எனது வேலைத்தளத்தில்
ஒரு நடைமுறை இருக்கிறது. 50 வது பிறந்தநாளுக்கு சிற்றுண்டிகளுடன் ஒரு தேநீர் விருந்து
வைத்து ஒரு பூங்கொத்தும், இரண்டு செக்ற் போத்தல்களும் பரிசாகத் தருவார்கள்.
நான்
50க்கு வரும் போது „எனக்கு ஏதாவது தரும்
எண்ணம் இருந்தால் பூங்கொத்துக்குப் பதிலாக ஒரு பூஞ்செடி தந்து விடுங்கள்“ என்றொரு அறிவித்தல்
கொடுத்தேன்.
2001 இல்
அவர்கள் எனது பத்தாவது வருட சேவையைக் கௌரவித்து நட்சத்திர உணவகத்துக்கு அழைத்து விருந்தோடு,
ஒரு அழகான பூங்கொத்தும், இரு செக்ற் போத்தல்களும், ஒரு பவுண் காசும் தந்திருந்தார்கள்.
அந்தப் பூங்கொத்து ஒரு கிழமை அழகாக எனது வரவேற்பறையை அலங்கரித்துக் கொண்டிருந்தது.
இரண்டாவது கிழமை குப்பைவாளிக்குள் முடங்கிக் கொண்டது. அதனால்தான் அப்படியொரு அறிவித்தல்
கொடுத்தேன்.
எனது விருப்பத்தை
சந்தோசமாக ஏற்றுக் கொண்டு எனது 50வது பிறந்த நாளுக்கு மந்தாரைமலர்(Orchideen) செடிகளைப்
பரிசாகத் தந்தார்கள். எனது வீட்டுக்குள் ஊதா, மஞ்சள், வெள்ளை என்று மூன்று வர்ணங்களில்
மூன்று மந்தாரைச் செடிகள் வந்து சேர்ந்தன. மூன்றும் இந்த ஏழு வருடங்களாக காலையில் எழுந்ததும்
என்னை மகிழ்விப்பவைகளில் ஒன்றாக மாறி மாறிப் பூத்துக் கொண்டே இருக்கின்றன. (இதற்கு
மந்தாரை என்ற பெயர் சரிதானா என்பது தெரியவில்லை)
தற்சமயம்
எனது வேலைத்தளத்தில் முற்கூட்டியே குறிப்பிட்டவர்களுக்கு மின்னஞ்சல் எழுதி „பூங்கொத்தை விரும்புகிறீர்களா
அல்லது பூஞ்செடியை விரும்புகிறீர்களா?“ எனக் கேட்டு விடுகிறார்கள்.
நேற்றைய
ஒரு தேடலின் போது கண்களில் தட்டுப்பட்டது
„Orchideen க்கான வாழ்வு
காலம் 10வருடங்கள் மட்டுமே“
சந்திரவதனா
30.08.2016
No comments :
Post a Comment