Sunday, September 17, 2006

பாடல்களிலிருந்து சில வரிகள் - 7


மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்

Saturday, September 16, 2006

திலீபன்-சிறப்புக்கவிதாஞ்சலி


விடுதலை வேட்கை சுடராய் விழிகளில் நடனமாட
பறந்திடும் கேசத்தோடும் புன்னகை வதனத்தோடும்
நடந்தவன் நல்லூர் வீதி மேடையை நாடிச்செல்ல
திரண்ட எம் மக்கள் கூட்டம் - தெய்வமே! - என்றழைக்க
பஞ்சென வெண்மைக் கேசம் கொண்டதோர் பக்தி மாது
பையவே திலீபன் முன்னால் பாதையை மறித்து வந்து
கையிலே தாங்கிவந்த அர்ச்சனைத் தட்டைத் தொட்டு
விரலிலே வபூதி அள்ளி எம் வீரனின் நுதலில் பூச
பௌர்ணமித் திங்களாய் எம் திலீபனோ முகம் ஜொலித்தான்.- more

Thursday, September 14, 2006

அப்பாவின் பாதிப்பு - Annegrate


அன்று எனது பேரூந்துப் பயணத்தில் என்னோடு இணைந்து கொண்டவள் அனெக்கிரேட். இவளை நான் கடைசியாகச் சந்தித்தது நூர்ஜானைச் சந்திப்பதற்குச் சில மாதங்கள் முன்பு.

அனெக்கிரேட் எனது கடைசி மகனுடன் முதலாம் வகுப்பிலிருந்து இறுதி ஆண்டுவரை ஒன்றாகப் படித்தவள். இறுதிப் பரீட்சையில் நல்ல புள்ளிகளைப் பெற்றிருந்தாள். ஆனாலும் அவள் விரும்பிய இசைத்துறைக்கான இடம் பல்கலைக்கழகத்தில் அவளுக்குக் கிடைக்கவில்லை. அதனால், அவளோடு படித்தவர்கள், நண்பர்கள் என்று அனேகமான எல்லோருமே வேலை, மேற்படிப்பு என்று வேறு வேறு இடங்களுக்குச் சென்று விட இவள் கொஞ்சம் தனிமை உணர்வோடு எமது நகரிலேயே இருந்தாள். அந்த நேரத்தில் அவளை அடிக்கடி நான் சந்திப்பேன். எப்போதும் ஒரு இசைக்கருவியை தன்னுடன் கொண்டு திரிவாள். இசை வகுப்புக்குப் போகிறேன் என்பாள்.

அவளோடான சந்திப்பு எப்போதுமே மிக இனிமையாக இருக்கும். சிரித்துச் சிரித்து நிறையக் கதைப்பாள். பாடசாலைக் காலங்களில் பெற்றோர்களுக்கான ஒன்றுகூடலிலும், பிள்ளைகளோடான பிக்னிக் குகளிலும் அவளது தாயும் பங்கு கொள்வதால் தாயோடும் எனக்கு ஓரளவு பழக்கம் இருந்தது. தாயும் இவளைப் போலவே சந்தோசமாகப் பழகக் கூடியவள்.

ஒரு நாள் அனெக்கிரேட்டை பேரூந்தினுள் சந்தித்த போது தனக்கு வடக்கு ஜேர்மனியில் ஒரு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்திருப்பதாகவும் , ஒரு மாதத்தில் போய் விடுவேன் என்றும் மிகவும் சந்தோசமாகச் சொன்னாள். பின்னர் சற்றுக் கவலையாக "அம்மாதான் தனித்து விடுவாள்" என்றாள்.

"ஏன்... உனது அப்பா...?" என்றேன்.

"எனக்கு நான்கு வயதாக இருக்கும் போதே அப்பா அம்மாவை விட்டிட்டுப் போயிட்டார்" என்றாள். அப்போதுதான் எப்போதுமே அவளது அம்மா தனித்து வருவது என் சிந்தனையைத் தொட்டது.

"உனக்கும் உனது அப்பாவுக்கும் தொடர்பிருக்கிறதுதானே" என்றேன்.

அவள் முகத்தில் ஒரு ஏமாற்றம் கலந்த வெறுப்பு தோன்ற "எனக்கு ஏழு வயதா இருக்கிற போதே அப்பாவை மெயின்ரோட்டிலை இருக்கிற அவற்றை வீட்டுக்கு முன்னாலை ஒரு குழந்தையோட பார்த்தனான். என்ரை அப்பா இன்னொரு குழந்தையைத் தூக்கி வைச்சிருக்கிறது எனக்கு சகிக்கேல்லை" என்றாள். தொடர்ந்த கதையில் அவள் அதன் பிறகு அவளது அப்பாவைக் காணவோ, அவரோடு பேசவோ விரும்பவில்லை என்பது தெரிந்தது.

வழமைக்கு மாறாக அன்றைய அவளோடான சந்திப்பு சற்று மனதைச் சங்கடப் படுத்த நாங்கள் விடை பெற்றோம். அவள், அப்பா இல்லாமலே வளர்ந்திருக்கிறாள் என்ற உண்மை அத்தனை வருடங்களில் எனது கவனத்துக்கு எட்டாதது எப்படி என்ற ஆச்சரியம் எனக்குள்ளே தொடர்ந்து இருந்தது.

அதன் பின் அவளது அம்மாவைச் சந்தித்த ஒரு பொழுதில் "அவள் அடிக்கடி இங்கு வரமாட்டாள். நியாயமான தூரம்" என்றாள். அப்படி இடையிடையே அவள் எமது நகருக்கு வந்த போதும் எதேச்சையாகத்தான் என்றாலும் அவளை நான் சந்திக்கும் வாய்ப்புக்களை எனது பேரூந்து எனக்குத் தந்து கொண்டுதான் இருந்தது.

ஒரு கட்டத்தில் அவளை ஒவ்வொரு மாதமும் சந்தித்தேன். இன்னும் சில காலங்களில் ஒவ்வொரு வாரமும் சந்தித்தேன்.

"என்ன...! இப்படி அடிக்கடி வருகிறாய்?" என்ற போது மிகுந்த சந்தோசமாக "எனக்கு இப்ப ஒரு நண்பன்(காதலன்) இங்கே இருக்கிறான்" என்றும், "அவனைச் சந்திக்காமல் இருக்க முடியவில்லை" என்றும் சொன்னாள்.

"அப்படியா...? சந்தோசம்" என்று அவளை வாழ்த்தி விட்டு வேறு கதைத்தேன்.
விடைபெறும் போது "நீ எனது நண்பனைப் பார்க்கவில்லையே! பொறு! நான் அவன்ரை புகைப்படத்தைக் காட்டுறன்" என்று சொல்லி தனது கைப்பையில் இருந்து எடுத்தாள்.

நான் அதிர்ந்து போனேன். அந்தப் புகைப்படத்தில் இருந்தவன் அவளின் அப்பாவின் வயதை ஒத்த 45 வயதுடைய ஒரு மெக்சிக்கன் ஆண்.

சந்திரவதனா
14.9.2006

பாடல்களிலிருந்து சில வரிகள் - 6


கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்

Tuesday, September 12, 2006

நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட


மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற
(பாடல்களிலிருந்து) சில வரிகள் - 5


மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்

மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா

நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

பாடல்களிலிருந்து சில வரிகள் - 4
பாடல்களிலிருந்து சில வரிகள் - 3
பாடல்களிலிருந்து சில வரிகள் - 2
பாடல்களிலிருந்து சில வரிகள் -1

Monday, September 11, 2006

அன்று ஏன் கேட்டேன் ? - Noorjan


பகலில் என்றால் எட்டிலிருந்து பத்து நிமிடங்களும் இரவில் சுற்றுப் பாதையால் வருவதால் 15இலிருந்து 20நிமிடங்களும் எடுக்கும் வேலைக்கான அந்தப் பேருந்துப் பயணத்தின் அந்தச் சில நிமிடங்களுக்குள் எத்தனையோ பேரைச் சந்திப்பேன். சில நேரங்களில் எதிர் பாராதபடி தெரிந்தவர்கள் யாராவது பயணத்தில் இணைவதால் அவை இனிய சந்திப்புக்களாகி என்னை மகிழ்சியில் ஆழ்த்தியும் இருக்கின்றன.

அன்று வந்தவள் நூர்ஜான். அவள் எனது மகளுடன் சின்ன வகுப்பில் படித்தவள். எமது வீட்டுக்கு அருகிலேயே அவளது வீடும் இருந்ததால், வளர்ந்து வேறு வேறு பாடசாலைகளில் படிக்கும் போதும் அவளும் எனது மகளும் நண்பிகளாகவே இருந்தார்கள்.

தற்போது பல வருடங்களாக அவளுக்கும் எனது மகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாயினும் என்னைப் பேருந்தினுள் கண்டால் அவள் வந்து என்னருகில் அமர்ந்து விடுவாள். ஏதோ, எனது நண்பி போல மிக உற்சாகமாக என்னுடன் கதைத்துக் கொண்டு வருவாள். இம்முறை சந்திப்பு கிட்டத்தட்ட ஐந்து மாத இடைவெளிகளின் பின்னேயே நடந்தது.

நாங்கள் சந்தோசமாகக் கதைத்துக் கொண்டு வந்தோம். அவள் தனது வேலையிடத்து அனுபவங்களைச் சொல்லிக் கொண்டு வந்தாள். பேரூந்து உரிய இடத்துக்கு வருவதற்கு சற்று முன்பாக வழமைக்கு மாறாக "உனது அப்பா எப்படி இருக்கிறார்?" என்று கேட்டேன். ஒருநாளுமே நான் அவளது அப்பாவைப் பற்றி அவளிடம் கேட்டதில்லை. அன்று ஏனோ கேட்டு விட்டேன். அப்படியே அவள் கண்கள் குளமாகி விட்டன.

"அப்பா போன நவம்பரில் இரத்தப் புற்றுநோய் வந்து இறந்து விட்டார்" என்றாள். நான் அதிர்ந்த போது "நாங்களுந்தான் அதிர்ந்தோம். சும்மா காய்ச்சல்தான் வந்தது. குடும்பவைத்தியரிடம் போன போது மருத்துவமனைக்கு அனுப்பினார். இரண்டு கிழமை மருத்துவமனையிலேயே இருந்த அப்பா வீடு திரும்பவில்லை. இறந்து விட்டார்" என்றாள். சொல்லி முடிக்கும் போது அவள் குமுறி அழத் தொடங்கி விட்டாள்.

பேரூந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு நடக்கும் போது என் மனதும் கனத்துப் போயிருந்தது. அவளது அப்பாவைப் பல தடவைகள் கண்டிருக்கிறேன். ஆனாலும் அவளோடு அவர் பற்றி ஒரு போதும் பேசியதில்லை. அன்று ஏன் கேட்டேன் என்று எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அவளது சோகத்தைக் கிளறியதால் வருத்தமாகவும் இருந்தது.

சந்திப்பு நடந்து சில மாதங்கள் கடந்து விட்டாலும் சோகத்தையும் மீறிய ஒரு ஆச்சரியம் என்னுள் கேள்வியாகி நிற்கின்றது.

சந்திரவதனா
11.9.2006

பாடல்களிலிருந்து சில வரிகள் - 4

பெற்றவரும் அந்நாளில் பிள்ளைகள்தானே - மனம்
பித்தாகிப் போகு முன்னே கல்லுகள்தானே!
பிள்ளைகளும் பின்னாளில் பெற்றாராகலாம் - அவர்
கல்லான மனங்களெல்லாம் பித்தாய் மாறலாம்!

அம்மா அப்பா ஆனபின்தான் அனுபவம் விளங்கும் - பெற்ற
அன்னை தந்தை செய்வதெல்லாம் அறிவுக்குத் துலங்கும்!
சும்மா சொன்னாப் புரிவதில்லை இந்தத் தத்துவம் - இதை
சொல்லாமலே புரிய வைக்கும் வாழ்க்கைத் தத்துவம்.
´
மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்

Sunday, September 10, 2006

புலவன் தமிழ் அகராதி


புலவன் தமிழ் அகராதி பற்றி அறிந்திருக்கிறீர்களா? சில நாட்களுக்கு முன் நான் அறிந்து கொண்டேன். இது தமிழ் தமிழ் அகராதி.

பாவித்துப் பார்த்தேன். பயனுள்ளதே. எழுதுவதில்தான் ஒரு சிக்கல். நாம் சாதாரணமாக எழுதும் போது குற்றையோ அல்லது விசிறியையோ எழுத்தின் பின்னரே சேர்த்துக் கொள்வோம். இங்கு விசிறியை அல்லது குற்றை முதலில் தட்டி, பின்னரே குறிப்பிட்ட எழுத்தை எழுத வேண்டும். ஆனாலும் பயனுள்ளதே.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite