் செய்வாராயின் நாம் என்ன தான் செய்யலாம்?
அவர் ஒன்றும் குழந்தைப்பிள்ளை அல்லவே!
சந்திரவதனா
11.2.2015
Wednesday, January 28, 2015
Radio Veritas
வயதுகள் எத்தனை ஆனால் என்ன! பரிசுகளும், பாராட்டுகளும், விருதுகளும், வாழ்த்துகளும் ஒவ்வொரு மனிதரையும் குழந்தைகளாக்கி விடுகின்றன. அப்படி நான் குழந்தையாகிய பொழுதுகள் நிறையவே இருக்கின்றன. வெரித்தாஸ் வானொலியோடு நான் ஐக்கியமாகியிருந்த பொழுதுகளில் கிடைத்த பரிசுப்பொருட்க ளில் ஒரு பொருள் கூட இப்போது என்னிடம் இல்லை. 1983 இல் கிடைத்த இந்த ஒரேயொரு Certificateமட்டும் நினைவாக இருக்கிறது. ஏதோ ஒரு போட்டிக்குக் கிடைத்தது. போட்டி எதுவானாலும் கிடைத்ததையிட்டு அப்போது நான் மகிழ்ந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
Monday, January 26, 2015
சில சமயங்களில் சந்தோசம் வாசலிலேயே காத்திருக்கும்.
நேற்று வெளியில் போவதற்காகக் கதவைத் திறந்த போது வாசலில் ஒரு சிறிய பார்சல் எனக்காகக் காத்திருந்தது. வீட்டில்தான் நின்றேன். அழைப்புமணியின் சத்தம் கேட்கவில்யே என்ற யோசனை ஒரு புறம். எந்தப் பொருளையும் Order பண்ணவில்லையே! யார் அனுப்பியிருப்பார்கள் என்ற யோசனை மறுபுறம்.
கருணாகரமூர்த்திதான் அந்தப் பார்சலை அனுப்பியிருக்கிறார் என்று தெரிந்த போது மனதுள் இனம் புரியாத சந்தோசம். கண்டிப்பாக புத்தகங்கள் தான் அதற்குள் இருக்கும்.
கருணாகரமூர்த்தி தான் வெளியிட்ட, வெளியிடும் புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அவ்வப்போது எனக்கு அனுப்பி வைத்து விடுவார். அவரது எல்லாப் புத்தகங்களுமே என்னிடம் உள்ளன என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழ்புத்தகங்களையே காண்பது அரிது என்ற நிலை இருந்த காலத்தில் கிடைத்த `கூடு கலைதல்´ நான் விரும்பி , ரசித்து வாசித்த புத்தகங்களில் ஒன்று.
இத்தனைக்கும், நாமிருவரும் ஜெர்மனியில்தான் வாழ்கிறோம் என்றாலும் இதுவரையில் நாம் ஒருவரையொருவர் சந்தித்ததே இல்லை. அவ்வப்போதான மின்னஞ்சல்கள் , ஏதோ ஓரிரு தடவைகளிலான தொலைபேசி அழைப்புகள்… இவைகள்தான் எமக்கிடையேயான உறவுப்பாலம்.
2013 இல் எனக்கு அவரிடம் இருந்து ஒரு உதவி தேவைப்பட்டது.
எமது நெருங்கிய உறவுகள் அவுஸ்திரேலியாவில் இருந்து பேர்லினுக்கு ஒரு Conference க்காக வருவதாகவும், அது முடிய எம்மிடம் வருவதாகவும் ஏற்பாடாகியிருந்தது. Conference முடிய பேர்லினில் சில முக்கிய இடங்களைப் பார்க்க விரும்புவதாகவும், எனது நண்பர்கள் யாராவது அங்கிருந்தால் அறிமுகப்படுத்தி விட்டால் உதவியாக இருக்கும் என்றும் கேட்டார்கள்.
பேர்லின் என்றதும் கருணாகரமூர்த்திதான் நினைவில் வந்தாலும், உதவி என்று கேட்பதில் எனக்கு நிறையவே தயக்கம் இருந்தது. பலமுறை யோசித்து, வேறுவழி ஏதாவது இருக்கிறதா எனத் தேடி ஒன்றுமே சரிவராது என்ற நிலையில் கருணாகரமூர்த்தியையே நாடினேன். மிகுந்த தயக்கத்துடன்தான் மின்னஞ்சல் எழுதினேன்.
ஒருவித பிகுவுமின்றி உடன் பதில் வந்தது. தன்னாலான எல்லாவற்றையும் செய்யத் தயாராக இருந்தார். மனதுள் மகிழ்வும், நன்றியும்தான் இருந்தது.
எமது உறவினர் பேர்லினிலிருந்து எம்மிடம் வரும் போது அவர்களும் கருணாகரமூர்த்தியும் நண்பர்களாகுமளவுக்கு அவர்கள் ஐக்கியமாகியிருந்தார்கள். எல்லாமே சந்தோசமாகத்தான் இருந்தது.
அவர்கள் மீண்டும் அவுஸ்திரேலியா பயணமாகும் அன்று அதிகாலையில் கருணாகரமூர்த்தியின் தொலைபேசி அழைப்பு. அவர்களைப் பயணம் அனுப்பத்தான் அழைக்கிறார் என நினைத்தேன்.
ஆனால் அவர் கேட்டதோ என்னிடமுள்ள அவரது பெர்லின் நினைவுகள் நூலை அந்த உறவினர்களுக்கு கொடுத்து விடும்படி.
புத்தகங்களை இரவல் கொடுப்பதே என்னால் முடியாத காரியம். புத்தகத்தையே கொடுத்து விடு என்ற போது கவலையாகத்தான் இருந்தது. ஆனா லும் தந்தவரே கொடுத்து விடு என்னும் போது என்னால் மறுக்க முடியில்லை. நேற்று வரை, அவ்வப்போதான பொழுதுகளில் போய் விட்ட புத்தகம் என் நினைவுகளில் நெருடலாய் வந்து போகும்.
இனி வராது என்று நினைக்கிறேன். போனது கருணாகரமூர்த்தியின் முதல் தொகுப்பான சிறிய `பெர்லின் நினைவுகள்´. இப்போது வந்திருப்பது காலச்சுவடு வெளியீடான பெரிய` பெர்லின் நினைவுகள்´ . கூடவே அனந்தியின் டயறியும்.
மிக்க நன்றி கருணாகரமூர்த்திக்கு!
சந்திரவதனா
25.01.2015
Labels:
2015
,
சந்திரவதனா
,
நிகழ்வு
Tuesday, January 13, 2015
மறதி
இப்போதெல்லாம்
முன்னரைப் போல என்னால் யாருக்குமே உடன் பதில் எழுத முடிவதில்லை.
நேரத்தையும் விட எனது மறதிதான் அதற்கான முக்கியமான காரணம்.
நேரத்தையும் விட எனது மறதிதான் அதற்கான முக்கியமான காரணம்.
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
▼
2015
(
28
)
- ▼ November 2015 ( 3 )
- ► October 2015 ( 3 )
- ► September 2015 ( 2 )
- ► March 2015 ( 6 )
- ► February 2015 ( 4 )
- ► January 2015 ( 3 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )