Thursday, April 14, 2005

அவளை மாதிரிச் சிரியன்


தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளப் பெண்மணி
சிரித்துச் சிரித்து நிகழ்ச்சி நடாத்திக் கொண்டிருக்கிறார்.

அதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தார்
"பாரடி அந்தப் பெண்ணை. என்னமாச் சிரிச்சுக் கொண்டிருக்கிறாள்.
பார்க்கவே சந்தோசத்திலை மனசு நிறையுது. நீயும் இருக்கிறியே..!
எப்ப பார்த்தாலும் மூஞ்சையை உம் மெண்டு வைச்சுக் கொண்டு.."

"ம்..கும் அவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல."

"என்ன அப்பிடி.. அவ்வளவு திடமாய் சொல்லுறாய்...!"

"இப்பிடி உலகமே பார்க்கக் கூடியதாச் சிரிச்சுப் போட்டு வீட்டை போனால் அவளின்ரை புருசன் சும்மா இருப்பானே..?"

"குத்திக் காட்டிறாயாக்கும்."

"நான் குத்தவும் இல்லை. வெட்டவும் இல்லை. உண்மையைச் சொல்லுறன்."

"இஞ்சைபார். இந்தக் குத்தல் கதையளை மட்டும் விட்டிடு.
உன்னையென்ன ரீவீ ஸ்ரேசனுக்குப் போய் சிரிக்கச் சொல்லுறனே.
வீட்டிலையிருந்து அவளை மாதிரிச் சிரியன்."

அவளுக்குத்தானே கல்யாணமே நடக்கேல்லைப் போல எண்டு சொல்லுறன்.

சந்திரவதனா
sep-2004

இது ஏற்கெனவே நான் வலைப்பூ நட்சத்திரமாக Sep-2004இல் இருந்த போது எழுதியதுதான். ஆனால் இது எனது பதிவில் இல்லை. அதனால் இங்கு பதிகிறேன்.

4 comments :

ரவியா said...

//அவளுக்குத்தானே கல்யாணமே நடக்கேல்லைப் போல எண்டு சொல்லுறன்//

Super

பாலு மணிமாறன் said...

இதுவும் ஒரு பார்வை என்று எடுத்துக்கொள்வதா .. இல்லை.. இதுதான் பெரும்பாலானவர்களில் வாழ்க்கை என்று எடுத்துக் கொள்வதா... என்ன சொல்றீங்கோ? :)))

enRenRum-anbudan.BALA said...

chandravathana,

AnAlum romba eLLal thAn ungkaLukku :))

enRenRum anbudan
BALA

Chandravathanaa said...

ரவியா, பாலு மணிமாறன், பாலா
உங்கள் மூவரது கருத்துக்களுக்கும் நன்றி.

பாலு மணிமாறன்
இதுதான் பெரும்பாலான சமயங்களிலுள்ள நடைமுறை என எடுத்துக் கொள்ளலாம்.
தமது மனைவியர் மற்றவர்களுடன் சிரித்துப் பேசினால் மனசு பொறுக்காத எத்தனையோ கணவன்மார்
மற்றவர்களது மனைவியருடன் சிரித்துப் பேசுவதும் அவர்கள் கலகலப்பாக மற்றவர்களுடன் பழகக் கூடியவர்கள் என்று
பாராட்டுவதும் மிகச் சாதாரணமான நடைமுறை.

தமது மனைவியரை யாரும் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் கணவன்மார்கள் மற்றவர்களது மனைவியரைத் தப்பான கண்ணோடு பார்ப்பார்கள். இன்னொரு கணவனுக்குப் பிடிக்காத விடயத்தைச் செய்கிறோமேயென்ற சிந்தனை சற்றேனுமின்றி.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite