Sunday, April 12, 2015

மாதொருபாகன்


ஒரு நாவலை வாசிக்கத் தொடங்கும் போது பெரும்பாலும் சற்று இழுநிலை இருக்கும். சற்றுத்தூரம் போய்விட்டால் நிறுத்த மனம் வராது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் வாசிக்கத் தொடங்கிய போதும் அப்படியானதொரு நிலை இருந்தது. அதனோடு ஒன்றி விட்ட பின் வாசிக்க நேரம் தேடி மனம் அலைந்த பொழுதுகளும் இருந்தன.

இப்போது வாசித்து முடித்து நாட்களாகி விட்டன. அதன் பின் எத்தனையோ சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று வாசித்து விட்டேன். ஆனாலும் இன்னும் அந்தக் கதை மாந்தர்களான பொன்னாவும், காளியும் என்னருகிலேயே வாழ்வது போன்றதொரு பிரமையிலிருந்து மீளமுடியவில்லை.

தொண்டுப்பட்டியும், குடைவிரித்து விருச்சமாக விரிந்திருக்கும் பூவரசுவும், திருச்செங்கோடும்... என்று மனசுக்குள் கனவும், நினைவுமான கற்பனை தோய்ந்த ஒரு நிலை. கதை நடந்த அந்தப் பூமிக்கே போய் வந்தது போன்றதொரு உணர்வு.

எத்தனையோ புதியசொற்கள். பொருளே புரியாமல் முதலில் தடுமாறி பின் புரிந்து கொண்ட இடங்கள். யாரிடம் போய் கேட்பது என்று தெரியாத பல கேள்விகள்.

அடுத்தொரு நாவலைத் தொடும் வரை மனசு இதிலிருந்து விடுபடுமா எனத் தெரியவில்லை.

3 comments :

Thava Krish said...

இந்த நாவல் படிக்கும் போது அதன் பின்னனியும் வாழ்வியலும். எம் யாழ்ப்பாண மண்ணின் கிராம வாழ்வை பிரதிபலித்தது உதாரணமாக கிழுவை மரவேலி. அருமை யான நாவல். எதுக்கு இத்தனை லூசு தனமான போராட்டங்கள் என்று படித்ததும் தோன்றியது .வாழ்க்க திரிச்சங்கோடு பகுத்தறி

Inuvaijur Mayuran said...

உண்மை அக்கா நீண்ட நாட்களுக்குப் பின் ஒரே மூச்சில் வாசித்து முடித்த நூல். இன்னும் அந்தப் பாத்திரங்களினதும் கதைக்களத்தினதும் ஈர்ப்பிலிருந்து விடுபட முடியவில்லை.

Chandravathanaa said...

எனக்கும் புரியவில்லை. இதை மிஞ்சக் கூடிய எத்தனையோ கதைகள் வாசித்திருக்கிறேன். ஒரு வேளை யாரும் சொல்லாமால் பொன்னாவாக ஒருவனை விரும்பி அதன் பின் தவறியிருந்தால் விமர்சனங்கள் வேறுமாதிரி இருந்திருக்கலாம். கீற்று தளத்தில் சில வருடங்களின் முன் ஒரு சிறுகதை வாசித்தேன். அதிலும் இப்படி குழந்தையில்லாமல் மனம் உழலும் ஒரு பெண் முன்னேற்பாடு எதுவும் இன்றிய ஒரு சந்தர்ப்பத்தில் தவறி விடுகிறாள். அதனால் அவளுக்குக் குழந்தை பிறக்கிறது. கடவுளை வேண்டியதன் பயன்தான் அந்தக் குழந்தையின் பிறப்பு என்று ஒன்றும் அறியாத கணவனும் ஆனந்திக்கிறான். அந்தக் கதையின் தலைப்பு மறந்து விட்டது. அதையிட்டோ அன்றி அது போன்ற வேறு எத்தனையோ கதைகளையிட்டோ யாரும் அலட்டிக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite