சிங்களத்துக் குயில் என்று அழைக்கப் பட்ட யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த தவமணி தேவியின் தென்னிந்தியத் திரைப் பிரவேசம் உண்மையில் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1930களிலே அதாவது ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தமிழ்த் திரையுலகில் புகுந்து கவர்ச்சி காட்டி நடித்து பலரது புருவங்களை உயர வைத்தவர். ஆடல், பாடல், நடிப்பு ஆகியவற்றுடன் கவர்ச்சியையும் சேர்த்துக் கொடுத்தவர். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலகிற்கு முதன் முதலில் கவர்ச்சியை அறிமுகப் படுத்தியவர் இவராகத்தான் இருக்கவேண்டும்.. இவரின் வரவிற்குப் பின்னரே பின்னாளில் திரையுலகில் ஒளிவீசிய சிலரது திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்திருக்கிறது. ரி.ஆர். ராஜகுமாரி, மாதுரிதேவி, அஞ்சலி தேவி.... எனப் பலரை இந்த வரிசையில் சேர்க்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் இலங்கையில் பாரிஸ்ரர் தொழிலில் முன்ணணியில் திகழ்ந்தவர். தவமணி தேவியின் திறமையை அவதானித்த பெற்றோர்கள் இவரை பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் படிப்பதற்காக ஊக்குவித்தார்கள்.
உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி. அழகான குரலும், பார்த்தவுடன் கவரும் தோற்றமும், பழகும் விதமும், கதைக்கும் தன்மையும் தவமணி தேவிக்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
ரி.ஆர்.சுந்தரம் மொடேர்ன் தியேட்டர்ஸ் என்ற சினிமா கலையகத்தை உருவாக்கி அந்த நிறுவனத்துக்கான முதல் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் அதில் நடிக்கும் வாய்ப்பு தவமணி தேவிக்குக் கிடைத்தது. சதிஅகல்யா என்ற அந்தத் திரைப்படத்தில் அவருக்கு அகலிகை வேடம். இந்தத் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் ரி.ஆர்.சுந்தரம் பத்திரிகையாளர்களை அழைத்து தனது படத்தின் கதாநாயகியான தவமணிதேவியை அறிமுகப் படுத்தினார். பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக ரி.ஆர்.சுந்தரம் கொடுத்த தவமணியின் புகைப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆச்சரியப் பட்டுப் போனார்கள். நீச்சல் உடையில் ஒய்யாரமாக சாய்ந்திருந்த தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் அவர்களது புருவங்களை உயர வைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைத்தான் ஏனெனில் பெண்கள் இழுத்துப் போர்த்தி சேலை உடுத்தும் காலம் அதுவாக இருந்தது.
தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் பத்திரிகைகளில் பிரசுரமானபோது அது பலரது பார்வையைக் கவர்ந்தது.. வசிட்டரின் மனைவியான அகலிகையாக நடிக்கப் போகும் பெண் இப்படி உடுத்தலாமா? என்பது போன்று பல விதமான விமர்சனங்களும் கூடவே எழுந்தன. 1930களில் ஒரு ஆசியப் பெண்ணை நீச்சல் உடையில் பத்திரிகைகளில் காண்பது அதுவே முதல் தடவையாக இருந்திருக்கும். இது போதாதா தவமணி தேவி பிரபல்யமாகுவதற்கு? சதிஅகல்யா படப்பிடிப்பு தொடங்கு முன்னரே தவமணி தேவி மிகப் பிரபல்யமாகி விட்டிருந்தார். ஆகவே 1937இல் வெளியான மொடேர்ன் தியேட்டர்ஸின் சதிஅகல்யா பெரு வெற்றி பெற்றதுக்கு தனியாகக் காரணம் எதுவும் சொல்லத் தேவையில்லை.
சதி அகல்யா வெற்றிக்குப் பின் தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வனமோகினி. இந்தத் திரைப்படம் 1940 இல் வெளிவந்தது. கொலிவூட்டில் டோர்தி லமோர் நடித்துப் பிரபல்யமான யங்கிள் என்ற திரைப்படத்தினையே தமிழில் வனமோகினி என்று எடுத்தார்கள். இதில் வனமோகினியாக ஆங்கிலத்தில் டோர்தி லமோர் உடுத்த கவாய் நாட்டுப் பாணியிலான உடையை இடுப்பில்; கட்டி இவர் நடித்திருந்தார். இவர் தனது நடிப்போடு காற்றில் ஆடும் சிறு உடையின் மத்தியில் தனது உடல் அழகையும் காட்டிக் கொண்டது அன்றைய கால கட்டத்தில் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்திருக்கும். இவரது இந்தத் திரைப்படம் பரபரப்பாகப் பேசப்பட்டது மட்டுமல்லாமல் பெரு வெற்றியையும் ஈட்டிக் கொண்டது. அறுபது வருடங்கள் கழிந்தாலும் தென்னத் திரையுலகில் இன்னமும் வனமோகினி பேசப்படுகிறதென்றால் அன்றைய காலகட்டத்தில் வனமோகினி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?
1941இல் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான மற்றுமொரு திரைப்படம் வேடாவதி அல்லது சீதாஜனனம். இதில் இவர் சீதையாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை திரையுலகம் தனது முக்கியமான குறிப்பில் இட்டிருக்கின்றது. காரணம் என்னவெனில் அன்று திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத எம்.ஜி.ஆர். இதில் இந்திரஜித்தாக சிறு வேடம் ஏற்று நடித்திருந்தார். ஆக எம்.ஜி.ஆர். படப்பட்டியலில் வேடாவதியும் இணைந்து கொண்டது.
தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வித்யாபதி. யூபிட்டர் பிக்ஸர்ஸ் சார்பில் ஏ.ரி.கிருஸ்ணசாமி எழுதி இயக்கியிருந்தார். ஆண்களைக் கவருவதற்காகவே இந்தத் திரைப்படம் தயாரிக்கப் பட்டதாக அன்று இந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் திரைப்படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற பாத்திரத்தில் தவமணி தேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் ஆங்கிலத் தலைப்புகளுக்காவும் பாடல்களில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்காவும் பட்டிமன்றங்களும் விவாதங்களும் வைத்துக் கொள்கிறோம். தமிழ் இனி செத்துவிடும் என்று தலையில் வேறு அடித்துக் கொள்கிறோம். 1946இல் வெளிவந்தை வித்யாபதி படத்தில் தவமணி தேவி பாடி ஆடிய பாடல் இப்படி வருகிறது,
அதோ இரண்டு டீடயஉம நலநள!
என்னைப் பார்த்து ழுnஉநஇ வறiஉந!
கண்ணைச் சிமிட்டி னுழடடல!
கை கட்டி ஊயடடள அந!
ஐள வை வசரந லழரச நலநள யசந டிடரந?
ஐ'டட கயடட in டழஎந றiவா லழர!
ஐ றடைட னயnஉந கழச லழர!
இந்தப் பாடலில் வரும் ஆங்கில வரிகளை தவமணி தேவியே எழுதியதாக பின்னாளில் இயக்குனர் ஏ.ரி.கிருஸ்ணசாமி அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவர் நடித்து பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்த அடுத்த திரைப்படம் 1948இல் வெளியான ராஜகுமாரி. இந்தத் திரைப்படத்தினை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி இயக்கியிருந்தார். இலங்கையின் தலைநகர் கொழும்பில்தான் ஏ.எஸ்.ஏ.சாமி தனது படிப்பினை முடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி அவர்கள் பின்னாளில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதொன்று.
ராஜகுமாரி திரைப்படத்தையும் யூபிட்டர் நிறுவனமே தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்துக்கு ஒரு பெருமையிருக்கிறது. பின்னாளில் தமிழகத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஆண்ட மூன்று தமிழக முதலமைச்சர்களின் திரையுலகப் பிரவேசம் இந்த நிறுவனத்தினூடாகத்தான் நிகழ்ந்திருக்கின்றது. 1949இல் வெளியான யூபிட்டர் நிறுவனத்தின் வேலைக்காரி திரைப்படத்திற்கு கதை எழுதியவர் அறிஞர் அண்ணா ஆவார். யூபிட்டரின் ராஜகுமாரி திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதியிருந்தார். அதில் முதன் முதலாக எம.;ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
தவமணி தேவிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில்; நாயகனை மயக்கும் ராணி வேடம். இவரின் மெய்ப் பாதுகாவலராக சான்டோ எம்.எம்.சின்னப்பாதேவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமே இவரின் திரையுலகப் பிரவேசமா அமைந்தது.
ராஜகுமாரி திரைப்படத்தில் தவமணி தேவி உடுத்தியிருந்த ஆடை பெரும் கவர்ச்சியாக இருந்ததால் படப்படிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திலேயே இவருக்கும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமிக்கும் இடையில் பெரும் சர்ச்சைகள் நடந்திருக்கின்றன. அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற தவமணி தேவியின் சில காட்சிகள் தணிக்கைக் குழுவின் கத்தரிக்கு இரையானது. ராஜகுமாரி திரைப்படம் பெரும் வெற்றியை ஈட்டிய போது அதில் நாயகனாக நடித்த எம்.ஜி.ஆரின் புகழை மேலும் உச்சிக்குக் கொண்டு போனது. அதன் கதை வசன கர்த்தாவான கலைஞர் மு.கருணாநிதிக்கு தமிழ்த் திiயுலகம் சிறந்த வசன கர்த்தா என்னும் ஒரு அங்கீகாரத்தையும் தந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தின் வெற்றி தவமணி தேவிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. இந்தத் திரைப்படத்தின் பின்னர் அவரது திரையுலக வரலாறு இறங்கு முகமாகவே இருந்திருக்கின்றது. இந்த நிலையில் இவரில் பெரும் மாற்றங்கள் தென்படத் தொடங்கியது.
இந்த நிலையில் தவமணி தேவி 1962இல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சாஸ்திரியை காதலித்து மணந்து கொண்டார். திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ராமேஸ்வரத்தில் தனது இறுதி வாழ்க்கையைக் கழித்த தவமணி தேவி அவர்கள் தனது 76வது வயதில் 10.02.2001இல் காலமானார்.
1990களில் அதாவது திரைப்படத்துறையை விட்டு தவமணிதேவி அவர்கள் வெளியேறி பல ஆண்டுகளுக்குப் பின் தென்னிந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரு பிரபல வார இதழ் தவமணி தேவியைப் பற்றி இப்படி எழுதியிருந்தது.
சுதந்திரத்திற்கு முன் தமிழ்த்; திரைப்படவுலகில் புதிதான பூங்காற்று ஈழத்திலிருந்து ஜிவ்வென்று பிரவேசித்தது. தமிழ்ப்பட இரசிகர்கள் அந்த புதுமுகத்தைக் கண்டு ஆனந்தித்தனர், அதிசயித்தனர், பரவசப்பட்டுப் போயினர்.
படத்தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்குக் கதாநாயகியாக ஒப்பந்தச் செய்ய ஆவலாக இருந்தனர்.
1937இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்த தவமணி தேவியின் படங்கள் இன்றும் பேசப்படுகின்றதென்றால் அவர் எந்தளவு பதிவுகளை தமிழ்த் திரையுலகில் விட்டுச் சென்றிருக்கின்றார் என்பதை உணர முடிகின்றது.
இனியும் வரும்.
Wednesday, October 01, 2008
Wednesday, September 24, 2008
கடந்து வந்த நமது சினிமா - 1
- மூனா -
இலங்கைத் திரைப்படத்துறை தனது ஐம்பதாவது ஆண்டு விழாவை 1997இல் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது. ஆனாலும் சிங்களத் திரைப்படத்துறை வளர்ந்த அந்த ஆரோக்கியமான தன்மையை இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை கொண்டிருக்கவில்லை. சிங்களத் திரைப்படைப்புக்கள் சர்வதேசத்துக்கும் தனது படைப்புக்களைக் காட்டி நின்ற போது தமிழ்த் திரைப்படத்துறை உள்ளூருக்குள்ளேயே காணாமல் போயிருக்கின்றது. ஆனாலும் இன்றுள்ள நிலையில் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறையை வளர்த்தெடுக்கும் ஆர்வம் பலரிடம் தோன்றியுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.
இலங்கையின் திரைப்படத் துறையின் ஆரம்பகாலம் முற்று முழுதாக இந்தியாவையே சார்ந்திருந்தது. அதிலும் சுதந்திரம் கிடைத்து நீண்ட ஆண்டுகளாக இலங்கைத் தமிழ்த் திரைப்படத் துறையினைப் பற்றி யாரும் அதிகளவு சிந்தித்ததாகத் தெரியவில்லை. கணிசமான தமிழ்த் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் உருவானதால் அதில் எங்களவர்கள் திருப்திப்பட்டுப் போயிருக்கலாம். அல்லது இலங்கையில் தமிழ் சினிமா தயாரிப்பதிலும் பார்க்க தென்னிந்திய திரைப்படங்களைத் தருவிப்பது மலிவாகப் பட்டிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் எங்களது இந்த நிலை சிங்களத் திரைப்படத்துறையில் இருக்கவில்லை.
இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச் சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக் கூறுவனவாகவே அமைந்து இருந்தன. திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும், பங்கு பற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன.
சிறீசேனா விமலவீரா 1951இல் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்தை உருவாக்கினார். சிறீசேனா விமலவீராவின் தயாரிப்பில் 25.11.1955இல் வெளியான பொடிபுத்தா (இளையமகன்) என்ற சிங்களத் திரைப்படம் அவரால் உருவாக்கப்பட்ட நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்திலேயே வைத்து தயாரிக்கப் பட்டது. இலங்கையில் வெளியான 32வது சிங்களத் திரைப்படமான பொடிபுத்தா என்ற இந்தத் திரைப்படமே பின்னாளில் இலங்கையின் பராம்பரியங்களைக் கூறவல்ல திரைப்படங்கள் உருவாக ஆதாரமாக இருந்திருக்கிறது.
சிறீசேனா விமலவீரா கலையகத்தை உருவாக்கி சுயமான சிங்களத் திரைப்படங்களை உருவாக வழி சமைத்துத் தர, இன்னும் ஒரு படி மேலே போய் வெளிப்புறங்களில் படம்பிடித்து இயற்கையான காட்சிகள், ஒளிகளுடன் யதார்த்தமான சிங்களப் படங்கள் உருவாக காரணமாக இருந்தவர் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள். இவ்வாறு வெளிப்புறப் படப்பிடிப்புக்களுடன் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள் உருவாக்கிய ரேகாவா (விதியின் கோடு) 28.12. 1956இல் வெளியானது.
தங்களது சுற்றாடல்களையும் பாரம்பரியம் பண்பாடுகளையும் திரையில் பார்க்க முடிந்ததால் இந்தத் திரைப்படம் சிங்களவர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. மேலும் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் உலகலாவிய அளவில் பலரது பாராட்டுக்களைப் பெற்றதுடன் சிங்களத் திரைப்படத்துறைக்கு சினிமா உலகில் ஒரு நல்ல இடத்தையும் பெற்றுத் தந்தது. இவையெல்லாம் சேர்ந்து இலங்கையில் சிங்களத் திரைப்படத் துறை வளர பெரிதும் காரணங்களாகின.
முதல் முதலாக சிங்கள மொழி பேசும் திரைப்படம் 21.01.1947இல் திரையிடப் பட்டிருக்கிறது. கடவுணு பொரன்டுவ (உடைந்த வாக்குறுதி) என்ற இந்தத் திரைப்படம் மேற் குறிப்பிட்டதன்படி தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான இசையை ஆர். நாரயண ஐயர் வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி ஆவார். இங்கு முத்துக்குமாரசாமி என்ற இந்த இசைமேதையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர் பின்னாளில் இலங்கையில் இசைத்துறையில் பெரும் கடமையாற்றியிருக்கின்றார். இசைத்துறை வட்டத்தில் முத்துக்குமாரசாமி மாஸ்ரர் என்றே இவர் அழைக்கப்பட்டார். திரைப்படத்துறை மட்டுமல்லாது இலங்கை வானொலியிலும் இவரது பணி நிறைந்திருக்கிறது.
கடவுணு பொரன்டுவ திரைப்படத்தை சித்திர கலா மூவிரோன் என்ற நிறுவனத்தின் பெயரில் தமிழரான எஸ்.எம். நாயகம் தயாரித்திருந்தார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் பின்னாளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படத்தை சிங்களவரான ஹென்றி சந்திரவன்ச தயாரித்திருந்தார். ஆக சிங்களத்தில் வெளியான முதல் திரைப்படத்தை ஒரு தமிழரும் தமிழில் வெளியான முதற் திரைப்படமான சமுதாயத்தை சிங்களவரும் தயாரித்து மொழிகள் மதங்கள் கடந்து கலைத்துறைக்கு பணியாற்றி இருக்கிறார்கள் என்பதை இங்கு காணலாம்.
இலங்கையின் முதல் திரைப்படத்தில் நடித்த ருக்மணி தேவி, பின்னாளில் சிங்களத் திரையுலகில் பிரவேசித்த பல நடிகைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். நடிகை ருக்மணிதேவியைப் பின்பற்றி 1950களிலும் 1960 ஆரம்ப காலங்களிலும் பல நடிகைகள் சிங்களத் திரையுலகில் பிரவேசித்தார்கள். அவர்களில் முக்கியமானவர்களாக சந்யாகுமாரி, விஜிதா மாலிகா, புளொரிடா ஜயலத், கிளாரிஸ் டீ சில்வா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
15.01.1923 பிறந்த ருக்மணி தேவி சிங்களத் திரையுலகில் தனது பதிவை ஆழமாகவும் மிகத் தெளிவாகவும் பதித்திருக்கின்றார். தனது ஏழு வயதில் நத்தார் பாடல்களை இசைக்கத் தொடங்கிய ருக்மணிதேவி பின்னாளில் பல மேடை நாடகங்களிலும், நாட்டிய நாடகங்களிலும், இசை மேடைகளிலும், சிங்களத் திரைவானிலும் மிகப் பிரகாசமாகப் பரிணமித்திருக்கின்றார். இவர் நடித்த பிரபலமான கடவுணு பொரண்டுவ என்ற மேடை நாடகமே பி.ஏ.ஜயமனே அவாகளால் சிங்ளத் திரையுலகின் முதல் திரைப்படமாக நெறியாளப் பட்டிருந்தது. தனது முப்பது வருட திரையுலக வாழ்க்கையில் ருக்மணி தேவி அவர்கள் ஏறக்குறைய 90 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் ருக்மணிதேவி பொப் இசைக்குழுவிலும் பாடி தனது திறமையை அங்கும் பதிந்திருக்கின்றார்.
25.09.1978 இலங்கையின் மாத்தறைப் பகுதியில் உள்ள உயன்வத்தை என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி விட்டு வரும் வழியில் நடந்த வாகன விபத்தில் இலங்கையின் இராப்பாடி என்று அழைக்கப்பட்ட ருக்மணி தேவி அவர்கள் காலமானார்.
28.09.1978 இல் நீர்கொழும்பு மயானத்தில் நடைபெற்ற அவரது இறுதிக் கிரியைகளில் பங்கு பற்றிய பெரும் திரளான அவரது ரசிகர்கள், நண்பர்கள், திரைப்பட உலக பிரமுகர்கள், அரசியல் வாதிகள், நாடக உலகக் கலைஞர்கள் அவரது கலையுலக வாழ்க்கையின் சிறப்புக்கு அத்தாட்சியாக இருந்தார்கள். அவரது மறைவுக்கு அன்றைய இலங்கையின் ஜனாதிபதி ரணதுங்க பிரேமதாசா வழங்கிய இரங்கல் உரை ருக்மணி தேவி அவர்கள் கலைக்கும், சமுதாயத்திற்கும் ஆற்றிய பணியைக் காட்டி நிற்கின்றது. இலங்கையின் இராப்பாடி என்று ருக்மணிதேவி இலங்கையில் அழைக்கப்பட்டார். அதுபோல் தென்னகத்தில் சிங்களத்துக் குயில் என்று யாழ்ப்பாணத்து நடிகையான தவமணி தேவி இருந்திருக்கின்றார்.
(தொடரும்)
இலங்கைத் திரைப்படத்துறை தனது ஐம்பதாவது ஆண்டு விழாவை 1997இல் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது. ஆனாலும் சிங்களத் திரைப்படத்துறை வளர்ந்த அந்த ஆரோக்கியமான தன்மையை இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை கொண்டிருக்கவில்லை. சிங்களத் திரைப்படைப்புக்கள் சர்வதேசத்துக்கும் தனது படைப்புக்களைக் காட்டி நின்ற போது தமிழ்த் திரைப்படத்துறை உள்ளூருக்குள்ளேயே காணாமல் போயிருக்கின்றது. ஆனாலும் இன்றுள்ள நிலையில் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறையை வளர்த்தெடுக்கும் ஆர்வம் பலரிடம் தோன்றியுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.
இலங்கையின் திரைப்படத் துறையின் ஆரம்பகாலம் முற்று முழுதாக இந்தியாவையே சார்ந்திருந்தது. அதிலும் சுதந்திரம் கிடைத்து நீண்ட ஆண்டுகளாக இலங்கைத் தமிழ்த் திரைப்படத் துறையினைப் பற்றி யாரும் அதிகளவு சிந்தித்ததாகத் தெரியவில்லை. கணிசமான தமிழ்த் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் உருவானதால் அதில் எங்களவர்கள் திருப்திப்பட்டுப் போயிருக்கலாம். அல்லது இலங்கையில் தமிழ் சினிமா தயாரிப்பதிலும் பார்க்க தென்னிந்திய திரைப்படங்களைத் தருவிப்பது மலிவாகப் பட்டிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் எங்களது இந்த நிலை சிங்களத் திரைப்படத்துறையில் இருக்கவில்லை.
இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச் சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக் கூறுவனவாகவே அமைந்து இருந்தன. திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும், பங்கு பற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன.
சிறீசேனா விமலவீரா 1951இல் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்தை உருவாக்கினார். சிறீசேனா விமலவீராவின் தயாரிப்பில் 25.11.1955இல் வெளியான பொடிபுத்தா (இளையமகன்) என்ற சிங்களத் திரைப்படம் அவரால் உருவாக்கப்பட்ட நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்திலேயே வைத்து தயாரிக்கப் பட்டது. இலங்கையில் வெளியான 32வது சிங்களத் திரைப்படமான பொடிபுத்தா என்ற இந்தத் திரைப்படமே பின்னாளில் இலங்கையின் பராம்பரியங்களைக் கூறவல்ல திரைப்படங்கள் உருவாக ஆதாரமாக இருந்திருக்கிறது.
சிறீசேனா விமலவீரா கலையகத்தை உருவாக்கி சுயமான சிங்களத் திரைப்படங்களை உருவாக வழி சமைத்துத் தர, இன்னும் ஒரு படி மேலே போய் வெளிப்புறங்களில் படம்பிடித்து இயற்கையான காட்சிகள், ஒளிகளுடன் யதார்த்தமான சிங்களப் படங்கள் உருவாக காரணமாக இருந்தவர் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள். இவ்வாறு வெளிப்புறப் படப்பிடிப்புக்களுடன் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள் உருவாக்கிய ரேகாவா (விதியின் கோடு) 28.12. 1956இல் வெளியானது.
தங்களது சுற்றாடல்களையும் பாரம்பரியம் பண்பாடுகளையும் திரையில் பார்க்க முடிந்ததால் இந்தத் திரைப்படம் சிங்களவர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. மேலும் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் உலகலாவிய அளவில் பலரது பாராட்டுக்களைப் பெற்றதுடன் சிங்களத் திரைப்படத்துறைக்கு சினிமா உலகில் ஒரு நல்ல இடத்தையும் பெற்றுத் தந்தது. இவையெல்லாம் சேர்ந்து இலங்கையில் சிங்களத் திரைப்படத் துறை வளர பெரிதும் காரணங்களாகின.
முதல் முதலாக சிங்கள மொழி பேசும் திரைப்படம் 21.01.1947இல் திரையிடப் பட்டிருக்கிறது. கடவுணு பொரன்டுவ (உடைந்த வாக்குறுதி) என்ற இந்தத் திரைப்படம் மேற் குறிப்பிட்டதன்படி தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான இசையை ஆர். நாரயண ஐயர் வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி ஆவார். இங்கு முத்துக்குமாரசாமி என்ற இந்த இசைமேதையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர் பின்னாளில் இலங்கையில் இசைத்துறையில் பெரும் கடமையாற்றியிருக்கின்றார். இசைத்துறை வட்டத்தில் முத்துக்குமாரசாமி மாஸ்ரர் என்றே இவர் அழைக்கப்பட்டார். திரைப்படத்துறை மட்டுமல்லாது இலங்கை வானொலியிலும் இவரது பணி நிறைந்திருக்கிறது.
கடவுணு பொரன்டுவ திரைப்படத்தை சித்திர கலா மூவிரோன் என்ற நிறுவனத்தின் பெயரில் தமிழரான எஸ்.எம். நாயகம் தயாரித்திருந்தார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் பின்னாளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படத்தை சிங்களவரான ஹென்றி சந்திரவன்ச தயாரித்திருந்தார். ஆக சிங்களத்தில் வெளியான முதல் திரைப்படத்தை ஒரு தமிழரும் தமிழில் வெளியான முதற் திரைப்படமான சமுதாயத்தை சிங்களவரும் தயாரித்து மொழிகள் மதங்கள் கடந்து கலைத்துறைக்கு பணியாற்றி இருக்கிறார்கள் என்பதை இங்கு காணலாம்.
இலங்கையின் முதல் திரைப்படத்தில் நடித்த ருக்மணி தேவி, பின்னாளில் சிங்களத் திரையுலகில் பிரவேசித்த பல நடிகைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். நடிகை ருக்மணிதேவியைப் பின்பற்றி 1950களிலும் 1960 ஆரம்ப காலங்களிலும் பல நடிகைகள் சிங்களத் திரையுலகில் பிரவேசித்தார்கள். அவர்களில் முக்கியமானவர்களாக சந்யாகுமாரி, விஜிதா மாலிகா, புளொரிடா ஜயலத், கிளாரிஸ் டீ சில்வா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
15.01.1923 பிறந்த ருக்மணி தேவி சிங்களத் திரையுலகில் தனது பதிவை ஆழமாகவும் மிகத் தெளிவாகவும் பதித்திருக்கின்றார். தனது ஏழு வயதில் நத்தார் பாடல்களை இசைக்கத் தொடங்கிய ருக்மணிதேவி பின்னாளில் பல மேடை நாடகங்களிலும், நாட்டிய நாடகங்களிலும், இசை மேடைகளிலும், சிங்களத் திரைவானிலும் மிகப் பிரகாசமாகப் பரிணமித்திருக்கின்றார். இவர் நடித்த பிரபலமான கடவுணு பொரண்டுவ என்ற மேடை நாடகமே பி.ஏ.ஜயமனே அவாகளால் சிங்ளத் திரையுலகின் முதல் திரைப்படமாக நெறியாளப் பட்டிருந்தது. தனது முப்பது வருட திரையுலக வாழ்க்கையில் ருக்மணி தேவி அவர்கள் ஏறக்குறைய 90 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் ருக்மணிதேவி பொப் இசைக்குழுவிலும் பாடி தனது திறமையை அங்கும் பதிந்திருக்கின்றார்.
25.09.1978 இலங்கையின் மாத்தறைப் பகுதியில் உள்ள உயன்வத்தை என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி விட்டு வரும் வழியில் நடந்த வாகன விபத்தில் இலங்கையின் இராப்பாடி என்று அழைக்கப்பட்ட ருக்மணி தேவி அவர்கள் காலமானார்.
28.09.1978 இல் நீர்கொழும்பு மயானத்தில் நடைபெற்ற அவரது இறுதிக் கிரியைகளில் பங்கு பற்றிய பெரும் திரளான அவரது ரசிகர்கள், நண்பர்கள், திரைப்பட உலக பிரமுகர்கள், அரசியல் வாதிகள், நாடக உலகக் கலைஞர்கள் அவரது கலையுலக வாழ்க்கையின் சிறப்புக்கு அத்தாட்சியாக இருந்தார்கள். அவரது மறைவுக்கு அன்றைய இலங்கையின் ஜனாதிபதி ரணதுங்க பிரேமதாசா வழங்கிய இரங்கல் உரை ருக்மணி தேவி அவர்கள் கலைக்கும், சமுதாயத்திற்கும் ஆற்றிய பணியைக் காட்டி நிற்கின்றது. இலங்கையின் இராப்பாடி என்று ருக்மணிதேவி இலங்கையில் அழைக்கப்பட்டார். அதுபோல் தென்னகத்தில் சிங்களத்துக் குயில் என்று யாழ்ப்பாணத்து நடிகையான தவமணி தேவி இருந்திருக்கின்றார்.
(தொடரும்)
Monday, September 01, 2008
அவள் வருகிறாள்
அலுமாரிக்குள் இருந்த அழகிய சிலைகளை பல தடவைகள் மாற்றி மாற்றி வைத்து விட்டேன். யன்னல் சேலைகள் சரியாகச் சுருக்கு மாறாது இருக்கின்றனவா எனவும் பல தடவைகள் பார்த்து விட்டேன். பூச்செடிகள், புத்தக அலுமாரி, மேசை விரிப்பு, சோபாவின் தலையணைகள்.. என்று ஒவ்வொன்றையும் பலதடவைகள் சரி பார்த்து விட்டேன்.
குசினியிலிருந்து வீட்டின் எந்த மூலைக்குச் செல்லும் போதும் மீண்டும் மீண்டுமாய் அலுமாரிச் சிலைகளை ஒரு சென்ரிமீற்றர் அரக்கி வைத்தால் நன்றாக இருக்கும் போலவும், யன்னல் சேலையின் சுருக்குகள் சற்று ஒழுங்கற்று இருப்பது போலவும், புத்தக அலுமாரியில் புத்தகங்களை இன்னும் நேராக்கி விடலாம் போலவும்.. தோன்றிக் கொண்டே இருந்தன.
அவள் வரப்போகிறாள் என்பதில் எனக்குள் மிகுந்த பரபரப்பாகவே இருந்தது. 23வருடங்களின் பின் சந்திக்கப் போகிறேன். என்னைப் போல எடை போட்டிருப்பாளா? அல்லது அப்போது போலவே அழகாக இருப்பாளா? மனசு கற்பனை பாதியும், கேள்விகள் பாதியுமாக அவளின் வரவுக்காகக் காத்திருந்தது.
எத்தனை தடவைகள் புகைப்படங்கள் அனுப்பும் படி கேட்டிருப்பேன். "ம்.. கூம். நான் வருகிறேன் பார்" என்று சொல்லிச் சொல்லியே இத்தனை வருடங்களை இழுத்து விட்டாள்.
ஒரே வகுப்பில் ஒன்றாகத்தான் படிக்கத் தொடங்கினோம். ஒரே வகுப்பு என்பதையும் விட ஒரே ஊர் என்பது எங்களுக்குள் இன்னும் ஒட்டுதலை ஏற்படுத்தியிருந்தது. என் வீட்டில் போல அவள் வீட்டில் அதீதமான கட்டுப்பாடுகள் இல்லை. எனக்கு மாலைவேளைகளில் யார் வீட்டுக்கும் போய் விளையாடுவதற்கு அனுமதி கிடைப்பதில்லை. அவள்தான் என் வீட்டுக்கு வருவாள். ஓடிப்பிடித்து, ஒளித்துப்பிடித்து, கெந்திப்பிடித்து, கல்லுச்சுண்டி, கொக்கான்வெட்டி, கரம் விளையாடி.... எங்கள் பொழுதுகள் சிரிப்பும், கும்மாளமாகவுமே கரையும். என் தம்பி, தங்கைமாரும் எமது விளையாட்டுக்களில் வந்து இணைவார்கள். சில சமயங்களில் சூரியகுமாரியும் எங்களுடன் இணைந்து கொள்வாள். யாருக்கும் தெரியாத இரகசியங்களும் எங்களுக்குள் இருக்கும்.
எட்டாம் வகுப்பில் பாடசாலையில் பிரிக்கும் போது அவள் ஆர்ட்ஸ்க்கும், நான் சயன்ஸ்க்கும் என்று பிரிந்து விட்டோம். இடைவேளையில் ஓடிவந்து என்னுடன் கதைத்து விட்டுப் போவாள். இடையிடையே கிளித்தட்டு விளையாடும் போது அவள் வகுப்பும் எமது வகுப்பும் இணைந்து விளையாடுவோம். நெற்போல் (கூடைப்பந்து) என்றால் சொல்லவே தேவையில்லை. நேரம் போவதே எமக்குத் தெரிவதில்லை. மாலைவேளைகளில் தொடர்ந்தும் எமது வீட்டுக்கு வருவாள்.
நான் அவசரத் திருமணம் செய்து கொண்ட போதும், எனக்குக் குழந்தை பிறந்த போதும் ஓடி வந்து வியந்து வியந்து பார்த்தாள். நான் ஜேர்மனிக்குப் புறப்படும் வரை அவள் கல்யாணம் செய்து கொள்ளவே இல்லை.
சில வருடங்களில் அவள் திருமணமாகி கனடா சென்று விட்டதாக அம்மா எழுதியிருந்தாள். அங்கிருந்து எப்படியோ எனது தொலைபேசி இலக்கத்தைத் தேடிப்பிடித்து அழைத்துக் கதைத்தாள். அவளுக்குக் குழந்தைகள் பிறக்கும் வரை அடிக்கடி தொலைபேசியில் உரையாடினோம். குழந்தைகள் வளர வளர நாங்கள் பேசும் இடைவெளியும் வளர்ந்தது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் "நான் உன்னிடம் வருகிறேன்" என்பாள். இன்றிரவு கணவர் குழந்தைகளுடன் வரப் போகிறாள். மனசு இன்னும் பரபரத்துக் கொண்டே இருந்தது.
மீண்டும் மீண்டுமாய் வீடு அழகாக இருக்கிறதா எனச் சரி பார்த்துக் கொண்டேன். அவளுக்குத் தோசை பிடிக்கும் என்பதால், அடுத்தநாள் தோசை சுடலாம் என்ற நினைப்பில் உழுந்தை ஊறப் போட்டேன். சில கிலோமீற்றர்கள் தள்ளியிருக்கும் ஆசியாக் கடைக்கு முதல்நாளே சென்று, வாங்கி வந்த தேங்காயை சுத்தியலால் அடித்து, உடைத்து சம்பலுக்காகத் துருவி எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தேன். தோசைக்கு கத்தரிக்காய் வதக்கல் நல்லாயிருக்கும் என்று இன்னொரு கடைக்குச் சென்று வாங்கிய கத்தரிக்காயையும் வெட்டிப் பொரித்து எடுத்தேன். இரவுச் சாப்பாட்டுக்கு இடியப்பம் அவித்து, கோழி நெஞ்சுஇறைச்சியில் பிரட்டல் கறி, பொரியல், வெந்தயச் சொதி..., என்று செய்து முடித்தேன்.
உள்ளியும், வெங்காயமும், பொரிந்த எண்ணெயும்... என்று கலந்த சமையல் மணம் வெளியில் போய் விடும் படியாக யன்னல்களையும், பல்கணிக் கதவையும் திறந்து வைத்தேன்.
எங்கள் படுக்கையறையைத்தான் ஒரு வாரத்துக்கும் அவர்களுக்குக் கொடுக்க இருப்பதால் படுக்கை விரிப்புகளை மாற்றினேன். அந்த ஒரு வாரத்துக்கும் எமக்குத் தேவையான எமது உடுப்புகளையும், மற்றைய அத்தியாவசியப் பொருட்களையும் மற்றைய சிறிய அறைக்குள் கொண்டு போய் வைத்தேன்.
இப்படியே தொட்டுத் தொட்டு வேலைகள் நீண்டு கொண்டே போயின. கால்கள் ஆறுதல் தேடின. மனம் எதையாவது கண்டு பிடித்துப் பிடித்து வேலை தந்து கொண்டே இருந்தது.
மாலையில் கொறிப்பதற்கென முதல்வாரமே கணவரின் உதவியோடு தட்டை வடை செய்து வைத்திருந்தேன். அத்தோடு இன்னும் ஏதாவது பலகாரங்கள் செய்து வைத்தால் ஒரு கிழமையும் சுவையாகப் போகும் என்ற எண்ணம். அவளது பிள்ளைகளுக்கென சிப்ஸ், சொக்கிளேற்ஸ், பிஸ்கிட்ஸ் எல்லாம் வாங்கி அடுக்கி வைத்தேன்.
சூரியகுமாரியும் கனடாவில்தான் இருக்கிறாளாம். அவளைப் பற்றியும் நிறையக் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். இன்னும் என்னோடு அரிவரியிலிருந்து கபொத உயர்தரம் வரை படித்த பல மாணவிகள் கனடாவில்தானாம். ´வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் சந்திப்பு´ என்று சொல்லிச் சந்திப்பார்களாம். நெற்போல் விளையாடுவார்களாம்.
நெற்போல் என்றதுமே எனக்குள் சட்டென்று ஒரு ஆசை அலை மோதியது. ஜேர்மனியில் அனேகமாக எல்லாத் தமிழர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தள்ளித தள்ளித்தான் இருக்கிறோம். சேர்ந்து வருபவர்களில் ஒருவரேனும் என்னோடு படித்தவர்களாயோ, அல்லது எனது ஊரவர்களாயோ இருப்பதில்லை. இந்த நிலையில் ´வடமராட்சி மாணவர்கள் சந்திப்பு´ என்பதைக் கனவில் கூட இங்கு நினைத்துப் பார்க்க முடிவதில்லை. எங்காவது சிறுவர் விளையாட்டு மைதானங்களில் நெற்போலுக்கான கூடையையும், பந்தையும் சேர்த்துக் கண்டால் போதும். பாடசாலை நினைவுகள் மனதில் நர்த்தனமிட நானும் ஒரு சிறுபிள்ளை போல ஓடிச் சென்று பந்தை கூடைக்குள் திரும்பத் திரும்பவாகப் போடுவேன். படிக்கும் காலங்களில் நெற்போல் என்றால் எவ்வளவு பைத்தியமாக இருந்திருக்கிறேன். ஏதாவதொரு பாடத்துக்கு ஆசிரியர் வரவில்லை என்றால் போதும். நான் பந்துடன் மைதானத்துக்குச் சென்று விடுவேன்.
அவள் வந்த பின கண்டிப்பாக எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் சிறுவர் விளையாட்டு மைதானத்துக்குப் போய் அவளோடு நெற்போல் விளையாட வேண்டும் எனவும் நினைத்துக் கொண்டேன்.
இப்படியே மனம் நினைவுகளுடனும், கைகள் வேலைகளுடனும் என்று 90சதுர மீற்றர் வீட்டுக்குள் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டே இருந்தேன். எல்லாவற்றையும் முடித்து விட்டேன் என்றால் அவள் வந்து நிற்கும் ஒரு வாரமும் அவளுடன் கதைத்து, அவளோடு வெளியில் போய்.. என்று கூடிய நேரங்களை அவளுடனேயே களித்துக் கழிக்கலாம் என்ற பேராசை எனக்கு. அதற்காகவே ஒரு வாரம் வேலைக்கு விடுப்பும் எடுத்திருந்தேன்.
இரவும் வந்தது. அவளும் வந்தாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா..?இனம்புரியாத மகிழ்வலைகளில் திக்கு முக்காடினோம். காலங்களும், குடும்ப பாரங்களும் அவளிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. என்னை விட அதிக குண்டாக இருந்தாள். என் கற்பனைக்குத் துளியும் எட்டாத தூரத்தில் அவள் கணவன். கனேடிய ஸ்ரைலும், தமிழர் என்ற அடையாளங்களும் கலந்து அனேகமான எல்லா வெளிநாட்டுத் தமிழ்க் குழந்தைகள் போலவும் அவளது குழந்தைகள்.
கனடாவில் இருந்து வெளிக்கிட்டு இலண்டனில் இரண்டு வாரம், ஸ்பெயினில் ஒரு வாரம்... என்று நின்று நின்று வந்ததில் கொஞ்சம் களைத்தும் இருந்தார்கள். ஆனாலும் கலகலத்தார்கள். சாப்பிட்டு, நிறையக் கதைத்து நித்திரைக்குச் செல்ல சாமமாகி விட்டது.
அடுத்த நாள் ஆறுதலாகவே அவர்களுக்கு விடிந்தது. கதையும், சிரிப்புமாய் இருந்து விட்டு மதிய உணவை தயார் செய்யத் தொடங்கினேன்.
அவள் தனது சூடகேஸைத் திறந்து பிளாஸ்டிக் பைகளால் சுற்றப்பட்ட இரு பெரிய பார்சல்களை வெளியில் எடுத்தாள். ஏதோ அன்பளிப்புக் கொண்டு வந்திருக்கிறாள் என்ற நினைப்பில் மெலிதான ஆவல் என்னுள் தோன்றப் பார்த்துக் கொண்டு நின்றேன். பைகளைப் பிரித்து இருபதுக்கும் மேலான வீடியோ கசட்டுகளை வெளியில் எடுத்து வைத்தாள்.
"என்னது?" ஆவல் ததும்பக் கேட்டேன்.
"இது இவ்வளவும் ´சித்தி´, இதுகள் ´அரசி´, இதுகள் ´கோலம்´, இதுகள் ´செல்லமடி நீ எனக்கு´, இது ... இது ..." என்று சொல்லிச் சொல்லி கசட்டுகளைப் பிரித்துப் பிரித்து வைத்தாள்.
"என்ன படமா?"
"என்ன நீ, யூரோப்பிலை இருந்து கொண்டு இது கூட உனக்குத் தெரியாதே?" என்றாள்.
பின்னர்தான் விளங்கியது அத்தனையும் தொலைக்காட்சித் தொடர்கள் என்பது. பயண அலுவல்களால் கனடாவில் நின்ற கடைசி சில வாரங்கள் அவளால் தொடர்களைப் பார்க்க முடியாது போய் விட்டதாம். எல்லாவற்றையும் ரெக்கோர்ட் பண்ணிக் கொண்டு வந்து விட்டாளாம். இலண்டனில் கொஞ்சத்தைப் பார்த்து முடித்தாளாம். மிகுதியை இங்கு தொடரப் போகிறாளாம்.
நான் சமைத்து முடித்து மேசையில் சாப்பாடுகளை வைத்த போதும் சரி, தொடர்ந்த நாட்களிலும் சரி அவள் கண்களைத் துடைத்தும், மூக்கை உறிஞ்சியும் தொடர்களோடு கலங்குவதும், களிப்பதுமாய் இருந்தாள். கிடைக்கும் இடைவெளிகளிலும், சாப்பிடும் போதும் தொடர்களில் வரும் கதைகளையும், கதாபாத்திரங்களையும் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள்.
ஒரு வாரம் முடிந்து அவளும் அவள் குடும்பமும் போன பின் சூரியகுமாரியும், கூடைப்பந்தும் இன்னும் பலவும் வழக்கம் போலவே நினைவுகளாயும், நிராசைகளாயும் எனக்குள்ளே மிதந்து கொண்டிருந்தன.
சந்திரவதனா
18.7.2008
பிரசுரம்: ஓகஸ்ட் யுகமாயினி
குசினியிலிருந்து வீட்டின் எந்த மூலைக்குச் செல்லும் போதும் மீண்டும் மீண்டுமாய் அலுமாரிச் சிலைகளை ஒரு சென்ரிமீற்றர் அரக்கி வைத்தால் நன்றாக இருக்கும் போலவும், யன்னல் சேலையின் சுருக்குகள் சற்று ஒழுங்கற்று இருப்பது போலவும், புத்தக அலுமாரியில் புத்தகங்களை இன்னும் நேராக்கி விடலாம் போலவும்.. தோன்றிக் கொண்டே இருந்தன.
அவள் வரப்போகிறாள் என்பதில் எனக்குள் மிகுந்த பரபரப்பாகவே இருந்தது. 23வருடங்களின் பின் சந்திக்கப் போகிறேன். என்னைப் போல எடை போட்டிருப்பாளா? அல்லது அப்போது போலவே அழகாக இருப்பாளா? மனசு கற்பனை பாதியும், கேள்விகள் பாதியுமாக அவளின் வரவுக்காகக் காத்திருந்தது.
எத்தனை தடவைகள் புகைப்படங்கள் அனுப்பும் படி கேட்டிருப்பேன். "ம்.. கூம். நான் வருகிறேன் பார்" என்று சொல்லிச் சொல்லியே இத்தனை வருடங்களை இழுத்து விட்டாள்.
ஒரே வகுப்பில் ஒன்றாகத்தான் படிக்கத் தொடங்கினோம். ஒரே வகுப்பு என்பதையும் விட ஒரே ஊர் என்பது எங்களுக்குள் இன்னும் ஒட்டுதலை ஏற்படுத்தியிருந்தது. என் வீட்டில் போல அவள் வீட்டில் அதீதமான கட்டுப்பாடுகள் இல்லை. எனக்கு மாலைவேளைகளில் யார் வீட்டுக்கும் போய் விளையாடுவதற்கு அனுமதி கிடைப்பதில்லை. அவள்தான் என் வீட்டுக்கு வருவாள். ஓடிப்பிடித்து, ஒளித்துப்பிடித்து, கெந்திப்பிடித்து, கல்லுச்சுண்டி, கொக்கான்வெட்டி, கரம் விளையாடி.... எங்கள் பொழுதுகள் சிரிப்பும், கும்மாளமாகவுமே கரையும். என் தம்பி, தங்கைமாரும் எமது விளையாட்டுக்களில் வந்து இணைவார்கள். சில சமயங்களில் சூரியகுமாரியும் எங்களுடன் இணைந்து கொள்வாள். யாருக்கும் தெரியாத இரகசியங்களும் எங்களுக்குள் இருக்கும்.
எட்டாம் வகுப்பில் பாடசாலையில் பிரிக்கும் போது அவள் ஆர்ட்ஸ்க்கும், நான் சயன்ஸ்க்கும் என்று பிரிந்து விட்டோம். இடைவேளையில் ஓடிவந்து என்னுடன் கதைத்து விட்டுப் போவாள். இடையிடையே கிளித்தட்டு விளையாடும் போது அவள் வகுப்பும் எமது வகுப்பும் இணைந்து விளையாடுவோம். நெற்போல் (கூடைப்பந்து) என்றால் சொல்லவே தேவையில்லை. நேரம் போவதே எமக்குத் தெரிவதில்லை. மாலைவேளைகளில் தொடர்ந்தும் எமது வீட்டுக்கு வருவாள்.
நான் அவசரத் திருமணம் செய்து கொண்ட போதும், எனக்குக் குழந்தை பிறந்த போதும் ஓடி வந்து வியந்து வியந்து பார்த்தாள். நான் ஜேர்மனிக்குப் புறப்படும் வரை அவள் கல்யாணம் செய்து கொள்ளவே இல்லை.
சில வருடங்களில் அவள் திருமணமாகி கனடா சென்று விட்டதாக அம்மா எழுதியிருந்தாள். அங்கிருந்து எப்படியோ எனது தொலைபேசி இலக்கத்தைத் தேடிப்பிடித்து அழைத்துக் கதைத்தாள். அவளுக்குக் குழந்தைகள் பிறக்கும் வரை அடிக்கடி தொலைபேசியில் உரையாடினோம். குழந்தைகள் வளர வளர நாங்கள் பேசும் இடைவெளியும் வளர்ந்தது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் "நான் உன்னிடம் வருகிறேன்" என்பாள். இன்றிரவு கணவர் குழந்தைகளுடன் வரப் போகிறாள். மனசு இன்னும் பரபரத்துக் கொண்டே இருந்தது.
மீண்டும் மீண்டுமாய் வீடு அழகாக இருக்கிறதா எனச் சரி பார்த்துக் கொண்டேன். அவளுக்குத் தோசை பிடிக்கும் என்பதால், அடுத்தநாள் தோசை சுடலாம் என்ற நினைப்பில் உழுந்தை ஊறப் போட்டேன். சில கிலோமீற்றர்கள் தள்ளியிருக்கும் ஆசியாக் கடைக்கு முதல்நாளே சென்று, வாங்கி வந்த தேங்காயை சுத்தியலால் அடித்து, உடைத்து சம்பலுக்காகத் துருவி எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தேன். தோசைக்கு கத்தரிக்காய் வதக்கல் நல்லாயிருக்கும் என்று இன்னொரு கடைக்குச் சென்று வாங்கிய கத்தரிக்காயையும் வெட்டிப் பொரித்து எடுத்தேன். இரவுச் சாப்பாட்டுக்கு இடியப்பம் அவித்து, கோழி நெஞ்சுஇறைச்சியில் பிரட்டல் கறி, பொரியல், வெந்தயச் சொதி..., என்று செய்து முடித்தேன்.
உள்ளியும், வெங்காயமும், பொரிந்த எண்ணெயும்... என்று கலந்த சமையல் மணம் வெளியில் போய் விடும் படியாக யன்னல்களையும், பல்கணிக் கதவையும் திறந்து வைத்தேன்.
எங்கள் படுக்கையறையைத்தான் ஒரு வாரத்துக்கும் அவர்களுக்குக் கொடுக்க இருப்பதால் படுக்கை விரிப்புகளை மாற்றினேன். அந்த ஒரு வாரத்துக்கும் எமக்குத் தேவையான எமது உடுப்புகளையும், மற்றைய அத்தியாவசியப் பொருட்களையும் மற்றைய சிறிய அறைக்குள் கொண்டு போய் வைத்தேன்.
இப்படியே தொட்டுத் தொட்டு வேலைகள் நீண்டு கொண்டே போயின. கால்கள் ஆறுதல் தேடின. மனம் எதையாவது கண்டு பிடித்துப் பிடித்து வேலை தந்து கொண்டே இருந்தது.
மாலையில் கொறிப்பதற்கென முதல்வாரமே கணவரின் உதவியோடு தட்டை வடை செய்து வைத்திருந்தேன். அத்தோடு இன்னும் ஏதாவது பலகாரங்கள் செய்து வைத்தால் ஒரு கிழமையும் சுவையாகப் போகும் என்ற எண்ணம். அவளது பிள்ளைகளுக்கென சிப்ஸ், சொக்கிளேற்ஸ், பிஸ்கிட்ஸ் எல்லாம் வாங்கி அடுக்கி வைத்தேன்.
சூரியகுமாரியும் கனடாவில்தான் இருக்கிறாளாம். அவளைப் பற்றியும் நிறையக் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். இன்னும் என்னோடு அரிவரியிலிருந்து கபொத உயர்தரம் வரை படித்த பல மாணவிகள் கனடாவில்தானாம். ´வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் சந்திப்பு´ என்று சொல்லிச் சந்திப்பார்களாம். நெற்போல் விளையாடுவார்களாம்.
நெற்போல் என்றதுமே எனக்குள் சட்டென்று ஒரு ஆசை அலை மோதியது. ஜேர்மனியில் அனேகமாக எல்லாத் தமிழர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தள்ளித தள்ளித்தான் இருக்கிறோம். சேர்ந்து வருபவர்களில் ஒருவரேனும் என்னோடு படித்தவர்களாயோ, அல்லது எனது ஊரவர்களாயோ இருப்பதில்லை. இந்த நிலையில் ´வடமராட்சி மாணவர்கள் சந்திப்பு´ என்பதைக் கனவில் கூட இங்கு நினைத்துப் பார்க்க முடிவதில்லை. எங்காவது சிறுவர் விளையாட்டு மைதானங்களில் நெற்போலுக்கான கூடையையும், பந்தையும் சேர்த்துக் கண்டால் போதும். பாடசாலை நினைவுகள் மனதில் நர்த்தனமிட நானும் ஒரு சிறுபிள்ளை போல ஓடிச் சென்று பந்தை கூடைக்குள் திரும்பத் திரும்பவாகப் போடுவேன். படிக்கும் காலங்களில் நெற்போல் என்றால் எவ்வளவு பைத்தியமாக இருந்திருக்கிறேன். ஏதாவதொரு பாடத்துக்கு ஆசிரியர் வரவில்லை என்றால் போதும். நான் பந்துடன் மைதானத்துக்குச் சென்று விடுவேன்.
அவள் வந்த பின கண்டிப்பாக எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் சிறுவர் விளையாட்டு மைதானத்துக்குப் போய் அவளோடு நெற்போல் விளையாட வேண்டும் எனவும் நினைத்துக் கொண்டேன்.
இப்படியே மனம் நினைவுகளுடனும், கைகள் வேலைகளுடனும் என்று 90சதுர மீற்றர் வீட்டுக்குள் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டே இருந்தேன். எல்லாவற்றையும் முடித்து விட்டேன் என்றால் அவள் வந்து நிற்கும் ஒரு வாரமும் அவளுடன் கதைத்து, அவளோடு வெளியில் போய்.. என்று கூடிய நேரங்களை அவளுடனேயே களித்துக் கழிக்கலாம் என்ற பேராசை எனக்கு. அதற்காகவே ஒரு வாரம் வேலைக்கு விடுப்பும் எடுத்திருந்தேன்.
இரவும் வந்தது. அவளும் வந்தாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா..?இனம்புரியாத மகிழ்வலைகளில் திக்கு முக்காடினோம். காலங்களும், குடும்ப பாரங்களும் அவளிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. என்னை விட அதிக குண்டாக இருந்தாள். என் கற்பனைக்குத் துளியும் எட்டாத தூரத்தில் அவள் கணவன். கனேடிய ஸ்ரைலும், தமிழர் என்ற அடையாளங்களும் கலந்து அனேகமான எல்லா வெளிநாட்டுத் தமிழ்க் குழந்தைகள் போலவும் அவளது குழந்தைகள்.
கனடாவில் இருந்து வெளிக்கிட்டு இலண்டனில் இரண்டு வாரம், ஸ்பெயினில் ஒரு வாரம்... என்று நின்று நின்று வந்ததில் கொஞ்சம் களைத்தும் இருந்தார்கள். ஆனாலும் கலகலத்தார்கள். சாப்பிட்டு, நிறையக் கதைத்து நித்திரைக்குச் செல்ல சாமமாகி விட்டது.
அடுத்த நாள் ஆறுதலாகவே அவர்களுக்கு விடிந்தது. கதையும், சிரிப்புமாய் இருந்து விட்டு மதிய உணவை தயார் செய்யத் தொடங்கினேன்.
அவள் தனது சூடகேஸைத் திறந்து பிளாஸ்டிக் பைகளால் சுற்றப்பட்ட இரு பெரிய பார்சல்களை வெளியில் எடுத்தாள். ஏதோ அன்பளிப்புக் கொண்டு வந்திருக்கிறாள் என்ற நினைப்பில் மெலிதான ஆவல் என்னுள் தோன்றப் பார்த்துக் கொண்டு நின்றேன். பைகளைப் பிரித்து இருபதுக்கும் மேலான வீடியோ கசட்டுகளை வெளியில் எடுத்து வைத்தாள்.
"என்னது?" ஆவல் ததும்பக் கேட்டேன்.
"இது இவ்வளவும் ´சித்தி´, இதுகள் ´அரசி´, இதுகள் ´கோலம்´, இதுகள் ´செல்லமடி நீ எனக்கு´, இது ... இது ..." என்று சொல்லிச் சொல்லி கசட்டுகளைப் பிரித்துப் பிரித்து வைத்தாள்.
"என்ன படமா?"
"என்ன நீ, யூரோப்பிலை இருந்து கொண்டு இது கூட உனக்குத் தெரியாதே?" என்றாள்.
பின்னர்தான் விளங்கியது அத்தனையும் தொலைக்காட்சித் தொடர்கள் என்பது. பயண அலுவல்களால் கனடாவில் நின்ற கடைசி சில வாரங்கள் அவளால் தொடர்களைப் பார்க்க முடியாது போய் விட்டதாம். எல்லாவற்றையும் ரெக்கோர்ட் பண்ணிக் கொண்டு வந்து விட்டாளாம். இலண்டனில் கொஞ்சத்தைப் பார்த்து முடித்தாளாம். மிகுதியை இங்கு தொடரப் போகிறாளாம்.
நான் சமைத்து முடித்து மேசையில் சாப்பாடுகளை வைத்த போதும் சரி, தொடர்ந்த நாட்களிலும் சரி அவள் கண்களைத் துடைத்தும், மூக்கை உறிஞ்சியும் தொடர்களோடு கலங்குவதும், களிப்பதுமாய் இருந்தாள். கிடைக்கும் இடைவெளிகளிலும், சாப்பிடும் போதும் தொடர்களில் வரும் கதைகளையும், கதாபாத்திரங்களையும் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள்.
ஒரு வாரம் முடிந்து அவளும் அவள் குடும்பமும் போன பின் சூரியகுமாரியும், கூடைப்பந்தும் இன்னும் பலவும் வழக்கம் போலவே நினைவுகளாயும், நிராசைகளாயும் எனக்குள்ளே மிதந்து கொண்டிருந்தன.
சந்திரவதனா
18.7.2008
பிரசுரம்: ஓகஸ்ட் யுகமாயினி
Labels:
அவள் வருகிறாள்
,
பத்தி
,
யுகமாயினி
Sunday, August 17, 2008
Tamil Rehab Org NZ on TV1 - 7th August 2008
Maniparathy talking for TRO on a Newzealand tv news.
Quelle - http://nz.youtube.com/watch?v=YIF3cam15B0
Labels:
TRO
,
தாயகம்
,
நியூசிலாந்து
,
புனர்வாழ்வு
Friday, August 08, 2008
நிழற்குடை
2002 இல் நாம் வன்னிக்குச் சென்ற போது கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருந்த வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனத்தில்தான் தங்கினோம்.
வெண்புறா நிறுவனத்துக்கு அப்போது பொறுப்பாக இருந்தவர் வீரன். வெண்புறாவில் பணி புரிந்த, சிகிச்சை பெற்ற, தங்கியிருந்த அனைத்து உறவுகளையும் போலவே வீரனும் எங்களுடன் அன்போடு பழகினார். அந்த நிறுவனத்தில் இருந்த பல பேரையும் போல வீரனுக்கும் ஒரு கால் செயற்கைக்காலாகவே இருந்தது. ஆனாலும் செயற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன.
அந்த சமயத்தில்தான் வற்றாப்பளைப் பொங்கல். வெண்புறா உறவுகள் அத்தனை பேரும் அங்கு போவதாகத் தீர்மானித்தார்கள். ஒரு வான் பிடித்து எல்லோருமாகப் புறப்பட்டோம். கரடு முரடான ஏ9 பாதையில் ஆரம்பித்த அந்தப் பயணம் ஒரு இனிமையான பயணம். அந்தப் பயண அனுபவத்தைத் தனியாக எழுதலாம்.
போகும் போது முல்லைக் கடற்கரைக்குச் சென்று அங்கிருந்து வீரனின் வீட்டுக்குச் சென்று அவரின் மனைவியையும், குழந்தையையும் பார்த்து விட்டுப் போவதாகத்தான் தீர்மானித்திருந்தோம். அது வீரனின் விருப்பமும் கூட. முல்லைக் கடற்கரையில் சில மணி நேரங்களைக் கழித்து விட்டு வீரனின் வீட்டுக்குச் சென்ற போது அங்கு வீரனின் மனைவி எங்களைப் புன்னகையுடன் வரவேற்றார். அவரது இரு சகோதரர்கள் மாவீரர்கள்.
மதியஉணவு மரக்கறிகளுடன், பப்படமும் சேர்ந்து சுவைத்தது. வீரனின் மனைவி, குழந்தைகளுடனான பொழுதுகள் இனித்தன. வெண்புறா உறவுகள் எல்லோரும் ஆள் மாறி ஆள் மாறி வீரனின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு திரிந்தார்கள். கதை, சிரிப்பு,... என்று சில மணி நேங்களைக் கழித்து விட்டு மாலையில் வற்றாப்பளைக்குப் புறப்பட்டோம்.
வீரனின் மனைவி எப்போதுமே புன்னகை மாறாத முகத்துடன் இனிமையாகக் கதைத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்.
ஜேர்மனிக்குத் திரும்பிய பின்னும் வீரனின் அந்த வீடும், பப்படம் மொருமொருக்க வீரனின் மனைவி மகிழ்வோடு பரிமாறிய அந்த விருந்தும், புன்னகை தவழ்ந்த முகத்தோடு எம்மோடு உறவாடிய வீரனின் மனைவியும் அவ்வப்போது என் நினைவுகளில் மிதந்து கொண்டே இருந்தார்கள்.
சில வருடங்கள் கழித்து வீரன் ஜேர்மனிக்கு வந்திருப்பதாக அறிவித்தல் வந்து, எம்மைக் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று சொல்லி எமது வீட்டுக்கும் வந்தார்.
மனைவி, குழந்தைகளைப் பற்றி விசாரித்த போது 2004இல் ´கடலே எழுந்து வீழ்ந்த போது சுனாமி அலையோடு போய் விட்டார்கள்´ என்றார் வேதனையோடு.
மனைவியின் நினைவாக நிழற்குடை ஒன்றைக் கட்டியுள்ளதாகவும் சொன்னார். இப்போதெல்லாம் நிழற்குடைகளைக் காணும் போது பல நூறு நினைவுகளின் மத்தியில் வீரனின் மனைவியின் புன்னகையும், அந்தக் குழந்தையும முகம் காட்ட மறப்பதில்லை.
சந்திரவதனா
8.8.2008
சதீசு குமாரின் படம் தந்த நினைவு
Labels:
சுனாமி
,
தாயகப் பயணம்
,
நிகழ்வு
,
நினைவுகள்
Tuesday, August 05, 2008
பூத்த கொடி பூக்களின்றி...
தமிழ்பிரவாகம் நடாத்திய இலக்கியப் போட்டியில்(2008) இரண்டாவது பரிசைப் பெற்றது
ஹட்டன் நாஷனல் வங்கியிலிருந்து பணத்துடன் வெளியே வந்த கனகர் சைக்கிளை எடுத்துக் கொண்டு வலது பக்கமாகத் திரும்பி ரவுணை நோக்கி சைக்கிளை மிதித்தார். ரவுணுக்குள் நுழைய முடியாது போல இராணுவத்தினர் ரவுணை மொய்த்திருந்தனர்.
கனகருக்கு இன்று கொஞ்சம் களைப்பாக இருந்தது. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டார். வீட்டுக்குச் சற்றுத் தள்ளியுள்ள கடைகளிலேயே வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கியிருப்பார். ஓய்வூதியப் பணத்தை எடுக்க வங்கி வரை வர வேண்டியிருந்தது. அதுதான் இவ்வளவு தூரம் வந்தவர். ´அப்பிடியே ரவுணுக்குள்ளும் எட்டிப் பார்த்து விட்டுப் போவம்´ என்று நினைத்தார்.
வெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். யாராவது வங்கிக்குப் பணம் அனுப்பியிருப்பார்கள் என்ற நப்பாசையில் சிவபாலனைக் கேட்டார் "ஏதும் காசு கீசு வந்திருக்கோ..?" என்று. கணினியைத் தட்டிப் பார்த்த சிவபாலன் "இல்லை" என்ற போது மனசுக்குள் தோன்றிய ஏமாற்றத்தை முகத்தில் தெரிய விடாமல் மறைத்து விட்டு வந்தாலும் கனகரின் மனசு இன்னும் ஏமாற்றத்தில் துவண்டிருந்தது.
நினைவுகளைச் சிதற விட்டதில் ரவுணை நெருங்கும் போதுதான் செக்கிங் நடப்பதை உணர்ந்து கொண்டார். சைக்கிளால் இறங்கி வரிசையில் நின்றார். உச்சிவெயில் மண்டையில் சுள்ளிட்டது. வரிசை நத்தையாக நகர்ந்தது.
அவர் முறை வந்த போது அவரது ஒரு மாதப்பாஸை வேண்டிப் பார்த்த இராணுவம் அவரைப் போகச் சொன்னது. ´அப்பாடா´ என்று மனசு ஆசுவாசப்பட சைக்கிளை உருட்டிக் கொண்டு இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒருவனை நோக்கி நடந்தார். பத்து ரூபாவைக் கொடுத்து அவன் வெட்டிக் கொடுத்த இனிப்பான தண்ணென்ற இளநீரைக் குடித்த போது வெயிலின் அகோரம் தணிந்தது போல இருந்தது. அந்த உஷாருடன் பொருட்களை வாங்கிக் கொண்டு ரவுணை விட்டு வெளியேற முனைந்தவர் மீண்டும் ரவுணை விட்டு வெளியேறும் வரிசையில் கட்டாயமாக நிறுத்தப் பட்டார். சந்தேகத்தின் பெயரில் சிலர் கொடிய வெயிலில் மறித்து நிற்பாட்டி வைக்கப் பட்டிருந்தனர். பரிதாபமாக விழிக்கும் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்த படியே மீண்டும் நத்தை ஊர்வலத்தில் நகர்ந்து பாஸ் காட்டி வெளியேறி வீட்டை நோக்கிச் சைக்கிளை மிதித்தார்.
ரவுணுக்குள் மனிதங்கள் கொளுத்தும் வெயிலில் தடுத்து நிறுத்திச் சோதனை செய்யப் படுவதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லாமல் ஸ்ரேசன் றோட் சைக்கிள்கள், ஓட்டோக்கள், மனிதர்கள்... என நிரம்பி வழமையான அவசரத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. இராணுவம், ஷெல், செக்கிங் இவையெல்லாம் வவுனியா மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகவும் சாதாரணமாகி விட்டன.
அதி வேகமாக, முரட்டுத்தனமாக வந்த ஓட்டோ (முச்சக்கரவண்டி) ஒன்றில் மோதி விடாமல் கனகர் அவசரமாக ஒதுங்கிக் கொண்டார். துப்பாக்கியும், ஷெல்லும் இல்லாமலே ஓட்டோச் சில்லுக்குள் சிதைந்து போகும் அவலங்களும் இங்கு நிகழும். நாற்பது ரூபாவுக்காக பேயோட்டம் ஓடும் ஓட்டோ சாரதி நாய் போல நாதியற்று நடுத்தெருவில் கவுண்டு போன ஓட்டோவின் கீழ் சிதைந்து கிடப்பதும் இங்கு நிகழும். ´ஏன்தான் இப்பிடி நாயாய், பேயாய் ஓடுதுகளோ! ஒரு நிதானம் வேண்டாம். சாவதற்கு இத்தனை அவசரமோ!´ கனகர் தனக்குள்ளே நினைத்துக் கொண்டார்.
ஹட்டன் நாஷனல் வங்கிக்கு முன்னால் இருந்த பெரிய மரத்தின் கீழ் அழகிய செருப்புக்களைப் பரப்பி ஒருவன் விற்றுக் கொண்டிருக்க ஒரு சில பெண்கள் செருப்புக்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்து விலைபேசி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
வவுனியா கனகருக்கொன்றும் புதிதில்லை. ஏற்கெனவே இருதடவைகள் அவர் வவுனியா அரச அலுவலகத்தில் வேலை பார்த்தவர்தான். ஆனால் அப்போதைய வவுனியாவுக்கும் இப்போதைய வவுனியாவுக்கும் நிறையவே வித்தியாசம். அந்த நாட்களை நினைத்தாலே அவரை ஏக்கம் பற்றிக் கொள்ளும். ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் பிள்ளைகளையும், மனைவி செல்லத்தையும் அழைத்துக் கொண்டு வந்து அவருக்குக் கொடுக்கப் பட்ட குவார்ட்டர்ஸ்சில் அவர்களுடன் விடுமுறையைக் கழித்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை. இந்த வீதியில் பிள்ளைகளின் கையைப் பிடித்துக் கொண்டு... எத்தனை ஆனந்தமான நாட்கள் அவை.
அவரின் கால்கள் சைக்கிள் பெடலை மிதித்தாலும், மனம் அலைந்து அலைந்து தொலைந்து போன இனிமையான நாட்களைத் தொட்டுத் தொட்டு சிலிர்ப்பதுவும், ஏங்குவதுமாய் இருந்தது. ஆதிசக்தி விநாயகர் கோயிலடிக்கு வந்ததும்தான் நியத்துக்கு மீண்டார். சைக்கிளால் இறங்கி, சில நிமிடங்கள் தன்னை மறந்து, பக்தியில் நனைந்து பிள்ளையாரைப் பிரார்த்தித்தவர் மீண்டும் சைக்கிளில் ஏறி உழக்கினார். அப்போதுதான் தனக்கு தலைசுற்றுவதை உணர்ந்தார். அவருக்குக் கண்களை மறைப்பது போலிருந்தது.
'ஆதிசக்தி விநாயகரே...!'
அவ்வளவு அவசரமாக விநாயகரை அழைத்தும் விதி முந்திக் கொண்டதில் கீழே வீழ்ந்து விட்டார். தொடையில் சைக்கிள் கான்டில் பலமாகக் குத்தியதில் வலித்தது. அதைவிட வீதியில் இப்படி வீழ்ந்ததில் அவருக்கு சங்கடமாகவும், வெட்கமாகவும் இருந்தது.
'ரோட்டிலை எத்தினை கண்கள் என்னைப் பாக்குதுகள். நினைத்தவாறே எழும்ப முயன்றவரை வேதாரணியம் ஐயா ஓடி வந்து 'கனகண்ணை, எழும்புங்கோ' என்று தூக்கிய போது அவர் கூசிப் போனார். 'எனக்கென்ன வயசாகிட்டுதே? 63வயதுதானே! மனசுக்குள் ஆதங்கப் பட்டார்.
மூன்று மாதங்கள் ஓடியும் இந்த சம்பவத்தை மறக்க முடியாமல் திரும்பத் திரும்ப நினைத்து நினைத்து கனகர் உடம்போடு சேர்த்து மனசையும் குறுக்கிக் குறுக்கிக் கொண்டு கட்டிலிலேயே படுத்துக் கிடந்தார்.
அது போதாதென்று ´இவள் செல்லம் ஊரிலை என்னமாய் வாழ்ந்தவள். பருத்தித்துறையிலை மாளிகை மாதிரியான அந்தப் பெரிய வீட்டிலை பிள்ளையளும், பேரப்பிள்ளையளும் புடைசூழ ஒரு சந்தோச சாம்ராஜ்ஜியத்தையே கட்டியாண்டவள் இண்டைக்கு இந்தக் குச்சியறைக்குள்ளை குடித்தனம் நடத்துறாளே! அங்கை அவளின்ரை குசினி மட்டுமே இந்தக் குச்சியறையைப் போல நாலுமடங்கு பெரிசாயிருக்குமே. பிள்ளையளாவது பக்கத்திலை இருக்குதுகளே! எட்டுப் பிள்ளையளைப் பெத்தவள். ஒன்று கூடப் பக்கத்திலை இல்லாமல் நாட்டுக்காய் மடிந்தும், நாடு நாடாய் சிதறியும்....! நானெண்டாலும் அவளுக்கு ஆறுதலாய் இருக்கிறனே! கக்கூசுக்குப் போகக்கூட கைத்தடியாய் அவளைத் தேடுகிற கையாலாகதவானாகப் போயிட்டனே!´ என்று மனைவி செல்லத்தை நினைத்துக் கரைவதும், தனது கையாலாகாத் தனத்தை நினைத்துப் புலம்புவதுமாயே இருந்தார்.
மூன்று மாதங்களின் முன் வவுனியாவின் ஸ்டேசன் ரோட்டில், ஆதிசக்தி விநாயகர் கோவிலின் முன் வீழ்ந்த போது கனகர் வெட்கத்தில் மட்டுந்தான் கூசிப் போனார். ஓட்டோவில் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டதும் செல்லம்தான் நன்றாகப் பதறிப் போனாள். உடனேயே மருத்துவமனைக்குக் கொண்டோடினாள். எல்லாம் சோதித்துப் பார்த்த மருத்துவர் "விரைவில் குணமாகி விடும்" என்று சொல்லி மருந்தும் கொடுத்து விட்டார்.
´மருந்தெடுக்க குணப்பட்டு விடுவேன்` என்ற முழுமையான நம்பிக்கையுடன்தான் கனகரும் இருந்தார். ஆனால் அவர் நம்பிக்கை தோற்றுப் போகும் படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் படுக்கையிலே போய் விட்டார். பிறகுதான் புதிதாய் வந்த மருத்துவர் ஒருவர் அவரது இதயத்தில் கோளாறு இருப்பதைக் கண்டு பிடித்தார். தாமதாமன கண்டுபிடிப்பாலும், சரியான வைத்தியம் இன்மையாலும் அவரின் உடலின் சில பாகங்கள் செயலற்றுப் போனது அதிர்ச்சியான உண்மையானது. மருத்துவர் "இனிச் செய்ய எதுவுமில்லை" என்று கையை விரித்தது மேலும் அதிர்ச்சியானது. நோயின் வேதனையைக் குறைக்க குளிகைகளும், ஊசிகளுமே கை கொடுத்தன.
மருத்துவமனை வரை போய்வரக் கூட இயலாத அளவுக்கு நோயின் தீவிரம் அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பின் கனகருக்கு இந்தக் கட்டிலே தஞ்சமாகி விட்டது. மருத்துவர் தினமும் வந்து பார்த்து, ஊசி போட்டுச் சென்றார். நோயின் வேதனையும், எழுந்து நடமாடக் கூட முடியாத நிலையும் கனகரின் தன்மான மனசை நன்றாகவே பாதித்திருந்தன. செல்லத்தின் அன்புதான் அவரை அவ்வப்போது ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தது.
செல்லம் தன்னந்தனியாக பிள்ளைகளின் உதவிகள் கூட இல்லாமல் தன்னைப் பராமரிப்பதையும், நோயின் வேதனை தாங்காது "செல்..ல...ம்..." என்று அலறும் போதெல்லாம் ஓடிவந்து அருகிருந்து ஆதரவுடன் கவனிப்பதையும் பார்த்து ´பாவப்பட்டவள், கரைச்சல் குடுக்கக் கூடாதெண்டுதான் நினைக்கிறனான். ஆனாலும் முடியேல்லையே. வலி கொல்லுதே!´ என்று மனதுக்குள் மிகவும் வேதனைப் படுவார்.
மீண்டும் "செல்...ல...ம்..! எனக்கு ஏலாதாம். இஞ்சை ஓடி வாரும். அந்தக் குளிசையளை எடுத்துத் தாரும்" இயன்றளவு தன் குரலை உயர்த்திக் கூப்பிடுவார். செல்லமும் தான் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அவைகளை அப்படி அப்படியே போட்டு விட்டு ஓடிவந்து 'என்னப்பா, வலியா இருக்குதே, நோகுதே..?' என்று கேட்ட படி ஒவ்வொரு போத்தலாய் திறந்து குளிசைகளை எடுத்து கை நிறையக் கொடுத்து தண்ணீரையும் கொடுப்பாள்.
'எவ்வளவு பொறுமை இவளுக்கு' என்று நினைத்தபடி அவைகளை அவர் சோறு போல முழுங்குவார்.
வழமையில் குளிகைகள் உள்ளே போனதும் வலியை மறந்து தூங்கிப் போகும் அவர் இப்போதெல்லாம் நோய் வலிமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கி இருந்ததால் கோழித்தூக்கம் தூங்கி, வலியில் விழிக்கத் தொடங்கியிருந்தார்.
முதல்நாள் இரவு ஊசி போட வந்த மருத்துவர், செல்லத்தை அறைக்கு வெளியில் கூட்டிக் கொண்டு போய் "இனி அவருக்கு மருந்தில்லை. விரும்பினதைக் குடுங்கோ. பிள்ளையள் ஆராவது வெளிநாட்டிலை இருந்து வந்து பார்த்திட்டுப் போறதெண்டால் பார்க்கட்டும். எந்த நேரத்திலையும் அவர் இதயம் துடிக்க மறந்து போகலாம்." என்று குசுகுசுத்துச் சொன்னது கனகருக்கும் கேட்டது.
செல்லம் அதைப் பற்றி ஒன்றுமே கனகரிடம் சொல்லாமல் தனக்குள்ளே அழுது அழுது முந்தானையில் மூக்கைச் சீறிக் கொண்டு திரிந்ததைப் பார்த்து அவர் தனக்குள்ளே அழுது கொண்டிருந்தார். அவருக்கும் வாழ்க்கை ஆசை அற்றுப் போயிருந்தது. நோயின் வேதனையிலிருந்து விடுதலைதான் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனாலும் ´பிள்ளைகளை ஒருக்காலாவது பார்க்கோணும்´ என்ற ஆசை அவருக்குள் தோன்றி அவரை வதைத்தது.
'என்ரை பிள்ளையள் என்னை வந்து பார்க்குங்களே?' கனகரின் நினைவுகள் ஆசையில் வெந்தன. நொந்தன. பிள்ளைகளின் நினைவில் ஏங்கின.
´நான் செத்துப் போயிட்டனெண்டால் அதுகள் எப்பிடி வேதனைப் படுங்கள். புலம்புங்கள்.´ தனக்குள்ள வேதனையை விட பிள்ளைகளின் வேதனைகளை நினைத்துக் கண் கலங்கினார்.
"செல்லம்.., ஜேர்மனிக்கு ஒருக்கால் ரெலிபோன் எடுத்து பிள்ளையளுக்குச் சொல்லுமன். நான் சாகிறேக்கிடையிலை வரச்சொல்லி... மூத்தவளுக்கு சிற்றிசெனாம். அவளாவது வரமாட்டாளே!" நாட்டு நிலைமைகள் தெரிந்தாலும் கனகரின் மனம் பேதலித்தது.
"அவள் வந்தாளெண்டால் அவளையாவது ஆசை தீரப் பார்த்திட்டுச் செத்திடுவன்" வாய் முணுமுணுத்தது.
மனசு நிறையப் பிள்ளைகளின் பாசம் பொங்கி வழிந்து அவரைப் படுத்திக் கொண்டிருந்த அந்த நேரத்திலேயே அவரது நெஞ்சுக்குள்ளும் மீண்டும் வலி தொடங்கியது.
´ஆறு மணியாகுது. வழக்கத்திலையெண்டால் அஞ்சு மணிக்கு கிளினிக் முடிச்சிட்டுப் போற பொழுதே டொக்டர் வந்து ஊசி போட்டிட்டுப் போடுவார். இண்டைக்கென்ன இன்னும் காணேல்லை. ஏதும் அவசரத்திலை வராமல் போடுவாரோ?´ ஒரு யோசனை கனகரைப் பயப்படுத்த "செல்லம்... செல்லம், டொக்டர் வராமல் போனாலும் போடுவார். எனக்கிண்டைக்கு தாங்கேலாமல் நோகுது. ஒருக்கால் ரெலிபோனிலை கூப்பிட்டு, கட்டாயம் வரச் சொல்லிச் சொல்லும்." என்றார்.
செல்லம் ரெலிக்கொமினிக்கேசன் பூட்டப் போகின்றது என்ற அவசரத்தில் குருமன் காட்டுச்சந்தி ரெலிக்கொமினிக்கேசனை நோக்கி விரைந்தாள். சந்தியில் நிற்கும் இராணுவக் கூட்டத்தைக் கண்டதும் 'பாழ் பட்டுப் போவாங்கள். எப்பிடியெல்லாம் எங்களை வதைக்கிறாங்கள்.' என்று மனசுக்குள் திட்டினாள்.
வரசக்திப் பிள்ளையார் கோவிலைக் கடக்கையில் 'என்ரை மனுசனை நீதான் காப்பாத்து.' என்று மானசீகமாக ஒரு வேண்டுகோளை பிள்ளையாரிடம் விடுத்தாள்.
ரெலிக்கொமினிக்கேசனுக்குள் நுழைந்து மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்து கனகரின் நிலையை விவரித்தாள். "இன்னும் ஒரு பேசன்ட் தான் அம்மா இருக்கிறார். அவரையும் பார்த்திட்டு அரைமணித்தியாலத்திலை வந்திடுவன். தைரியமா நீங்கள் வீட்டை போங்கோ" மருத்துவர் வாக்குறுதி கொடுத்தார்.
நிம்மதியோடு வீட்டுக்கு ஓடி வந்தாள் செல்லம். கனகர் வேதனையில் உழன்று கொண்டிருந்தார். செல்லம் எதுவும் செய்ய மனசில்லாமல் அவர் அருகிலேயே இருந்து அவரது நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள்.
அரைமணி ஒரு மணியாகியும் மருத்துவர் வரவில்லை. கனகர் வேதனையின் உச்சத்தில் பிள்ளைகளின் பெயர்களோடு, டொக்டர், செல்லம்... என்றெல்லாம் அரற்றிக் கொண்டிருந்தார்.
வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன் றோட் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. அடுத்தநாள் மாவீரர்நாள் என்பதால் `விடுதலைப்புலிகள் தமக்கு ஏதும் செய்து விடுவார்களோ!என்று கிலி கொண்ட இராணுவத்தினர் ரவுண் வீதிகளில் கண்ட எல்லா அப்பாவித் தமிழர்களையும் தடுத்து நிறுத்தி வீதிகளில் இருத்திக் கொண்டிருந்தார்கள்.
கடமை முடித்து வந்த அந்த மருத்துவரையும் இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி, ரவுணுக்குள் இருத்தி வைத்திருப்பது தெரியாமல் பதைபதைக்கும் நெஞ்சுடன் செல்லம் கேற்றுக்கும், கட்டிலுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தாள்.
கனகரின் அரற்றல் அவர் மூச்சோடு மெதுமெதுவாக முடங்கத் தொடங்கியது. அவர் திணறிக் கொண்டிருந்தார்
சந்திரவதனா
ஜோமனி
ஹட்டன் நாஷனல் வங்கியிலிருந்து பணத்துடன் வெளியே வந்த கனகர் சைக்கிளை எடுத்துக் கொண்டு வலது பக்கமாகத் திரும்பி ரவுணை நோக்கி சைக்கிளை மிதித்தார். ரவுணுக்குள் நுழைய முடியாது போல இராணுவத்தினர் ரவுணை மொய்த்திருந்தனர்.
கனகருக்கு இன்று கொஞ்சம் களைப்பாக இருந்தது. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டார். வீட்டுக்குச் சற்றுத் தள்ளியுள்ள கடைகளிலேயே வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கியிருப்பார். ஓய்வூதியப் பணத்தை எடுக்க வங்கி வரை வர வேண்டியிருந்தது. அதுதான் இவ்வளவு தூரம் வந்தவர். ´அப்பிடியே ரவுணுக்குள்ளும் எட்டிப் பார்த்து விட்டுப் போவம்´ என்று நினைத்தார்.
வெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். யாராவது வங்கிக்குப் பணம் அனுப்பியிருப்பார்கள் என்ற நப்பாசையில் சிவபாலனைக் கேட்டார் "ஏதும் காசு கீசு வந்திருக்கோ..?" என்று. கணினியைத் தட்டிப் பார்த்த சிவபாலன் "இல்லை" என்ற போது மனசுக்குள் தோன்றிய ஏமாற்றத்தை முகத்தில் தெரிய விடாமல் மறைத்து விட்டு வந்தாலும் கனகரின் மனசு இன்னும் ஏமாற்றத்தில் துவண்டிருந்தது.
நினைவுகளைச் சிதற விட்டதில் ரவுணை நெருங்கும் போதுதான் செக்கிங் நடப்பதை உணர்ந்து கொண்டார். சைக்கிளால் இறங்கி வரிசையில் நின்றார். உச்சிவெயில் மண்டையில் சுள்ளிட்டது. வரிசை நத்தையாக நகர்ந்தது.
அவர் முறை வந்த போது அவரது ஒரு மாதப்பாஸை வேண்டிப் பார்த்த இராணுவம் அவரைப் போகச் சொன்னது. ´அப்பாடா´ என்று மனசு ஆசுவாசப்பட சைக்கிளை உருட்டிக் கொண்டு இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒருவனை நோக்கி நடந்தார். பத்து ரூபாவைக் கொடுத்து அவன் வெட்டிக் கொடுத்த இனிப்பான தண்ணென்ற இளநீரைக் குடித்த போது வெயிலின் அகோரம் தணிந்தது போல இருந்தது. அந்த உஷாருடன் பொருட்களை வாங்கிக் கொண்டு ரவுணை விட்டு வெளியேற முனைந்தவர் மீண்டும் ரவுணை விட்டு வெளியேறும் வரிசையில் கட்டாயமாக நிறுத்தப் பட்டார். சந்தேகத்தின் பெயரில் சிலர் கொடிய வெயிலில் மறித்து நிற்பாட்டி வைக்கப் பட்டிருந்தனர். பரிதாபமாக விழிக்கும் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்த படியே மீண்டும் நத்தை ஊர்வலத்தில் நகர்ந்து பாஸ் காட்டி வெளியேறி வீட்டை நோக்கிச் சைக்கிளை மிதித்தார்.
ரவுணுக்குள் மனிதங்கள் கொளுத்தும் வெயிலில் தடுத்து நிறுத்திச் சோதனை செய்யப் படுவதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லாமல் ஸ்ரேசன் றோட் சைக்கிள்கள், ஓட்டோக்கள், மனிதர்கள்... என நிரம்பி வழமையான அவசரத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. இராணுவம், ஷெல், செக்கிங் இவையெல்லாம் வவுனியா மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகவும் சாதாரணமாகி விட்டன.
அதி வேகமாக, முரட்டுத்தனமாக வந்த ஓட்டோ (முச்சக்கரவண்டி) ஒன்றில் மோதி விடாமல் கனகர் அவசரமாக ஒதுங்கிக் கொண்டார். துப்பாக்கியும், ஷெல்லும் இல்லாமலே ஓட்டோச் சில்லுக்குள் சிதைந்து போகும் அவலங்களும் இங்கு நிகழும். நாற்பது ரூபாவுக்காக பேயோட்டம் ஓடும் ஓட்டோ சாரதி நாய் போல நாதியற்று நடுத்தெருவில் கவுண்டு போன ஓட்டோவின் கீழ் சிதைந்து கிடப்பதும் இங்கு நிகழும். ´ஏன்தான் இப்பிடி நாயாய், பேயாய் ஓடுதுகளோ! ஒரு நிதானம் வேண்டாம். சாவதற்கு இத்தனை அவசரமோ!´ கனகர் தனக்குள்ளே நினைத்துக் கொண்டார்.
ஹட்டன் நாஷனல் வங்கிக்கு முன்னால் இருந்த பெரிய மரத்தின் கீழ் அழகிய செருப்புக்களைப் பரப்பி ஒருவன் விற்றுக் கொண்டிருக்க ஒரு சில பெண்கள் செருப்புக்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்து விலைபேசி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
வவுனியா கனகருக்கொன்றும் புதிதில்லை. ஏற்கெனவே இருதடவைகள் அவர் வவுனியா அரச அலுவலகத்தில் வேலை பார்த்தவர்தான். ஆனால் அப்போதைய வவுனியாவுக்கும் இப்போதைய வவுனியாவுக்கும் நிறையவே வித்தியாசம். அந்த நாட்களை நினைத்தாலே அவரை ஏக்கம் பற்றிக் கொள்ளும். ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் பிள்ளைகளையும், மனைவி செல்லத்தையும் அழைத்துக் கொண்டு வந்து அவருக்குக் கொடுக்கப் பட்ட குவார்ட்டர்ஸ்சில் அவர்களுடன் விடுமுறையைக் கழித்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை. இந்த வீதியில் பிள்ளைகளின் கையைப் பிடித்துக் கொண்டு... எத்தனை ஆனந்தமான நாட்கள் அவை.
அவரின் கால்கள் சைக்கிள் பெடலை மிதித்தாலும், மனம் அலைந்து அலைந்து தொலைந்து போன இனிமையான நாட்களைத் தொட்டுத் தொட்டு சிலிர்ப்பதுவும், ஏங்குவதுமாய் இருந்தது. ஆதிசக்தி விநாயகர் கோயிலடிக்கு வந்ததும்தான் நியத்துக்கு மீண்டார். சைக்கிளால் இறங்கி, சில நிமிடங்கள் தன்னை மறந்து, பக்தியில் நனைந்து பிள்ளையாரைப் பிரார்த்தித்தவர் மீண்டும் சைக்கிளில் ஏறி உழக்கினார். அப்போதுதான் தனக்கு தலைசுற்றுவதை உணர்ந்தார். அவருக்குக் கண்களை மறைப்பது போலிருந்தது.
'ஆதிசக்தி விநாயகரே...!'
அவ்வளவு அவசரமாக விநாயகரை அழைத்தும் விதி முந்திக் கொண்டதில் கீழே வீழ்ந்து விட்டார். தொடையில் சைக்கிள் கான்டில் பலமாகக் குத்தியதில் வலித்தது. அதைவிட வீதியில் இப்படி வீழ்ந்ததில் அவருக்கு சங்கடமாகவும், வெட்கமாகவும் இருந்தது.
'ரோட்டிலை எத்தினை கண்கள் என்னைப் பாக்குதுகள். நினைத்தவாறே எழும்ப முயன்றவரை வேதாரணியம் ஐயா ஓடி வந்து 'கனகண்ணை, எழும்புங்கோ' என்று தூக்கிய போது அவர் கூசிப் போனார். 'எனக்கென்ன வயசாகிட்டுதே? 63வயதுதானே! மனசுக்குள் ஆதங்கப் பட்டார்.
மூன்று மாதங்கள் ஓடியும் இந்த சம்பவத்தை மறக்க முடியாமல் திரும்பத் திரும்ப நினைத்து நினைத்து கனகர் உடம்போடு சேர்த்து மனசையும் குறுக்கிக் குறுக்கிக் கொண்டு கட்டிலிலேயே படுத்துக் கிடந்தார்.
அது போதாதென்று ´இவள் செல்லம் ஊரிலை என்னமாய் வாழ்ந்தவள். பருத்தித்துறையிலை மாளிகை மாதிரியான அந்தப் பெரிய வீட்டிலை பிள்ளையளும், பேரப்பிள்ளையளும் புடைசூழ ஒரு சந்தோச சாம்ராஜ்ஜியத்தையே கட்டியாண்டவள் இண்டைக்கு இந்தக் குச்சியறைக்குள்ளை குடித்தனம் நடத்துறாளே! அங்கை அவளின்ரை குசினி மட்டுமே இந்தக் குச்சியறையைப் போல நாலுமடங்கு பெரிசாயிருக்குமே. பிள்ளையளாவது பக்கத்திலை இருக்குதுகளே! எட்டுப் பிள்ளையளைப் பெத்தவள். ஒன்று கூடப் பக்கத்திலை இல்லாமல் நாட்டுக்காய் மடிந்தும், நாடு நாடாய் சிதறியும்....! நானெண்டாலும் அவளுக்கு ஆறுதலாய் இருக்கிறனே! கக்கூசுக்குப் போகக்கூட கைத்தடியாய் அவளைத் தேடுகிற கையாலாகதவானாகப் போயிட்டனே!´ என்று மனைவி செல்லத்தை நினைத்துக் கரைவதும், தனது கையாலாகாத் தனத்தை நினைத்துப் புலம்புவதுமாயே இருந்தார்.
மூன்று மாதங்களின் முன் வவுனியாவின் ஸ்டேசன் ரோட்டில், ஆதிசக்தி விநாயகர் கோவிலின் முன் வீழ்ந்த போது கனகர் வெட்கத்தில் மட்டுந்தான் கூசிப் போனார். ஓட்டோவில் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டதும் செல்லம்தான் நன்றாகப் பதறிப் போனாள். உடனேயே மருத்துவமனைக்குக் கொண்டோடினாள். எல்லாம் சோதித்துப் பார்த்த மருத்துவர் "விரைவில் குணமாகி விடும்" என்று சொல்லி மருந்தும் கொடுத்து விட்டார்.
´மருந்தெடுக்க குணப்பட்டு விடுவேன்` என்ற முழுமையான நம்பிக்கையுடன்தான் கனகரும் இருந்தார். ஆனால் அவர் நம்பிக்கை தோற்றுப் போகும் படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் படுக்கையிலே போய் விட்டார். பிறகுதான் புதிதாய் வந்த மருத்துவர் ஒருவர் அவரது இதயத்தில் கோளாறு இருப்பதைக் கண்டு பிடித்தார். தாமதாமன கண்டுபிடிப்பாலும், சரியான வைத்தியம் இன்மையாலும் அவரின் உடலின் சில பாகங்கள் செயலற்றுப் போனது அதிர்ச்சியான உண்மையானது. மருத்துவர் "இனிச் செய்ய எதுவுமில்லை" என்று கையை விரித்தது மேலும் அதிர்ச்சியானது. நோயின் வேதனையைக் குறைக்க குளிகைகளும், ஊசிகளுமே கை கொடுத்தன.
மருத்துவமனை வரை போய்வரக் கூட இயலாத அளவுக்கு நோயின் தீவிரம் அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பின் கனகருக்கு இந்தக் கட்டிலே தஞ்சமாகி விட்டது. மருத்துவர் தினமும் வந்து பார்த்து, ஊசி போட்டுச் சென்றார். நோயின் வேதனையும், எழுந்து நடமாடக் கூட முடியாத நிலையும் கனகரின் தன்மான மனசை நன்றாகவே பாதித்திருந்தன. செல்லத்தின் அன்புதான் அவரை அவ்வப்போது ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தது.
செல்லம் தன்னந்தனியாக பிள்ளைகளின் உதவிகள் கூட இல்லாமல் தன்னைப் பராமரிப்பதையும், நோயின் வேதனை தாங்காது "செல்..ல...ம்..." என்று அலறும் போதெல்லாம் ஓடிவந்து அருகிருந்து ஆதரவுடன் கவனிப்பதையும் பார்த்து ´பாவப்பட்டவள், கரைச்சல் குடுக்கக் கூடாதெண்டுதான் நினைக்கிறனான். ஆனாலும் முடியேல்லையே. வலி கொல்லுதே!´ என்று மனதுக்குள் மிகவும் வேதனைப் படுவார்.
மீண்டும் "செல்...ல...ம்..! எனக்கு ஏலாதாம். இஞ்சை ஓடி வாரும். அந்தக் குளிசையளை எடுத்துத் தாரும்" இயன்றளவு தன் குரலை உயர்த்திக் கூப்பிடுவார். செல்லமும் தான் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அவைகளை அப்படி அப்படியே போட்டு விட்டு ஓடிவந்து 'என்னப்பா, வலியா இருக்குதே, நோகுதே..?' என்று கேட்ட படி ஒவ்வொரு போத்தலாய் திறந்து குளிசைகளை எடுத்து கை நிறையக் கொடுத்து தண்ணீரையும் கொடுப்பாள்.
'எவ்வளவு பொறுமை இவளுக்கு' என்று நினைத்தபடி அவைகளை அவர் சோறு போல முழுங்குவார்.
வழமையில் குளிகைகள் உள்ளே போனதும் வலியை மறந்து தூங்கிப் போகும் அவர் இப்போதெல்லாம் நோய் வலிமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கி இருந்ததால் கோழித்தூக்கம் தூங்கி, வலியில் விழிக்கத் தொடங்கியிருந்தார்.
முதல்நாள் இரவு ஊசி போட வந்த மருத்துவர், செல்லத்தை அறைக்கு வெளியில் கூட்டிக் கொண்டு போய் "இனி அவருக்கு மருந்தில்லை. விரும்பினதைக் குடுங்கோ. பிள்ளையள் ஆராவது வெளிநாட்டிலை இருந்து வந்து பார்த்திட்டுப் போறதெண்டால் பார்க்கட்டும். எந்த நேரத்திலையும் அவர் இதயம் துடிக்க மறந்து போகலாம்." என்று குசுகுசுத்துச் சொன்னது கனகருக்கும் கேட்டது.
செல்லம் அதைப் பற்றி ஒன்றுமே கனகரிடம் சொல்லாமல் தனக்குள்ளே அழுது அழுது முந்தானையில் மூக்கைச் சீறிக் கொண்டு திரிந்ததைப் பார்த்து அவர் தனக்குள்ளே அழுது கொண்டிருந்தார். அவருக்கும் வாழ்க்கை ஆசை அற்றுப் போயிருந்தது. நோயின் வேதனையிலிருந்து விடுதலைதான் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனாலும் ´பிள்ளைகளை ஒருக்காலாவது பார்க்கோணும்´ என்ற ஆசை அவருக்குள் தோன்றி அவரை வதைத்தது.
'என்ரை பிள்ளையள் என்னை வந்து பார்க்குங்களே?' கனகரின் நினைவுகள் ஆசையில் வெந்தன. நொந்தன. பிள்ளைகளின் நினைவில் ஏங்கின.
´நான் செத்துப் போயிட்டனெண்டால் அதுகள் எப்பிடி வேதனைப் படுங்கள். புலம்புங்கள்.´ தனக்குள்ள வேதனையை விட பிள்ளைகளின் வேதனைகளை நினைத்துக் கண் கலங்கினார்.
"செல்லம்.., ஜேர்மனிக்கு ஒருக்கால் ரெலிபோன் எடுத்து பிள்ளையளுக்குச் சொல்லுமன். நான் சாகிறேக்கிடையிலை வரச்சொல்லி... மூத்தவளுக்கு சிற்றிசெனாம். அவளாவது வரமாட்டாளே!" நாட்டு நிலைமைகள் தெரிந்தாலும் கனகரின் மனம் பேதலித்தது.
"அவள் வந்தாளெண்டால் அவளையாவது ஆசை தீரப் பார்த்திட்டுச் செத்திடுவன்" வாய் முணுமுணுத்தது.
மனசு நிறையப் பிள்ளைகளின் பாசம் பொங்கி வழிந்து அவரைப் படுத்திக் கொண்டிருந்த அந்த நேரத்திலேயே அவரது நெஞ்சுக்குள்ளும் மீண்டும் வலி தொடங்கியது.
´ஆறு மணியாகுது. வழக்கத்திலையெண்டால் அஞ்சு மணிக்கு கிளினிக் முடிச்சிட்டுப் போற பொழுதே டொக்டர் வந்து ஊசி போட்டிட்டுப் போடுவார். இண்டைக்கென்ன இன்னும் காணேல்லை. ஏதும் அவசரத்திலை வராமல் போடுவாரோ?´ ஒரு யோசனை கனகரைப் பயப்படுத்த "செல்லம்... செல்லம், டொக்டர் வராமல் போனாலும் போடுவார். எனக்கிண்டைக்கு தாங்கேலாமல் நோகுது. ஒருக்கால் ரெலிபோனிலை கூப்பிட்டு, கட்டாயம் வரச் சொல்லிச் சொல்லும்." என்றார்.
செல்லம் ரெலிக்கொமினிக்கேசன் பூட்டப் போகின்றது என்ற அவசரத்தில் குருமன் காட்டுச்சந்தி ரெலிக்கொமினிக்கேசனை நோக்கி விரைந்தாள். சந்தியில் நிற்கும் இராணுவக் கூட்டத்தைக் கண்டதும் 'பாழ் பட்டுப் போவாங்கள். எப்பிடியெல்லாம் எங்களை வதைக்கிறாங்கள்.' என்று மனசுக்குள் திட்டினாள்.
வரசக்திப் பிள்ளையார் கோவிலைக் கடக்கையில் 'என்ரை மனுசனை நீதான் காப்பாத்து.' என்று மானசீகமாக ஒரு வேண்டுகோளை பிள்ளையாரிடம் விடுத்தாள்.
ரெலிக்கொமினிக்கேசனுக்குள் நுழைந்து மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்து கனகரின் நிலையை விவரித்தாள். "இன்னும் ஒரு பேசன்ட் தான் அம்மா இருக்கிறார். அவரையும் பார்த்திட்டு அரைமணித்தியாலத்திலை வந்திடுவன். தைரியமா நீங்கள் வீட்டை போங்கோ" மருத்துவர் வாக்குறுதி கொடுத்தார்.
நிம்மதியோடு வீட்டுக்கு ஓடி வந்தாள் செல்லம். கனகர் வேதனையில் உழன்று கொண்டிருந்தார். செல்லம் எதுவும் செய்ய மனசில்லாமல் அவர் அருகிலேயே இருந்து அவரது நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள்.
அரைமணி ஒரு மணியாகியும் மருத்துவர் வரவில்லை. கனகர் வேதனையின் உச்சத்தில் பிள்ளைகளின் பெயர்களோடு, டொக்டர், செல்லம்... என்றெல்லாம் அரற்றிக் கொண்டிருந்தார்.
வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன் றோட் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. அடுத்தநாள் மாவீரர்நாள் என்பதால் `விடுதலைப்புலிகள் தமக்கு ஏதும் செய்து விடுவார்களோ!என்று கிலி கொண்ட இராணுவத்தினர் ரவுண் வீதிகளில் கண்ட எல்லா அப்பாவித் தமிழர்களையும் தடுத்து நிறுத்தி வீதிகளில் இருத்திக் கொண்டிருந்தார்கள்.
கடமை முடித்து வந்த அந்த மருத்துவரையும் இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி, ரவுணுக்குள் இருத்தி வைத்திருப்பது தெரியாமல் பதைபதைக்கும் நெஞ்சுடன் செல்லம் கேற்றுக்கும், கட்டிலுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தாள்.
கனகரின் அரற்றல் அவர் மூச்சோடு மெதுமெதுவாக முடங்கத் தொடங்கியது. அவர் திணறிக் கொண்டிருந்தார்
சந்திரவதனா
ஜோமனி
Saturday, August 02, 2008
அழைப்புமணி
நடுநிசியில் விழிப்பு வந்ததற்கான காரணம் சட்டென்று புரியவில்லை. நெஞ்சு படபடத்தது. உடல் பயத்தில் வெலவெலத்தது. யாராவது அழைப்பு மணியை அழுத்தியிருப்பார்களோ?
பிரமையா, கனவா புரியவில்லை. குழப்பமாக இருந்தது.
சிந்தனைகளின் மீது அறைவது போல மீண்டும் அழைப்பு மணி. இப்போது அது கனவோ, பிரமையோ அல்ல என்பது உறுதியாயிற்று. தூக்கம் முற்றாகக் கலைந்து நெஞ்சு இன்னும் அதிகமாகப் படபடத்தது. அசையவே பயமாக இருந்தது.
என்னவன் என் அருகில்தான் படுத்திருந்தான். ஆனால் அவனும் அசைவற்றுக் கிடப்பது போலவே உணர்ந்தேன். தலையைத் திருப்பாமலே 'சத்தம் கேட்டதா?' என்றேன். 'ம்..' என்ற அவன் பதிலிலும் குழப்பம்.
வெறும் அழைப்பு மணிக்கு இத்தனை குழப்பம் ஏன்? என்ற கேள்வி உங்கள் ஒவ்வொருவரிடமும் எழலாம். அது அர்த்தஜாமம் என்பதையும் விட, நாம் ஜேர்மனிக்குப் புலம் பெயர்ந்து ஓரிரு வருடங்கள்தான் ஓடியிருந்தன. ஓடியிருந்தன என்று சொல்வதை விட நகர்ந்திருந்தன என்று சொல்வதே சாலப் பொருந்தும்.
அந்த ஓரிரு வருடங்களிலும் நாம் சில மாதங்களை அகதிமுகாம்களில் கழித்து விட்டு, அந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. ஜேர்மனியோடு ஒட்டவும் முடியாமல், விட்டிட்டு போர் சூழ்ந்த எமது நாட்டுக்கு ஓடவும் முடியாமல் அந்தரித்துக் கொண்டிருந்த 1987ம் ஆண்டுக் காலப்பகுதியின் ஒரு மாதம் அது.
அப்போதெல்லாம் குளிர் மூக்கு நுனியில் கொடுவாளாய் குந்தியிருக்கும். நாக்கு உறைப்புக்கும், புளிப்புக்குமாய் அந்தரிக்கும். கனவுகளிலும், நினைவுகளிலும் அம்மாவும், அப்பாவும், சகோதரர்களும் நடமாடிக் கொண்டேயிருப்பார்கள். ஊர் வீடும், வீதிகளும் மூளையின் ஏதோ ஒரு பகுதியில் வளைந்து, நெளிந்து கொண்டிருக்கும். இரவுகளின் விழிப்புகளில் தவிர்க்க முடியாததாய் துயர் படிந்து இருக்கும். ஜேர்மனியின் எங்காவது ஒரு பகுதியில் யாரோ ஒரு வெளிநாட்டவரின் வீடு நாசிகளால் எரிக்கப் பட்டு விட்டது என்ற செய்தியோ அன்றி ஒரு வெளிநாட்டவர் நாசிகளால் நையப்புடைக்கப் பட்டு விட்டார் என்ற செய்தியோ இடையிடையே வந்து கிலி கொள்ள வைக்கும். பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுகளுக்காய் அழுவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.
ஆனால் அன்றைய அர்த்தஜாம அழைப்புமணி சற்று வித்தியாசமானது. எமது அட்டவணைக்குள் அடங்காதது. கனவா, பிரமையா எனச் சிந்திக்க வைத்த அழைப்பு மணி நிமிடங்கள் கரையக் கரைய அடிக்கடி அழைத்து சிந்தனைகளையே மழுங்கடித்தது.
அந்த வாரத்தில் ஜேர்மனியின் மன்கைம் நகரை ஒட்டிய ஒரு கிராமத்தில் அகதிகள் அதிகமாக வாழும் ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தில் இலங்கைத் தமிழர் வாழும் பகுதிக்குள் நெருப்புக் குண்டு எறியப் பட்டு கணவன், மனைவி, மூன்று குழந்தைகள் என ஐவர் கொல்லப் பட்ட செய்தி எம்மையெல்லாம் கலக்கியிருந்தது.
நாம் வாழும் நகரம் மன்கைம் போன்று நாசிகள் வாழும் இடமல்ல. பழமைகளைப் போற்றிப் பாதுகாக்கும் ஒரு அமைதியான அழகான நகரம். மாடிக்கு இரு குடும்பமாக ஆறு குடும்பங்கள் வாழும் மூன்று மாடிக் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் எங்கள் குடியிருப்பு. ஐந்து அறைகள் கொண்ட விசாலமான வீடு. ஊர் வீடுகள் போல விசாலமாக இல்லாவிட்டாலும் அகதியாகத் தஞ்சம் கோரிய எங்களுக்கு வசதியாக அமைந்த வீடே அது. ஐந்து ஜேர்மனியக் குடும்பங்களுக்கு நடுவில் நாம் ஒரு வெளிநாட்டவர். எமது நகரில் ஒன்றும் ஆகிவிடாது என்ற நம்பிக்கை இருந்தாலும் உயிர் காக்க ஓடி வந்து இன்னொரு நாட்டில் எரிந்து கருகி உயிரைக் கொடுத்தது எமது இலங்கைத் தமிழர் என்ற செய்தியில் நாமும் தடுமாறிப் போய்த்தான் இருந்தோம்.
இந்த நிலையில் நடுநிசியில் அழைப்புமணி கேட்டதும் ஓடிப்போய் கதவைத் திறக்கும் தைரியம் எனக்குத் துப்பரவாக இல்லை. எனது கணவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன நடக்கிறது பார்ப்போம் என இருவரும் அசையாது படுத்திருந்தோம்.
இப்போது எமது கதவில் பலமாக உதையும் அல்லது இடிக்கும் சத்தம் கேட்டது. முதலில் அழைப்பு மணி கீழே வீட்டுக்கு வெளியில் இருந்து அழுத்துவதால் வருகிறதா அல்லது எங்கள் இரண்டாவது மாடிக்கே வந்து அழுத்தப் படுகிறதா என்பது தெரியாதிருந்தது. இப்போது திடமாகத் தெரிந்தது. ஒருவரோ அன்றிப் பலரோ இரண்டாவது மாடியில் உள்ள எமது வீட்டு வாசலில் நின்று கதவை இடிக்கிறார்கள் என்பது.
எனது கற்பனைகள் இப்போது விரியத் தொடங்கி தலைக்குள் குருதி வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. கத்திகள், கோடரிகளுடன் வந்திருப்பார்களோ? கதவை இடித்துத் திறந்து வந்து எம்மை வெட்டுவார்களோ? கொட்டன்களால் அடிப்பார்களோ? நடுங்காத குறை. வீட்டுக்குள் பிள்ளகைள் மூவரினதும் நித்திரை மூச்சுக்களும், சுவர்க்கடிகாரத்தின் டிக், டிக் ஓசையும் தெளிவாகக் கேட்டன. என்ன செய்வதென்று தெரியாத அந்தப் பதட்டமான நிலையில் "பொலிசுக்குப் போன் பண்ணுவோம்" என நான்தான் எனது கணவருக்கு ஐடியா கொடுத்தேன்.
இப்போது கதவின் மீது இடைவிடாது இடி விழுந்து கொண்டே இருந்தது. யாரோ உதைவது போன்ற சத்தமே அது. எனது கணவர் ´கதவைத் திறக்கலாம்´ என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலத் தெரிந்தது. நான் தடுத்து விட்டேன். எல்லாம் சைகைகளாலேயே. எமது கதை வெளியில் நிற்பவர்களின் காதுகளில் வீழ்ந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தேன்.
வாசற்கதவுக்குப் பக்கத்தில் கொறிடோரில்தான் தொலைபேசி இருக்கிறது. இப்போது போல கைகளில் கொண்டு திரியக் கூடிய தொலைபேசியோ அல்லது மொபைல் தொலைபேசியோ அப்போது ஜேர்மனியின் சாதாரண வீடுகளில் இருக்கவில்லை. சுழற்றி அடிக்கும் தொலைபேசி மட்டுமே இருந்தது. வாசற்கதவிலிருந்து கொறிடோரின் இடது பக்கம் வரவேற்பறை. அதைத் தொடர்ந்து மகளின் அறை.. வலது பக்கம் சமையலறை. தொடர்ந்து மூத்தவனதும், சின்னவனதும் அறைகள். கடைசிதான் எமது படுக்கையறை. வெளியில் நிற்பவர்கள் கதவை உடைத்தால் முதலில் எமது பிள்ளைகளின் அறைகளுக்குள் புகுந்து விடுவார்கள் என்ற எண்ணம் என் மூளையில் உறைத்துக் கொண்டிருந்தது. அதனால் நானும், கணவருமாக மெதுமெதுவாகத் தொலைபேசியை நோக்கி நடந்தோம். கதவின் மீதான உதை நெஞ்சின் மீது விழுவது போன்ற உணர்வு. பயத்தில் கால்கள் பின்னின.
ஒருவாறு தொலைபேசியைச் சுழற்றி பொலிசுக்கு விடயத்தை சொல்லத் தொடங்கிய போது நாக்குழறியது. ஜேர்மனிக்கு வந்து சில வருடங்கள்தான் என்பதால் எனது மொழிஅறிவும் அந்தமாதிரித்தான் இருந்தது. ஒருவாறு தட்டித் தடவிச் சொல்லி முடிப்பதற்குள் பல தடவைகள் கதவு இடிக்கப் பட்டு விட்டது. சத்தம் பொலிசுக்கும் தொலைபேசி வழியே கேட்டதால் „எக்காரணம் கொண்டும் கதவைத் திறக்க வேண்டாம். நாங்கள் உடனே வருகிறோம்' என்று சொல்லி தொலைபேசியை வைத்தார்கள்.
அவர்கள் வந்து சேர்வதற்கு எடுத்த அந்த சில நிமிட நேரங்களுக்குள் எங்கள் வீட்டுக்கதவு உடைக்கப் பட்டு விட்டது. ஒரு மல்லன் போன்ற தோற்றம் கொண்ட ஜேர்மனியன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தான். எனக்கு சப்தநாடிகளும் அடங்கி ஒடுங்கின.
வந்தவன் "ஏன் நீ இங்கே வந்தாய்? இது எனது இடம்..." என்று சொல்லிக் கோபமாகத் திட்டியபடி நேரே என் கணவரை நோக்கி விரைந்து கையை ஓங்கினான். எனது கணவர் சற்றுத் தாமதித்திருந்தாலும் அவனது உரத்த பெரிய கைகள் என் கணவரைப் பலமாகத் தாக்கியிருக்கும். அந்தக் கணத்தில் நான் என் உறைவு நிலையிலிருந்து விழித்து அலறி விட்டேன். அவன் வெளிநாட்டவரை வெறுக்கும் நாசிதான் என்பது எனக்குள் உறுதியாயிற்று.
எனது கணவருக்கு அத்தனை பலம் எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது. சடாரென்று அவனது இரு கைகளையும் பின் பக்கமாக மடக்கிப் பிடித்து ஏதோ ஒருவித பூட்டுப் போட்டார். அவனை அசையவிடாது அப்படியே நிலத்தில் வீழ்த்தி, அமத்திப் பிடித்தார். ஊரிலே சான்டோ மாஸ்டரிடம் அவர் மல்யுத்தம் பழிகியிருந்ததும், எனது தம்பிமாருடன் விளையாட்டுக்கு பூட்டுப் போட்டுக் கழட்டச் சொல்வதும் அப்போதுதான் என் ஞாபகத்தில் வந்தது. எனக்கு இன்னும் நெஞ்சின் படபடப்பு அடங்கிவில்லையாயினும் ஒருவித நிம்மதி பிறந்தது. பொலிஸ் வரும் வரை தாக்குப் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையும் கூடவே வந்தது.
என் கணவரை விட உயரத்திலும் சரி, பருமனிலும் சரி பெரியவனாகத் தோற்றமளித்த அவன் அந்தப் பூட்டிலிருந்து விடுபட முடியாத நிலையில் கத்திக் கொண்டிருந்தான். எங்களைப் பலமாகத் திட்டிக் கொண்டிருந்தான். 'ஏன், இங்கே வந்தீர்கள்?' என்று அடிக்கடி கேட்டான். இந்த அமளியில் எனது மகளும் சின்னவனும் தூக்கம் கலைந்து எழுந்து வந்து விட்டார்கள். எனது அலறல்தான் அவர்களை எழுப்பியிருக்க வேண்டும்.
மூத்தவன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திலேயே. நான் அவனது அறைக்குச் சென்று அவனைத் தட்டி எழுப்பி "வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிகிறதா? எழும்பி வா" என்றேன். எழும்பி வந்தவன் நிலைமையைப் புரிந்தவனாய் ஓடிச் சென்று தும்புத்தடியை எடுத்து வந்து, விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல, அந்த ஜேர்மனியனின் பின்புயத்தில் இரு அடி கொடுத்து "ஏன் எங்கடை வீட்டை வந்தனி?" எனறு உரத்துக் கேட்டான்.
இதற்குள் பொலிஸ்காரர்கள் இருவர் வந்து விட எனது கணவர் தான் போட்ட பூட்டைத் தளர்த்தி அவனை விடுவித்தார். ஒரு பொலிஸ் அவனிடம் ஓரிரு கேள்விகள் கேட்டு விட்டு அவனை வெளியில் அழைத்துச் செல்ல மற்றைய பொலிஸ் எம்மிடம் நடந்தவைகளைக் கேட்டு எழுதி கையெழுத்தையும் வாங்கிக் கொண்டு வெளியில் சென்றான்.
பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் இரு பொலிசுமாக வந்து அசௌகரியங்களுக்கு வருந்துவதாகச் சொல்லி, "நாளை காலையில் ஆட்களை அனுப்புகிறோம். வந்து கதவைத் திருத்தித் தருவார்கள்" என்றும் சொல்லிச் சென்றார்கள்.
எல்லாம் ஓய்ந்தது போல இருந்தாலும் எம்மால் உள்ளார ஓய முடியவில்லை. கதவு உடைந்திருப்பதால் வீட்டைப் பூட்ட முடியாதிருந்தது. யாராவது மீண்டும் வீட்டுக்குள் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சின்னவனும், மகளும் தமது படுக்கைகளில் படுக்க மறுத்து எமது படுக்கையறைக்குள் புகுந்து விட்டார்கள். எவரும் சட்டென்று கதவைத் திறந்து வீட்டுக்குள் வந்து விட முடியாத படி வீட்டில் உள்ள கதிரைகள், மேசை என்று எல்லாவற்றையும் கதவோடு அண்டி வைத்தாலும் என்னாலும், கணவராலும் கூட அதற்கு மேல் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.
விடியுது விடிய முன்னமே எமது வீட்டு வாசலில் இரு தச்சர்கள் வந்து நின்றார்கள். கதவை அழகாகத் திருத்தி விட்டு எம்மிடம் கையெழுத்து மட்டும் வாங்கிச் சென்றார்கள். அதற்கான கட்டணத்தை உடைத்தவனே கட்ட வேண்டும் என்றார்கள்.
இரவின் தாக்கம் எமது அடுத்தநாள் காலையையும் அசாதாரணமாக்கியிருந்தது. ´தொடர்ந்து ஜேர்மனியில் வாழ முடியுமா´ என்ற குழப்பம் நிறைந்த கேள்வி எங்களுக்குள். அன்று சனிக்கிழமை என்பதால் பிள்ளைகளும் வீட்டில்தான் நின்றார்கள்.
ஒரு பதினொரு மணியளவில் எமது வீட்டின் அழைப்பு மணி. நான்தான் ஓடிப்போய் சாத்தியிருந்த கதவைத் திறந்தேன். அவனேதான். இரவு எங்களைக் குழப்பிய அதே ஜேர்மனியன் வாசலில் நின்றான். நான் அதிர்ந்து போய் அலறுவதற்கிடையில்.. "பயப்படாதே. நான் மன்னிப்புக் கேட்கத்தான் வந்திருக்கிறேன்" என்றான். நான் கொஞ்சம் அமைதியாகினேன்.
"இரவு தந்த அசௌகரியத்துக்கு மன்னித்துக் கொள். நான் நேற்று ஒரு பார்ட்டியில் நிறையக் குடித்திருந்தேன். என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. அப்போதுதான் வெளியிலிருந்து வந்தேன். மாறித்தான் உனது வீட்டைத் தட்டினேன். உனக்கு மேலே மூன்றாவது மாடியில்தான் நான் எனது குடும்பத்துடன் வசிக்கிறேன். குடிபோதையில் மூன்றாவது மாடிக்குப் பதிலாக இரண்டாவது மாடியில் உள்ள உனது வீட்டுக்குள் நுழைந்து விட்டேன். மன்னித்துக் கொள்" என்றான்.
சந்திரவதனா
ஜேர்மனி
12.6.2008
பிரசுரம் - July யுகமாயினி
பிரமையா, கனவா புரியவில்லை. குழப்பமாக இருந்தது.
சிந்தனைகளின் மீது அறைவது போல மீண்டும் அழைப்பு மணி. இப்போது அது கனவோ, பிரமையோ அல்ல என்பது உறுதியாயிற்று. தூக்கம் முற்றாகக் கலைந்து நெஞ்சு இன்னும் அதிகமாகப் படபடத்தது. அசையவே பயமாக இருந்தது.
என்னவன் என் அருகில்தான் படுத்திருந்தான். ஆனால் அவனும் அசைவற்றுக் கிடப்பது போலவே உணர்ந்தேன். தலையைத் திருப்பாமலே 'சத்தம் கேட்டதா?' என்றேன். 'ம்..' என்ற அவன் பதிலிலும் குழப்பம்.
வெறும் அழைப்பு மணிக்கு இத்தனை குழப்பம் ஏன்? என்ற கேள்வி உங்கள் ஒவ்வொருவரிடமும் எழலாம். அது அர்த்தஜாமம் என்பதையும் விட, நாம் ஜேர்மனிக்குப் புலம் பெயர்ந்து ஓரிரு வருடங்கள்தான் ஓடியிருந்தன. ஓடியிருந்தன என்று சொல்வதை விட நகர்ந்திருந்தன என்று சொல்வதே சாலப் பொருந்தும்.
அந்த ஓரிரு வருடங்களிலும் நாம் சில மாதங்களை அகதிமுகாம்களில் கழித்து விட்டு, அந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. ஜேர்மனியோடு ஒட்டவும் முடியாமல், விட்டிட்டு போர் சூழ்ந்த எமது நாட்டுக்கு ஓடவும் முடியாமல் அந்தரித்துக் கொண்டிருந்த 1987ம் ஆண்டுக் காலப்பகுதியின் ஒரு மாதம் அது.
அப்போதெல்லாம் குளிர் மூக்கு நுனியில் கொடுவாளாய் குந்தியிருக்கும். நாக்கு உறைப்புக்கும், புளிப்புக்குமாய் அந்தரிக்கும். கனவுகளிலும், நினைவுகளிலும் அம்மாவும், அப்பாவும், சகோதரர்களும் நடமாடிக் கொண்டேயிருப்பார்கள். ஊர் வீடும், வீதிகளும் மூளையின் ஏதோ ஒரு பகுதியில் வளைந்து, நெளிந்து கொண்டிருக்கும். இரவுகளின் விழிப்புகளில் தவிர்க்க முடியாததாய் துயர் படிந்து இருக்கும். ஜேர்மனியின் எங்காவது ஒரு பகுதியில் யாரோ ஒரு வெளிநாட்டவரின் வீடு நாசிகளால் எரிக்கப் பட்டு விட்டது என்ற செய்தியோ அன்றி ஒரு வெளிநாட்டவர் நாசிகளால் நையப்புடைக்கப் பட்டு விட்டார் என்ற செய்தியோ இடையிடையே வந்து கிலி கொள்ள வைக்கும். பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுகளுக்காய் அழுவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.
ஆனால் அன்றைய அர்த்தஜாம அழைப்புமணி சற்று வித்தியாசமானது. எமது அட்டவணைக்குள் அடங்காதது. கனவா, பிரமையா எனச் சிந்திக்க வைத்த அழைப்பு மணி நிமிடங்கள் கரையக் கரைய அடிக்கடி அழைத்து சிந்தனைகளையே மழுங்கடித்தது.
அந்த வாரத்தில் ஜேர்மனியின் மன்கைம் நகரை ஒட்டிய ஒரு கிராமத்தில் அகதிகள் அதிகமாக வாழும் ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தில் இலங்கைத் தமிழர் வாழும் பகுதிக்குள் நெருப்புக் குண்டு எறியப் பட்டு கணவன், மனைவி, மூன்று குழந்தைகள் என ஐவர் கொல்லப் பட்ட செய்தி எம்மையெல்லாம் கலக்கியிருந்தது.
நாம் வாழும் நகரம் மன்கைம் போன்று நாசிகள் வாழும் இடமல்ல. பழமைகளைப் போற்றிப் பாதுகாக்கும் ஒரு அமைதியான அழகான நகரம். மாடிக்கு இரு குடும்பமாக ஆறு குடும்பங்கள் வாழும் மூன்று மாடிக் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் எங்கள் குடியிருப்பு. ஐந்து அறைகள் கொண்ட விசாலமான வீடு. ஊர் வீடுகள் போல விசாலமாக இல்லாவிட்டாலும் அகதியாகத் தஞ்சம் கோரிய எங்களுக்கு வசதியாக அமைந்த வீடே அது. ஐந்து ஜேர்மனியக் குடும்பங்களுக்கு நடுவில் நாம் ஒரு வெளிநாட்டவர். எமது நகரில் ஒன்றும் ஆகிவிடாது என்ற நம்பிக்கை இருந்தாலும் உயிர் காக்க ஓடி வந்து இன்னொரு நாட்டில் எரிந்து கருகி உயிரைக் கொடுத்தது எமது இலங்கைத் தமிழர் என்ற செய்தியில் நாமும் தடுமாறிப் போய்த்தான் இருந்தோம்.
இந்த நிலையில் நடுநிசியில் அழைப்புமணி கேட்டதும் ஓடிப்போய் கதவைத் திறக்கும் தைரியம் எனக்குத் துப்பரவாக இல்லை. எனது கணவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன நடக்கிறது பார்ப்போம் என இருவரும் அசையாது படுத்திருந்தோம்.
இப்போது எமது கதவில் பலமாக உதையும் அல்லது இடிக்கும் சத்தம் கேட்டது. முதலில் அழைப்பு மணி கீழே வீட்டுக்கு வெளியில் இருந்து அழுத்துவதால் வருகிறதா அல்லது எங்கள் இரண்டாவது மாடிக்கே வந்து அழுத்தப் படுகிறதா என்பது தெரியாதிருந்தது. இப்போது திடமாகத் தெரிந்தது. ஒருவரோ அன்றிப் பலரோ இரண்டாவது மாடியில் உள்ள எமது வீட்டு வாசலில் நின்று கதவை இடிக்கிறார்கள் என்பது.
எனது கற்பனைகள் இப்போது விரியத் தொடங்கி தலைக்குள் குருதி வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. கத்திகள், கோடரிகளுடன் வந்திருப்பார்களோ? கதவை இடித்துத் திறந்து வந்து எம்மை வெட்டுவார்களோ? கொட்டன்களால் அடிப்பார்களோ? நடுங்காத குறை. வீட்டுக்குள் பிள்ளகைள் மூவரினதும் நித்திரை மூச்சுக்களும், சுவர்க்கடிகாரத்தின் டிக், டிக் ஓசையும் தெளிவாகக் கேட்டன. என்ன செய்வதென்று தெரியாத அந்தப் பதட்டமான நிலையில் "பொலிசுக்குப் போன் பண்ணுவோம்" என நான்தான் எனது கணவருக்கு ஐடியா கொடுத்தேன்.
இப்போது கதவின் மீது இடைவிடாது இடி விழுந்து கொண்டே இருந்தது. யாரோ உதைவது போன்ற சத்தமே அது. எனது கணவர் ´கதவைத் திறக்கலாம்´ என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலத் தெரிந்தது. நான் தடுத்து விட்டேன். எல்லாம் சைகைகளாலேயே. எமது கதை வெளியில் நிற்பவர்களின் காதுகளில் வீழ்ந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தேன்.
வாசற்கதவுக்குப் பக்கத்தில் கொறிடோரில்தான் தொலைபேசி இருக்கிறது. இப்போது போல கைகளில் கொண்டு திரியக் கூடிய தொலைபேசியோ அல்லது மொபைல் தொலைபேசியோ அப்போது ஜேர்மனியின் சாதாரண வீடுகளில் இருக்கவில்லை. சுழற்றி அடிக்கும் தொலைபேசி மட்டுமே இருந்தது. வாசற்கதவிலிருந்து கொறிடோரின் இடது பக்கம் வரவேற்பறை. அதைத் தொடர்ந்து மகளின் அறை.. வலது பக்கம் சமையலறை. தொடர்ந்து மூத்தவனதும், சின்னவனதும் அறைகள். கடைசிதான் எமது படுக்கையறை. வெளியில் நிற்பவர்கள் கதவை உடைத்தால் முதலில் எமது பிள்ளைகளின் அறைகளுக்குள் புகுந்து விடுவார்கள் என்ற எண்ணம் என் மூளையில் உறைத்துக் கொண்டிருந்தது. அதனால் நானும், கணவருமாக மெதுமெதுவாகத் தொலைபேசியை நோக்கி நடந்தோம். கதவின் மீதான உதை நெஞ்சின் மீது விழுவது போன்ற உணர்வு. பயத்தில் கால்கள் பின்னின.
ஒருவாறு தொலைபேசியைச் சுழற்றி பொலிசுக்கு விடயத்தை சொல்லத் தொடங்கிய போது நாக்குழறியது. ஜேர்மனிக்கு வந்து சில வருடங்கள்தான் என்பதால் எனது மொழிஅறிவும் அந்தமாதிரித்தான் இருந்தது. ஒருவாறு தட்டித் தடவிச் சொல்லி முடிப்பதற்குள் பல தடவைகள் கதவு இடிக்கப் பட்டு விட்டது. சத்தம் பொலிசுக்கும் தொலைபேசி வழியே கேட்டதால் „எக்காரணம் கொண்டும் கதவைத் திறக்க வேண்டாம். நாங்கள் உடனே வருகிறோம்' என்று சொல்லி தொலைபேசியை வைத்தார்கள்.
அவர்கள் வந்து சேர்வதற்கு எடுத்த அந்த சில நிமிட நேரங்களுக்குள் எங்கள் வீட்டுக்கதவு உடைக்கப் பட்டு விட்டது. ஒரு மல்லன் போன்ற தோற்றம் கொண்ட ஜேர்மனியன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தான். எனக்கு சப்தநாடிகளும் அடங்கி ஒடுங்கின.
வந்தவன் "ஏன் நீ இங்கே வந்தாய்? இது எனது இடம்..." என்று சொல்லிக் கோபமாகத் திட்டியபடி நேரே என் கணவரை நோக்கி விரைந்து கையை ஓங்கினான். எனது கணவர் சற்றுத் தாமதித்திருந்தாலும் அவனது உரத்த பெரிய கைகள் என் கணவரைப் பலமாகத் தாக்கியிருக்கும். அந்தக் கணத்தில் நான் என் உறைவு நிலையிலிருந்து விழித்து அலறி விட்டேன். அவன் வெளிநாட்டவரை வெறுக்கும் நாசிதான் என்பது எனக்குள் உறுதியாயிற்று.
எனது கணவருக்கு அத்தனை பலம் எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது. சடாரென்று அவனது இரு கைகளையும் பின் பக்கமாக மடக்கிப் பிடித்து ஏதோ ஒருவித பூட்டுப் போட்டார். அவனை அசையவிடாது அப்படியே நிலத்தில் வீழ்த்தி, அமத்திப் பிடித்தார். ஊரிலே சான்டோ மாஸ்டரிடம் அவர் மல்யுத்தம் பழிகியிருந்ததும், எனது தம்பிமாருடன் விளையாட்டுக்கு பூட்டுப் போட்டுக் கழட்டச் சொல்வதும் அப்போதுதான் என் ஞாபகத்தில் வந்தது. எனக்கு இன்னும் நெஞ்சின் படபடப்பு அடங்கிவில்லையாயினும் ஒருவித நிம்மதி பிறந்தது. பொலிஸ் வரும் வரை தாக்குப் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையும் கூடவே வந்தது.
என் கணவரை விட உயரத்திலும் சரி, பருமனிலும் சரி பெரியவனாகத் தோற்றமளித்த அவன் அந்தப் பூட்டிலிருந்து விடுபட முடியாத நிலையில் கத்திக் கொண்டிருந்தான். எங்களைப் பலமாகத் திட்டிக் கொண்டிருந்தான். 'ஏன், இங்கே வந்தீர்கள்?' என்று அடிக்கடி கேட்டான். இந்த அமளியில் எனது மகளும் சின்னவனும் தூக்கம் கலைந்து எழுந்து வந்து விட்டார்கள். எனது அலறல்தான் அவர்களை எழுப்பியிருக்க வேண்டும்.
மூத்தவன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திலேயே. நான் அவனது அறைக்குச் சென்று அவனைத் தட்டி எழுப்பி "வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிகிறதா? எழும்பி வா" என்றேன். எழும்பி வந்தவன் நிலைமையைப் புரிந்தவனாய் ஓடிச் சென்று தும்புத்தடியை எடுத்து வந்து, விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல, அந்த ஜேர்மனியனின் பின்புயத்தில் இரு அடி கொடுத்து "ஏன் எங்கடை வீட்டை வந்தனி?" எனறு உரத்துக் கேட்டான்.
இதற்குள் பொலிஸ்காரர்கள் இருவர் வந்து விட எனது கணவர் தான் போட்ட பூட்டைத் தளர்த்தி அவனை விடுவித்தார். ஒரு பொலிஸ் அவனிடம் ஓரிரு கேள்விகள் கேட்டு விட்டு அவனை வெளியில் அழைத்துச் செல்ல மற்றைய பொலிஸ் எம்மிடம் நடந்தவைகளைக் கேட்டு எழுதி கையெழுத்தையும் வாங்கிக் கொண்டு வெளியில் சென்றான்.
பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் இரு பொலிசுமாக வந்து அசௌகரியங்களுக்கு வருந்துவதாகச் சொல்லி, "நாளை காலையில் ஆட்களை அனுப்புகிறோம். வந்து கதவைத் திருத்தித் தருவார்கள்" என்றும் சொல்லிச் சென்றார்கள்.
எல்லாம் ஓய்ந்தது போல இருந்தாலும் எம்மால் உள்ளார ஓய முடியவில்லை. கதவு உடைந்திருப்பதால் வீட்டைப் பூட்ட முடியாதிருந்தது. யாராவது மீண்டும் வீட்டுக்குள் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சின்னவனும், மகளும் தமது படுக்கைகளில் படுக்க மறுத்து எமது படுக்கையறைக்குள் புகுந்து விட்டார்கள். எவரும் சட்டென்று கதவைத் திறந்து வீட்டுக்குள் வந்து விட முடியாத படி வீட்டில் உள்ள கதிரைகள், மேசை என்று எல்லாவற்றையும் கதவோடு அண்டி வைத்தாலும் என்னாலும், கணவராலும் கூட அதற்கு மேல் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.
விடியுது விடிய முன்னமே எமது வீட்டு வாசலில் இரு தச்சர்கள் வந்து நின்றார்கள். கதவை அழகாகத் திருத்தி விட்டு எம்மிடம் கையெழுத்து மட்டும் வாங்கிச் சென்றார்கள். அதற்கான கட்டணத்தை உடைத்தவனே கட்ட வேண்டும் என்றார்கள்.
இரவின் தாக்கம் எமது அடுத்தநாள் காலையையும் அசாதாரணமாக்கியிருந்தது. ´தொடர்ந்து ஜேர்மனியில் வாழ முடியுமா´ என்ற குழப்பம் நிறைந்த கேள்வி எங்களுக்குள். அன்று சனிக்கிழமை என்பதால் பிள்ளைகளும் வீட்டில்தான் நின்றார்கள்.
ஒரு பதினொரு மணியளவில் எமது வீட்டின் அழைப்பு மணி. நான்தான் ஓடிப்போய் சாத்தியிருந்த கதவைத் திறந்தேன். அவனேதான். இரவு எங்களைக் குழப்பிய அதே ஜேர்மனியன் வாசலில் நின்றான். நான் அதிர்ந்து போய் அலறுவதற்கிடையில்.. "பயப்படாதே. நான் மன்னிப்புக் கேட்கத்தான் வந்திருக்கிறேன்" என்றான். நான் கொஞ்சம் அமைதியாகினேன்.
"இரவு தந்த அசௌகரியத்துக்கு மன்னித்துக் கொள். நான் நேற்று ஒரு பார்ட்டியில் நிறையக் குடித்திருந்தேன். என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. அப்போதுதான் வெளியிலிருந்து வந்தேன். மாறித்தான் உனது வீட்டைத் தட்டினேன். உனக்கு மேலே மூன்றாவது மாடியில்தான் நான் எனது குடும்பத்துடன் வசிக்கிறேன். குடிபோதையில் மூன்றாவது மாடிக்குப் பதிலாக இரண்டாவது மாடியில் உள்ள உனது வீட்டுக்குள் நுழைந்து விட்டேன். மன்னித்துக் கொள்" என்றான்.
சந்திரவதனா
ஜேர்மனி
12.6.2008
பிரசுரம் - July யுகமாயினி
Labels:
அழைப்புமணி
,
பத்தி
,
யுகமாயினி
Tuesday, July 29, 2008
நீதிபதி நவநீதம் பிள்ளை அம்மையார்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவிக்கு தென்னாப்பிரிக்க தமிழர் நவநீதம் பிள்ளையின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது
நீதிபதி நவநீதம் பிள்ளை
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பதவிக்கு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நீதிபதியான நவநீதம் பிள்ளை அம்மையாரின் பெயரை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் பரிந்துரைத்துள்ளார்.
64 வயதாகும் நீதிபதி நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட வெள்ளையினத்தவர் அல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர். இவரது பெயரை ஐ.நா. பொதுச்சபை அங்கீகரிக்குமானால், கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவின் லூயிஸ் ஆர்பர் அம்மையார் வகித்துவந்த பதவியை நவநீதம் பிள்ளை ஏற்பார்.
நவி என்று அழைக்கப்படுகின்ற நவநீதம் பிள்ளை இந்தியத் தமிழ் பூர்வீகம் கொண்டவர். நடால் மாகாணத்தைச் சேர்ந்தவரான இவரின் தந்தை ஒரு பஸ் டிரைவர். எளிய குடும்பத்திலிருந்து வந்தவரானாலும், இனவெறி ஆட்சிக் காலத்தின்போதே சட்டத்தரணிகள் நிறுவனம் அமைத்த வெள்ளையரல்லாத முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமை இவரைச் சாரும்.
அமெரிக்காவின் பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மனித உரிமை சட்டங்கள் பயின்றிருந்த அவர், 1995ல் தென்னாப்பிரிக்காவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதுவரை வெள்ளையினத்தவர் மட்டுமே வீற்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் ஆசனத்தை அலங்கரித்த வெள்ளையரல்லாத முதல் ஆள் அவர்தான்.
ருவாண்டா இனப்படுகொலையை விசாரிப்பதற்காக டான்ஸானிவின் அருஷா நகரில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்வதேச அளவில் அவர் பங்காற்றத் துவங்கினார். நான்கு ஆண்டுகாலம் அப்பொறுப்பை வகித்த பின்னர் தி ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக இருந்தார்.
Quelle - BBC 28.07.2008
நீதிபதி நவநீதம் பிள்ளை

64 வயதாகும் நீதிபதி நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட வெள்ளையினத்தவர் அல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர். இவரது பெயரை ஐ.நா. பொதுச்சபை அங்கீகரிக்குமானால், கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவின் லூயிஸ் ஆர்பர் அம்மையார் வகித்துவந்த பதவியை நவநீதம் பிள்ளை ஏற்பார்.
நவி என்று அழைக்கப்படுகின்ற நவநீதம் பிள்ளை இந்தியத் தமிழ் பூர்வீகம் கொண்டவர். நடால் மாகாணத்தைச் சேர்ந்தவரான இவரின் தந்தை ஒரு பஸ் டிரைவர். எளிய குடும்பத்திலிருந்து வந்தவரானாலும், இனவெறி ஆட்சிக் காலத்தின்போதே சட்டத்தரணிகள் நிறுவனம் அமைத்த வெள்ளையரல்லாத முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமை இவரைச் சாரும்.
அமெரிக்காவின் பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மனித உரிமை சட்டங்கள் பயின்றிருந்த அவர், 1995ல் தென்னாப்பிரிக்காவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதுவரை வெள்ளையினத்தவர் மட்டுமே வீற்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் ஆசனத்தை அலங்கரித்த வெள்ளையரல்லாத முதல் ஆள் அவர்தான்.
ருவாண்டா இனப்படுகொலையை விசாரிப்பதற்காக டான்ஸானிவின் அருஷா நகரில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்வதேச அளவில் அவர் பங்காற்றத் துவங்கினார். நான்கு ஆண்டுகாலம் அப்பொறுப்பை வகித்த பின்னர் தி ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக இருந்தார்.
Quelle - BBC 28.07.2008
Friday, July 18, 2008
தொலைக்காட்சித் தொடர்கள்
தற்போதைய தொலைக்காட்சித் தொடர்கள் சிலதின் பெயர்கள் தேவைப்படுகின்றன. தெரிந்தவர்கள் தந்துதவுங்கள்.
நட்புடன்
சந்திரவதனா
நட்புடன்
சந்திரவதனா
Thursday, July 10, 2008
இப்படியும் நடக்கிறது
கடந்த வாரத்தில் ஒரு நாள் எமது நகரில் வாழும் ஒருவர் இரவு 9.30 மணியளவில் எமது வீட்டுக்கு வந்தார்.எந்தவித முன்னறிவித்தலுமின்றி அவர் அப்படி வந்ததில் எமக்குள் ஆச்சரியமும் ஏன் என்ற கேள்விக் குறியும்.
கூடவே இரண்டு பூப்புனிதநீராட்டு விழா அழைப்பிதழ்களையும் கொண்டு வந்திருந்தார். வாரஇறுதியில் தானும் இன்னும் இருவருமாக எமது வீட்டைத் தேடிக் கண்டு பிடிக்க முடியாமற் போய் விட்டது எனவும், எப்படியோ கஸ்டப் பட்டு இப்போ கண்டு பிடித்து விட்டதாகவும் சொல்லி அந்த அழைப்பிதழ்களை எம்மிடம் தந்தார்.
அவைகளில் ஒன்று எமது நகரிலேயே வாழும் ஒரு குடும்பத்துப் பெண்ணுடையது. மற்றையது வேறொரு நகரத்தது. அந்தக் குடும்பத் தலைவர் யாரென்று எமக்குத் தெரியவில்லை. கொண்டு வந்தவரும் இப்போதுதான் முதல்முதலாக அந்த நபரைச் சந்தித்தாராம்.
அவர் போன பின்னும் நானும் கணவருமாக நன்கு யோசித்துப் பார்த்தோம். அந்தப் பெயரில் சொந்தமோ, நட்போ எமக்கு ஊரில் கூட இல்லை. ஜேர்மனியில் நிட்சயமாக இல்லை.
வழமையான பூப்புனிதநீராட்டு விழா வாழ்த்து மடல்கள் போலவே இதையும் ஒரு பக்கமாக வைத்து விட்டு படுத்து விட்டோம். தொடர்ந்த நாட்களில் ´யாரது? என்ற கேள்வி´ அவ்வப்போது வந்தாலும் அதிக ஆராய்ச்சிகள் செய்யாமல் அதை விட்டு விட்டோம்.
நேற்று வேலை முடிந்து வரும் போது எமது நகரத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணை பேரூந்தினுள் சந்தித்தேன். கதைகளின் மத்தியில் "ஏன் சாமத்திய வீட்டுக்கு வரவில்லை" என்று கேட்டாள் அந்தப் பெண். நானும் சட்டென்று எதுவும் ஞாபகத்துக்கு வராத நிலையில் "எந்தச் சாமத்திய வீடு?" என்றேன். அதுதான்... என்று தொடங்கி குறிப்பிட்ட அந்த நபரின் பெயரைப் சொல்லி அவரது மகளின் சாமத்திய வீட்டுக்குத்தான் என்றாள்.
"ஆரது, உங்களுக்குத் தெரிந்தவரா?" கேட்டேன்..
"சீ.. சீ.. தெரியாது. சரியிலைத்தானே பாவம் கொண்டு வந்து தந்திட்டார். அதுதான் நாங்கள் போயிட்டு வந்தனாங்கள்." என்றாள்
அதாவது இந்த நகரில் உள்ள அனேகமான தமிழர் எல்லோரும் குறிப்பிட்ட அந்த நகருக்குச் சென்று சாமத்திய வீட்டில் பங்குபற்றி வந்திருக்கிறார்கள். எமது நகரில் வாழும் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் அவரோடோ அந்தக் குடும்பத்தோடோ முற்கூட்டிய பழக்கமும் இல்லை. நட்பும் இல்லை.
கூடவே இரண்டு பூப்புனிதநீராட்டு விழா அழைப்பிதழ்களையும் கொண்டு வந்திருந்தார். வாரஇறுதியில் தானும் இன்னும் இருவருமாக எமது வீட்டைத் தேடிக் கண்டு பிடிக்க முடியாமற் போய் விட்டது எனவும், எப்படியோ கஸ்டப் பட்டு இப்போ கண்டு பிடித்து விட்டதாகவும் சொல்லி அந்த அழைப்பிதழ்களை எம்மிடம் தந்தார்.
அவைகளில் ஒன்று எமது நகரிலேயே வாழும் ஒரு குடும்பத்துப் பெண்ணுடையது. மற்றையது வேறொரு நகரத்தது. அந்தக் குடும்பத் தலைவர் யாரென்று எமக்குத் தெரியவில்லை. கொண்டு வந்தவரும் இப்போதுதான் முதல்முதலாக அந்த நபரைச் சந்தித்தாராம்.
அவர் போன பின்னும் நானும் கணவருமாக நன்கு யோசித்துப் பார்த்தோம். அந்தப் பெயரில் சொந்தமோ, நட்போ எமக்கு ஊரில் கூட இல்லை. ஜேர்மனியில் நிட்சயமாக இல்லை.
வழமையான பூப்புனிதநீராட்டு விழா வாழ்த்து மடல்கள் போலவே இதையும் ஒரு பக்கமாக வைத்து விட்டு படுத்து விட்டோம். தொடர்ந்த நாட்களில் ´யாரது? என்ற கேள்வி´ அவ்வப்போது வந்தாலும் அதிக ஆராய்ச்சிகள் செய்யாமல் அதை விட்டு விட்டோம்.
நேற்று வேலை முடிந்து வரும் போது எமது நகரத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணை பேரூந்தினுள் சந்தித்தேன். கதைகளின் மத்தியில் "ஏன் சாமத்திய வீட்டுக்கு வரவில்லை" என்று கேட்டாள் அந்தப் பெண். நானும் சட்டென்று எதுவும் ஞாபகத்துக்கு வராத நிலையில் "எந்தச் சாமத்திய வீடு?" என்றேன். அதுதான்... என்று தொடங்கி குறிப்பிட்ட அந்த நபரின் பெயரைப் சொல்லி அவரது மகளின் சாமத்திய வீட்டுக்குத்தான் என்றாள்.
"ஆரது, உங்களுக்குத் தெரிந்தவரா?" கேட்டேன்..
"சீ.. சீ.. தெரியாது. சரியிலைத்தானே பாவம் கொண்டு வந்து தந்திட்டார். அதுதான் நாங்கள் போயிட்டு வந்தனாங்கள்." என்றாள்
அதாவது இந்த நகரில் உள்ள அனேகமான தமிழர் எல்லோரும் குறிப்பிட்ட அந்த நகருக்குச் சென்று சாமத்திய வீட்டில் பங்குபற்றி வந்திருக்கிறார்கள். எமது நகரில் வாழும் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் அவரோடோ அந்தக் குடும்பத்தோடோ முற்கூட்டிய பழக்கமும் இல்லை. நட்பும் இல்லை.
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )